Jump to content

மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)


Recommended Posts

Thursday, April 20, 2017

மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)

 
vs.jpg


அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை.

உரையாடலில் ஒருநாள்.....,

நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது.
என்றான் அவன்.
முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ?
இது அவள்.

தெரியேல்ல...,

ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு.

நீங்கள் அப்பிடி உணரேல்லயோ அக்கா ?

அவனது கேள்விக்கு பதிலாய் எதைச் சொல்ல ?

அவள் யோசித்த போது அவனே பதிலையும் சொன்னான்.

அடுத்த பிறப்பில நான் உங்களுக்கு மகனாப்பிறப்பன். கனகாலம் வாழுவன்.






பணியொன்றின் தேவைக்காக எதிர்பாராத சமயமொன்றில் தான் அவன் அவளுக்கு அறிமுகமானான்.

பணிகளால் கடந்து போனவர்கள் போல அவன் போய்விடாமல் காலமெல்லாம் தொடரும் உறவாகிப்போனவன். 2009 முள்ளிவாய்க்காலோடு அடையாளமறியாமல் அவளுக்கும் சொல்லாமல் போய்விட்டான்.

அமைதியே அவனது இயல்பு. யாரோடும் இலகுவில் ஒட்டிக்கொள்ளாத சுபாவம். அவன் வகித்த பொறுப்பு , அவனுக்கான தேசப்பணிகளில் தவிர்க்க முடியாத அவசியம்.

அடிப்படைப்பயிற்சியின் பிறகு சில சமர்களில் பங்கேற்றவன். பின்னர் அதிகாரிகள் சிறப்புப் பயிற்சி முடித்து தலைவரிடமிருந்து பாராட்டுப் பெற்றவன்.

அரசியல்துறையில் அவன் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அரைமனதோடு தான் வழங்கப்பட்ட பொறுப்பையேற்றான். பிறகு வழங்கப்பட்ட பொறுப்பின் அவசியத்தை உணர்ந்து முழுமையான கவனத்தையும் அதிலே ஈடுபடுத்தினான்.

நெடிதுயர்ந்த அவனது தோற்றத்திற்குள் படிந்திருந்த துயரங்கள் வருடக்கணக்காய் தனியே தாங்கியவன்.

அவளோடு அறிமுகமான பிறகு அவனே மாறிப்போனதாய் சொல்வான். மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பான். மனசில் ஒளிந்திருந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்லத் தொடங்கினான்.

அக்கா என்ற அவனது அழைப்பில் சிறிதும் நடிப்பில்லை நம்பிக்கையே இருந்தது. அவனுக்காக பதிவு செய்து அவனோடு மட்டுமே பேசப்பயன்படுத்திய ஸ்கைப்பில் நதி என்ற பெயரையும் அவளையும் முழுமையாக அறிந்தவனும் அவனே.

உங்களைப் பாக்க வேணும் போலையிருக்கு. கமராவை போடுங்கோ.

06.04.2009 முகம்பார்த்துக் கடைசியாகக் கதைத்தான். ஆனந்தபுரத்தில் வீழ்ந்தவர்கள் பற்றியே கதைகதையாய் சொன்னான்.

எல்லாம் முடியப்போகுது...

உங்களை இனி பாக்க கதைக்க எல்லாம் வராதக்கா.

இப்ப கதைக்கிற இந்த நிமிசம் கூட சாவு என்னைத் தின்னலாம்.

எத்தினை உயிர்கள் எத்தினை கனவுகள் நினைக்காத எல்லாம் நடக்கப்போகுது.

வெல்வோம் என்றே முன்பெல்லாம் சொல்லுவான். அன்று  தோற்றுப்போகிறோம் என்ற உண்மையை அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.

அவனது கதைகளுக்கு நடுநடுவே கேட்டுக் கொண்டிருந்த வெடியோசைகள் ஒவ்வொன்றும் அவளது மனவெளிகளில் அவனை இழந்துவிடப் போகிறாய் என எச்சரித்துக் கொண்டேயிருந்தது.

அம்மாவோடை அடிக்கடி கதையுங்கோ.

அம்மா பாவம்.

எனக்காக மட்டுமே வாழுற சீவன் அம்மாவை கைவிட்டிராதைங்கோ அக்கா.

அம்மா பற்றி அவன் சொல்லிய போது வளமையைவிட அன்றைக்கு அதிகம் கலவரப்பட்டான்.

இதுவரையில் அம்மாவுக்கு அவன் பெண்களை அறிமுகப்படுத்தியதில்லை. அவளைத்தான் முதல் முதலில் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினான். அக்கா என அவளைச் சொல்லியும் அப்பாவி அம்மா அவளை அவனது காதலியென்றே கனனகாலம் நம்பினாள்.

ஒருநாள் கதையோடு கதையாக அம்மா அவள் குடும்பம் பற்றி விசாரித்த போது அவள் 2பிள்ளைகளின் அம்மா என்பதைச் சொல்லியும் அம்மா நம்பவில்லை.

அவள் சொல்வதையெல்லாம் அவன் செய்கிறான். அவள் பற்றி அதிகம்  அம்மாவோடு கதைக்கிறான். ஆக அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது தான் அம்மாவின் முடிவு.

