Jump to content

மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்!


Recommended Posts

மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்!

 

 

ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐம்பது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

2_V_Afghan_Attack.jpg

மஸார் இ ஷரீப் என்ற இடத்தில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம், வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் பயன்பாட்டுக்கானது. உள்ளூர் நேரப்படி நேற்று பகல் ஜும்மா தொழுகைக்காக இராணுவ வீரர்கள் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆறு தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு இரண்டு இராணுவ வாகனங்களில் முகாமின் சோதனைச்சாவடிக்குச் சென்றுள்ளனர். அனுமதி கிடைத்து முகாமினுள் நுழைந்ததும், ரொக்கெட் எறிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளை இயக்கியும் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகளுள் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட வீரர்கள் குறித்த எண்ணிக்கை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

http://www.virakesari.lk/article/19271

Link to comment
Share on other sites

தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

 
 
 
 
தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் பலி
 
காபூல்: 

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார்-ஐ-சரீப் நகரத்தில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆப்கான் வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தலைமையும், நேட்டோ படைப்பிரிவின் உதவி ஆணையருமான ஜான் நிக்கோல்சன் இந்த தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மற்றும் சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 209-வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

201704220425224455_afghan2._L_styvpf.gif

இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் கமாண்டோ கூறியதாவது, தலீபான்களின் இந்த தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். ஆப்கன் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தவ்லாத் வசிரி கூறும்போது, ஆப்கன் வீரரின் ஆடையை உடுத்திக் கொண்டு வந்த தீவிரவாதி, இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவித்தார்.

10 பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் தாக்குதலின் போது உயிரிழந்ததாகவும் வசிரி தெரிவித்தார். மீதமுள்ள 3 பேரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒருவரை மட்டும் ராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

201704220425224455_afghan3._L_styvpf.gif

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுள்ளனர். அதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்சுகள் தீவிரவமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.