Jump to content

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு


Recommended Posts

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு
 

article_1492664893-Afga.jpgதெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வாறு மூன்றாம் உலகப் போர் பற்றிய அச்சங்கள் தோன்றி மறைகின்றன. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிகழ்வுகள், நாம் வாழும் உலகு பற்றிய புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.  

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் நடைபெற்றது போலத்தான், மூன்றாம் உலகப் போரும் நடைபெற வேண்டுமா? இப்போது நாம் மூன்றாம் உலகப் போருக்குள் வாழ்ந்துகொண்டா இருக்கிறோம்? எம்மை அறியாமலே மூன்றாம் உலகப் போர் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா? போர் என்ற அறிவிப்போ எச்சரிக்கையோ இன்றி நடக்கும் போராக மூன்றாம் உலகப் போர் இருக்குமா?  

கடந்த வியாழக்கிழமை, அணுகுண்டு சாராத அதேவேளை, ‘அனைத்துக் குண்டுகளின் தாய்’ என அழைக்கப்படுகின்ற உலகின் மிகப் பெரிய குண்டான, GBU-43/B Massive Ordnance Air Blastia ஐ ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா வீசியமையானது, இக்கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்குகிறது. இக்குண்டானது, நடுவானில் கிட்டத்தட்ட 10,000 கிலோகிராம் நிறையுள்ள வெடிமருந்தை வெடிக்கச் செய்து, அந்தக் காற்றுவெளியையே தீப்பற்றச் செய்யக் கூடியது. இது 900 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள்ளாக இருக்கும் எதுவொன்றும் தெரியாவண்ணமான ஒரு பாரிய அதிர்வை உருவாக்கி, அதன் அதிர்ச்சி அலைகள் 2.8 கிலோமீற்றர்கள் சுற்றுவட்டம் வரையிலும் மனிதர்களைக் கொல்லும் திறன்கொண்டவை. இக்குண்டினால் குறிவைக்கப்படும் பகுதிக்குள் மாட்டிக் கொண்டவர்களுக்கு இந்த வெடிப்பின் பாதிப்பு, ஓர் அணுஆயுதம் வெடித்ததற்கு நிகரான பாதிப்பைக் கொண்டிருக்கும்.  

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா நாகாசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதேயளவு வீரியவும் ஆபத்தும் உடைய குண்டொன்று வீசப்பட்டிருக்கிறது. மனிதகுலத்துக்கெதிரான குற்றத்தை இன்னொரு தடவை அமெரிக்கா நிகழ்த்தியிருக்கிறது. இந்நிகழ்வு மூன்று அடிப்படையான விடயங்களை நோக்கிக் கவனங்குவிய வைக்கிறது.  

முதலாவது, உலக வரலாற்றில் இவ்வாறதொரு முக்கிய நிகழ்வு ஊடகங்களினால் கவனிப்புக்குள்ளாகவில்லை. இந்த நாசகாரச் செயல் கண்டு, யாரும் சீற்றங் கொள்ளவில்லை. இது ஒரு முக்கிய சம்பவமாகவே கருத்திற் கொள்ளப்படாமல் பொதுப்புத்தி மனோநிலையில் இன்னொரு நிகழ்வுபோல கடந்துபோகும் வண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள், மனித உரிமைப் போராளிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள் வரை அனைவரதும் கள்ள மௌனம் வலுவான செய்தியொன்றைச் சொல்கிறது.  

இரண்டாவது, 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்த அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான போரின் போதோ அல்லது ஈராக் மீதான போரின் போதோ பயன்படுத்தப்படாத இக்குண்டானது, இப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சிலநூறு ஜ.எஸ்.ஜ.எஸ் ஆயுததாரிகளைக் கொல்வதற்காக ஏன் வீசப்பட்டது. இதன் முக்கியத்துவம் என்ன.  

மூன்றாவது உலகெங்கும் மனித உரிமைகள் பற்றியும் அதன் பாதுகாப்பின் அவசியம் பற்றியும் பாடமெடுக்கும் அதைக் காக்கப் படையெடுக்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், இச்செயலை ஒரு மனித உரிமை நடவடிக்கையாகக் காண்கிறார்களா. இது எவ்வகையான மனிதாபிமான நடவடிக்கையாகக் கொள்ளப்படுகிறது.  

