Jump to content

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss


Recommended Posts

வெளியேறும் போட்டியாளர் யார்? சர்ச்சையை ஏற்படுத்தும் விஜய் டிவியின் ட்வீட்! 

 

 
bb_oviya5151

 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

 சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படவேண்டியவர்களின் பட்டியலில் மூவர் இடம்பிடித்துள்ளார்கள். ஓவியா, ஜூலி, வையாபுரி. யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரவேண்டுமோ, அவர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கவேண்டும். மூவரில் குறைவான வாக்குகளைப் பெற்றவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார். இதுவரை அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, நமீதா ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பரணி, ஸ்ரீ ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வாரமும் ஓவியாவுக்கு பலர் வாக்களித்து வருவது சமூகவலைத்தளங்கள் வழியாகத் தெரியவருகிறது. இதனால் இந்த வாரமும் ஓவியா காப்பாற்றப்படுவார் என்றறியப்படுகிறது. இதனால் ஜூலி, வையாபுரி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் விஜய் டிவி ட்விட்டர் தளத்தில் நேற்று திடீரென ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது. 

bb_v.jpg

இந்த ட்வீட்டை முன்னிட்டு சில விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது, விஜய் டிவி வெளியேற நினைக்கும் நபருக்கு ரசிகர்கள் அதிகமாக வாக்களிப்பதால் இதுபோன்ற ஒரு ட்வீட் வெளியிடப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை வாக்குகள் அளிப்பதில் எந்த ரசிகருக்கும் குழப்பம் எதுவும் இருந்ததில்லை. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாக்களிப்பது தொடர்பாக இதுபோன்ற ஒரு ட்வீட்டை விஜய் டிவியும் வெளியிடவில்லை. எனில், திடீரென ரசிகர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாகப் பாடம் எடுப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

ஓவியாவுக்கு எதிராக இருப்பதால் ஜூலிக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்து வருவது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளைக் கொண்டு அறியப்படுகிறது. அதேசமயம் ஜூலியின் மேல் பரிதாபம் கொண்டு பலர் அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்து வருகிறார்கள். இதை எதிர்பாராத விஜய் டிவி, இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டு எச்சரிக்கை செய்கிறதா என்கிற சந்தேகமும் ஏற்படுகிறது.

இந்த ட்வீட்டை முன்வைத்து இன்னொரு கருத்தும் உலவுகிறது. ஜூலிக்கு எதிராக உள்ளவர்கள், வையாபுரிக்கும் வாக்களிப்பதால் அவருக்கு விழும் வாக்குகள் விஜய் டிவியைக் குழப்பிவிட்டிருக்கிறது. ஒருவேளை ரசிகர்கள் தவறாக வாக்களிக்கிறார்களோ என்றெண்ணி அதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டு ரசிகர்களைத் தெளிவுபடுத்த முயல்கிறது என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதுதொடர்பான சர்ச்சை, விவாதங்களால் இந்த வார பிக் பாஸில் வெளியேறும் நபர் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/02/bigbosstamil-oviya-julie-vijaytv-2748470.html

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

ஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா? ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil

 

 

பிக் பாஸ்

மீபத்தில், டாக்டர்களுடன் கலந்துகொள்ளும் 'டாக் ஷோ' ஒன்றிற்குச் சென்றிருந்தேன். எங்கள் அணி மீதான குற்றசாட்டுகளை அவர்கள் அடுக்கிக்கொண்டே போக அதற்குப் பதில் அளிக்க, மறுத்து பேச வாய்ப்பு தரவில்லை. அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்க, கோபத்தில் கை நடுங்க ஆரம்பித்தது. நேரமாக, நேரமாக நான் 'பிக் பாஸ்' காயத்ரியாக மாறி இருந்தேன். ரியாலிட்டி ஷோக்களில் யாரைவாது டார்கெட் செய்து அவரின் ஈகோவைக் கிளறிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். மதியம் பன்னிரண்டு மணிக்கு ஒளிப்பராகும் டாக்டர் நிகழ்ச்சியிலேயே இந்த நிலை என்றால், பிக் பாஸ் போன்ற பெரிய நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்குமோ எனும் எண்ணம் மனதில் ஓடத்தொடங்கியது.
 
பிக் பாஸில் நடப்பவை ஸ்க்ரிப்ட் என்றால் எளிதில் சாயம் வெளுத்து விடும். நமீதா போன்றவர்கள் கோடி ரூபாய் கிடைத்தாலும் பேர் கெடும் என்றால் வெளியே வந்ததும் உண்மையைச் சொல்லியிருப்பார்கள். எனவே, முக்கால்வாசி நிஜம்தான் என்கிற முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், அந்த விளையாட்டு எப்படி ஆடப்படுகிறது என்பதைத்தான் நாம் பேச வேண்டியிருக்கிறது. ஆரம்பித்திலிருந்தே ஓவியா - ஆரவ் நெருக்கமானதை வைத்து 'பிக் பாஸ்' விளையாட ஆரம்பித்து விட்டது. இதில் பலியானது ஓவியாவின் fragile women heart or mind. வழக்கமான விஷயங்களோடு முதல் இரு வாரங்கள் நகர்ந்ததும், ஓவியாவுக்கு ரசிகர்களின் ஆதரவைப் பார்த்து ஆரவ் உள்பட எல்லாருக்கும் பொறாமையைத் தூண்டி விட்டார்கள் பிக் பாஸ் குழுவினர் .குழுவில் சரி சமமாய் இருக்கும் ஒரு பெண், ஆண்களை விடவும் அதிகமாய்க் கொண்டாடப்படும்போது அதை ஆண்களாலும், சக பெண்களலும் ஜீரணிக்க முடிவதில்லை. (ஓர் ஆண் கொண்டாடப்பட்டால் ஹீரோ ஆகிடுவார். அருகில் இருப்பவர்களுக்குப் பெரிதாய் மனச்சிக்கல் வருவதில்லை) 

பிறகு, ஜுலி Vs ஓவியா என்று காமிரா சுழல ஆரம்பித்தது. ரகசிய டாஸ்க் மூலம், ஜூலியின் தாழ்வு மனப்பான்மையுடன் விளையாடினார்கள். அடுத்து, ஓவியாவுக்கு 'யார் பேச்சும் கேட்காத பெண்' என்று டாஸ்க் கொடுக்கப்பட்டு எல்லாரின் வெறுப்புக்கும் ஆளாக வைத்தார்கள். ஏனென்றால், இந்தச் 'சொல் பேச்சு கேட்காத' டாஸ்க் மூலம் மற்றவர்களின் ஈகோவும் பயங்கரமாகத் தூண்டப்பட்டு இருக்கும். இதையெல்லாம் மறக்க வைக்க ஜூலியின் டிராமா அரங்கேற்றப்பட்டது. இல்லாவிடில் ஓவியா மேல், உடனிருப்பவர்களுக்கு இன்னும் பயங்கர வெறுப்பு உருவாகி இருக்கும். 

இந்த ரியாலிட்டி ஷோவை நகர்த்துவதில் முதன்மையானது... டாஸ்க் மூலம் ஈகோ தூண்டப்படுவது. ஜுலியை நடுவராக வைத்து ரெட் கார்பெட் டாஸ்க் வைத்து, எதற்கும் அஞ்சாத ஓவியாவின் ஈகோவை அசைத்து பார்த்தார்கள். ஏற்கெனவே தனிமை, புறக்கணிப்பு, ஏமாற்றம் என்று மனதளவில் உடைந்து போயிருக்கும் ஓவியாவை, ஜூலி நடக்கச் சிவப்புக் கம்பளம் விரிக்கச் சொன்னபோது, ஓவியாவின் ஈகோ பெரும் ஆட்டத்தை ஆடிதான் அடங்கியது. ஒருவேளை அந்தச் சம்பவம் நடைபெறாவிட்டால், ஓவியா மனதுக்குள் மிகப்பெரிய வன்மம் எழுந்திருக்கும். அதிலும் அவர் தெளிவாகவே இருப்பதாகவே தோன்றியது. 

