Jump to content

எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்!


Recommended Posts

எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்!

 
 

தினகரன்

ப்ரல் 10-ம் தேதிக்கு முன்புவரை ஆர்.கே.நகர்த் தொகுதி வேட்பாளராக, மக்களுக்கு அறிமுகமானாலும், 'முதல்வர்' என்றே தினகரனின் நெருங்கிய வட்டாரங்கள் அழைத்து வந்தன. அப்படி அழைப்பவர்களிடம், 'என்னப்பா இன்னும் தேர்தலே நடக்கல, ஜெயிக்கவுமில்லை. அதுக்குள்ளேவா' என சிரித்தபடியே தினகரன் கூறிவந்தாலும், 'ரிசல்ட் என்பது மத்தவங்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரை, நீங்க எப்பவோ முதல்வர் ஆகிட்டீங்க.' என்று உசுப்பேத்தி வைத்திருந்தனர் நெருக்கமான புள்ளிகள். 

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பூக்களைத் தூவி வரவேற்பு, திரும்பிப் பார்த்தால் பொன்னாடை போர்த்திய வாழ்த்துரை, கலைந்த முடியை சரி செய்ய உடனே சீப் எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள், வியர்த்துப் போன முகத்தைத் துடைக்க ஓடோடி வரும் விசுவாசிகள் என தொண்டர்களின் புகழாரங்களுக்கு இடையே கலர் கலராக 'லினன்' சட்டைகளில் ராஜ பவனி வந்தார் தினகரன். ஆனால்,
ஏப்ரல் 18-ம் தேதி.... காட்சிகள் மாறின. கலர் சட்டை, கசங்கிய சட்டையானது. வியர்த்து விறுவிறுக்கும் முகத்தைத் துடைக்க துண்டு எடுத்துக் கொடுக்கும் உதவியாளரைத் தவிர, முன்பு இருந்த விசுவாசிகள் யாரும் இப்போது இல்லை. முகத்திற்கு நேராக துதி பாடியவர்கள் எல்லாம் எங்கே போயினர்...? 

வெற்றித் தொப்பியை எதிர்பார்த்த அவருக்கு 'பெப்பே' தொப்பியை மாட்டிவிட்டு அவர்கள் பறந்து விட, யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது தினகரனின் வீடு.எம்.ஜி.ஆரைப் போல தன்னை 'டி..டி.வி' என்று மூன்றெழுத்தில் அழைப்பதையே விரும்பிய அவர், அதே மூன்றெழுத்துக்களால் வீழ்த்தப்பட்டுள்ளார். ஆம், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்ற மூன்றெழுத்துகளை தங்கள் பெயராகக் கொண்டவர்களால், இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் டி.டி.வி தினகரன். நாளை இந்த தமிழ்நாட்டை ஆளப்போகும் முதல்வர் நான்' என கனவுலகில் மிதந்துவந்த அவரை, இவ்வளவு சீக்கிரத்தில் தனிமைப்படுத்தி, ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை உருவாகும்  என்று கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். 

தினகரன்


பெங்களூரு சென்று திரும்பியவர், அரசியல் மேகங்கள் தனக்கு சாதகமாக இல்லை என்றதும், ஏப்ரல் 19-ம் தேதி மதியம், 'நான் அரசியலில் இருந்து நேற்றே ஒதுங்கி விட்டேன். கட்சியையும், ஆட்சியையும் களங்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஆலோசனை பெற்ற பின், என் ராஜினாமா குறித்து யோசிப்பேன்' என ஒரு ஞானியைப் போல(!) பேசிவிட்டு வீடு சென்றார். 

'இதுவரை எனக்கு ஆதரவு தெரிவித்த கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றிகள்' என ட்வீட் போட்டுவிட்டு வீட்டில் உள்ள தனது சோபாவில் அமைதியாக அமர்ந்து விட்டார். அதிகாரத்தில் இருந்தபோது கூடிய கூட்டம், இப்போது இல்லை. சொற்ப அளவிலேயே தற்போது தினகரனை நேரில் வந்து சந்திக்கின்றனர் அவரின் சில விசுவாசிகள்.

 
 

ஆர்.கே.நகர் பிரசாரத்தின் போது உதவிய பெரியகுளம், தஞ்சை, மன்னார்குடி நட்புகள் சிலவும், புதுவையைச் சேர்ந்த கட்சியினர் சிலரும் நேரில் சந்தித்துப் பேச, அவர்களிடம் "நான் எம்.பி-க்கு நின்றபோது, எனக்காக தேர்தல் வேலைசெய்ய வந்தவர் பன்னீர்செல்வம். நான் பார்த்து அவரை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்தேன். அவர் முதல்வராவதற்கு நான் சிபாரிசு செய்தேன். ஆனா இன்னைக்கு அவர் இந்தப்போடு போடுறாரு. என்னை சார், சார்-ன்னு கூப்பிட்டவரு, இன்னைக்கு பேர் சொல்லி பேசுறாரு. எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சராக நானும், சசிகலாவும்தான் நியமித்தோம். ஆனா ஏத்திவிட்ட ஏணியையே அவர் எட்டி உதைக்கிறார்" என விரக்தியுடன்  பேசியுள்ளார். தொடர்ந்து, "என்ன பண்றது, வளர்த்த கடா மாருல பாயுது. இதுகூட பரவாயில்ல, நேத்துவரை, அண்ணே நாங்க இருக்கோம், கூடவே இருக்கோம்னு சொன்னவங்ககூட இன்னைக்கு ஆள் அட்ரஸே காணோம். இன்னைக்கு தனியா இருக்கேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாருங்க. என் சொந்தங்களே நான் மேல வருவதை விரும்பல. அவங்க  கொடுத்த நெருக்கடி கொஞ்ச, நஞ்சமல்ல. இன்னைக்கு அவங்களும் என்கூட நெருக்கமா இல்லை' என கண் கலங்கினாராம் தினகரன். 

வந்தவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல, 'ஆனாலும் காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். நான் மீண்டு வருவேன்.' என்கிறார் நம்பிக்கையாக. 

எல்லா கனவுகளையும் நிஜங்களாக மாற்றிவிடுவதில்லை காலம்!

http://www.vikatan.com/news/coverstory/87066-from-mgr-to-eps-three-letters-and-aiadmk.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.