Jump to content

சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்! இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை


Recommended Posts

சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்!
இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
 
 
 

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, இடைத் தரகர் மூலம் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்ததால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க.,வினரையும், மக்களையும் ஏமாற்ற, இ.பி.எஸ்., தரப்பினர் போட்ட தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

Tamil_News_large_175552820170420232331_318_219.jpg

 

தேர்தல் அறிவிப்பு


அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை துவங்கும் முன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற மனுவை விசாரிக்கும்படி, பன்னீர்
அணியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷனர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவனை, டில்லி போலீசார் கைது செய்தனர்.அவன் கூறிய தகவல்படி, லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கால்,

இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கு கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, சசிகலா பொதுச் செயலராக தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அவரது தேர்வும் செல்லாது என, அறிவிக்க வாய்ப் புள்ளது.அவ்வாறு அறிவிக்கப்பட்டால், பன்னீர் அணி கை ஓங்கும். பன்னீர் அணி கை ஓங்கினால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்க,தேர்தல் கமிஷன் முடிவை அறிவிப்பதற்கு முன், இணைப்பு நாடகத்தை அரங்கேற்ற பார்க்கின்றனர்.

சின்னம் கிடைத்த பின், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் உதவியுடன், மீண்டும் கட்சியை கைப்பற்ற லாம் என, சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டுள்ள னர். எனவே, சசிகலா குடும்பத்தினர் சொல்லி தந்த படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவ தாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை உறுதிப் படுத்தும் வகையில், தினகரன் குடும்பத்தை, கட்சி யில் இருந்து நீக்குவதாக அறிவித்த னர். ஆனால், சசிகலா குறித்து, வாய் திறக்க வில்லை. அமைச்சர் கள் ஒதுங்கும்படி கூறியதால், கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக, தினகரன் கூறினார். ஆனால், துணை பொதுச் செயலர் பதவியை, ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.

சசிகலா, தினகரன் ஆகியோர், தங்களுடைய பதவி யில் தொடரும் நிலையில், அவர்களை ஒதுக்கி விட்டோம் எனக் கூறி, பன்னீர் அணி யினரை பேச்சுக்கு அழைப்பது, ஏமாற்று வேலை என்பது உறுதியாகி உள்ளது. மேலும், முதல்வர் பழனி சாமிக்குஆதரவு அளிப்பதாகக் கூறும் எம்.எல்.ஏ.,க் கள் தொடர்ந்து, தினகரனை சந்தித்து வருகின்றனர்.
 

நிதி நிலைமை மோசம்


சசிகலா தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், 'நாங்கள் கூறியதைத் தான், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்துள்ளனர்; சற்று தாமதமாக செய்துள்ளனர்' எனக் கூறியிருப்பதும்,

 

சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில், அரசு செயலிழந்து உள்ளது. 'டாஸ்மாக்' மூடலால், வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. அதை சரிக்கட்ட, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இன்னொரு பக்கத்தில், அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய்ந்தபடி உள்ளன. வருமான வரி சோதனைக்குள்ளான, அமைச்சர் விஜய பாஸ்கர், பதவியை ராஜினாமா செய்ய மாட் டேன் என்கிறார். அவரை விலக்க, முதல்வரால் முடியவில்லை. அவருக்கு, தினகரன் ஆதரவாக உள்ளார்.

அரசின் நிதி நிலைமை மிகவும் மோச மடைந்துள்ளது. வருவாயை பெருக்க, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்சி பிரச்னைகளை தீர்ப்பதற்கே, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நேரம் போத வில்லை.இந்நிலையில், கட்சி இணைப்பு நாடகத்தின் பின்னணியில், சசிகலா குடும்பம் இருப்பதை அம்பலப்படுத்தி, பழனிசாமி தந்திரத்தை, பன்னீர் அணியினர் முறியடித் துள்ளனர். இதனால், இணைப்பு சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-நமது நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1755528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.