ஓவியா

ஒரு பெண்ணைக் காதலிக்கவில்லை என்றால் 'நண்பர்களாக இருக்கலாம்' என்கிற கதையெல்லாம் வேலைக்கு ஆகாது. முற்றிலுமாக ஒதுங்கிவிட வேண்டும். ஆரவ் ஆரம்பம் முதலே, நட்பை விட கூடுதலாகவே ஓவியாவிடம் பழகி உள்ளார். ஒரு காட்சியில் ஆரவும் ஓவியாவும் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஓவியா எழுந்து செல்ல, ஆரவ் தன் காலால் ஓவியாவின் பின்புறத்தில் உதை கொடுப்பார். அதைப்போல ரைசாவிடமோ, ஜூலியிடமோ ஆரவ் செய்ய முடியுமா.. ஓவியாவுடன் தனக்கு இருப்பது நட்பு மட்டுமில்லை என்று உடல் மொழியால் காட்டிவிட்டு, வார்த்தைகளில் கவனமாக இருக்கிறார் ஆரவ். ஏனென்றால் ஓவியா மூலம் வெற்றியும், அதே சமயத்தில் வெளி உலகில் தனது இமேஜும் முக்கியம் எனும் ஆண் மனநிலைத்தான் காரணம். ஒவியாக்குத் தேவை அவள் அன்பைக் கொண்டாடும் நபர். ஆனால், ஆரவ்வின் தோற்றமும் மற்றவர்கள் அவர் மீது ஈர்ப்புடன் இருப்பதும் பெண்களிடம் மைன்ட் கேம் விளையாடுவதற்கான துணிச்சலைத் தந்துள்ளது. அதாவது, கமிட்மென்ட் இல்லாமல் ரகசிய காதல்களுக்கு ஆரவ் தயார். அதனால் துளி இமேஜோ, சக மனிதர்களின் நட்போ, தன் வெற்றியோ பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
 
பெண்கள் அணி திடீரென்று ஒவியாவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கிறது. இந்த முடிவால் தனக்கு என்ன கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் கணக்கிடுவது போல்தான் இருக்கிறது. இப்போது ஓவியாவை விட்டு விலகும் ஆரவை 'பிக் பாஸ்' ஓவியாவிடம் பேச சொல்லுகிறார். இதன் மூலம் நிகழ்ச்சியின் பரபரப்பு நுணுக்கமாகத் தூண்டிவிடப்படுகிறது. மைன்ட் கேம் விளையாடப்படுகிறது. ஓருவர் இன்னொருவராகப் பேசச் சொன்னது, பேசப்படும் நபரின் ஈகோவில் பெட்ரோலை ஊற்றியதுபோல ஆகிவிட்டது.

பொதுவாக, ஆண்களுக்கு வேட்டையாடும் குணம் உண்டு. தானாய் கிடைக்கும் எதுவும் அவர்களை ஈர்க்காது. தேடி அலைந்து, வேட்டையாடிக் கிடைக்கும் விஷயத்தையே கொண்டாடுவார்கள். அதுதான் ஓவியா - ஆரவ் விஷயத்தில் நடக்கிறது. திரில் இல்லாத காதல் ஆரவ்க்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது. ஆரவ் விரும்பியிருந்தாலும், ஓவியா துரத்துவதால் வெறுப்புதான் வருமே ஒழிய காதல் வராது. சாதாரண ப்ளே பாயான ஆரவ் வில்லனாகும் வாய்ப்பு ஏற்படலாம்.
 
இந்த விஷயத்தில் ஓவியாவின் மனம் உடைந்துவிடும் அபாயம் உண்டு. புறக்கணிப்பை இத்தனை பெரிய இடத்தில் இருக்கும் அவரின் மனம் ஏற்காது. 'அடைந்தே தீர்' என்று மனம் சொல்லும். எவ்வளவுதான் பக்குவமாக இருப்பவர் என்றாலும் புறக்கணிக்கப்படும்போது அந்தப் பக்குவம் உதவாது. மற்றவர்கள் ஏதேனும் சொல்லச் சொல்ல வைராக்கியம் வரும். 'ஆரவ் எனக்கானவன் பார்' என்று இன்னும் அருகே செல்ல, ஆரவ் தூரமாய்ச் செல்ல இன்னும் மனம் உடையும். கவுன்சலிங் உடனடியாகத் தேவைப்படும். ஏனென்றால் தன் பிரச்னையைத் தெளிவாக மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை ஓவியாவிடம் இல்லை. அதனால்தான் ஒட்டுமொத்த வீடுமே தன்னை ஒதுக்கி வைத்தபோதும், கமல்ஹாசன் காட்டிய குறும்படத்திற்காக ஓவியா காத்திருக்க வேண்டியிருந்தது.

இப்போதைய நிலையில், உடனடியாக ஆரவ் அல்லது ஓவியாவை வீட்டை விட்டு வெளியேற்றி, அவரின் பழைய பக்குவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நாளை என்ன நடக்குமோ, எப்படித் திரும்புமோ.. ஆனால் யாரோ ஒருவர் மட்டும் பிக் பாஸ் வீட்டினுள் இருப்பது மட்டுமே இருவருக்கும் நல்லது. 

 

எனவே, ஒவியா மனதைக் காப்பாற்ற அவர் உள்ளே இருப்பதும், ஆரவ் வெளியே இருப்பதும் நல்லது. போன் தொடர்புகூட இல்லாமல் இருந்தால் விரைவில் மனம் மாறி விடும்.  

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/97716-can-you-understand-the-psychological-issues-of-oviya-a-womans-view-about-bigg-boss.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறியதா?

 
 

ஓரளவுக்குச் சமூக ஊடகங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட 38 நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடிகர் கமலஹாசனை தொகுப்பாளராகக் கொண்டு  துவங்கிய ’பிக் பாஸ்’  ரியாலிட்டி நிகழ்ச்சி குறித்து நன்கு தெரிந்திருக்கும். எங்கெங்கு காணினும் பிக் பாஸ் என்பது போல் பரணி, ஓவியா ,காயத்ரி, ஜூலி, வையாபுரி, சினேகன் ஆரவ் என்கிற பெயர்களும் அவர்கள் பற்றிய விவாதமும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அந்த வீட்டில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளுக்கும்  வெர்ச்சுவல் தமிழ் உலகம் மீம்ஸ், ட்வீட், முகநூல் ஸ்டேட்டஸ் என விதவிதமாக ரியாக்ட் செய்து வருகிறது. ஆனால் நாம் பார்க்கும் ‘பிக் பாஸ்’ ஃபீவருக்கும் நடைமுறை எதார்த்தத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதே அதிர்ச்சிகரமான உண்மை. அதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான கடந்த மூன்று வார டிஆர்பி ரேட்டிங் பட்டியல்.

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி என்பது இணையத்தில் அது அதிகம் பேசப்படுவதும், ஆண்கள் நிறையப்பேர் அதனைத் தொடர்ந்து பார்ப்பதுமே காரணம். மலையாள சேனல்களில் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தமிழில் முதல் முறையில் ஹிட் அடிக்கக் காரணம் கமல் என்கிற ஆளுமைக்கு உள்ள மதிப்புதான். அறிவுசார் கருத்துக்களை படங்களின் வாயிலாக எப்போதும் தெரிவித்து வரும் அவரின் மேலாண்மையில் நடக்கும் நிகழ்வு என்பதாலும், கமல்ஹாசனே நெறியாளும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது என்கிற ஆர்வமுமே காரணம். நிகழ்ச்சி துவங்கிய பின்னர் அது கொடுத்து “பீப்பிங் டாம்” உணர்வு எப்போதும் அது குறித்து பேசும் ஆர்வக்கிளர்ச்சியை தூண்டிவிட்டது. ஆனால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பர வருவாயே அதன் ஆயுளை நீட்டிக்கும். அப்படி ஆயுளை நீட்டிக்கக்கூடிய விளம்பர வருவாய் டிஆர்பியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் இந்தியாவின் முதன்மையான சேனல்களின் டாப் 10 லிஸ்ட்கள் துவங்கி ஒவ்வொரு மாநில மொழிகளிலும் உள்ள டாப் 5 சேனல்கள்,டாப் 5 நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியாகும்.

டிஆர்பி என்றால் என்ன ? எப்படிக் கணிக்கப்படுகிறது? 

'ப்ராட்காஸ்டிங் ஆடியன்ஸ் ரீசர்ச் கவுன்சில் இந்தியா ' என்கிற தன்னாட்சி கொண்ட அமைப்புதான் இந்த சர்வேயை எடுத்து வருகிறது. மத்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் விதிமுறைகளுக்கு ஏற்ப இயங்கிவருகிறது இந்த அமைப்பு. இந்தியா முழுவதிலும் உள்ள செட்டாப் பாக்ஸ் வாயிலாக தனக்கான டேட்டாவினை சேகரித்து அதை மொழிவாரியாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் வெளியிடுகிறது, இது மட்டுமில்லாமல் ஒலிஅலைகளின் மூலமும் கணக்கீடு எடுக்கப்படுகிறது. மேற்படி இரண்டு முறைகளில் எடுக்கப்படும் சர்வே சரிபார்க்கப்பட்டு அதன் முடிவுகள் 32 பிரிவுகளில் ஒவ்வொரு வாரமும் டேட்டா சர்வே முடிவுகள் வெளியாகிறது. இதில் வெளியாகும் முடிவுகளில்  மொழிப்பிரிவுகளில் டாப் 5 சேனல்களும், டாப் 5 நிகழ்ச்சிகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. 

