Jump to content

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...


Recommended Posts

இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் ;சாம்பியன்ஸ் கிண்ணத்தில் வரலாற்று சாதனை

Published by Gnanaprabu on 2017-06-18 21:51:36

 

சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித்,கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் அசத்த தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கிண்ணத்தினை கைப்பெற்றியது. 

லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில்,கிரிக்கெட் விளையாட்டு உலகின் ‘பரம எதிரிகள்’ என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட முகமது ஆமிர் அணியில் சேர்க்கப்பட்டார். 

பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி ஆரம்பத்துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். பும்ரா 4 ஆவது ஓவரின் முதல் பந்தை ‘நோ பாலாக’ வீச, பகர் கண்டம் தப்பினார். பின், இருவரும் சிறப்பாக துடுப்பாட்டத்தில் செயல்பட்டனர். அரை சதம் அடித்த அசார் (59) ரன்–அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ஓட்டங்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். 

பாபர் அசாம் 46 ஓட்டங்கள் எடுத்தார். பின், இணைந்த ஹபீஸ், வசிம் அதிரடியாக ரன் சேர்த்தனர். ஹபீஸ் அரை சதம் அடித்தார். முடிவில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ஓட்டங்கள் எடுத்தது. ஹபீஸ் (57), வாசிம் (25) ஆட்டமிழப்பின்றி களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர், பாண்ட்யா, ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அமிர் ‘வேகத்தில்’  முதல் ஓவரில் ரோஹித் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். பின், வந்த அணித்தலைவர் கோலியும் (5) இவரிடமே சிக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ஓட்டங்களுடன் களத்தினை விட்டு வெளியேறினார். ஷாதப் ‘சுழலில்’ யுவராஜ் சிங் (22) வெளியேறினார்.

இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 4 ஓட்டங்களில் வெளியேற, ஜாதவ் (9) நிலைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தினையும் ஆறுதலும் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ஓட்டங்கள் பெற்றவேளை ஆட்டமிழந்தார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

http://www.virakesari.lk/article/21013

Link to comment
Share on other sites

  • Replies 236
  • Created
  • Last Reply

 

tw_love:

Link to comment
Share on other sites

 இந்திய கிரிக்கெட் அணி தம்பிகளா போய் நல்லா மாட்டுக்கறி சாப்பிடுங்கோ ...... மிகுதியை பின்னர் யோசிப்போம்

Link to comment
Share on other sites

இந்திய அணியின் படுதோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்

 

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான், முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

Pakistan captain Sarfraz Ahmed celebratesபடத்தின் காப்புரிமைPA Image captionவெற்றி களிப்பில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிரஸ் அகமது

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா படுதோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

  • மட்டைவீச்சில் பாகிஸ்தானின் ஆரம்ப அதிரடி

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் மட்டை வீச்சாளர்கள், இந்திய பந்துவீச்சாளர்களை நன்கு அடித்தாடினர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் விரைவாக அரைச்சதம் எடுத்தனர். இவர்கள் இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.

106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் ஜமான் பெற்றார். இவரது அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானின் ரன் விகிதம் மளமளவென்று உயர்ந்தது.

இதே போன்று, பாகிஸ்தான் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில், தனது அதிரடி ஆட்டத்தால் முகமது ஹஃபிஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

இதனால், 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக பாகிஸ்தானால் நிர்ணயிக்க முடிந்தது.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைச்சதம்படத்தின் காப்புரிமைADRIAN DENNIS/AFP/GETTY IMAGES
  • நோபாலால் பிழைத்து சதமடித்த ஜமான்

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு நேர்த்தியாக அமையவில்லை. தங்களது பந்துவீச்சில், வைட் மற்றும் நோபால் போன்ற 16 உதிரி ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுக்கொடுத்தனர்.

3 ரன்கள் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்த போதும், அந்த பந்து 'நோபால்' என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார்.

இதன் பின்னர் அதிரடியாக விளையாடிய அவர், 114 ரன்கள் பெற்றார்.

43 ஓவர்களின் முடிவில் 247 ரன்கள்:படத்தின் காப்புரிமைPA Image captionசதமடித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் ஜமான்
  • துல்லியம் தவறிய பந்துவீச்சு, சோபிக்காத பீஃல்டிங்

போட்டி நடந்த ஓவல் மைதானம் மட்டைவீச்சுக்கு சாதகமாக கருதப்பட்டாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசாததுதான் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.

சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிக அளவில் ரன்களை வாரிக் கொடுத்தனர்.

அஸ்வின் தான் வீசிய 10 ஓவர்களில் 70 ரன்களையும், ஜடேஜா தான்வீசிய 8 ஓவர்களில் 67 ரன்களையும் வழங்கியது இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்தது. இதே போல், ஜஸ்பீர்த் பூம்ராவும் தனது பந்துவீச்சில் அதிக அளவில் ரன்களை விட்டுக்கொடுத்தார்.

  • அச்சுறுத்திய முகமது அமீர்

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராத் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்த இந்திய அணி, அமீரின் பந்துவீச்சில் தொடர்ந்து தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

3 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது அமீர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption3 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது அமீர்
  • சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த முன்னணி வீரர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இந்திய மட்டைவீச்சாளர்கள் யாருமே களத்தில் நிலைத்து நிற்காதது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோனி மற்றும் ஜாதவ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ஹர்திக் பாண்ட்யா மட்டுமே அதிரடி ஆட்டம் மேற்கொண்டு 70 ரன்கள் எடுத்தார்.

இந்திய வீரர்களில் நான்கு பேரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

5 ரன்களில் விராத் கோலி ஆட்டமிழப்புபடத்தின் காப்புரிமைAFP Image caption5 ரன்களில் விராத் கோலி ஆட்டமிழப்பு

 

http://www.bbc.com/tamil/sport-40321139

Link to comment
Share on other sites

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

 
யார் இந்த ஃபகார் ஜமான்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionயார் இந்த ஃபகார் ஜமான்?

அதிக அளவு பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு நிரம்பிய இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பங்களிக்கும் வீரர் உடனடியாக அனைவரின் கவனத்தையும் பெறுவார்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்தொடர் தொடங்குவதற்கு முன்பு, கிரிக்கெட் உலகில், ஃபகார் ஜமான் பெரிதும் அறியப்படாதவராகத்தான் இருந்தார். இந்த போட்டி தொடரில்தான் அவர் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடினார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஃபகார் ஜமான் சாதித்தது

ஆனால், சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்களில் ஃபகார் ஜமானும் ஒருவர்.

இப்போட்டி தொடரில், தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக முறையே 31 மற்றும் 50 ரன்களை எடுத்த ஃபகார் ஜமான், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் 57 ரன்கள் எடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இறுதியாட்டத்தில் 106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் பெற்றார். 114 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவின் பந்துவீச்சில் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்தார்.

फ़खर ज़मनபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி, ஃபகார் ஜமான் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

எளிய பின்னணியில் பிறந்த ஃபகார் ஜமான்

ஃபகார் ஜமானின் மட்டைவீச்சு குறித்து ஸ்டார்ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் நேரலை வர்ணனை செய்த முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், ஜமான் தனது ஆஃப்சைட் மற்றும் ஆன்சைட் என இரு பக்கங்களிலும் நன்றாக விளையாடியதாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியான காட்பேர் பாக்கலில் ஃபகார் ஜமான் பிறந்தார். ஜமானின் தந்தை அரசு வனவிலங்கு பாதுகாப்பு முகமையில் பணிபுரிந்தார்.

