Jump to content

பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை


Recommended Posts

பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை

 

பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 
 
பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை
 
பாரீஸ்:

பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் தெரிவித்த பாரீஸ் போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஜோகன்னா பிரிமெவர்ட் கூறுகையில், சுற்றுலாத்துறையின் பிரபல இடத்திற்கு அருகே உள்ள ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் சுரங்கப்பாதை காவல் நிலையத்தை குறிவைத்து மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
201704210549028885_paris2._L_styvpf.gif
3 நாட்களுக்கு முன்னதாக பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. இந்நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து மர்ம நபர்கள் இருவரை பாரீஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மர்ம நபர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட உடனேயே உயிரிழந்தவர்கள் உடல்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/21054848/1081019/Paris-police-say-officer-and-attacker-shot-killed.vpf

Link to comment
Share on other sites

பரிஸில் பயங்கரவாத தாக்குதல் - ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

பிரான்ஸ் - பரிஸ் மத்திய நகர் பகுதியில் பயங்கரவாதிகளினால் பொலிஸார் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் மேலும் இரு உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு பிரிவினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. 

இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பயங்கரவாதியொருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர். 

தமது ஒரு உறுப்பினரினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஐஎஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

பிரான்ஸில் ஐஎஸ் அமைப்பினரால் 2015ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் 238 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=90678

Link to comment
Share on other sites

''இதுப்போன்ற ஓர் பதற்றமான காட்சியை அனுபவித்ததில்லை '' : பாரிஸ் துப்பாக்கிச்சூடு (புகைப்படத் தொகுப்பு)

 

பாரிஸின் மத்திய பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  • Police secure the area after a gunman opened fire on Champs Elysees in Paris, 20 April 2017GETTY IMAGES

    நேற்று வியாழக்கிழமையன்று பாரிஸின் சேம்ப்ஸ் எலிஸீயில் தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து அந்த பகுதி விரைவில் மூடப்பட்டது.

  • French Police officers react after a shooting in which a police officer was shot dead along with the gunman in an attack near the Champs-Elysees in Paris, France, 20 April 2017EPA

    ஆயுதமேந்திய போலீஸார் அந்தப்பகுதியிலிருந்தவர்களை வெளியேற்றினார்கள். வெளியேறுங்கள், இந்த பகுதி பாதுகாப்பானது அல்ல.'' என்று பொதுமக்களிடம் கூறி வந்தனர்.

  • People hold their hands up as they walk towards police officers near the site of a shooting at the Champs-Elysees in Paris, 20 April 2017AFP/GETTY IMAGES

    கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்தவர்கள் அதிகாரிகளின் கூறிய வழிகாட்டுதல்களை தொடர்ந்து, தங்கள் கைகளை தூக்கியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.

  • Police officers secure the area after a gunman opened fire on the Champs-Elysees in Paris, 20 April 2017GETTY IMAGES

    துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய பகுதியில் அதிகாரிகள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பதுங்கி அந்தப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

  • French police react after a shooting in which an officer was fatally shot along with the gunman in an attack near the Champs Elysees Paris, 20 April 2017EPA

    தாக்குதல்தாரி என சந்தேகிக்கப்பட்டவர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  • Police officers secure the area after a gunman opened fire on Champs Elysees in Paris, 20 April 2017GETTY IMAGES

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆயுதமேந்திய அதிகாரிகள் காவல் வளையம் ஒன்றை அமைத்தனர்.

  • French soldiers stand guard at the Arc de Triomphe near the Champs Elysees in Paris after a shooting on April 20, 2017.AFP/GETTY IMAGES

    சேம்ப்ஸ் எலிஸீயின் ஒரு பகுதியின் முடிவிலுள்ள ஆர்க் டி ட்ரையோம்ப்பில் ஆயுதமேந்திய ஃபிரெஞ்சு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Masked police stand on top of their vehicle on the Champs Elysees Avenue after a policeman was killed and another wounded in a shooting in Paris, 20 April 2017REUTERS

    அதன் பிரபலத்தன்மை காரணமாக, சேம்ப்ஸ் எலிஸீ நீண்ட காலமாகவே தாக்குதல் நடைபெறுவதற்கு சாத்தியமுள்ள ஓர் இடமாக பார்க்கப்பட்டது.

  • Two women hug each each other after a shooting near the Champs Elysees in Paris, France, 20 April 2017EPA

    ''இதுப்போன்ற ஓர் பதற்றமான காட்சியை அனுபவித்ததில்லை ''என்று உயிர் தப்பிக்க கடைகளில் தஞ்சம் புகுந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பின்னர் தெரிவித்தனர்.

 

 

http://www.bbc.com/tamil/global-39670112

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.