இந்த  முடிவுகளில்தான் அந்த அதிர்ச்சியான சர்வே வெளியாகியுள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய ஜூன் 25ம் தேதியிலிருந்து கடைசியாக வெளியாகியுள்ள ஜூலை 28ம் தேதி வரையிலான நான்கு வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களில் கூட அந்த நிகழ்ச்சி வரவில்லை என்பதே நிதர்சனம். இணையத்தில் காணும் இடங்களில் எல்லாம் தென்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பிக்குள் இன்னும் வரவேயில்லை என்பது நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய செய்திதான். இன்னும் கூடுதலாக சொன்னால் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் சன் டிவியின் தொடர்கள் கூட பார்வையாளர்கள் இழப்பைச் சந்திக்கவில்லை. 

பிக்பாஸ்,டிஆர்பி

டிஆர்பி
  
 

சளைக்காத சன் சீரியல்களின் ஆதிக்கம்...

இந்திய அளவில் அதிகப்பார்வையாளர்களை கொண்டதாக சன்டிவி உள்ள நிலையில் தமிழ் மொழி அடிப்படையிலான சர்வேயில்  டாப் 5 தமிழ் நிகழ்ச்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி, தெய்வமகள், வம்சம், குலதெய்வம், வாணி ராணி ஆகியவைதான் உள்ளன. அதே நேரம் விஜய் டிவியின் ரேட்டிங் சற்று உயர்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது. பிக்பாஸ் டிஆர்பி அதிகரிக்காமல் இருப்பதற்கு காரணம், 25 முதல் 40 வயதுள்ளவர்கள் பெரும்பாலும் 'ஹாட்ஸ்டார்' தளத்திலேயே பார்த்துவிடுவதே என்று  சொல்லப்படுகிறது. 

ஆனால், சானல்கள் வரிசையில் நான்காம் இடத்தில் இருந்த விஜய் டிவி, இரண்டாம் இடத்தில் இருக்கு கே டிவியை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்து அந்த சானலுக்கு புதிதாக வந்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையே காட்டுகிறது. இரவு நேர பிரைம் டைமில், நாடகம் பார்ப்பவர்கள் பெரிய அளவில் மாறாத போது, சினிமா பார்க்கும் கூட்டம் அப்படியே பிக் பாஸிற்கு தாவி இருப்பது, அந்த சானலுக்கான ஆரோக்கியமான விஷயம். 

Bigg Boss Tamil TRP

 

இதுவரை இல்லை என்றாலும் வரப்போகும் வாரங்களில் பிக்பாஸ் டிஆர்பியில் இடம் பெறுகிறதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இன்று இணையத்தில் பலம் வாய்ந்த ராணுவமாக இருப்பது ஓவியா ஆர்மிதானே!

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/97853-after-three-weeks-biggbosstamil-not-in-trp-rating.html?utm_content=social-plshb&utm_medium=social&utm_source=SocialMedia&utm_campaign=SocialPilot

Link to comment
Share on other sites

காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா விலகல்?

 

 
bb_oviya2xx

 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஓவியா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

நடிகர் ஆரவ்வைக் காதலித்த ஓவியா, அதை அவரிடம் தெரிவித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார்.

இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேற எண்ணினார் ஓவியா. இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்ததால், ஓவியாவை வெளியேற்றும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றன. 

ஓவியாவின் மேலாளர் விரைவில் வர இருப்பதால் அதுவரை பொறுமையாக இருக்கும்படி ஓவியாவுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதற்காக ஓவியா காத்திருந்தார். அதுவரை நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பவர், நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன.  தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் புகைப்படம் ஒன்றும் நேற்று வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி காரில் செல்லும் ஓவியாவின் புகைப்படம் என்று அப்புகைப்படத்துக்குக் குறிப்பு சொல்லப்பட்டதால் ஓவியாவின் வெளியேற்றம் குறித்த பரபரப்பு மேலும் அதிகரித்தது. ஓவியாவின் விலகல் குறித்தும் அப்புகைப்படம் குறித்தும் விஜய் டிவியிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஓவியா நிகழ்ச்சியில் தொடராவிட்டால் தங்களால் நிகழ்ச்சியைக் காண இயலாது என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். இதனால் விஜய் டிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறுவது குறித்த உண்மை நிலவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/05/bigbosstamil---oviya---vijaytv-2750149.html

Link to comment
Share on other sites

மன்னிப்பு கோரிய கமல்; 'ஓவியா ஆர்மி' ஆன பிக்பாஸ் வீடு

 

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். வழக்கமாக கமல் நம் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்பாரா என்ற மன நிலையில் தான் ரசிகர்கள் வார இறுதி நாட்களில் பிக்பாஸ் பார்த்திருபார்கள். ஆனால் நேற்று அது மட்டுமில்லாமல், ஓவியா சிகிச்சைக்காக வெளிய வருவாரா?என தெரிந்து கொள்ள மேலும் ஆர்வத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருபார்கள்.

oviya

நிகழ்ச்சி தொடங்கியதும், இரங்கல் செய்தியுடன் ஆரம்பித்தார் கமல். கடந்த வாரம் பிக் பாஸ் செட்டில் பணியாற்றி கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் மரணம் குறித்த இரங்கல் தான் அது. அதன் பின்னர் நடந்தது பார்பவர்களை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது. 
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போல் நடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கபட்டிருந்தது. அதனை நகைச்சுவையாக கிண்டலும் கேலியுமாக போட்டியாளர்கள் செய்ய நிகழ்ச்சிக்கு வெளியே ஏகப்பட்ட விமர்சனங்கள். இதனால் நிகழ்ச்சியின் தொடக்கத்திலே அதற்கான மன்னிப்பை கேட்ட கமல், அத்தோடு நிற்காமல், மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகிவிடுவேன் என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிக்பாஸ் மேடையிலே எச்சரிக்கை விடுத்தார். 

bigg boss tamil

அதன் பின்னர் நிகழ்ச்சிக்கு சென்ற கமல், வீட்டுக்குள் நடந்ததை பார்வையிட்டார். ஓவியா தான் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்றும் போக வேண்டாம் என்றும்  மாறி மாறி கூறிகொண்டே இருந்தார். இறுதியாக பிக்பாஸ் மருத்துவ காரணங்களுக்காக ஓவியா வெளியேறுகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கு பேக் செய்ய உதவ வந்த யாரையும் ஓவியா அனுமதிக்க வில்லை. எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்வதாக கூறி அதை செய்யவும் செய்தார். அத்தனை போட்டியாளர்களும் ஓவியாவை வழி அனுப்ப வாசல் வரை வந்தும், யாரையும் திரும்பி கூட பார்க்காமல் ஓவியா வெளியேறியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரணி வெளியேறும் போது 'பை பரணி' என்று சொல்லிய ஓவியா யாருக்கும் 'பை' சொல்லாமல் வெளியேறினார்.

கமல்ஹாசனுடன் உரையாடலிலும் அடம்பிடிக்கும் குழந்தை போல், ஆரவ் உடனான காதல் குறித்தே பேசினார். ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கமல் கேட்க, ஐ லவ்  யு ஆரவ் என்றே கூறினார். ஓவியா வெளியேறிய பிறகு வீட்டில் இருந்த அனைவரும் அவரை நினைத்து கலங்கியபடியே இருந்தனர்.  அந்த காட்சி, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் 'ஓவியா ஆர்மி'யில் சேர்ந்துவிட்டது போல் இருந்தது.  

http://www.vikatan.com/news/tamilnadu/98171-kamalhaasan-apologise-for-the-mad-man-task-given-to-the-housemates.html

Link to comment
Share on other sites

பிக்பாஸில் ஓவியாவின் செயல்பாடுகளுக்குக் காரணம் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டரா? #BiggBossTamil

 

ஒரு பொதுவிடத்தில் நின்று அவதானித்தால் பெரும்பாலானோர் 'பிக் பாஸை'ப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஓவியா பற்றி. கடந்த சில நாட்களாக ஓவியாவைச் சுற்றியே 'பிக்பாஸ்; நிகழ்ச்சி சுழன்று கொண்டிருக்கிறது.  

ஆரவ்வுடன் ஓவியா

ஆரவ் மீது ஈர்ப்புகொண்ட ஓவியா அதை அவரிடம் வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால், ஆரவ் அதை ஏற்கவில்லை. மேலும் பிற பங்கேற்பாளர்களும் ஓவியாவைத் தனிமைப்படுத்த, கடந்த சில தினங்களாக தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார் ஓவியா. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.   சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணி `பிக்பாஸ்' வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்க முற்பட்டார். அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரும் `எங்களை வெளியே அனுப்புங்கள்' என்ற குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  

குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் குடும்பத்தைப் பிரிந்து, வெளியுலகத் தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் அடைந்து கிடப்பதும், மற்றவர்களால் தனிமைப்படுத்தப்படுவதும் பெரும் மனசிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரும் அப்படியான மனச்சிக்கலுக்கு உள்ளாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும், 'எங்களை வெளியே அனுப்புங்கள் என்று குரல் கொடுக்க அதுவே காரணமாக இருக்கலாம்' என்றும்  கூறுகிறார்கள் மருத்துவர்கள்.  