மற்ற தந்தையர்கள் போல், ஜமானின் தந்தையும், தனது மகன் நன்கு கல்வி கற்று அரசு பணிபுரிய வேண்டும் என்று விரும்பினார்.

फ़खर ज़मनபடத்தின் காப்புரிமைPA

பாகிஸ்தான் கடற்படையில்பணிபுரிந்தஃபகார் ஜமான்

கிரிக்கெட் விளையாட்டு மீது அதீத தாகம் கொண்ட ஃபகார் ஜமான், தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் பாகிஸ்தானின் கடற்படையில் சேர்ந்தார்.

பாகிஸ்தான் கடற்படையில் கப்பலோட்டியாக பணிபுரிந்த அவர், கடற்படை கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றார். அந்த அணியின் பயிற்சியாளரான ஆஸாம் கான், ஜமானின் திறமையை கண்டறிந்து அவரை ஊக்குவித்தார்.

பின்னர், 2013-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படையை விட்டு விலகிய ஃபகார் ஜமான், கிரிக்கெட்டில் தனது முழுநேரத்தையும் செலவழித்தார்.

फ़खर ज़मनபடத்தின் காப்புரிமைPA

2016-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பு ஃபகார் ஜமானுக்கு கிடைத்தது.

இதில் அதிக அளவில் ரன் குவித்ததன் பலனாக அதற்கு அடுத்த ஆண்டே பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றார்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், சிறப்பாக விளையாடிய ஃபகார் ஜமான் ஆட்டநாயகன் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-40322126

Link to comment
Share on other sites

ஹர்திக் பாண்டியாவுக்கு தனது விக்கெட்டை ஜடேஜா விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்: குமார் சங்ககாரா

 

 
 
கோப்புப் படம்: ஹர்திக் பாண்டியா (இடது), குமார் சங்ககாரா (வலது)
கோப்புப் படம்: ஹர்திக் பாண்டியா (இடது), குமார் சங்ககாரா (வலது)
 
 

ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரமான வெற்றியைப் பெற்றது.

லண்டனின் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 339 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுக்க, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக உருவாகி வரும் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சை பவுண்ட்ரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார்.

இந்திய அணியின் ரசிகர்கள் பலரின் கடைசி நம்பிக்கையாக பாண்டியாவின் நேற்றைய ஆட்டம் இருந்தது. எனினும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் ஜடேஜா, இந்திய ரசிகர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார்.

ரன் ஓடுவதில் இருவருக்கும் ஏற்பட்ட குளறுபடியால் பாண்டியா ரன் அவுட் ஆனார் (ஜடேஜா அவுட் ஆக்கினார் என்றுதான் கூற வேண்டும்). 46 பந்துகளை சந்தித்த பாண்டியா 76 ரன்கள் எடுத்து விரக்தியுடன் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலே ஜடேஜா உட்பட அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழக்க, இந்திய அணி 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

ரோஹித் சர்மா, தவான், கோலி, தோனி, யுவராஜ் என முன்னணி வீரர்கள் சொதப்ப, சிறப்பாக விளையாடிய பாண்டியாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாண்டியாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுடனான ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தனது ட்விட்டர் பக்கத்தில்," பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா பந்தை அடித்த விதத்தை பார்க்கும்போது அவர் பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வித்தியாசமான யோசனை வைத்திருந்தது தெரிந்தது. ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் சிறப்பான ஆட்டம்.

ஹர்திக் பாண்டியா விக்கெட் பறிபோனதில் ஜடேஜாவுக்கு தொடர்பு உண்டு. ஜடேஜா தனது விக்கெட்டை விட்டு கொடுத்து பாண்டியாவை விளையாட அனுமதித்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஹர்திக்-பாண்டியாவுக்கு-தனது-விக்கெட்டை-ஜடேஜா-விட்டுக்-கொடுத்திருக்க-வேண்டும்-குமார்-சங்ககாரா/article9730182.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜமான் சென்ச்சுரி... அமீர் ஸ்பெல்... சாம்பியன் பாகிஸ்தான்... இது ஸ்க்ரிப்ட்டிலேயே இல்லையே! #IndVsPak #MatchAnalysis #CT17

 
 

முற்றிலும் மறக்க நினைப்பதை ஏதோவொன்று நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இடம், பாடல், சாயல் என ஏதோவொன்று. நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் அரங்கேறிய பல விஷயங்கள், 2003 உலகக் கோப்பை ஃபைனலை நினைவுபடுத்தியது. டேவிட் பூன் டாஸ் போட்ட காயினைப் பார்த்து ‘India won the toss’ எனச் சொன்னபோது இருந்த உற்சாகம் ‘நாங்கள் முதலில் பெளலிங் செய்யப் போகிறோம்’ என விராட் கோலி சொன்னபோது இல்லை. 

பாகிஸ்தான் சாம்பியன்

நொடிக்கு நொடி உணர்வுகளை மாற்றும் சக்தி விளையாட்டுக்கு மட்டுமே உண்டு. அதுவும் கிரிக்கெட்டுக்கு அதிகம் உண்டு. அன்று கங்குலி செய்த அதே தவறை விராட் செய்கிறார். அன்று இருந்த ஆஸ்திரேலிய அணி, எத்தகைய இலக்கையும் சேஸ் செய்யும். ஆனால், தற்போதைய பாகிஸ்தான் அணி பெரிய இலக்குகளை சேஸ் செய்யும் அளவுக்கு வலுவான பேட்டிங் கொண்ட அணி கிடையாது. ஏன் சேஸிங் தேர்வு செய்தார் என்பது கோலிக்கு மட்டுமே வெளிச்சம். என்னதான் விராட் கோலி ‘Not at all’ ‘Not at all’ என சமாளித்தாலும் அதை ஏற்கமுடியவில்லை. இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும், பாகிஸ்தான் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஸ்போர்ட்ஸில் எப்போதுமே கம்பேக் ஸ்டோரிகளுக்கு மதிப்பு அதிகம். தோல்வியிலிருந்து மீண்டு வரும் நாயகர்கள் மீது இனம் புரியாத ஈர்ப்பு வரும். தற்போது பாகிஸ்தான் மீது கிரிக்கெட் உலகுக்கு வந்திருக்கும் ஈர்ப்பின் காரணமும் அதுவே.

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்தது. குரூப் சுற்றில் முதல் போட்டியில் இந்தியாவுடன் 88-வது இடத்தில் இருக்கும் அணியைப் போல விளையாடியது. கிரிக்கெட் அவர்களுக்கு அந்நியமான விளையாட்டு போல தெரிந்தது. கத்துக்குட்டி போல ஆடியது. கேவலமாகத் தோற்றது. ஆனால், ஃபைனலில் நடப்பு சாம்பியன் போல விளையாடியது. நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. கடைசியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இழப்பதற்கு எதுவும் இல்லை எனும்போது ஆக்ரோஷம் வருவது இயல்புதானே! முதல் போட்டியில் இந்தியாவுடன் தோற்றபின் அவர்களுக்கு இழக்க எதுவுமில்லை. பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. இது அவர்களுக்கு ப்ளஸ். பெரிய பலம். அடுத்து தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டனர்.பாகிஸ்தானை விடவும் ஒரு டீம் மோசமாக ஐசிசி தொடர்களில் விளையாடும் எனில் அது தென் ஆப்பிரிக்காதான். அவர்களை எளிதாக வீழ்த்தினர். அரையிறுதியில் இங்கிலாந்தைத் தோற்கடித்தனர். குரூப் ஸ்டேஜில் வெற்றிவாகை சூடிய இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினர். ஆக,  இந்தத் தொடரில் பாகிஸ்தான் பயணித்த பயணம் கிரிக்கெட் வரலாற்றில் அழுந்தப் பதிவாகும். இந்த இரு போட்டிகளைப் பார்த்தாவது இந்தியா சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால், இந்தியா குரூப் ஸ்டேஜில் ஆடிய பாகிஸ்தான் அணியின் திறமையை மட்டுமே கணக்கிட்டது. அதற்குரிய விலையாக, கோப்பையை பாகிஸ்தானுக்கு பரிசளித்தது. 

இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்பது More than a game. அது 180 கோடி இதயங்களின் ரசனை சம்பந்தப்பட்டது. ரசனை மட்டுமே அல்ல, உணர்வு சம்மந்தப்பட்டது; அரசியல் சம்மந்தப்பட்டது; நொடிக்கு 3.33 லட்சம் ரூபாய் காசு பார்க்கும் வர்த்தகம் சம்பந்தப்பட்டது. நேற்றைய மோதலும் அப்படித்தான். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்பது நேற்று தெளிவாக விளங்கியது. பாகிஸ்தான் தெளிவாக விளக்கியது.

பாகிஸ்தான்


கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. ஆனாலும், அங்கே தனிநபர் ஒருவர் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். நேற்று ஃபகார் ஜமான் மாற்றியது போல... முகமது அமீர் மாற்றியது போல. வழக்கம் போல, நேற்றைய போட்டியும் இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் ஃபெளலிங்குக்குமான மோதல்தான். அந்த மோதலில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தானின் வெற்றிக்கு பேட்டிங்கில் ஜமான் அஸ்திவாரம் போட்டார் எனில், பெளலிங்கில் அமீர் நேர்த்தியாக ஃபினிஷ் செய்துவிட்டார். அமீர் முதல் ஸ்பெல்லுக்குப்  (6-2-16-3) பிறகு பந்துவீச வரவே இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஃபார்மிலிருந்த ரோகித், விராட், ஷிகர்  தவன் என மூவரையும் அவுட்டாக்கி விட்டார். மூன்றும் முக்கிய விக்கெட்டுகள். மூவரும் தன்னந்தனியாக ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். ரோகித் தனி ஆளாக 264 அடித்தவர், விராட் சேஸிங் மாஸ்டர், ஷிகர் தவன் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்தவர். ஆனால், இந்த மன்னன்களை, இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒரே மூச்சில் வீழ்த்தி விட்டார் அமீர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது ஒரு பெளலருக்கு அழகு. தன் மூன்றாவது பந்தில் ரோகித், பத்தாவது பந்தில் விராட் (ஒன்பதாவது பந்திலேயே அவுட் ஆகியிருப்பார்), 30வது பந்தில் ஷிகர் தவன் என அமிர் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டும் அழகு. கச்சிதம். 

பொதுவாக, ஐ.சி.சி நடத்தும் பெரிய டோர்னமென்ட்டுகளில், அதுவும் ஃபைனல்களில் முதல் ஓவர் முக்கியம். ஃபீல்டிங் செய்யும் அணிக்கு முதல் ஓவரில் விக்கெட் எடுப்பது முக்கியம். பேட்டிங் செய்யும் அணிக்கு முதல் ஓவரில் விக்கெட்டை இழக்காமல் இருப்பது முக்கியம். இந்தத் தொடர் முழுக்க இந்தியா அப்படித்தான் ஆடியது. ஆனால், ஃபைனலில் வேறு கிளைமாக்ஸ். முதல் ஓவரில் விக்கெட் விழுந்து விட்டால், மனரீதியாக பெளலிங் அணி உற்சாகம் அடைந்து விடும். 2003ம் ஆண்டு ஃபைனல் அதற்கு ஒரு உதாரணம். முதல் ஓவர் வீச வந்த ஜாகிர் கான், வீசிக் கொண்டே இருப்பார் (10 பந்துகள் 15 ரன்கள்).  2015 உலகக் கோப்பை ஃபைனல் மேலும் ஒரு சான்று.  மெக்கல்லம் முதல் ஓவரிலேயே அடித்து விளையாட ஆசைப்பட்டார். விக்கெட்டை இழந்தார். நியூஸிலாந்தின் உலகக் கோப்பை கனவு அந்தக் கனமே கலைந்தது. நேற்று ரோகித் அவுட்டானபோதும் அதேநிலைதான். 

ரோகித் டக் அவுட்டில் வெளியேறியபோதே தெரிந்து விட்டது. விராட் கோலி விக்கெட் விழுந்தபோதே புரிந்து விட்டது, ஷிகர் தவன் பெவிலியன் திரும்பியபோதே விளங்கி விட்டது, யுவராஜ் சிங் தடுமாறும்போதே உரைத்துவிட்டது, தோனி நடையைக் கட்டியபோதே முடிந்து விட்டது. அவ்வளவுதான். முடிஞ்ச் போச். வெறிச்சோடிய சாலைகளில் மீண்டும் வாகனங்கள் செல்லத் தொடங்கி விட்டன. டிவியை ஆஃப் செய்து முடிவெட்டக் கிளம்பி விட்டோம். சலூனில் உள்ள டிவி, காமெடி சேனலுக்கு மாறிவிட்டது. இந்தியாவில் இயல்புநிலை திரும்பிவிட்டது. மாறாக, பாகிஸ்தானில் இயல்பு வாழ்க்கை மாறி விட்டது. அந்நாடு பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராகி விட்டது. முன்கூட்டியே ரம்ஜான் வந்துவிட்டது. 

பாகிஸ்தான் கொண்டாட்டம்


இந்தியாவுக்கு ஒரே ஒரு ஆறுதல் ஹர்திக் பாண்டியா பொழிந்த சிக்ஸர் மழை. அதுவும் பருவம் தப்பி பெய்த மழை. அந்த மழையில் மண் வாசனை இல்லை. அந்த மழையை ரசிக்கமுடியவில்லை. 54/5 என்ற நிலையில் இருந்தபோதே இந்தியாவின் கதை முடிந்து விட்டது. சம்பிரதாயத்துக்காகக் காத்திருந்தோம். முறைப்படி தோல்வியை அறிவிக்க காத்திருந்தோம். கோப்பையைப் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கக் காத்திருந்தோம். நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தாரை வார்க்க காத்திருந்தோம். மற்றபடி ஹர்திக் பாண்டியா அடித்ததெல்லாம் ஆறுதல். வெறும் ஆறுதல். 2003 உலகக் கோப்பை ஃபைனலில் சேவாக் அடித்தது போல. 

ஃபைனல் முடிந்தபின், கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, ‘சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் நான் எழுதிய கட்டுரையில் ஷதாப் கான், ஃபகார் ஜமான், ஹசன் அலி பெயர்களைப் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால், அவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள்’ என்ற ரேஞ்சில் ஒரு ட்வீட் செய்திருந்தார். ஆம், தன் நான்காவது சர்வதேச போட்டியில், முதல் சதம் அடித்து, காலத்துக்குமான நாயகனாக எழுந்து நிற்கிறார் ஜமான். இந்த ஃபைனல், இந்தியாவுக்கு 2003 உலகக் கோப்பை ஃபைனலை நினைவுபடுத்தியது எனில், பாகிஸ்தானுக்கு 1992 உலகக் கோப்பையை நினைவுபடுத்தியிருக்கும். அந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு இன்சமாம் உல் ஹக் போன்ற ஜாம்பவான்கள் கிடைத்தார்கள் எனில், இந்த  சாம்பியன்ஸ் டிராபியில் ஃபகார் ஜமான், ஹசன் அலி, ஷதாப் கான்கள் கிடைத்திருக்கிறார்கள். 

