Jump to content

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss


Recommended Posts

"அன்புக்கு நன்றி" - 67 நாட்களுக்கு பிறகு ஓவியாவின் முதல் ட்விட்! #Biggbosstamil

 

ஒரே டிவிட்டில் அதிரவிட்டிருக்கிறார் ஓவியா. 67 நாட்களுக்குப் பிறகு அவர் எழுதியுள்ள முதல் டிவிட் இது.  நேற்று முன்தின பிக்பாஸில் கமல் நிறையப் பேசினார். நிறையக் கோபமும்பட்டார்.  விமர்சனம் செய்பவர்கள் நாகரீகத்துடன் விமர்சனம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று முதல் ஆர்த்தியும் ஜூலியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்துள்ளனர். ஓவியா அளவிற்கு இல்லையென்றாலும் முதல் முறையாகப் போனவர்களில் ஓரளவுக்கு இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த ரைஸாவும் ஞாயிறன்று வெளியேறிவிட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த அட்ராக்சன் மொத்தமும் போய்விட்டது போன்ற ஃபீல் உருவாகி இருந்தது.  புதிதாக உள்ளே வந்த ஆர்த்தியும் ஜூலியும் அவர்கள் குறித்த வெளியுலகின் கருத்துக்களை அறிந்து கொண்டும், அவர்கள் உள்ளே இருந்தவரை எப்படி தங்களை வெளிப்படுத்தினார்கள் என்பதையும் முந்தைய விடீயோக்களில் பார்த்து விட்டும் உள்ளே சென்றுள்ளார்கள். எனவே அவர்கள் முன்பு இருந்த குணங்களுடன் இனிமேல் இருக்கமாட்டார்கள் என்பது உண்மை. 

ஓவியா

இவை ஒருபக்கம் நடந்து கொண்டு இருந்தாலும் 67 நாட்கள் கழித்து ஓவியா தனது டிவிட்டர்தளத்தில் ஒரு கீச்சு எழுதியுள்ளார்.  அந்த டிவிட் வெளியான 5 மணி நேரத்தில் 10 ஆயிரம் ரீடிவிட்கள், 32 ஆயிரம் லைக்ஸ் என அதிரி புதிரி அடித்துள்ளது. அதில் அவர் " உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கிடைத்த  அன்பை விவரிக்கச் சொற்களே இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றியுடனும் பொறுப்புடனும் இருப்பேன்" என்று நெகிழ்வான கீச்சினை எழுதியுள்ளார் ஓவியா. 

 

பல்வேறு இடங்களில் அவர் தோன்றும் வீடியோக்களும், செல்பிக்களும் வெளியாகி வந்தாலும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் அவர் அதிர்காரப்பூர்வமாக எழுதும்  முதல் டிவிட் இது. தொடர்ந்து தன் ரசிகர்களுடன் அவர் பேசுவார் என்று தெரிகிறது.   

http://www.vikatan.com/news/tamilnadu/100611-oviya-tweets-after-67-days-of-biggbosstamil.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 79
  • Created
  • Last Reply

பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே: ஜூலி ஒப்புதல்

 

 
julie

கோப்புப் படம்

பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே என்று நேற்றைய பிக் பாஸ் நிகழ்வில் சுஜாவிடம் ஜூலி தெரிவித்தார்.

சமீபத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே கொஞ்சம் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிரபலங்களின் குடும்பத்தினர், வீட்டிற்குள் அனுப்பப்பட்டு ஆச்சர்யப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதில் சிநேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்கு சென்றது அனைவரையும் கலங்கடித்தது. ஏனென்றால், இருவரும் சந்தித்து 15 வருடங்களாகிறது. சென்னைக்கு வந்தப் பிறகு சிநேகன் தனது சொந்த கிராமத்துக்கு செல்லவே இல்லை.

நேற்றைய (செப்டம்பர் 8) நிகழ்ச்சியில் ஆரவ்வின் குடும்பத்தினர் வந்தனர். அதற்கு முன்பாக சுஜா மற்றும் ஜூலி இருவரும் பேசிக் கொண்டார்கள். அவை அப்படியே..

சுஜா: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே போனவுடன் எப்படி பார்த்தார்கள்?