பிக்பாஸில் பங்கேற்பாளர்கள்

இதுகுறித்து மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் பேசினோம்.

குடும்பத்தைப் பிரிந்து குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருப்பது  இனிமையா?  கொடுமையா ? என்பது தனி நபரின் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் அப்படியான நிலையில் உடன் இருக்கும் பிறரால் புறக்கணிக்கப்படுவது என்பது கண்டிப்பாக மனச்சிக்கலை உருவாக்கும். 

தனிமையில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று நாமாக விரும்பி தனிமையில் இருப்பது, மற்றொன்று  மற்றவர்களால் தனிமைப்படுத்தப்படுவது. இதில் முதல் வகையால் எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டாவது வகை மிகவும் கொடுமையானது; தண்டனைக்குச் சமமானது. முன்பெல்லாம் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது இப்படியான தண்டனை தான். குற்றம்ரங்கராஜன் செய்பவர்களை சிறையில் அடைப்பதும் அந்த வகையைச் சேர்ந்தது தான்.  இந்த இரண்டாவது வகை உளவியலைத்தான் ஓவியாவுக்கு நேர்ந்த நிகழ்வுகள் பிரதிபலிக்கின்றன. 

கூட்டுக் குடும்பமாக வாழக்கற்றுத் தருவதே  'பிக் பாஸ்'  ஷோவின் நோக்கம் என்றார்கள். ஆனால்,  அப்படியான ஒரு சூழல் அங்கே உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை என்று தான் தோன்றுகிறது. உடன் இருப்பவர்கள் எல்லாம் போட்டியாளர்களாக இருக்கும்போது, ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்?  நாம் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கும். ஏனென்றால் அது ஒரு சவால்.  ஒற்றுமைக்கு அங்கு இடமில்லை. 

பொதுவாக, வாழும் சூழலே மனிதர்களின் உணர்வுகளையும், மனப்பான்மையையும் தீர்மானிக்கின்றன. சமூகத் தொடர்புகளிலிருந்து ஒதுங்கியே இருப்பவர்கள் டீம் பிளேயராக (Team Player) இருக்க வாய்ப்பில்லை. இந்த மனப்பான்மைக்கு ஆங்கிலத்தில்  'சிஸாய்டு பெர்சானாலிட்டி' (Schizoid Personality) என்று பெயர்.  இவர்களால் சமூகத்துடன் கூடி வாழ முடியாது. தங்களுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் உணர்வுகளை தயங்காமல் வெளிக்காட்டுபவர்களாகவும் இருப்பார்கள். ஓவியா அப்படியான கேரக்டராக தெரிகிறார்.  

ஓவியா பிக்பாஸ்

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய குணம் தான். ஆனால், அதுவே அதிகமாகும்போது, அதற்காகவே வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படும். அப்போது தன்னுடைய இயல்பை மறந்து, மற்றவர்கள் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் (Centre of Attention) என்ற நிலையை அடைவதற்கு ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்று பெயர்.  

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஓவியா இப்படி நடந்து கொள்ளலாம். தன்னுடைய கஷ்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதாக இருக்கலாம் அல்லது மற்றவர்களை ஏமாற்றுவதாகக்கூட இருக்கலாம்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, சக பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்தமாக  தன்னை எதிர்க்கிறார்கள் என்பதைக் காட்டிலும், தான் விரும்பிய மற்றும் தன்னை விரும்பிய நபரும் தன்னை ஒதுக்குகிறார் என்பதால் ஓவியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கலாம்... என்கிறார் மனநல மருத்துவர் ரங்கராஜன்.  

http://www.vikatan.com/news/health/98158-does-oviyas-activities-are-due-to-personal-disorder.html

Link to comment
Share on other sites

ஓவியா, கஞ்சா கருப்பு, சினேகன்... ஷேரிங்ஸ் சொல்கிறார் பரணி! #BiggBossTamil

 

``எந்தக் கேள்வி வேணும்னாலும் கேளுங்க சார். ஆனா, கொஞ்சம் பார்த்து யார் மனசையும் புண்படுத்தாம கேளுங்க. பதில் சொல்றேன்'' என ஆர்வத்துடன் அமர்ந்தார்  `பிக் பாஸ்' பரணி.

`` `நீங்க `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே இருந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை'னு காயத்ரி குற்றச்சாட்டு வெச்சாங்க. வெளியே வந்த நமீதாவும் இதையேதான் சொன்னாங்க. உண்மையாகவே நீங்க எப்படி?'' 

``நமீதா சொன்ன குற்றச்சாட்டுக்கு, கமல் சார் பதில் சொல்லிட்டார். காயத்ரி மேடம் சொன்ன குற்றச்சாட்டுக்கு, அவங்க வெளியே வந்ததும் மக்கள் பதில் சொல்லிடுவாங்க. உண்மையாவே நான் எப்படினு என்னைப் பார்க்கிற மக்களுக்குத் தெரியும். எனக்கு அம்மா, தங்கச்சி, மனைவி, மகள் இருக்காங்க. தமிழ் குடும்பத்துல பிறந்து வளர்ந்த பையன் நான். மனைவியைத் தவிர மற்ற எல்லாரையும் அக்கா, தங்கச்சியாத்தான் பார்ப்பாங்க. நானும் அப்படித்தான். அங்கே இருக்கிறவங்களை என்னைவிட உயர்வாகத்தான் பார்த்தேன். காயத்ரியை ஒரு நடன குருவாகத்தான் பார்க்கிறேன். நமீதா மேடம் 100 படங்கள் நடித்த பெரிய நடிகை. அவங்களையும் நான் உயர்வாகத்தான் பார்க்கிறேன். என்னை இப்படிச் சொன்னதால், அவர்கள் மீது கோபம் இல்லை.'' 

பரணி

``வெளியே வந்த பிறகு கமல்ஹாசனிடம் வேற என்னென்ன பேசுனீங்க?'' 

``நாங்க `பிக் பாஸ்' சம்பந்தமா எதுவுமே பேசலை. எங்க ஊரைப் பற்றித்தான் அதிகம் பேசினோம். பரமக்குடி எங்க ஊர். ரொம்ப வறட்சியான மாவட்டம். `அங்கே நிலத்தடி நீரை அதிகரிக்கணும்; விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்'னு சில விஷயங்களை சார்கிட்ட சொன்னேன். 37 வருடங்களாக நற்பணி இயக்கங்களை வைத்து தலைவர் பல நல்லதை பண்ணிட்டிருக்கார். அதன் அடிப்படையில் `இதையும் கொஞ்சம் பண்ணுங்க. நாங்களும் உங்ககூட இருக்கிறோம் சார்'னு சொன்னேன்.  `நீங்க நல்லா வரணும்'னு சொன்னார்.'' 

``நீங்க `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே நடந்த பிரச்னையைப் பற்றிப் பேசலை, நாட்டு பிரச்னையைத்தான் பேசி இருக்கீங்க?'' 

``இது நாட்டுப் பிரச்னையும் கிடையாது. இந்த நாட்டுக்குள்ளேதான் என் வீடு இருக்கு. அதனால, இதை என் வீட்டுப் பிரச்னையாகக்கூட நீங்க எடுத்துக்கலாம்.'' 

`` `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போனதுக்கு அப்புறம், `ஏன்டா இங்கே வந்து மாட்டிக்கிட்டோம்'னு நினைச்சீங்களா?'' 

``ஆங்... அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலைங்க. ஆனா, சினேகன் சார் `Dishonest'னு அவார்டு கொடுத்தார்ல. அப்பதான் நான் செத்தேபோயிட்டேன். அன்னிக்கு ராத்திரி, நான் செத்துபோன மாதிரி நான் உணர்ந்தேன்.'' 

``அது ஒரு டாஸ்க். அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்?'' 

``அது டாஸ்க்தான். ஆனா, மனசுக்குத் தெரியாதுல்ல. `நம்மை `Dishosent'னு சொல்லிட்டாங்களே'ங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியலை. அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துச்சு.'' 

``ஓவியாவுக்கு `தான் சோம்பேறி'னு விருது கொடுக்கப்பட்டபோது, அவங்க அதை வாங்கிக்கொள்ளவில்லை. சினேகன்கிட்டயே கொடுத்துட்டு வந்துட்டாங்க. நீங்களும் அப்படித் திருப்பிக் கொடுத்திருக்கலாமே?'' 