ஷதாப் கான், ஐசிசி ஃபைனலில் விளையாடும் டீன் ஏஜ் சிறுவன். யுவராஜ், ஏழு ஐ.சி.சி. டோர்னமென்ட்டின் ஃபைனல்களில் விளையாடியவர். இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியை விட அதிகம். ஷதாப் கானுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது யுவராஜ் தன் முதல் சர்வதேசப் போட்டியில் அடியெடுத்து வைத்து விட்டார். 2011 உலகக் கோப்பையில் தனி ஆளாக மிரட்டியவர். கேன்சரிலிருந்து மீண்டவர். 17 ஆண்டுகளாக மிடில் ஆர்டரில் ஜொலிப்பவர். ஷதாப் கான், பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் கூட அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், இருவருக்கும் இடையே நேற்று ஒரு மெளன யுத்தம் நடந்தது.

யுவிக்கு இது முக்கியமான போட்டி. 40 ஓவர் வரை நின்றால் இந்தியா வெற்றிபெற்று விடும். பலமுறை அவர் அப்படி நின்றிருக்கிறார். இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.  ஏற்கெனவே டாப் ஆர்டர் ஆட்டம் கண்டுவிட்டது. எதிர்முனையில் தோனி இருக்கிறார். இருவரும் இணைந்து படைத்த சாதனைகள் பல. குரூப் சுற்றில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக, இதே ஷதாப் கானுக்கு எதிராக யுவி தாண்டவம் ஆடியிருக்கிறார். எட்ஜ்பாஸ்டனில் யுவியை ஒருமுறை சோதித்தார் ஷதாப். அந்த வலையில் யுவி சிக்கவில்லை. ஆனால் பிரமாதமான இன்னிங்ஸ் ஆடினார். அதேமாதிரி இன்னொரு இன்னிங்ஸ் ஆடுவாரா யுவி? இல்லை ஷதாப் கானிடம் வேறு பிளான் இருக்கிறது. ஒரு லெக் பிரேக். வழக்கம்போல தடுமாறுகிறார் யுவி. பந்து யுவியின் பேடில் பட்டு, பேட்டில் படுகிறது. போகிற போக்கில் பார்த்தால் அது பேட்டில் பட்டது போல தெரியும். ஆனால், அது அப்படி இல்லை. ஷதாப் கான் அசரவில்லை. யுவியும் அசரவில்லை. பந்து முதலில் கால் பேடில் பட்டது. பந்து பிட்ச் ஆன இடமும் பக்கா. நிச்சயம் இது ஆஃப் ஸ்டம்ப்பைத் தகர்க்கும். இது ஷதாப் கான் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கேப்டன் சர்ஃபராஸுக்கும் விதைக்கிறார். அவுட் என பிடிவாதமாக இருக்கிறார் ஷதாப்.  ரிவ்யூ போகலமா? இது சர்ஃபராஸ் தயக்கம். ஆனாலும், ஷதாப் கானை நம்புகிறார் சர்ஃப்ராஸ். ரிவ்யூ கேட்கிறார். ஆம், சர்ஃப்ராவிஸின் ரிவ்யூ சரி, ஷதாப் கானின் நம்பிக்கை சரி, பாகிஸ்தானின் ரிவ்யூ முடிவு சரி. ஆனால், யுவராஜ்  சிங்...?

India_Vs_Pakistan_13375.jpg


பாகிஸ்தானின் ஃபீல்டிங் படுமோசம். முன்பல்ல, இப்போதும்... இப்போதல்ல, எப்போதும். விராட் கோலியின் கேட்ச்சை முதல் ஸ்லிப்பில் இருந்த அசார் அலி டிராப் செய்தது அதற்கு நல்ல உதாரணம். பாகிஸ்தான் ஃபீல்டிங்கில் தேறி வருகிறது. முகமது ஷமியின் அடுத்த பந்தில் பாயின்ட் திசையிலிருந்து ஷதாப் பிடித்த கேட்ச் அதற்கு நல்ல சான்று. ஷிகர் தவன் பாயின்ட் திசையில் அடித்த பந்தை ஷதாப் பாய்ந்து பிடித்தது மற்றொரு சான்று. ஷதாப் கான் நல்ல பெளலராக வருவாரா தெரியாது. ஆனால், பாகிஸ்தான் இதுவரை கண்டிராத நல்ல ஃபீல்டர்.  
தன் 27 வயதில் நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் ஃபகார் ஜமான். இது அவரது முதல் ஐ.சி.சி. போட்டி. ஒருவேளை ஷர்ஜில் கான் இருந்திருந்தால், இவருக்கு அணியில் இடம் கிடைத்திருக்காது. அகமஷ ஷேசாத்  ரன் குவித்திருந்தாலும், ஜமானின் இடம் கேள்விக்குறியே. ஆனால், ஜமான்  இங்கே அடுத்தடுத்து மூன்று நாக் அவுட் போட்டிகளில் விளாசி இருக்கிறார். ஃபைனலிலும் அட்டகாச ஆட்டம். ஆனால், அவர்  மூன்றாவது ரன் எடுத்திருந்தபோது பும்ராவின் பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஜமான் அவுட். கிளம்ப தயாராகி விட்டார். இந்தியா டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது சரி எனத் தோன்றியது. இல்லை, இல்லை தவறு. ஜமான் நாட் அவுட். அவர் பெவிலியன் திரும்ப வேண்டியதில்லை. பும்ரா வீசியது நோபால். ஓவர்ஸ்டெப். அப்பாடா கண்டம் தப்பியது. விராட் கோலி போல வீணடிக்கவில்லை. ஜமான் சதம் அடித்தார். 

ஜமான், டாட் பால்களை விரும்பவில்லை. அது அவரை வதைத்தது. எல்லா இடத்திலும் அடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக ஸ்பின்னை பதம் பார்த்தார். மிடில் ஓவர்களில் இந்தியாவின் பலம் அதுதான். ஜமான் அடித்ததில் பல ரன்கள் எட்ஜ் வாங்கியது. பல ரன்கள் புல் ஷாட் மூலம், ஹுக் மூலம் வந்தவை, ட்ரைவ் குறைவு, நேர்த்தி கம்மி. பிட்வீன் தி விக்கெட்டில் பிரமாதமாக ஓடவில்லை. ஆனால், சதம் அடித்தார். அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை. பயமில்லாத ஆட்டம். இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர் என்ற பயமில்லை. பதட்டமில்லை. ஒரு கவுன்டி கிரிக்கெட் போட்டியைப் போல இந்த ஃபைனலை எதிர்கொண்டார். 114 ரன்கள் விளாசினார். இந்த ரன் பாகிஸ்தான் 338 ரன் குவிக்க உதவியது. வெற்றிக்கு உதவியது.

 

இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றதும், 1992 உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் இம்ரான் கான், பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தார். அவருடன் முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள் சேர்ந்து கொண்டனர். ‘தோல்வி சகஜம், போராடமல் தோற்பது அவமானம்’ என வசைபாடினர். அந்தத் தோல்வி, அந்த அவமானம், அந்த வசை பாகிஸ்தானை மீட்டெடுத்தது. என்ன செய்ய, பல சாதனைகளின் அச்சாரம் அவமானம்தான்.

http://www.vikatan.com/news/sports/92745-pakistan-beat-india-to-lift-champions-trophy.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிய பாகிஸ்தான்

 

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி ‘கணிக்க முடியாத அணி’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறது பாகிஸ்தான்.

