Jump to content

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்


Recommended Posts

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை 
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே 
குதி இருக்குது உன் கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர 
கண்டதையும்வைதிருந்தவளே 
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?

கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?

^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை 

Link to comment
Share on other sites

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
பொருளாதாரக்கவிதை 
---------------
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்கிறது ...!

ஏழையின் வீட்டில் ...
வயிறு அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
அலங்காரமாய் அடுப்பு எரியும்....!

ஏழையின் வீட்டில் ...
பசி நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
வறுமையின் கொடுமை

Link to comment
Share on other sites

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தன்னம்பிக்கை கவிதை
---------------

தனக்கிருக்கும்.....
உறுதியான சக்தி ......
தன்னம்பிக்கை..............!

தன்மானம் காத்திட .....
தலைசாயாத சக்தி ....
தன்னம்பிக்கை.............!

எல்லாமே இழந்தாலும் ....
எஞ்சியிருக்கும் சக்தி ....
தன்னம்பிக்கை...............!

உயிரே போனாலும் .............
உயிர்த்தெழும் சக்தி ...........
தன்னம்பிக்கை...........!

இரக்க பார்வையை ......
இல்லாதொழிக்கும் சக்தி .....
தன்னம்பிக்கை............!

எல்லாம் சாத்தியமே என்று ......
அறிவை நம்பும் சக்தி ........
தன்னம்பிக்கை.............!

^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை 

Link to comment
Share on other sites

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தகவளுடன் காதல்கவிதை
---------------

கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...!

கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவை....
துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
தகவளுடன் காதல்கவிதை 

Link to comment
Share on other sites

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
ஒருதலைக்காதல் கவிதை 
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!

கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!

^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை

Link to comment
Share on other sites

----------------------------------
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
----------------------------------
 
சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!
 
ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!
 
+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250
 
 
^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
 
திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்
Link to comment
Share on other sites

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------

இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^

Link to comment
Share on other sites

வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

^^^^^
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது

Link to comment
Share on other sites

இனியவன் கஸல் கவிதைகள் 
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

நீ 
சொன்ன ஒரு வார்த்தை.... 
ஆயிரம் கஸல் கவிதையை ... 
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ... 
திறந்த சிறைச்சாலைக்குள் .... 
அடைத்துவிடும் .... 
காதல் ......!!!

இதயங்களை .... 
இணைக்கும் .... 
சங்கிலி -காதல் ... 
துருப்பிடிக்காமல் .... 
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது ..... 
என் இதயத்தில் பூத்த .... 
முள் பூ நீ ................!!!!

நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை .... 
என் 
மரணத்தோடு ..... 
விளையாடுகிறாய் ......!!!

^ 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

முள்ளில் மலரும் பூக்கள்
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

உன் 
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!

நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^
^^^^^
கவிப்புயல் இனியவன் 
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.