Jump to content

சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி


Recommended Posts

சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி

 
 

டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள், இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் மலம் திண்ணும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். 

TN farmers


டெல்லியில் 40வது  நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

ANIVerifizierter Account @ANI_news 5 Std.vor 5 Stunden

 
 

Tamil Nadu farmers protesting at Delhi's Jantar Mantar over drought relief funds and waiver of farmers' loans, say "will drink urine today"

C9_kP1gUMAAbruH.jpg
C9_lOATUwAAI8SR.jpg
102 Antworten 270 Retweets 181 Gefällt mir
 
 
 
 
  •  
 
 

Tamil Nadu farmers drink urine protesting over drought relief funds and waiver of farmers' loans at Delhi's Jantar Mantar.

C9_48PwVwAA4FmB.jpg
C9_49h8U0AAFNEd.jpg
C9_4-yoU0AERS9-.jpg
 
இந்நிலையில் கடந்த 19ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை நேரில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். அத்துடன், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் வரை காத்திருப்போம் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

ஆனால் நேற்று மாலை போராட்டக் குழுவின் கூடாரங்களை அகற்ற காவல்துறை முயற்சி செய்தது. இதனை கண்டித்த அய்யாக்கண்ணு, ”வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்காக  சிறுநீரை பாட்டிலில் பிடித்து போராட்டக்களத்தில் பார்வைக்கு வைத்துள்ளோம். நாளையும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதிகளை எழுத்து பூர்வமாக தராவிட்டால், மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரித்தார்.

இதனிடையே, மத்திய அரசு தரப்பில் எந்தவித பதிலும் இல்லாததால், சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்!

 

http://www.vikatan.com/news/tamilnadu/87241-tamil-nadu-farmers-drink-urine-protesting-over-drought-relief-funds-and-waiver-of-farmers-loans-at-delhi.html

Link to comment
Share on other sites

"வேற வழி தெரியலை... அதான்...!" - சிறுநீர் குடிக்கும் போராட்டம் பற்றி அய்யாக்கண்ணு #VikatanExclusive

 
 

சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் அய்யாக்கண்ணு

டெல்லி, ஜந்தர்மந்தர் பகுதி ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழக விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 100-க்கும் மேற்பட்ட கடந்த 40 நாட்களாக பல்வேறு விவசாய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறார்கள். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான விவசாயிகள், தமிழக விவசாயிகள் நடத்தும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். "இந்தக் காட்சி எங்கள் கண்ணில் படவே இல்லை. தமிழக விவசாயிகளின் குரல்கள் எங்கள் காதுகளில் விழவில்லை" என்பதுபோல மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கும் மக்களின் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும், ஆனால் விவசாயிகள் கஷ்டத்தை கேட்க எங்களுக்கு நேரமில்லை எனக் காலில் 'இறக்கை' கட்டிக்கொண்டு பறக்கும் பிரதமரும் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார். இந்த ஆண்டு மிகப்பெரும் வறட்சியைத் தமிழகம் சந்தித்துள்ளது. அதற்கு விவசாயிகள் அரசிடம் தங்கள் கோரிக்கைகளை வைப்பது நியாயம்தானே... நீங்கள்(மத்திய அரசு) கேட்கலாம், "உங்கள் பிரச்னைகளை தமிழ்நாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்திலோ கேட்கக்கூடாதா?..." எனக் கேட்கலாம்.