சாம்பியன்ஸ் டிராபி: அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிய பாகிஸ்தான்
 
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதையும் மீறினால் நியூசிலாந்துக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள், கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் என அனைவரும் கணித்தனர்.

டாப்-8 அணிகள் பங்கேற்ற இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் தர வரிசையில் 8-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் மீது யாரும் துளியும் ‘கவனம்’ செலுத்தவில்லை.

201706191744102162_1-Virat-Kohli-s._L_st

அதற்கு ஏற்றார்போல்தான் அந்த அணியின் முதல் லீக் (இந்தியாவுடன் படுதோல்வி) அமைந்தது. அதன் பிறகு எழுச்சி கண்ட பாகிஸ்தான் அணி, வரிசையாக தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை புரட்டியெடுத்ததுடன் நேற்றைய இறுதிப் போட்டியில் இந்தியாவையும் மூழ்கடித்து விட்டது.

இதன் மூலம் அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சாம்பியன்ஸ் பட்டம் வென்று வீறுநடை போட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/19174407/1091729/Champions-trophy-Pakistan-foils-all-prediction.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை பதற வைத்த ஃபகார் ஸமான்: சில சுவாரசிய முன்குறிப்புகள்!

 

 
zaman-2

 

லண்டன்: லண்டனின் ஒவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் அதிரடி சதம் அடித்த ஃபகார் ஸமான் ஆட்ட நாயகனாகவும் தேர்தெடுக்கப்பட்டார். யார் இந்த ஃபகார் ஸமான் என்று  சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ளது மர்தான் நகரம். இங்குள்ள கட்லாங் பகுதியில் பக்கிர் குல் என்பவரின் மகனாக 10.04.1990 அன்று பிறந்தவர் ஃபகார் ஸமான். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான யூனிஸ்கான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிறுவயதிலிருந்து ஸமான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அதனை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அவரது பெற்றோரால் எச்சரிக்கப்பட்டவர்.

zaman-6.jpg

இருந்த போதிலும் பெற்றோர் விருப்பத்தின்படி படிப்பில் கவனம் செலுத்தியவர், 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கப்பல்படையில் சேர்ந்தார். ஆறு ஆண்டு காலம் அங்கு பணிபுரிந்தாலும், கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தை விட்டுவிடாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டி வந்தார்.    

zaman-1.jpg

அதில் வெற்றி பெற்றவராக , கடந்த 27.02.2012 அன்று 'முல்தான் டைகர்ஸ்' என்னும் உள்ளூர் அணிக்காக 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் ஒரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும், தொடர்ந்து வேலை மற்றும் விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார்  

ஆனால் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் தான் முக்கியம் என்று முடிவெடுத்தவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். அப்பொழுதுதான் அவர் தனது மாகாணத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனுமான யூனிஸ்கானைச் சந்தித்தார். அவரது வாழ்வில் திருப்பு முனையான தருணம் அது..!

அதுவரை ஃபகார் ஸமான் 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் அணிகளில் எல்லாம் விளையாடி வந்தார். ஆனால் யூனிஸ்கான் அவரிடம் உனது சொந்த மாகாணத்திற்காக விளையாடுவதுதான் உனக்கு நல்லது என்று அறிவுறுத்தினார். அதன்படி மர்தான் திரும்பிய ஸமான், மாகாணங்களுக்கு இடையேயான போட்டித் தொடர்களில், தனது கைபர் பக்துன்குவா மாகாணத்திற்கு விளையாடினார்.    

zaman-4.jpg

பின்னர் அதில் இருந்து முன்னேறி, 19.04.2013 அன்று முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத்  துவங்கினார். குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும் பொழுது எல்லாம், இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்வது ஸமானுக்கு பிடித்தமான பொழுது போக்கு. நேற்றைய இறுதி போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சினை அவர் துவம்சம் செய்ததை, நீங்கள் இப்பொழுது நினைவு கூறலாம்.

இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் ட்வெண்ட்டி 20 தொடரில், 'லாகூர் கலந்தர்ஸ்'அணிக்காக ஸமான் விளையாடினார். அதில் அவரது கேப்டனாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ப்ரண்டன் மெக்குலம் இருந்தார். அப்பொழுது ஸமானின் ஆட்டத் திறமையை பார்த்து வியர்ந்த மெக்குலம், 'நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தினை  இது போலவே வெளிப்படுத்தினால், உனக்கு எல்லா போட்டிகளிலும் வாய்ப்புத் தருகிறேன்' என்று உறுதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

zaman-5.jpg

அப்படியே தொடர்ந்து முன்னேறியவர், 30.03.2017 அன்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற ட்வெண்ட்டி 20 போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவரது ஆட்டத்திறன் தேர்வாளர்களின் கவனத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டார்.

இம்மாதம் 7-ஆம் தேதி பிர்மிங்ஹாமில் தென் ஆப்பிரிக்காவுக்குஎதிரான போட்டியில் ஸமான் முதன்முதலாக களமிறங்கினார்.  முதல்போட்டியில் 31 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரை சதம் எடுத்தார். அவரது ஸ்கோர்கள் முறையே  50 மற்றும் 57 ஆகும். 

http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/19/a-man-who-destroys-india-in-ct-final-is-a-fomer-sailor-interesting-facts-about-fakhar-zaman-2723637--1.html

Link to comment
Share on other sites

8 அணிகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி கற்றுத் தந்த படம்... ப்ளஸ், மைனஸ் அலசல்! #CT17

 

ட்டாவது சாம்பியன்ஸ் டிராபிக்கான 18 நாள் யுத்தம் முடிந்தது. இதுவரை நடந்ததிலேயே மிகவும் த்ரில்லான ஐசிசி தொடர் இது. `இந்த அணிகள்தான் அரை இறுதி வரும்',  `இந்தியா - பாகிஸ்தான்தான் இறுதியில் மோதும்', `பாகிஸ்தான், வரலாறு படைக்கும்' என்றெல்லாம் எவரும் உறுதியாகக் கணிக்கவில்லை. அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, பல அதிர்ச்சி முடிவுகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளித்தந்திருக்கிறது இந்தத் தொடர்.

சோகம், அழுகை, சஸ்பென்ஸ், போராட்டம், வியூகம், அதிர்ச்சி, ஆச்சர்யம், ஆவேசம், உற்சாகம் என எல்லாவற்றையும் கலந்து கட்டிய காக்டெயில் மாஸ் மசாலா சினிமாவாக நடந்து முடிந்திருக்கிறது சாம்பியன்ஸ் டிராபி தொடர். `உங்கள் நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் அடுத்த தலைமுறைக்கு வழிவிடுங்கள்' என, சிலருக்கு உணர்த்தியிருக்கிறது. `இனி நீங்கள்தான் கிரிக்கெட் உலகை ஆளப்போகிறவர்' என சிலரை அடையாளம் காட்டியிருக்கிறது. நிச்சயமாக மிகச்சிறப்பான தொடர். ஆரோக்கியமான கிரிக்கெட்டை  விரும்பும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் பெருந்தீனி போட்டது. பெரும்பாலான போட்டிகள் ஒரு சார்புள்ளவகையாக நடந்து முடிந்தாலும், எந்த அணிக்கும் தொடர் சாதகமாகிவிடாமல் அத்தனை அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள தொடராக நடந்து முடிந்தது. பலசாலி  என எவரும் இல்லை. சிறு எறும்புக்குக்கூட யானையை அலறவைக்கும் திறமை இருக்கிறது  என உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. கத்துக்குட்டி அணிகளுக்குக்கூட தன்னம்பிக்கையை  அள்ளி ஊட்டியிருக்கும் இந்தத் தொடரைப் பற்றி விரிவாகப் பேச பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இங்கே ஒவ்வோர் அணியின் பெர்ஃபாமன்ஸைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

