Jump to content

‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்?’ - வெளிவராத பரபர பின்னணி


Recommended Posts

‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்?’ - வெளிவராத பரபர பின்னணி

 
 

டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனிடம் சம்மனை கொடுத்த டெல்லி போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு டி.டி.வி.தினகரன், அவர் யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு டெல்லிக்கு வரச் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பறிமுதல்செய்ததுடன் அவரையும் கைதுசெய்தது டெல்லி போலீஸ். அடுத்து, நேற்றிரவு டெல்லியிலிருந்து விமானம்மூலம் சென்னை வந்த டெல்லி போலீஸார், டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு, அவரிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மனை கொடுத்தனர். 
இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், எங்களுக்கு முழுவிவரங்கள் கிடைத்துள்ளன. மேலும், டி.டி.வி.தினகரன் தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இரட்டை இலைச் சின்னத்தை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பே சுகேஷ் சந்திரசேகருக்கு பணம் கொடுத்துள்ளதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதுதொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளோம். ஏற்கெனவே இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் வழக்கிலிருந்து தப்பிக்க, போலீஸார் சித்ரவதைசெய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். போலீஸ் காவலில் உள்ள விசாரணைக் கைதியிடம், சட்டவிதிகளுக்கு உள்பட்டே விசாரணை நடத்தப்படுகிறது. இதுதொடர்பான விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். டி.டி.வி.தினகரனை வரும் 22-ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிட்டுள்ளோம். இதனால், டி.டி.வி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துவதோடு, கூட்டாகவும் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம்.

இந்த வழக்கில், எங்களுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இதனால், யாரும் தப்ப முடியாது. சுகேஷ் சந்திரசேகர் குறித்து டி.டி.வி.தினகரனை சென்னையில் சந்தித்தபோது, 'அவர் யார் என்றே எனக்குத் தெரியாது' என்று தெரிவித்தார். அடுத்து, சில கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், சரியான பதிலைச் சொல்லவில்லை. டெல்லியில் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகளைத் தயாரித்துள்ளோம். அந்த கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை சரியில்லை. சம்மன் கொடுக்க வந்தபோது, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், எங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால்தான் டெல்லியில் அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றார். 

சுகேஷ் சந்திரசேகர்

அ.தி.மு.க. சசிகலா அணியில், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இருந்துவருகிறார். கட்சியில் அவருக்குரிய ஆதரவாளர்கள், தினமும் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். அவர்களிடம் எல்லாம், 'அமைதியாக இருங்கள். ஓ.பன்னீர்செல்வம், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கும் அமைச்சர்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஒரு முடிவு எடுத்த பிறகு, நம்முடைய முடிவை அறிவிப்போம். விரைவில் சசிகலாவைச் சந்தித்து, கட்சி நிலவரம் குறித்துப் பேச உள்ளேன். அவர், கொடுத்த பதவி இது. அவரது உத்தரவு இல்லாமல் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை கட்சிதான் முக்கியம்' என்று டி.டி.வி.தினகரன் சொல்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரன் மீது டெல்லி வழக்கின் பிடி இறுகுவதை உணர்ந்த டி.டி.வி.தினகரன், சீனியர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறாராம். தனக்கும் அந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க டி.டி.வி.தினகரன் தரப்பு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்களை மோப்பப்பிடித்த டி.டி.வி.தினகரன் தரப்பு, விசாரணையின்போது தெளிவாகப் பதிலடி கொடுக்கவும் முடிவுசெய்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் சனிக்கிழமை, டெல்லி போலீஸாரின் நடவடிக்கைகளைப் பொறுத்து டி.டி.வி.தினகரனின் அடுத்த அஸ்திரம் இருக்கும் என்று சொல்கின்றனர் அவரது தீவிர ஆதரவாளர்கள். டி.டி.வி.தினகரன், அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்கத் தயாராகிவிட்டார். அதே நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்றும் அவர் விரும்புகிறாராம். அதற்காகத்தான் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லையாம். அமைதியாக இருப்பதால் பயந்துவிட்டதாகக் கருதவேண்டாம். எங்களது அமைதிக்கான காரணம், பிறகு உங்களுக்குத் தெரியும் என்று சொல்கின்றனர் டி.டி.வி.ஆதரவாளர்கள்.   

http://www.vikatan.com/news/tamilnadu/87031-reason-behind-delhi-police-leaving-t-t-v-dinakaran-without-arresting.html

Link to comment
Share on other sites

டெல்லியில் ஆஜராக அவகாசம் கேட்கும் டி.டி.வி. தினகரன்

 
 
 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் தினகரன்' என்று கூறி, டெல்லி காவல்துறையினர் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தினகரனுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரைக் கைதுசெய்த காவல்துறையினர், அவரிடம் 1.3 கோடி ரூபாய்களையும் பறிமுதல்செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், தினகரனுக்கு எதிராக அவரிடம் வாக்குமூலம் பெற்றார்கள்.

Dinakaran

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை முடிவுசெய்தது. விசாரணைக்கு தினகரனை அழைப்பதற்கான சம்மனை டெல்லி காவல்துறை அதிகாரிகள் தினகரனின் வீட்டுக்கே வந்து கொடுத்துச் சென்றார்கள்.


அப்போது, இந்த வழக்கில் தினகரன் மீதான குற்றசாட்டுகள் குறித்தும் விளக்கியுள்ளார்கள். டெல்லி காவல்துறை கொடுத்துள்ள சம்மனில், வரும் சனிக்கிழமை அன்று டெல்லியிலுள்ள குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், டெல்லி காவல்துறை முன் ஆஜராக, மூன்று நாள் அவகாசம் கேட்டு டி.டி.வி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87085-dinakaran-asks-three-days-time-to-appear-before-delhi-crime-branch.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.