ஜூலி: நான் சாதாரணமாக தான் போனேன். ஆனால், பார்ப்பவர்கள் என்னை செலிபிரட்டி மாதிரி காண ஆரம்பித்துவிட்டார்கள். சில பேர் "நீங்க தானே 'பிக் பாஸ்' ஜூலி" என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே கோயிலுக்கு சென்றிருந்த போது, ஒரு அடகு கடைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் பார்த்து அங்கியிருப்பவர்களிடம் சொல்லி சுமார் 300 பேர் கூடிவிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் முதல் நாள் மட்டுமே வெளியே சென்றேன். அதற்குப் பிறகு ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து சனிக்கிழமை வெளியே சென்றேன். ஞாயிற்றுகிழமை அன்று வளசரவாக்கத்தில் பரணி அண்ணா இருக்கிறார் என்று தெரிந்து அங்குச் சென்றேன். பின்பு, நம்பரை தேடிப் பிடித்து சேப்பாக்கத்தில் இருக்கிறார் என்று தெரிந்து சென்று அவருடைய காலில் விழுந்து வந்தவுடன் வீட்டிலிருந்து எங்கேயும் செல்லவில்லை.

சுஜா: அது நீதானா?

ஜூலி: ஆம். நான் தான்.

சுஜா: எதனால் திடீரென்று?

ஜூலி: எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தது. பரணி அண்ணன் இங்கிருந்து போனதிலேயே வருத்தம் தான். அவரை அண்ணன் என கூப்பிட்டவள் நான். என்னிடம் உண்மையாகத் தானே இருந்தார். அவர் இங்கிருந்து சுவர் ஏறிக் குதிக்கும் போதே வருத்தப்படத் தொடங்கிவிட்டேன்.

சுஜா: அப்போதே ஏன் சொல்லவில்லை

ஜூலி: பரணி அண்ணன் என்னிடம் "என்னோடு சேராதே. அப்படிச் சேர்ந்தால் அனைவருமே உன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று கூறினார்.

இவ்வாறு சுஜா மற்றும் ஜூலி இருவருக்கும் இடையே ஆன பேச்சுகள் நடைபெற்றது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19650579.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிக் பாஸில் வெற்றி பெற்றால் நூறு கிராமங்களுக்கு ஏற்ற ஒரு நூலகம் கட்ட கவிஞர் சிநேகன் விருப்பம்!

 

 
bb_snehan
 

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பெரிய நூலகம் ஒன்றைக் கட்டவுள்ளதாகக் கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சிநேகன் - நடிகர் வையாபுரி இடையேயான உரையாடலின்போது கவிஞர் சிநேகன் கூறியதாவது:

100 நாள் இங்கிருந்து நிகழ்ச்சியில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், நூறு கிராமங்களுக்கு பொதுவாக ஒரு நூலகம் கட்டவேண்டும். பிக் பாஸ் நூலகம் என்று பெயரிட்டு தலைவனை (கமல்) வைத்து திறப்புவிழா நடத்த வேண்டும். அதிலிருந்து ஒரு பைசா நம் சொந்தச் செலவுக்கென்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினார். 

 
 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/11/biggbosstamil-snehan-vijaytv-kamal-2771267.html

Link to comment
Share on other sites

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

 
 
 
 

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின. புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் "எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்" என யாஷிகா அவர் கூறியுள்ளார்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2-வில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி நடிகை ரம்பா, சரவணன் மீனாட்ச்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் இவர்களை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

https://news.ibctamil.com/ta/celeberities/Tamil-bigg-boss-season-2-participants

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யார் உள்ளே? யார் வெளியே? பிக் பாஸ் கடைசி வார பரபரப்பு!

 

 
suja

ஒரு போட்டின்னு வந்துட்டா யாருக்காகவும் பார்க்க மாட்டேன், அதில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற தரப்பை எடுத்து அதில் உறுதியாகவும் ஒருவித போராட்ட குணத்துடனும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர் சுஜா. இந்நிலையில் இந்த வாரம் அவரும் கணேஷ் வெங்கட்ராமும் குறைந்த அளவே ஓட்டுப் பெற்றிருப்பதாக கமல் அறிவித்திருந்தார். இந்த இருவரில் வெளியேறப் போகும் நபர் யார் என்று இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

suja-bb-main.jpg

பிக் பாஸ் போட்டி முடிவடைய ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் கடைசி கட்டம் பரபரப்பாக உள்ளது. கணேஷ் அல்லது சுஜா வெளியேற்றப்படவேண்டிய சூழலில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் ஒருவரை சினேகன் தன்னுடைய புள்ளிகளை தந்து உதவிக் காப்பாற்றலாம் என்று கமல் கூறியிருக்கிறார்.

ganesh.jpg

ஏற்கனவே சுஜாவுக்கு சில உதவிகள் செய்திருக்கிறார் சினேகன். எனவே இந்தச் சமயத்தில் அவர் கணேஷைத் தான் காப்பாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுஜா தான் வெளியேறக் கூடிய நபர் என்றும் கணிக்கிறார்கள் ரசிகர்கள்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/24/last-week-of-big-boss-program-2778912.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.