போராட்டத்தில் தமிழக விவசாயிகள்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு தமிழகத்தில் முறையாக ஆட்சி நடக்கவில்லை என்பது நாட்டின் பிரதமராகிய உங்களுக்குத் தெரியாதா...மத்தியிலிருந்து 'தமிழ்நாடு' உட்பட மொத்த மாநிலத்தையும் ஆண்டு கொண்டிருக்கும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்நாட்டில் சட்டசபை என்பது போர்க்களமாகவும், அரசியல்வாதிகள் என்பவர்கள் குரங்கு, மரத்துக்கு மரம் தாவி விளையாடுவதைப் போல, அரசியல் காட்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இத்தானைக்கும் நடுவில் விவசாயிகள் எப்படி தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுபோக முடியும். மீறி அணையில் தண்ணீர் இல்லை என்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைக்கிறார்கள். அதற்கு அரசியல்வாதிகள் பல லட்சம் செலவு செய்து 'தெர்மாகோல்' அட்டையைத் தண்ணீர் மீது பரப்பி மூடிவிடலாம் என்ற செயலில் இறங்குகின்றனர். இவர்களை நம்பி எப்படி விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும். இறுதியாக வேறு வழியின்றித்தான் மத்திய அரசாகிய உங்களிடம் முன்வைக்கின்றனர், தமிழக விவசாயிகள். ஒவ்வொரு மேடையிலும் விவசாயத்தைப் பற்றி பேசும் பிரதமரும் விவசாயிகளைச் சந்திக்க மறுப்பதுதான் விவசாயிகளுக்கு வேதனை தருகிறது.

போலீஸாருடன் பேச்சுவார்த்தை

எலிக்கறி, பாம்புகறி, நிர்வாணப் போராட்டம் என விவசாயி தன்னுடைய மானத்தையும் இழந்து கடைசியாக சிறுநீர் குடிக்கும் போராட்டம் என அறிவித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு நாட்டிலும் விவசாயிகள் இந்த அளவுக்கு நூதன போராட்டத்தால் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்ததில்லை. சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை அறிவித்த அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். "எங்கள் கோரிக்கையை ஏற்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. நாங்களும் தன்மானத்தை விட்டு போராட்டம் நடத்திப் பார்த்து விட்டோம். ஆனால், எங்களுக்குப் பதில் சொல்லவோ, கோரிக்கைகளை ஏற்கவோ யாரும் வரவில்லை. வாய்மொழியாகக் கொடுத்தால் மட்டும் போதாது, எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும். இது இத்துடன் நின்றுவிடாது... இறுதியாக எங்களை மத்திய, மாநில அரசு சந்திக்கும் உயிர் இருக்கும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

சிறுநீர் குடிக்கும் விவசாயி

நன்றி - ANI

தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு அவர்களே உங்களிடம் மன்றாடிக் கேட்கிறோம். இந்தியாவில் பல்வேறு தரப்பு விவசாயிகளும், பொதுமக்களும் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மனித மாண்புகளை இழக்கச்செய்யும் வகையில் போராட்டங்களை தொடர்வது நிலையான வெற்றியைத் தருமா?... தயவு செய்து சிறுநீர், மலம் எனப் போராட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும். அகிம்சையான வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள். சிறுநீர் குடிக்கும் செயல் நீங்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தின் உண்மைத்தன்மையை மாற்றி விடும். எதற்கும் செவிசாய்க்காத மத்திய அரசு நீங்கள் நடத்தும் இந்த போராட்டத்துக்கும் செவி சாய்க்குமா என்றால் நிச்சயமாகச் செவிசாய்க்காது. மறுபடியும் கேட்கிறோம், போராட்டம் அறவழியில் தொடரட்டும், மத்திய அரசு இறங்கி வரட்டும். தலைநிமிர்ந்து வாழவேண்டிய விவசாயி தன்னுடைய மானத்தை இழந்து போராடிக் கொண்டிருக்கிறான். அங்கே காற்றில் பறந்து கொண்டிருப்பது விவசாயிகளின் மானம் அல்ல, நம் நாட்டின் மானம்தான் என்பதை அரசாங்கம் உணருமா?..

http://www.vikatan.com/news/save-agriculture/87264-we-had-no-other-options-pleads-ayyakannu.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி

மனிசர் மூத்திரம் குடிக்கிறது டெல்லிக்கு நோர்மல் கண்டியளோ.....முந்தி மொரார்ஜி தேசாய் எண்டொரு பிரதமர் இருந்தவர்....அவர் விடிய எழும்பினவுடனை முதல் வேலை மூத்திரம் குடிக்கிறதுதானாம்.