வங்கதேசமும், பாகிஸ்தானும் எழுச்சி கண்ட அணிகள். இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடின. ஆஸ்திரேலியாவின் கனவை மழை கெடுத்தது. நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா,இலங்கை உள்ளிட்ட அணிகள் பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. ஆசிய கண்டத்துக்கு அப்பால் நடந்த தொடர்களில் ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியது ஆச்சர்யமான  நிகழ்வு. எந்த அணிகள் எங்கே சறுக்கின... எங்கே தடுமாறின... எங்கே சிலிர்த்தெழுந்தன... எங்கே வெற்றிக்கோட்டைத் தொட்டன?

நியூசிலாந்து : 

இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பையில் ரன்னர் பட்டம் வென்ற நியூசிலாந்து அணியால், இந்த முறை லீக் சுற்றையே தாண்ட முடியவில்லை. இந்தத் தொடரில் மிக மோசமாக விளையாடிய அணிகளில் முதன்மையானது நியூசிலாந்து. வில்லியம்சன் அணி இப்படி ஏமாற்றும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு நன்றாகவே இருந்தது. 291 ரன்களைத் துரத்திய ஆஸ்திரேலியாவை, முதல் பத்து ஓவர்களுக்குள் கழுத்தில் கத்தி வைத்து அடக்கியது நியூசிலாந்து. ஒன்பது ஓவர்களில் 53/3 என ஆஸ்திரேலியா தடுமாறியபோது மழை வந்தது. அன்று பெய்த மழை நியூசிலாந்தின் கனவை அடியோடு தகர்த்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் கடைசி 37 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. பேட்டிங் வரிசையை மாற்றாமல் இங்கிலாந்துடன் விளையாடினார் கேன் வில்லியம்சன்.  பெளலிங், பேட்டிங், ஃபீல்டிங் என எல்லா துறைகளிலும் இங்கிலாந்திடம்  தோற்றது நியூசிலாந்து. வங்கதேசத்துடன் ஏற்கெனவே பல போட்டிகளில் தோற்றும்கூட அலட்சியமாக ஆடியது நியூசிலாந்து. விளைவு,  படுதோல்வி! 

கேன் வில்லியம்சன்

இந்தத் தொடரில் கேன் வில்லியம்சன், தனி ஒருவனாகப் போராடினார்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எடுத்தார்; இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை நெருங்கினார்; வங்கதேசத்தோடு விளையாடியபோது அரை சதம் எடுத்தார். 90-களின் மத்தியிலும் இறுதியிலும் `சச்சின் விக்கெட்டைத் தூக்கினால், இந்தியா காலி' என்றொரு நிலை இருந்தது. இப்போது வில்லயம்சனை அவுட்டாக்கினால் நியூசிலாந்தை முடக்கிவிடலாம் எனும் சூட்சமத்தை, விளையாடிய மூன்று அணிகளும் உணர்ந்துகொண்டன. அந்தத் திட்டப்படி நியூசிலாந்தைப் போட்டுத்தாக்கின. 

பேட்டிங்கில் அணியைத் தூக்கி நிறுத்திய பாகுபலியாக இருந்த வில்லியம்சன்,  கேப்டன்சியில் சிவகாமிபோல செயல்பட்டார். அது அணிக்கு பெரும் பின்னடைவாக முடிந்தது. நன்றாக விளையாடிக்கொண்டிருந்த டாம் லாதத்தை வெளியே உட்காரவைத்தார். மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிய நீல் ப்ரூமூக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தார். சமீப காலங்களில் நியூசிலாந்து அணிக்கு மேட்ச் வின்னராகத் திகழ்ந்த கொலின் டீ கிரான்ட்ஹோமை பிளெயிங் லெவனில் எடுக்கவில்லை. ஐபிஎல்-லில் கலக்கிய மெக்லாகனுக்கு வாய்ப்புகளே தரவில்லை.

கோரே ஆண்டர்சன், நீல் ப்ரூம், ஜேம்ஸ் நீஷம், மிச்செல் சான்ட்னர் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார் வில்லியம்சன். ஆடிய மூன்று போட்டிகளிலும் ஒரே அணியே விளையாடியது. வில்லியம்சனின் திடீர் பிடிவாதம் அணிக்குப் பாதகமாக அமைந்தது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரை இறுதி வரையாவது முன்னேற வேண்டும் எனில், கேன் வில்லியம்சன் தன் கேப்டன்சியை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். 

ஆஸ்திரேலியா :

`பேட்டிங் துறை நிலையற்றத்தன்மையோடு இருப்பதையும், அரை இறுதிக்குத் தகுதிபெறுவதே பெரும்சவால்தான்' என சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடரில் எழுதியிருந்தோம். அதை அப்படியே நிரூபித்துவிட்டது ஆஸ்திரேலியா. பந்துவீச்சும் சுமாராகவே இருந்தது. மழையும் ஆஸ்திரேலியாவுக்குப் பாதகம் செய்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் சாம்பியன் ஆக ஆசைப்படும் அணி நேர்த்தியாக விளையாடியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியிருக்கிறது ஆஸ்திரேலியா. நியூசிலாந்துடனான போட்டியில் மழையால் தப்பித்தது, வங்கதேசத்துடனான போட்டியில் மழையால் நொறுங்கிப்போனது. இங்கிலாந்துடனான போட்டியில் தெளிவாகத் தோற்றது.

ஆஸ்திரேலிய அணி

2009- ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியாவின் ஆட்சி மங்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் எல்லா அணிகளுமே சொந்த ஊரில் சிறப்பாகவே ஆடுகின்றன. அயல் மண்ணில் அவமானகரமான தோல்வியடைவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இப்போதுள்ள ஆஸ்திரேலியா அணி பல் பிடுங்கப்பட்ட பாம்புபோன்றது. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தன் மண்ணில் நடந்த அத்தனை போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்துடனான போட்டியை நியூசிலாந்து மண்ணில் ஆடியபோது படுதோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்தும் ஆஸ்திரேலிய அணியைப்போலவே சொந்த மண்ணில் அத்தனை போட்டிகளையும் வென்றது. இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் ரன்னராக ஒதுங்கிக்கொண்டது.

ஆகையால், 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாகக் கருத முடியாத வகையிலேயே விளங்கியது. சாம்பியன்ஸ் டிராபியில் வாங்கிய மரண அடியிலிருந்து  அந்த அணி மீள்வது அவ்வளவு எளிதல்ல. 2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றதற்குப் பிறகு இந்த எட்டு ஆண்டுகளில் நடந்து முடிந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபிகளிலும் இன்னமும் ஒரே ஒரு போட்டியில்கூட ஆஸ்திரேலியா வெல்லவில்லை என்பது பெருந்துயரம். பழைய பன்னீர்செல்வமாக வரவேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்தத் தொடரின் முடிவில் அந்த அணியின் கேப்டனும், பயிற்சியாளரும், அணி நிர்வாகமும் உணர்ந்திருக்கும். 