``நான் திருப்பிக் கொடுத்திருந்தால் வேற பிரச்னை வந்திருக்கும். அவரோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருப்பார். மீண்டும் அந்தப் பேச்சு வளரும். பிரச்னை உருவாகும். அது இன்னமும் அதிகப்படியான மன உளைச்சலை எனக்கு ஏற்படுத்தும் என்பதால், அதை வாங்கிக்கிட்டேன். சினேகன் சார்கிட்ட, `நான் என்னைத் திருத்திக்கிறேன்'னு சொன்னேன். அப்படிச் சொன்னால்தான் அவர் திருப்தி அடைவார்னு எனக்குத் தெரியும். அதுதான் அங்கே அப்படிப் பேசினேன். அங்கயே முடிக்கணும்னு நினைச்சேன். அதுதான் வாங்கிக்கிட்டேன்.'' 

பரணி பேட்டி முழுவதும் காண...

``நீங்களும் கணேஷும் `அச்சம் தவிர்' என்ற நிகழ்ச்சியில் ஏற்கெனவே ஒண்ணா கலந்துக்கிட்டீங்க. ஆனா, `பிக் பாஸ்' வீட்டுல உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது கணேஷ் ஏன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணலை?'' 

``அவர் என்னை ஒரு போட்டியாளரா பார்த்துட்டார். அதனாலதான் எனக்கு ஆதரவு தரலை. அங்கே எனக்கு மனிதாபிமான அடிப்படையில்கூட யாரும் உதவி செய்யலை. நான் வெளியே வந்ததுக்கு அப்புறம், எங்க அம்மா `என்னடா கண்ணு, மேல ஏறினபோது கீழ விழுந்து உன் கை, கால் உடைஞ்சிருந்தா என்னடா ஆகுறது? உனக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்களேடா'னு சொன்ன அப்புறம்தான் அந்த விபரீதத்தை என்னால் உணர முடிஞ்சது.'' 

``கஞ்சா கருப்பு உங்கமேல பல குற்றச்சாட்டுகளை வைத்தார். என்னதான் உங்களுக்கும் அவருக்கும் பிரச்னை?'' 

``கமல் சார்கிட்ட சொன்னதுதான், `நாடோடிகள்' படம் பண்ணும்போதே நடுவுல ஏதாவது சொல்லிட்டிருப்பார். சமுத்திரக்கனி அண்ணன் வந்து சமாதானம் பண்ணுவார். அவர் 300 படம் நடிச்சிருக்கார். நான் மூணு படம்தான் நடிச்சிருக்கேன். அவர்கிட்ட நான் சண்டைபோட என்ன இருக்கு? அடுத்து நான் ஹீரோவா பண்ண படத்துலயும் அவர் காமெடியனா நடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லி அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தேன். ஆனா, ஒண்ணுங்க `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற திருக்குறளை நாம எடுத்துகிட்டுப் போகவேண்டியதுதாங்க. நாம ஏன் அவரைப் பற்றிக் குறை சொல்லணும்?'' 

``நீங்க வெளியே வந்ததுக்கு அப்புறம் எல்லா எபிசோடுகளையும் பார்த்தீங்களா?'' 

``இல்லைங்க. என் தம்பி, தங்கச்சி வீட்டுக்காரர் எல்லாருக்கும் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. நான் அவங்களைப் பார்த்துக்க ஹாஸ்பிட்டலையேதான் இருந்தேன். அதனால, நான் எந்த எபிசோடையும் பார்க்கலை.'' 

``Wild Card என்டரி கொடுத்தா திரும்பவும் வீட்டுக்குள்ளே போவீங்களா?'' 

``அதை மக்கள்தான் முடிவுபண்ணணும்.'' 

``மக்களும் நீங்க திரும்பவும் அந்த வீட்டுக்குள்ளே போகணும்னு முடிவுபண்ணிட்டாங்க. அப்ப என்ன பண்ணுவீங்க?'' 

``மக்கள் முடிவு செஞ்சா நிச்சயம் போவேன். ஒரு கலைஞனுடைய வேலை என்ன? மக்களை ரசிக்கவைப்பது. மக்கள் விரும்புவதைக் கொடுப்பதுதானே!'' 

பரணி

`` `பிக் பாஸ்' வீட்டுக்கு மீண்டும் போயிட்டீங்க. திரும்பவும் உங்களை கார்னர் பண்ணாங்கன்னா என்ன பண்ணுவீங்க?'' 

``இதுக்கு முன்னாடி எந்தச் சூழ்நிலையில் எப்படி இருந்தேனோ... அதே சூழ்நிலையில் அப்படியேதான் இருப்பேன். திரும்பவும் என்னை டார்ச்சர் பண்றது அவங்களுடைய நோக்கமா இருக்கலாம். ஆனா, நான் நானாகத்தான் இருப்பேன்.'' 

``திரும்பவும் தப்பித்து வர மாட்டீங்களே?'' 

யோசிக்கிறார் ``98 சதவிகிதம் அப்படிப் பண்ண மாட்டேன். (என்ன நினைத்தாரோ) இல்லை... இல்லை... இந்த வாய்ப்பைக் கொடுக்கிறது மக்கள்னு சொல்லிட்டீங்க. அப்ப என்னை என்ன பண்ணாலும் 100 சதவிகிதம் உள்ளயேதான் இருப்பேன். தப்பிக்க முயற்சி பண்ண மாட்டேன்.'' 

``உள்ளே இருந்தபோது உங்களுக்குப் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாரு... வெளியே வந்ததுக்குப் பிறகு, உங்களுக்குப் பிடிச்சவங்க பிடிக்காதவங்க யாரு?'' 

``உள்ள இருந்தபோதும் எல்லாரையும் எனக்குப் பிடிக்கும்; வெளியே வந்த பிறகும் எல்லாரையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்து, தலைவர் `உள்ளே போய் வாழு'னு சொல்றார். வெளியே வந்த பிறகு அந்தக் குடும்பத்தைப் பற்றிக் குறை சொல்வது நாகரிகமாக இருக்காது. ஒருவரைப் பற்றி முழுமையாத் தெரியாம குறை சொல்வது, ஒரு கொலை பண்றதுக்குச் சமம். என்னை அப்படி நிறையபேர் கொலை பண்ணியிருக்காங்க. அதே மாதிரி நானும் குறை சொல்லி, கொலை பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்களா? என்னை நீங்க வாழ்த்தினாலும் வணங்குறேன், திட்டினாலும் வணங்குறேன்.'' 

பரணி

``உங்ககூட `பிக் பாஸ்' வீட்டில் இருந்தவர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லணும்னா என்ன சொல்வீங்க?'' 

``சினேகன் - `ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள..' இதை எழுதினவருக்கும் இது பொருந்தும். 

காயத்ரி - நம்ம எல்லோரையுமே இப்படிச் சொல்லியிருப்பாங்க, `ரொம்ப ஆட்டம் போடுறேன்'னு. அதுதான் அவங்க. 

ஜூலி - (நீண்ட யோசனைக்குப் பிறகு) இன்னொரு வீட்டுக்குப் போன தங்கச்சி. 

ரைசா - செயற்கை, என்னிக்கும் ஒரிஜினல் ஆகாது. அவங்க செயற்கைதான். 

ஆரவ் - கூட்டத்தைப் பார்த்து ஒத்து ஊதுகிறது என்னிக்குமே நிலைக்காது. 

ஓவியா - எந்தச் சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி. 

வையாபுரி - அனுபவம் வாய்ந்த சிங்சா.. 

சக்தி - சொல்றதுக்குக் கஷ்டமாயிருக்கு. தொட்டியில் வைச்சு ஒரு மரத்தை வளர்ப்பாங்க. அது என்னிக்குமே பரந்து விரிந்து ஆலமரமாகவோ, பனைமரமாகவோ வளராது. பார்க்கும்போது மட்டும் பளிச்னு இருக்கும். அந்தத் தொட்டி மரம்தான், சக்தி. 

கணேஷ் - ஹைப்ரீட் முட்டை. 

நமீதா - டாய்லெட்ல மட்டும் சுத்தம் இருக்கக் கூடாது. மனசுலயும் இருக்கணும். 

ஆர்த்தி - `மாமியார் உடைச்சா மண் சட்டி, மருமகள் உடைச்சா பொன் சட்டி'னு சொல்வாங்க. அதுதான் அவங்களுக்குப் பொருந்தும். 

பரணி - என்னை மாதிரி வீட்டுல ஒருத்தன் இருப்பான். 

கஞ்சா கருப்பு - எல்லா தெருவுலயும் இந்த மாதிரி ஒருத்தர் இருப்பார். அவர் யாருனு நான் சொல்ல மாட்டேன். 