இதுக்கு போய் ஏன் டெல்லி அதிருது????? :cool:

Link to comment
Share on other sites

விவசாயிகள் கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பேன்: டெல்லி போராட்டக்களத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

 

 
 
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி | படம்: ஆர்.வி.மூர்த்தி
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி | படம்: ஆர்.வி.மூர்த்தி
 
 

அய்யாக்கண்ணு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தவுள்ளதாக, டெல்லி போராட்டக்களத்தில் உள்ள தமிழக விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

டெல்லி - ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 41-வது நாளை எட்டியுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வங்கிக் கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். நாள் தோறும் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றார்.

இந்த நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் பிரச்சினைத் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை விவசாயிகள், தமிழக முதல்வரிடம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அய்யாகண்ணு கூறும்போது, "41 நாட்களாக இங்கேயே அமர்ந்து போராடி வருகிறோம். தமிழகம் வறட்சி மாநிலம் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. விவசாயத்தில் அழிந்துவிட்ட பயிர்களுக்கு ரூ.21,000 கோடி கேட்டிருந்தீர்கள். ஆனால், மத்திய அரசு தரவில்லை. அப்பணத்தை மத்திய அரசிடமிருந்து வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.

10 ஆண்டுகளாக சரியான மழையில்லை. ஆகையால், விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. ஆனால் வங்கி அதிகாரிகள் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அசிங்கமாக பேசுகிறார்கள். உ.பி.யில் 6000 கோடி ரூபாய் வங்கிக் கடனை தள்ளுபடி செய்துள்ளார்கள். அதேபோல தமிழகத்தில் விவசாயிகள் வாங்கியிருக்கும் மொத்த கடனே 6140 கோடி ரூபாய் தான். இதனை தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து தேசிய வங்கியில் வாங்கியிருக்கும் கடனை எல்லாம் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இல்லையென்றால் உ.பி அரசே கடனை தள்ளுபடி செய்தது போல, தமிழக அரசே கடனை தள்ளுபடி செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை" என்று தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, "அய்யாகண்ணு சில கோரிக்கைகளை இங்கே தெரிவித்துள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கின்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதனை இன்று பிரதமரை சந்திக்கும்பொழுது அதை வலியுறுத்திச் சொல்வேன். 2 பருவமழைகள் பொய்த்துவிட்டன. 140 ஆண்டுக்காலம் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அது சம்பந்தமாக பிரதமரை சந்தித்து ரூ.39,665 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 2247 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகைகள் வங்கிகளின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு புதிதாக பயிரிட்டு இருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடனையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதேபோல, நீர்நிலைகளில் இருக்கும் நீரைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி அதற்கு 100 கோடி ரூபாய் முதற்கட்ட ஒதுக்கி ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. மேலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்வதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இங்கு அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமரிடம் வலியுறுத்தி கூறுவேன். 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடந்தி வருகின்ற தமிழக விவசாய பிரதிநிதிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்துக்கு திரும்ப வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவீர்களா என்று அய்யாகண்ணுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "பிரதமரை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர்களை சந்தித்து எங்களையும் அழைத்துப் பேசுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது" என்று கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/விவசாயிகள்-கோரிக்கைகளை-பிரதமரிடம்-முன்வைப்பேன்-டெல்லி-போராட்டக்களத்தில்-முதல்வர்-பழனிசாமி-உறுதி/article9658781.ece?homepage=true

Link to comment
Share on other sites

22 hours ago, நவீனன் said:

சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி

அமா இதுக்கு டெல்லி ஏன் அதிருது - ஏற்கனவே பிரதமரே குடிச்சவர்தானே.:grin:

main-qimg-0d9ab4bfd99beaacbaa6d7d9e1e94c18.webp

Morarji Desai was a long time practitioner of ‘Urophagia’, also known as Urine therapy, the practice of drinking one’s own urine. It is a popular fact that Desai used to practice urine therapy and would also recommend the same to others. In an interview to Dan Rather, American Journalist, he spoke on the therapy for about 60 minutes. He stated that drinking urine is the perfect medical treatment for those who cannot afford medical treatment. He also believed that if an individual washes eyes with urine, the person can never get cataract.

https://www.quora.com/Why-did-the-Indian-Prime-Minister-Morarji-Desai-drink-urine

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.