இலங்கை :

`பொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும். இலங்கையைப் பொறுத்தவரையில் நஷ்டம் எதுவுமில்லை. ஜெயிக்கும் ஒவ்வொரு போட்டியும்  லாபம். எத்தனை கட்டத்தைத் தாண்டுகிறது என்பதையும்தான் பார்க்கத்தானேபோகிறோம்' - இந்த வரிகள் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புகுறித்து மினி தொடரில் குறிப்பிட்டிருந்தவை. 

இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு சவால்விடும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, பாகிஸ்தானிடம் சரணடைந்தது. ஆனால், இந்தியாவை விரட்டியடித்தது. அந்த ஒரு மேட்ச், இலங்கைக்கு தன்னம்பிக்கையைத் தந்திருக்கிறது. டிக்வெல்லா, அசேலா குணரத்னே, குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா போன்றோருக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு யார் யாரை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்நேரம் கண்டுபிடித்திருக்கும். தொடர்ந்து கடுமையாக உழைத்து ஃபீல்டிங், சுழற்பந்து உள்ளிட்ட ஏரியாக்களில் கூடுதல் கவனம் செலுத்தினால்,  இந்தத் தொடரில் பாகிஸ்தான் செய்த மேஜிக்கை, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கையாலும் நிகழ்த்த முடியும். 

தென் ஆப்பிரிக்கா :

சாம்பியன் ஆகத் தகுதியான அணி. எனினும் நாக்அவுட் போட்டிகளில் சொதப்பும் என்பதால், அரை இறுதிக்குப் பிறகு வெற்றி வாய்ப்பைக் கணிப்பது சிரமம் என்றே கருதப்பட்டது. ஐசிசி தொடர்களில் எப்போதுமே ரசிகர்களின்  எதிர்பார்ப்புக்கு மாறாக விளையாடுவது தென் ஆப்பிரிக்காவின் வழக்கம். `இறுதிப் போட்டிக்குச் செல்வதும், கோப்பையை வெல்வதும்தான் சிரமமாக இருக்கப்போகிறது' எனப் பலரும் எதிர்பார்க்க, `நாங்க அரை இறுதிக்குத் தகுதிபெறுவதே சிரமம்தான் அய்யா' என புது டிவிஸ்ட் வைத்தது  டிவில்லியர்ஸ் அணி. 

ஏபி டி வில்லியர்ஸ்

 இந்த முறை தென் ஆப்பிரிக்காவுக்குக் கிடைத்த அணி அற்புதமானது. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என சகல வகைகளிலும் சிறப்பான வீரர்கள் இருந்தார்கள். டிவில்லியர்ஸ், `இந்த முறை நாங்கள் நிச்சயம் சாம்பியன் ஆவோம்' என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், இப்படியொரு மோசமான தொடரில் பங்கேற்கப்போகிறோம் என்பது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாக்அவுட் சுற்றில் சொதப்பிய வரலாறு தென் ஆப்பிரிக்காவை மனரீதியாக தன்னம்பிக்கையைக் குலைப்பதுபோல தெரிகிறது. அத்தனை வீரர்களும் தயக்கமாகவே ஆடினார்கள். மில்லர், ரபடா, மோர்கல் தவிர வேறு எந்த வீரரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானுடனான தோல்வி ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இந்தியாவிடம் அடைந்த படுதோல்வி தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஆறாத ரணம். போராட்ட குணமின்றி படுத்தேவிட்ட தென் ஆப்பிரிக்கா, மீண்டும் சிலிர்த்தெழும். ஆனால், திரும்பத் திரும்பத் தன்னம்பிக்கையின்றி நாக்அவுட்டில் பங்கேற்றால், 2051-ம் ஆண்டில்கூட தென் ஆப்பிரிக்காவால் சாம்பியன் ஆக முடியாது. ஒரு பலசாலி, வாழ்க்கையின் முக்கியமான சமயங்களில் என்னென்ன தவறுகளை எல்லாம் செய்யக் கூடாது என்பதை தென் ஆப்பிரிக்காவைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற அணிகள் எல்லாமே இந்தத் தொடரிலிருந்து ஏதாவதொரு பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே விளையாடிய தொடர்களிலிருந்தே ஒழுங்காக பாடம் கற்கவில்லை. எனவே, புதிதாக எதையும் கற்கவில்லை. தென் ஆப்பிரிக்கா செய்தத் தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருந்தால்,  அது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாலும், உலகின் நம்பர் 1 பெளலராலும்கூட தன்  அணியைக் காப்பாற்ற முடியாது என்பதே மற்ற அணிகள் தென் ஆப்பிரிக்காவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். 

இங்கிலாந்து :

கெளரவமான தோல்வியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து. இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கோப்பையை வெல்லும் அணிகளில் இங்கிலாந்து முக்கியமானதாகக் கருதப்பட்டது. லீக் சுற்றில் வங்கதேசத்துடன் கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடி போட்டியை வென்றது. நியூசிலாந்தை நையப்புடைத்தது. ஆஸ்திரேலியாவை நேர்த்தியாக வென்றது. அரை இறுதியில் பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கே செல்ல முடியாமல் வெளியேறியது இங்கிலாந்து. 

இங்கிலாந்து, இந்தத் தொடரில் நன்றாகவே ஆடியது. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் எல்லாமே ஓரளவு நன்றாகவே இருந்தது. பாகிஸ்தானுடனான போட்டி நடந்த அன்று சரியாக ஆடவில்லை. அன்றைய தினம் பாகிஸ்தானுக்கானதாக இருந்தது. ஆகவே, இங்கிலாந்தில் தோல்வி ஏற்றுக்கொள்ளக்கூடியதே. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு அணியைத் தயார்செய்வதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்திருக்கிறது இங்கிலாந்து. இதே ஃபார்மை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தக்கவைத்தால், 44 வருட சோகத்துக்குப் பிறகு உலகக்கோப்பையை முதன்முதலில் தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். 

சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி

வங்கதேசம் :

`உலகில் கோப்பைகளை வெல்ல, ஓடவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆமை வேகமா, புலிப்பாய்ச்சலா என்பதை முடிவுசெய்யவேண்டியது வங்கதேச வீரர்கள்தான்'  - வங்கதேச அணி குறித்த பார்வையில் இப்படி எழுதியிருந்தோம். இந்த சாம்பியன்ஸ் தொடரில் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது வங்கதேசம். இனி ஓடவேண்டியது அவசியம். ஆனால், உசேன் போல்ட் வேகத்தில் ஓடினால் மட்டுமே 2019-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வெல்ல முடியும். 

இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக ஆடிய வங்கதேசம், பெளலிங்கில் சில தவறுகளைச் செய்ததால் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மழையின் புண்ணியத்தால் படுதோல்வியிலிருந்து தப்பித்தது. நியூசிலாந்துடனான போட்டியில் சேஸிங்கில் வென்றது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தத் தொடரில் சுவாரஸ்யமாக இருந்த ஒரே ஒரு போட்டி வங்கதேசம் - நியூசிலாந்து இடையிலான போட்டிதான். அரை இறுதியில் இந்தியாவுடனான போட்டியில் சற்றே தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டனர் வங்கதேச வீரர்கள். 