எட லூசா அம்மாட்டை சொல்லடா ஒரு இழவும் இல்லையெண்டு.

மனிசிக்கு சொல்லீட்டன் மனிசி நம்பாதாம். ஆர் என்ன சொன்னாலும் எனக்கு நீங்கள் அக்கா தான்.

அன்று தான் இறுதியாக முகம்பார்த்துக் கதைத்தான். அதன் பிறகு பலதரம் கதைத்திருக்கிறான் ஆனால் முகம் காட்டியதில்லை. தனது படங்கள் நிறைய அனுப்பியிருந்தான்.

000        000      000

'நான் இல்லாட்டி எனக்காக அழுவியள்...என்னக்கா....'
என்றான் அவன்.

போடா விசரா நீ வருவாய் நான் நம்பிறன்டா.
என்றாள் அவள்.

பலரது மீள்வை எதிர்பார்த்திருந்தாலும் அவன் கட்டாயம் வருவான் என்பதை அவள் அதிகம் நம்பினாள். ஒவ்வொரு முறை கதைத்து விடைபெறும் போதும் அதுவே தன் இறுதிநாளாகவே சொல்லிச் செல்வான்.

அன்றைய நிலமை அப்படித்தானிருந்தது. உலகத்தால் கைவிடப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் லட்சம்பேரின் வாழ்வு முடங்கியிருந்தது.

வெளிநாடுகளில் தெருவில் இறங்கித் தமிழர்கள் போராடினர். எந்த நாடும்  கவனிக்கவில்லை. வல்லவன் வகுத்த விதி மே 17 2009 அன்றோடு தமிழர்களின் பெரும் சாம்ராஜ்ஜியம் கலைந்தது.

நந்திக்கடலில் கலந்த தமிழ் இரத்தம் வங்கக்கடலின் பேர(ய)லைகளோடு சேர்ந்து கரையொதுங்கிய உயிர்களை வெற்றுடல்களாக கடந்து போனது.

அவன் கட்டாயம் வருவான். எங்கோ உயிரோடு வாழ்கிறான் என நம்பும் அவன் அம்மாவின் நம்பிக்கையின் முன்னால் அவள் மௌனமாகிவிட்டாள்.

தன் மருமக்கள் என ஆசையாய் அவள் பிள்ளைகளுக்காக அவன் எழுதிய கடிதங்கள் அனுப்பிய பரிசுப் பொருட்கள் வடிவில் அவன் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்.

அழுகை வரும் ஆறுதல் தர யாருமற்று பொழுதெல்லாம் அவன் நினைவுகளும் கதையும் மனவெளியெங்கும் துயர் கனத்து சோர்ந்து போவாள்.

இரவில் வானத்தை பாருங்கள் அக்கா. வானத்தில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பெரும் நம்பிக்கை தரும்.

மனம் கனத்த ஒருபொழுதொன்றில் அவனுக்குத் தன் துயர் சொல்லி அழுத போது சொன்னான்.

கனத்த இருளில் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் அவன் நம்பிக்கையின் ஒளிப்பொட்டுக்களாய் ஒளிர்கிறான். இன்றைக்கும் அவன் ஞாபகத்தில் அடிக்கடி நிறைகிறான்.

ஏன் ? எதற்காக ?

துயர் படிந்த மாதத்தின் துயரமா ? இல்லை அவன் சொன்னது போல முற்பிறப்பின் உறவுத் தொடரா ? தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்க்க வேண்டுமென்ற உணர்வு மேலிடுகிறது.

உடல் நடுங்குகிறது. சுவாசத்துடிப்பு அதிகமாகிறது. அவன் நிழற்படத்தைக் கணணித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். காணாமற்போன அவன் வந்துவிட வேண்டும். கண்ணீரோடு கடவுளை மன்றாடுகிறாள்.

சாந்தி நேசக்கரம்
19.04.2017

http://mullaimann.blogspot.de/2017/04/blog-post.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் நீங்காத நினைவுகள்  சிலருக்கு இது போலவே  வருவானா (ளா ) மாட்டாளா  தொடரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பல போராளிகளுக்கும் மரணித்த போராளிகளின் உறவுகளுக்கும் மனவெளி அலைவு இப்படித்தான் இருக்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி.... என்னத்தை சொல்ல....!!

Link to comment
Share on other sites

16 hours ago, முனிவர் ஜீ said:

என்றும் நீங்காத நினைவுகள்  சிலருக்கு இது போலவே  வருவானா (ளா ) மாட்டாளா  தொடரட்டும் 

இருக்கா இல்லையா ? இந்தத் துயர் தான் கொடுமை.tw_cry:

6 hours ago, putthan said:

 பல போராளிகளுக்கும் மரணித்த போராளிகளின் உறவுகளுக்கும் மனவெளி அலைவு இப்படித்தான் இருக்கின்றது...

மன அலைவு மனவழுத்தமாகி உயிர்களை வாங்குகிற கொடுமை தான் இப்போ அதிகம்.கருத்துக்கு நன்றி புத்தா.

5 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி.... என்னத்தை சொல்ல....!!

கருத்துக்கு நன்றி சுவியண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.