``கமல், `யார் ஜெயிப்பாங்க?'னு கேட்டபோது, ` `பை பரணி'னு சொன்ன குரல் ஜெயிக்கும்'னு சொன்னீங்க. இன்னமும் அவங்கதான் வெற்றி பெறுவாங்கனு நினைக்கிறீங்களா?'' 

``அன்னிக்கு இருந்த சூழ்நிலையில அப்படிச் சொன்னேன். இப்ப பிந்து மாதவியும் உள்ளே இருக்காங்க. அதனால, மக்கள் யாரை முடிவுசெய்றாங்களோ, அவங்கதான் வெற்றிபெறுவாங்க.'' 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/98116-actor-bharani-open-talk-about-bigg-boss-house-experience.html

Link to comment
Share on other sites

ஆரவ் இல்லாமல் வாழ முடியாது: காதலில் உறுதியாக இருக்கும் நடிகை ஓவியா! (வீடியோ)

bb_oviya_aarav3xx

 

ஆரவ் காதலை மறுத்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள நடிகை ஓவியா, தான் இன்னமும் ஆரவ்வைக் காதலிப்பதாக ரசிகர்களிடம் கூறியுள்ளார். 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான நடிகர் ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார்.

இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேற எண்ணினார் ஓவியா. 

இதன்படி சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஓவியா போட்டியிலிருந்து வெளியேறும் காட்சிகள் ஒளிபரப்பான. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பவர், நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது எதிர்பாராத திருப்பம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா நேற்று சென்னையில் உள்ள சிட்டி செண்டருக்குச் சென்றார். அங்கு ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ரசிகர்களிடம் உரையாடிய ஓவியா, நிகழ்ச்சி குறித்தும் பேசினார். ஆரவ்வை உண்மையாகவே காதலிக்கிறீர்களா என்கிற கேள்விக்கு ஆரவ் தான் என்னுடைய காதலர். அவர் தான் என் வாழ்க்கை. ஆரவ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். இதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/07/biggbosstamil---oviya---vijaytv-2751162.html

Link to comment
Share on other sites

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை

 
நடிகர் கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம்தேதியன்றுநிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசனின் எச்சரிக்கையுடன் தொடங்கியது.

அண்மையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மன நலன் குன்றியவர்கள் போல பங்கேற்பாளர்களை நடிக்க வைத்ததும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா, மன அழுத்தம் தாங்காமல் வெளியேறியதாகக் காட்டப்பட்டது.

அந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான கமல் ஹாசன் இனி நிகழ்ச்சியில் சமூக பொறுப்பு இல்லாமல் சம்பவங்கள் நேர்ந்தால், நிகழ்ச்சி தனக்கு முக்கியமில்லை என்று குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தணிக்கை உண்டா?

மன நலம் குன்றியவர்களை காயப்படுத்தும் விதமாக நிகழ்ச்சியை அமைத்தது, ஓவியா வெளியேற காரணமாக நிகழ்வுகள் போன்றவை சமூக வலைதளங்களில் தொடர் விவாதங்களாகின. அந்த விவாதங்களின் ஒரு கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

தொலைக்காட்சிகள் நடத்துவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கின்றது. செய்திகள் அல்லாத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விதிகள் உள்ளன. ஆனால், தணிக்கை என்பது இதுவரை கிடையாது என்கிறார்கள் நிபுணர்கள்.

'சமூகத்தின் வெளிப்பாடு தொலைக்காட்சி'

பங்கேற்பாளர்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற கதாப்பாத்திரம் வழங்கி, அவர்களை நகைப்புக்கு உரியவர்கள் போல காட்சிப்படுத்தியது தவறு என்கிறார் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் எஸ்.வி. சேகர்.

''பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நினைத்திருந்தால், அதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் பற்றிய காட்சிகளே இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்லமுடியாது, அவர்களும் நம் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவர்களை சித்தரித்தவிதம் தவறு'' என்றார்.

பாதை தெரிகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சட்ட ஆலோசகர் கூறுவது என்ன?

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியாக வழங்கப்படுகிறது என்ற அவர், ''நேயர்கள் பிடிக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியை நிராகரிக்கலாம். அல்லது தங்களது புகாரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் பதிவு செய்யமுடியும். இதன்மூலம் தங்களது எதிர்ப்புகளை ஒருவர் பதிவுசெய்ய வாய்ப்பு உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் தணிக்கை தேவை என்ற நிலை தற்போது இல்லை,'' என்றார்.

தணிக்கை விதிகள் கொண்டுவரும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்கிறார் வழக்கறிஞர் ராஜசேகர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைத்துறை தொடர்பான வழக்குகளில் வாதாடும் வழக்கறிஞர் ராஜசேகர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சட்ட ஆலோசகராக உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வலுத்துவரும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, ''இதுவரை வந்த மூன்று புகார்களுக்கு பதில் அளித்துவிட்டோம். சமீபத்திய நிகழ்ச்சியில் மனநலம் குன்றியவர்களை தவறாக சித்தரித்ததாக கூறி கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹாசன் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்,'' என்றார் ராஜசேகர்.

மேலும் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒலிபரப்புக்கென அரசு வகுத்துள்ள விதிகளைப் பின்பற்றுவதாகவே உள்ளது, என்றார் ராஜசேகர்.

நேயர்களிடம் பிக் பாஸின் தாக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களிடம் பேசியபோது, அவர்கள் வெவ்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினர்.

மன உளைச்சலை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறுகிறார் சென்னைவாசி கணேசன்.

''பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை ஈர்ப்பதற்காக, தணிக்கை செய்வதற்கு பதிலாக, பரபரப்பை ஏற்படுத்த காட்சிகளை எடிட்டிங் செய்வதாக எண்ணுகிறேன்'' என்று கூறினார் கணேசன்

டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு

''தற்போது எரிவாயு மானியம் ரத்தாகும், ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. நம் அன்றாட வாழ்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை விட இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை ஏற்படுத்துவதாக எண்ணி, இதைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்'' என்று மேலும் தெரிவித்தார்

பிக் பாஸை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கவேண்டும்

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவருவதாகக் கூறும் அவரது மனைவி அகிலா, இந்நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிக்குப் புதிது என்பதால் பார்க்க தொடங்கியதாகக் கூறுகிறார்.

''பிக் பாஸ் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களது உண்மையான தன்மையுடன் உள்ளார்களா அல்லது தங்களை சுற்றி கேமிராக்கள் இருப்பதால் தவிக்கிறார்களா என்ற சந்தேகம் சமீபமாக ஏற்பட்டது. சமூகவலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என அவருக்கு அதிகரிக்கும் ஆதரவு இதுவரை வெளியேறிய பிறருக்கு கொடுக்கப்படவில்லை, உண்மையில் அங்குள்ளவர்கள் பேசுவது எடிட் செய்யப்படாமல்தான் காண்பிக்கப்படுகிறதா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன,'' என்றார்.

''சில சமயம் அந்த நிகழ்ச்சியில் உள்ளவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. தற்போது அதோடு ஒன்றாமல், ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன்,'' என்றார் அகிலா.

சுய தணிக்கை அவசியம்

திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் அதன் தாக்கம் பார்வையாளர்களிடம் இருப்பது இயல்பு என்கிறார் மன நல ஆலோசகர் ராஜராஜேஸ்வரி.

''திரைப்பட இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் தங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டவர்கள் பலர் உள்ளனர். அதிலும் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் நிகழ்வுகளை எப்படி கையாளுவது என்று சரியான புரிதலை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும். அந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்,'' என்றார்.

வ

தணிக்கை குறித்து பேசிய ராஜராஜேஸ்வரி, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அரசு தணிக்கை செய்யவேண்டும் என்ற வாதம் தவறானது என்றும், நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தாங்களாகவே தேவை அல்லது தேவையில்லை என்பதை தீர்மானிப்பதே சரியானது என்றார்.

டிஆர்பி ரேட்டிங்கை மையமாக வைத்து நிகழ்ச்சி?

திரைப்படங்களில் தணிக்கை தேவையில்லை என்று வாதாடும் திரைத்துறை திறனாய்வாளர் சுப. குணராஜன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் வருமானத்தை அதிகரிக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தணிக்கை செய்வதாக தெரிகிறது என்கிறார்.