அரை இறுதி வரை வந்ததிலேயே திருப்திப்பட்டுக்கொண்டதால் இந்திய வீரர்கள் அடித்த அடியில் சின்னாபின்னமாகியது வங்கதேசம். ஒரு தொடரை வெல்ல வேண்டுமெனில், எப்படி ஃபார்மை கடைசிவரை தக்கவைக்க வேண்டும்; எந்தெந்த வீரர்கள் பெரிய தொடர்களில் பங்கேற்பதற்கு உகந்தவர்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நேரம்  அனுபவத்தால் விடை கண்டுபிடித்திருக்கும்  வங்கதேசம்.  அந்த அனுபவம், இனிவரும் காலங்களில் வங்கதேசத்தைப் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

பாகிஸ்தான் :

பங்காளிகள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். லீக் சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் தோற்றபோது `ம்ஹூம் தேறாது' எனப் பலரும் முடிவுசெய்திருந்தார்கள். அந்த நேரத்தில்தான் சர்ப்ராஸ்கான் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.  `கனவுகள் நொறுங்கிவிடவில்லை... இன்னமும் வாய்ப்புகள் இருக்கின்றன' என உறுதியாகச் சொன்னார். அவரின் வார்த்தைகளை  இறுகப் பற்றிக்கொண்டனர் மீதி 14 பேர்.

இந்தியாவுடன் பாகிஸ்தான் லீக் சுற்றில் விளையாடிய போட்டியையும், தென் ஆப்பிரிக்காவுடன் லீக் சுற்றில் அந்த அணி விளையாடிய போட்டியையும் நீங்கள் முழுவதுமாகப் பார்த்து அசந்துபோயிருப்பீர்கள். கம்பத்தில் கட்டிவைத்து இந்தியா தோலை உரித்த பிறகு பாட்சாவாக மாறிய டிரான்ஸ்ஃபர்மேஷன் வாவ்! `ஒருகாலத்தில் நாங்க எப்பேர்ப்பட்ட அணி தெரியுமா? எங்களது வேகப்பந்தின் பலம் தெரியுமா?'  என இந்தத் தலைமுறை ரசிகர்களிடம் கேள்வி கேட்டது மட்டுமின்றி, 25 வருடங்களுக்குப் பிந்தைய பாகிஸ்தான் அணியையும் நினைவுபடுத்தியது. 

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான்  அணி

இந்தியாவுக்கு எதிராக கேட்ச் விட்டு, பெளலிங்கில் சொதப்பிய ஹசன் அலி , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பெளலிங்கில் விக்கெட்டுகளை அள்ளி ஆர்ப்பரித்தார்; அருமையாக ஃபீல்டிங் செய்து கேட்ச்களைப் பிடித்துக் கொக்கரித்தார். தென் ஆப்பிரிக்கா நானூறு ரன்களை விளாசக்கூடிய அருமையான பேட்டிங் வரிசை வைத்திருந்தது. அந்த அணியை 219 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவும் விடாப்பிடியாகப் போராடியது. ஆனால், அமைதியாக இருந்து எங்கே திமிறி எழ வேண்டுமோ அந்தத் தருணத்தில் சரியாகத் திமிறி எழுந்து தென் ஆப்பிரிக்காவை வெற்றிகொண்டது. இலங்கை ஃபீல்டர்கள் புண்ணியத்தால் எளிதில் ஜெயித்துவிட்டு அரை இறுதியில் இங்கிலாந்தைச் சந்தித்தது. பலசாலி இங்கிலாந்திடம் 'என் பெளன்சர்களுக்கும் ஷார்ட்பிட்ச் பந்துகளுக்கும் விடை சொல்லிவிட்டு இறுதிப்போட்டிக்குள் நுழை' என்பதுபோலிருந்தது பாகிஸ்தானின் பெளலிங். 211 ரன்களுக்குள் சுருண்ட அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீள்வதற்குள் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. 

இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கற்றுக்கொண்டிருந்த மொத்த வித்தையையும் இறக்கியிருந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், நடுவரிசை பேட்ஸ்மேன்கள், ஃபினிஷர்கள் அவரவர் வேலையைச் சரியாகச் செய்ய ஓப்பனிங் ஸ்பெல், சுழற்பந்து அட்டாக், துடிப்பான ஃபீல்டிங், நல்ல கேப்டன்சி என மற்றவர்களும் தங்களது பணியைச் சரியாகச் செய்தார்கள். ஊர் கூடி தேர் இழுத்தது பாகிஸ்தான். அது அற்புதமான வெற்றி. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வெற்றி. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் புது இன்னிங்ஸ் ஆரம்பித்திருக்கிறது.

இந்தியா :

முதல் போட்டியில் பாகிஸ்தானை நேர்த்தியாக ஆடி வென்றது இந்திய அணி. இலங்கையுடன் மோசமாகத் தோற்றது. தென் ஆப்பிரிக்காவுடனான வெற்றியில் நியாயமிருந்தது. வங்கதேசத்தை நொறுக்கியது. கடைசியில் பாகிஸ்தானிடம் பணிந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை எல்லா வகையிலும் வென்றது. அது இந்தியாவுக்கு ஒரு மோசமான நாள் அவ்வளவே! 

கோப்பையை வெல்லும் எனக் கருதப்பட்ட மூன்று அணிகளில் ஒன்று, மறைமுகக் காலிறுதியில் வெளியேறியது. இன்னொன்று அரை இறுதியில் வெளியேறியது. இந்தியா இறுதிப்போட்டி வரை வந்து ரன்னர் ஆகியிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்தவரையில் வின்னரிலிருந்து ரன்னர் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இதற்காக பதற்றப்படத் தேவையில்லை. இந்தத் தொடரிலிருந்து இந்தியாவுக்கு நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. 

ஷிகர் தவான்

 

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் உலகக்கோப்பைக்கான இடத்தை இப்போதே ரிசர்வ் செய்துவிட்டார்கள். விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் தன்னால் நன்றாக விளையாட முடியும் என கிரிக்கெட் உலகுக்குச் சொல்லியிருக்கிறார். இந்தியாவின் நம்பிக்கையான வீரராக மிளிர்கிறார் ஹர்திக் பாண்டியா. வேகப்பந்து துறையில் தன் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைத் தேர்வுக்குழுவுக்கு உணர்ந்தியிருக்கிறார் புவனேஷ்வர் குமார். இந்த ஆறு பேரைத் தவிர மற்றவர்கள் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தத் தொடரிலிருந்து வரும் உலகக்கோப்பைக்கு யார் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் ஒருவித தெளிவு பிசிசிஐ-க்குக் கிடைத்திருக்கிறது. விராட் கோலிக்கு கேப்டனிசியின் சூடு தெரிந்திருக்கும். இந்த அனுபவத்தை அவர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறார்? அணியை எப்படிக் கட்டமைக்கப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்.   

http://www.vikatan.com/news/sports/92903-complete-analysis-of-the-8-teams-in-this-champions-trophy.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ. 14 கோடி; இந்தியாவிற்கு ரூ. 7 கோடி

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் அணிக்கு 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தியா 7 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

 
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ. 14 கோடி; இந்தியாவிற்கு ரூ. 7 கோடி
 
இங்கிலாந்தில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 8 அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.

இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 4.5 மில்லியன் டாலராகும். இதில் சாம்பியன்ஸ் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 மில்லியன் டாலர் (சுமார் 14 கோடி ரூபாய்), 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு 1.1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடி ரூபாய்) பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

201706211710115972_CTfinal-s._L_styvpf.g

அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 14 கோடி ரூபாயும், இந்தியாவிற்கு 7 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா 0.45 மில்லியன் டாலர் (3 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா 58 லட்சம் ரூபாயும், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ. 39 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/21171025/1092146/Champions-Trophy-win-helps-Pakistan-earn-Rs-14-crores.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.