இக்குண்டு வீசப்பட்டமையும் அதைத் தொடர்ந்த ஊடகங்கள் காட்டிய மௌனமும் அச்சமும் கலக்கமும் தருவனவாய் உள்ளன. இச்செயலைக் கண்டிக்க எவரும் முன்வரவில்லை. அமெரிக்காவின் முற்போக்கு முகமூடியை அணிந்து கொண்ட பேர்ணி சாண்டர்ஸ் முதல் முற்போக்கான சாய்வுள்ளவையாகக் காட்டிக் கொள்ளும் ஊடகவியலாளர்கள் வரை எவரும், இக்குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் வாய் திறக்கவில்லை. பயங்கரவாத்துக்கெதிரான இன்னொரு வெற்றிகரமான நடவடிக்கை என்றவிதமாக, இச்செயலை சில ஊடகங்கள் பாராட்டின. இவ்வாறதொரு கொடிய செயற்பாட்டை வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுபோலக் கருதி அப்பால் நகரும் செயலானது, நாம் வாழும் உலகில் அநியாயங்களுக்கான அமைதியான ஒப்புதலாகவன்றி வேறெதுவாகவும் பார்க்கப்பட இயலாதது.  

மிகுந்த அச்சந்தருவது யாதெனில், இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்றுவரை அறியத்தரப்படவில்லை. இதன் சேத விவரங்களை எந்தவோர் ஊடகமும் சொல்லவில்லை. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரிடம் சேத விவரங்களைக் கேட்கும் திராணி எந்தவோர் ஊடகவியலாளருக்கும் இல்லை. இன்னொரு வகையில் ‘பயங்கரவாதத்துக்கெதிரான போரில்’ அவை தேவையற்றவை என கருதியிருக்கலாம், அல்லது இதை கூட்டுத்சேதத்தின் (collateral damage) கணக்கில் சேர்த்திடலாம் என முடிவுசெய்திருக்கலாம். இவ்வாறுதான் பாரிய குற்றங்கள் யார் கண்ணுக்கும் படாமல் கடந்து போகின்றன.  

எந்தவொரு மிகப்பெரிய போரும் நடைபெறாத நிலையில், கிழக்கு ஆப்கானில் ஒளிந்திருக்கின்ற சிறிய ஆயுதங்களை மட்டும் கொண்டுள்ள வலிமையற்ற சிலநூறு ஆயுததாரிகளைக் கொல்வதற்காக இவ்வாறாதொரு பேரழிவு ஆயுதத்தை பயன்படுத்தியமைக்கான அறிவுரீதியானதும் தர்க்கரீதியானதுமான நியாயம் எதுவும் இருக்க முடியாது. இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டைப் பயன்படுத்துவதற்கான எதுவிதமான நியாயமோ தேவையோ இருக்கவில்லை என்பதை இங்கு நினைவூட்டல் தகும்.  

இக்குண்டு பயன்படுத்தப்பட்டதன் ஊடு, சில முக்கிய செய்திகளை அமெரிக்கா சொல்ல விளைகிறது. குறிப்பாக, புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் உலகை எவ்வாறு அச்சுறுத்தலின் ஊடு கட்டுப்படுத்த விளைகிறது என்பதன் குறிகாட்டியாக இதை கொள்ளவியலும். அமெரிக்க இராணுவம், தன் நலன்களின் பேரில் செய்யத் துணிந்தவற்றுக்கு எந்த தடைகளும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்கள் என எதுவுமே அமெரிக்க செய்ய நினைப்பவற்றுக்குத் தடையல்ல என்பதை இது மீண்டுமொருமுறை நிறுவியுள்ளது. இன்னொரு வகையில் இதை உலகுக்கு எடுத்துக் காட்டுவது தான் இந்த தாக்குதலின் பிரதான நோக்கமாகவும் இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  

இக்குண்டைப் பயன்படுத்திய காலப்பகுதி மிக முக்கியமானது. வடகொரியா மீதான நேரடியான அமெரிக்க மிரட்டல்களின் பின்னணியில், கொரிய தீபகற்பம் தொடங்கி சிரியா மற்றும் கிழக்கு ஐரோப்பா வரையிலும் பதற்றங்கள் பெருகிச் செல்லும் நிலையில் இக்குண்டு வீசப்பட்டிருப்பானது ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு சவால் விடத் துணிகின்ற எந்தவொரு நாட்டின் மீதும் அமெரிக்கா கட்டவிழ்த்து விடத்தக்க வன்முறையின் மட்டத்துக்கு எந்த வரம்புமில்லை என்ற எச்சரிக்கையை விடுப்பதையே இது குறித்து நிற்கிறது.  