''தொலைக்காட்சியில் தணிக்கை வேண்டும் என்ற நிலை வந்தால், அனைத்து ஊடகங்களும் அரசு ஊடகம் போல காட்சியளிக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ஒரு நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து அளிப்பதாகக் காட்டப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

''அதில் ஒரு நாள் காட்சிகளை எடிட் செய்வதில் தணிக்கை இருக்கும், அதில் என்ன விதமான காட்சிகள் தணிக்கை செய்யப்படுகின்றன, டி ஆர் பி ரேட்டிங்கை அதிகரிக்கும் எண்ணத்துடன் நிகழ்ச்சியில் காட்சிகள் காட்டப்படுகின்றனவா என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,'' என்று அவர் மேலும் கூறினார்.

http://www.bbc.com/tamil/global-40855614

Link to comment
Share on other sites

’’ரொம்பவே வேதனைப்பட்டார் ஜூலி..!’’ - மனம்திறக்கும் ஜூலியின் குடும்பம்

 

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கும் ஜூலி தனது இல்லம் திரும்பிய பிறகு மிகவும் கவலையில் உள்ளதாக ஜூலியின் தம்பி கூறியுள்ளார்.

ஜூலி

சின்னத்திரையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் அதிகம். இதனாலேயே நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. 

நிகழ்ச்சியில் பங்கேற்ற பதினைந்து பிரபலங்களில், பொதுஜன மக்களின் ஒருவராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலியானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவரது வருகை வீட்டுக்குள் இருக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. பின்பு, இவரது பேச்சு மற்றும் சில நடவடிக்கையால் இவருடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தனர் ஹோம் மேட்ஸ்.

ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பம் முதலே அவருக்கு ஆதரவாக இருந்தவர் நடிகை ஓவியா. ஆனால், ஜூலியின் நடவடிக்கையால் ஓவியாவுக்கு நாளடைவில் ஜூலியைப் பிடிக்காமல் போய்விட்டது. ஓவியாவுக்கு மட்டுமன்றி நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் ஜூலியின் மீது கோபத்தில் இருந்தனர். அதனாலேயே 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஜூலியை வெளியில் அனுப்பும் போது, ’என் தங்கையை வெளியில் அனுப்பி வைக்கிறேன். அவர் மீது யாரும் கோபப்படக்கூடாது’ என்று கமல் கூறினார். 

ஜூலி வெளியே வந்தபிறகு அவர் தனது முகத்தை துணியால் கட்டிக்கொண்டு பரணி காலில் விழுந்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது. இதுபற்றி பரணியிடம் கேட்டப்போது, ’கருத்து கூற விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து 41 நாள்களுக்குப் பிறகு வெளியேறிய ஜூலி எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அவரது தம்பி ஜோஷ்வாவை தொடர்புகொண்டோம்.

''பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, சனிக்கிழமையே வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முழுவதையும் ஹாட் ஸ்டாரில் பார்த்தவுடன் ரொம்பவே வேதனைப்பட்டார். ஆனா, வீட்டிலிருக்கும் அனைவரும் ஜூலிக்குதான் ஆதரவாக இருக்கிறோம். அம்மா, அப்பாவிடம் கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால், நான் அவர்களை சமாதானம் படுத்திவிட்டேன்'' என்றவரிடம், சமூகவலைதளத்தில் பரவி வரும் வீடியோவைப் பற்றி கேட்டோம்.

 

 

 

''அந்த வீடியோ பற்றி எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி நான் ஜூலியிடம் எதுவும் பேசவில்லை. ஜூலி தற்போது ஓய்வில் இருக்கிறார். ஒரு இரண்டு மாதம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, அவரது வேலையைத் தொடர்ந்து செய்வார். ஆனால், கண்டிப்பாக சினிமாவுக்கு நடிக்கப் போக மாட்டார். ஏன்னா, வீட்டில் ரொம்ப கண்டிப்பு'' என்று கூறினார் ஜூலியின் தம்பி

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98391-julie-was-very-worried-says-julies-family.html

Link to comment
Share on other sites

இவர் உலக நாயகன் மட்டுமில்ல... கலாய் மன்னனும் கூட! - 'பிக் பாஸ்' கமலின் சர்காஸங்கள்

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு விதங்களில் எதிர்ப்புகள் வந்தாலும், கமல்ஹாசனின் பேச்சுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம், அவர் பேசுவதில் அரசியல், கேலி கிண்டல்கள், அறிவுரைகள் என எல்லாமே கலந்துகட்டி காணப்படுவதுதான். இக்கட்டுரையில் அவர் செய்த ஒட்டுமொத்த ரகளைகளில் ஒரு சின்ன பகுதியையும் தந்திருக்கிறோம். 

கமல் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மூன்று விதமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். வாரம் ஒரு நாள் கூட தவறாமல் பார்ப்பவர்கள், பிக் பாஸா? எனக்கு கிக் பாக்ஸிங்தான் பிடிக்கும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் இருப்பவர்கள், கடைசியாக கமலின் அதிரிபுதிரி பேச்சுக்காக மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியைக் காண்பவர்கள். எனக்குத் தெரிந்து இரண்டாவது ரக பார்வையாளர்கள், மூன்றாவது ரக பார்வையாளர்களாக மாறி வருவதை நாளுக்கு நாள் உணர முடிகிறது, நானும் அப்படி மாறியவன்தான். காரணம், இவரது பேச்சில் இருக்கும் குசும்பு, நடக்கும் சூழ்நிலைகளை மனதில் கொண்டு இவர் அடிக்கும் பன்ச் டயலாக்குகள், குறியீடுகள் வழியே மெசேஜ் சொல்வது போன்றவைதான். எபிசோடு ஆரம்பத்தில் செட்டில் இறந்தவருக்கு இரங்கல் தெரிவிப்பது தொடங்கி, ஜூலியிடம் 'It's Not Manipulation ' என்று காட்டமாக கூறியது வரை எல்லாமே ஏலியன் லெவல். 

பிறர் மீது தவறு இருந்தால், பொறுமை இழக்காமல் தன் ஸ்டைலில் எடுத்துரைப்பதுதான் கமலின் மேனரிசம். சமீபத்தில் கூறிய 'மருத்துவ முத்தம்' விஷயம் கூட அப்படித்தான். அர்த்தம் தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்குக் கூட ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரியை புரட்டிப் பார்த்தாவது அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கமல் பேசும் தமிழ் வார்த்தைகளுக்கு அவரே பாவப்பட்டு அர்த்தம் சொன்னால்தான் உண்டு. 'நான் என்ன சார் கெட்ட வார்த்தை பேசுனேன்?' என்று காயத்ரி ரகுராம் கேட்ட கேள்விக்கு வாயைத் திறக்காமலே வெறும் தலை முடியை மட்டும் உயர்த்திக்காட்டினார். 'வெளியே வரட்டும் நான் பார்த்துக்குறேன்' என்று அவர் மிரட்டியதை ஞாபகம் வைத்து, 'வெளியே நான் இருக்கேன், என்னை மீறி தொடு பார்க்கலாம்' என்ற தொனியில் டீல் செய்தது கெத்து. டயலாக்குகள் மட்டுமல்ல, ரியாக்‌ஷன்களும் மாஸ்தான். சமீபத்தில், 'நான் நடிச்சதே இல்ல சார்' என ஜுலி சொல்லியபோது இவர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் தெறி ரகம்.  

கமல் பிக் பாஸ்

கிளிப்பிள்ளை போல் அந்த ஐந்து செகண்டு வீடியோ என்று ஜூலி கேட்டக் கொண்டே இருந்ததற்கு 'It's Not Manipulation, It's Hallucination' என்று இவர் கத்தி சொன்ன மறுகணம் ஆடியன்ஸ் மத்தியில் அப்ளாஸ் அள்ளியது. அதே எபிசோடில் இன்னொரு டயலாக்கும் பட்டையைக் கிளப்பியது. சசிகலா சிறையில் உலா வந்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வந்த நேரம் அது. அதை மனதில் வைத்துக் கொண்டு, நமீதா கேட்ட கேள்விக்கு 'வெளியில வேற 5 ஸ்டார் ஜெயில் கூட இருக்குங்க' என்று இவர் அடித்த கவுன்ட்டர், நோட்ஸ் இல்லாமலேயே எல்லாருக்கும் புரிந்தது. 

மேற்கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், இவரின் எல்லா எபிசோடுகளையும் கூர்ந்து கவனித்தால், இவர் இந்த தலைமுறை  மக்களை மிகவும் ரசிக்கிறார் என்பது தெரியவரும். வார்த்தைக்கு வார்த்தை 'இந்த ஜெனரேஷன் ஆட்கள், எல்லா விஷயங்களையுமே மிகவும் எளிமையாகவும், யதார்த்தமாகவும் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும், ஏன் நானே கற்றுக் கொள்ள வேண்டும்' என்று சிலாகித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் திட்டு வாங்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு கமலின் பாராட்டு குட்டி பூஸ்ட்தான். இப்படி எக்கச்சக்க விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனாலேயே இந்த ஷோவை கமலைத் தவிர வேறு யாரும் தொகுத்து வழங்க முடியாது எனக் கூறலாம். 

