Jump to content

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம்


Recommended Posts

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம்

 

 

வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது.

 

 

நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளினை செலுத்தியவர் தலை கவசம் அணிந்திருந்த போது பின்னால் இருந்தவர் தலை கவசம் இல்லாது சென்றுள்ளார்.

ரோயல் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் இவர்களை மறித்த போது மோட்டார் சைக்கிளினை நிறுத்தாது சென்றுள்ளனர். பின் தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் வழி மறித்தும் பின்னால் அமர்ந்து சென்ற நபரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மற்றைய இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இளைஞனை பொலிஸார் தாக்குவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/19279

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இந்தியாவில் இது சகஜம், பொலிஸ் என்றால் அடிக்க வேண்டும் தானே

Link to comment
Share on other sites

55 minutes ago, MEERA said:

சிறீலங்கா இந்தியாவில் இது சகஜம், பொலிஸ் என்றால் அடிக்க வேண்டும் தானே

ஒரு சிறு திருத்தம் மீரா அவர்களே! தமிழர்கள் என்றால் பார்த்துப் பாராது அடித்து உதைக்க வேண்டும்.:(  ஏனையோரைப் பார்த்து அடிக்க வேண்டும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Paanch said:

ஒரு சிறு திருத்தம் மீரா அவர்களே! தமிழர்கள் என்றால் பார்த்துப் பாராது அடித்து உதைக்க வேண்டும்.:(  ஏனையோரைப் பார்த்து அடிக்க வேண்டும்.:grin:

ஒரு சில சில  சம்பவங்களை வைத்து நாங்கள் எல்லா பொலிஸும் குறை கூறமுடியாது...:unsure:

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

ஒரு சில சில  சம்பவங்களை வைத்து நாங்கள் எல்லா பொலிஸும் குறை கூறமுடியாது...:unsure:

உண்மைதான்.! தமிழீழ காவல்துறையும் அதுபற்றிய அனுபவங்களும் எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன் புத்தன் அவர்களே.!! :100_pray:

Link to comment
Share on other sites

வட மாகாணத்தின் பல பிரதேசங்களில் தலைக்கவசம் (உயிர் பாதுகாப்பு) இல்லாமல், உந்துருளியில் 3 பெரியவர்கள் (இளைஞர்கள்) பயணிக்கும் (தமிழரின்) எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தமிழரின் இந்த பொறுப்பற்ற செயல்கள் சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்களில் முடிவடைவதையும் அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.