2001ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அங்கே தலிபான் அரசாங்கத்தைக் கவிழ்த்து, தனது சொந்த கைப்பாவை ஆட்சியை அமர்த்தியது முதலாய், கடந்த 15 ஆண்டுகளாக குருதிதோய்ந்த ஆக்கிரமிப்பினைத் தொடர்கிறது. தரவுகளின் படி 2001 முதலாக ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடுகிறது. இலட்சக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள், மில்லியன் கணக்கானோர் அகதிகளாகி இருக்கின்றனர். மத்திய ஆசியாவின் எரிசக்தி வளம் செறிந்த பிராந்தியத்தின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டும் தளமாகவே ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. 9/11 தாக்குதல் தலையிடுவதற்கான நல்லதொரு சாட்டாகியது. 

முடிவற்றுத் தொடரும் ஆப்கானிஸ்தானின் யுத்தத்துக்கும் அரசியல் குழப்பநிலைக்கும் தீர்வு காணும் வகையில் போரிடுகின்ற உள்நாட்டுத் தரப்புகளிடையே அமைதித் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடாகியிருந்த நிலையில், இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இப்பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு முதல்நாள் இத்தாக்குதலை அமெரிக்கா நடாத்தியது. இந்தியா, ஈரான் உள்ளிட ஒன்பது பிற நாடுகளும் பங்கேற்க உடன்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக் தலிபான்கள் விருப்பம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அமெரிக்கா பங்கேற்க மறுத்ததோடு, தலிபான்களுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்க இராணுவத் தளபதிகள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இவை அமைதியான சுதந்திரமான ஆப்கானிஸ்தான் ஒன்றை உருவாக்க யார் விரும்பவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது.  

இக்குண்டைப் பிரயோகிக்கும் முடிவை தானே எடுத்ததாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி சுட்டிக் காட்டுகிறார். இம்முடிவு குறித்து தன்னிடம் கருத்துக் கேட்கப்படவில்லை என்றும் இராணுவரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தான் இராணுவத்திடமே விட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இராணுவத்தின் வகிபாகத்தை தெளிவுற விளக்குகிறது. இதை ‘சரியான பாதைக்கு அமெரிக்க ஜனாதிபதி திரும்புகிறார்’ என்றவகையில் அமெரிக்கப் பத்திரிகைகள் போர்முரசை அறைகின்றன.  

அமெரிக்காவின் இச்செயலானது, மனித உரிமைகள் பற்றிய அறஞ்சார்ந்த வினாக்களை எழுப்புகிறது. சிரியாவில் ஆதாரமற்ற இராசயன வாயுத்தாக்குதல்களைக் காரணங்காட்டி, சிரியா மீது வான்தாக்குதல்களை நிகழ்த்திய அமெரிக்கா மறுபுறம் மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களை ஆப்கானில் நிகழ்த்துகிறது. இது மனித உரிமைக் காவலர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இது குறித்துக் கண்டனமெதையும் தெரிவிக்கவில்லை. இவை மனித உரிமைகளின் இரட்டை முகத்தை காட்டுவதோடு மனித உரிமை என்பதன் உண்மை முகத்தைத் தோலுரிக்கின்றன.  

இவையனைத்தும் நாம் இப்போது மூன்றாம் உலக யுத்தத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா என்ற ஜயத்தை எம்முள் எழுப்புகின்றன. என்றாவது ஒருநாள் உலக வரலாறு எழுதப்படும்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டே மூன்றாம் உலகப் போரின் தொடக்கப்புள்ளி என எழுதப்படலாம். நாம் அறியாமலேயே மூன்றாம் உலகப் போருக்குள் வாழ்ந்து மடிந்துவிடவும் இயலுமாகலாம். உலகம் அத்திசை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.  

- See more at: http://www.tamilmirror.lk/195084/ஆப-க-ன-ஸ-த-ன-ல-அம-ர-க-க-ப-ட-ட-க-ண-ட-#sthash.g70jC8B5.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.