 

மேலும் பல கேலிகளும், கிண்டல்களும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் காணவிருக்கிறோம், அது வரை உங்களிடம் இருந்து விடைபெறும் நான்! (இதுவும் கமல் ஸ்டைல்).

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98509-kamal-sarcastic-moments-in-bigg-boss-tamil.html

Link to comment
Share on other sites

ஓவியா இல்லாத பிக் பாஸ் வீடு - எப்படி? ஓவியா ரிட்டர்ன்ஸ் எப்போது? #BiggBossTamil 

 

'ஓவியா.. ஓவியா’ என்று ஒரு மாதகாலம் பலரையும் உச்சரிக்க வைத்த அவர், ‘ஓகே பிக் பாஸ்.. கெளம்பறேன்’  என்று பிக் பாஸ் வீட்டிலிருந்து சனிக்கிழமை கிளம்பிவிட்டார். ஞாயிறன்று கமல்ஹாசன் எல்லாரையும் குறுக்கு விசாரணை செய்ய ஓரளவு தாக்குப்பிடித்தது. கடந்த இரண்டு தினங்களில்.. ஓவியா இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது?

ஓவியா பிக் பாஸ்

ஓவியா இருந்த நாட்களில் அவரது காலை உற்சாகம், நிகழ்ச்சியைப் பார்க்கும் இரவு நேரத்திலும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். ‘குட்மார்னிங் சாங்’ ஒலிக்க ஆரம்பிக்கும். முழுத்தூக்கத்தில் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக போர்வைக்குள்ளிருந்து தலையை நீட்டி உடலின் ஒவ்வொரு செல்லிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆட்டத்தை போடுவார். லேசாகத் தலையை ஆட்ட ஆரம்பித்து, பாடலின் ரிதத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டே வந்து புல்தரையில் குத்தாட்டம் போடுவது வரை என்ன செய்தாலும் அதில் ஓர் உண்மை இருந்தது. இசையும், நடனமும் அவருக்கு அந்த வீட்டில் இருந்த மனிதர்களைவிடவும் நெருக்கமாக இருந்ததை நம்மாலும் உணரமுடிந்தது. அன்றைக்கு அவர் ஆடும்போது ‘கேமரா முன்னாடி காட்டிகிட்டு ஆடறா’ என்று புறம்பேசியவர்கள், இன்றைக்கு ஆடுகிறார்கள். ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை. இத்தனைக்கும் இன்றைக்கு ஆடுபவர்களில் பலரையும் ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டரும் இருக்கிறார். ஆனாலும் அவர் ஆட்டத்தில்  ஏதோ குறை. அதே போல, ஓவியா இருந்த நாட்களில் இந்த ஆட்டத்திற்கு அவர் யாரையும் அழைத்ததில்லை. யாரும் வந்தால் விலக்கியதும் இல்லை. ஆனால், இன்றைக்கு ஆடுபவர்களுக்கு யாரேனும் ஒரு துணை தேவைப்படுகிறது. ஆடுவதிலேயே ‘எல்லாரும் பார்ப்பாங்க’ என்கிற எண்ணத்தில் ஆடுவது வெட்டவெளிச்சமாய்த் தெரிகிறது. ஓவியாவை மிஸ் செய்யும் தருணங்களில்  முக்கியமானது  இந்த ‘குட்மார்னிங் சாங்’ நேரம். 

டாஸ்க் என்ற ஒன்று கொடுத்தால் சிரத்தையாய் செய்கிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் இல்லையே!  ‘அவ சாப்டத நான் ஏன் கழுவணும்?’ என்று ஸ்பூனைத் தூக்கி எறிந்த ஒருவர் நேற்று யாருடையதையோ மாங்கு மாங்கு என்று துவைத்துக் கொண்டிருந்தார். சண்டையே நடக்காவிட்டாலும் ‘சண்டை போடாதீங்கப்பா’ என்று வையாபுரி  சொல்லிக் கொண்டிருந்தார். ‘சண்டையா.. அதெல்லாம் இல்ல ப்ரோ’ என்று கணேஷும், ஆரவ்வும்   சொல்லிக் கொண்டிருந்தனர். ‘அவரு என்னைத் தப்பா நினைச்சுட்டாரு’ என்று சக்தி  சொல்லிக் கொண்டிருந்தார். ‘இல்லல்ல ப்ரோ. இது கேம்தானே’ என்று சினேகன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றிலும் ஒரு ‘அதோ அவரே வந்துட்டாரே’, ‘என்ன வெய்யில்.. சாரதா கொஞ்சம் தண்ணி கொண்டு வா’  ரக நாடகத்தன்மை. 

பிக் பாஸ் ஓவியா

இவற்றையெல்லாம் பார்க்கும்போதும் ஓவியாவின் இன்மையை உணர்கிறேன். பிடித்தால்தான் டாஸ்க் செய்வார். செய்தால் முழுமனதோடு செய்வார். இல்லையா ‘டாஸ்க்லாம் செய்ய முடியாது’ என்பார். எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது என்று தெரியவில்லை. லிவிங் ஏரியாவில் பாட்டு போடப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் பாடல் வரும்போது ஆடவேண்டும் என்றொரு டாஸ்க். ஓவியா யார் ஆடும்போதும் சென்று ரசித்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தைத் தொழிலாகக் கொண்ட ஒருத்தர் தன் தோழியிடம் ‘அவ ஆடறப்ப நாம யாரும் போய்ப் பார்க்கக்கூடாது.. அவதான்.. ஓவியாவத்தான் சொல்றேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைக்கு இவர் ஆடுவது நமக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. மொத்தத்தில் இரண்டு நாட்கள் பிக் பாஸ்.. சவ சவ! 

ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘சிவாஜி’ படத்தில் ‘சிவாஜி’ ரஜினி இறந்து விடுவார். இடைவேளைக்குப் பிறகு அவரே ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக வந்து கெத்து காட்டுவார். அதேபோல, ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய போட்டியாளராக உள்ளே வந்த பிந்து மாதவி  சிலரிடம் துணிச்சலாகக் கேள்விகளெல்லாம் கேட்கும்போது ஓவியாவுக்கு நேர்ந்த இழுக்குக்கெல்லாம் இவர் பழி வாங்குவார் என்று தோன்றியது. ம்ஹும். அவரும் ‘நானுண்டு என் வேலையுண்டு’ என்று இருப்பதாகப் படுகிறது. 

பிக் பாஸ் கமல்

சண்டை போடவோ, சினேகமாய்ச் சிரிக்கவோ, ஆடவோ,  பாடவோ, வம்புக்கிழுக்கவோ, சும்மா உலவவோ என்ன செய்தாலும் அவர் அவராக இருந்த ஓவியா இல்லாதது பெரும்குறை. இரண்டு நாள் எல்லாரையும் பாடாய்ப்படுத்தி ஒரு ‘காட்டு காட்டி’விட்டு மருத்துவர் ஆலோசனைக்காக வெளியே வரும் ஓவியா, கமல் சொல்லுங்க என்றதும்  ‘ஹவ் ஆர் யூ சார்?' என்று கமலை நலம் விசாரிக்கிறார். ஆக்சுவலாக கமல்தான் ஓவியாவைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். ஓவியாவின் நலம்,  பலரைக் கவலைக்குள்ளாக்கிய நேரம் அது. ஆனால் அவர் கூலாக கமலிடம் நலம் விசாரித்து அந்த உரையாடலை ஆரம்பிக்கிறார். அந்த Easy Girl ஓவியாவைத்தான் பிக் பாஸ் வீடும், நாமும் மிஸ் செய்கிறோம்.

சரி, ஓவியா திரும்ப வருகிறாரா?

‘சேனல் சார்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்; மக்களும் எதிர்பார்க்கிறார்கள்; பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் திரும்ப வருவார். வைல்ட் கார்ட் எண்ட்ரியில் தெறிக்க விடுவார்’ என்றெல்லாம் பேச்சுகள். என்னளவில் அவர் வராமல் இருப்பதுதான் சிறந்தது. ஏன்?

அங்கே இருந்த நாட்களில் அவர் அன்பே சிவம் என்றிருந்தார். அன்பில் காட்டியது விஸ்வரூபம். அவருக்கெதிரான சதிகளை புன்னகையில் கடந்தார். பிறகு சில சமயங்களில் ருத்ரதாண்டவமும் ஆடினார். (உன்னால எப்படி இப்படி ஒரு பொய்யை இழுக்க முடியுது ஜூலி?)  புறம் பேசாது இருந்தார். சில சமயம் மனதில் தோன்றியதை படாரென்று போட்டுடைத்தார். (ரைசா, கிரீடம்  டாட்டு தலைலதானே போடணும்? ஏன் கால்ல போட்டிருக்கு / தெரியல / நீங்கதானே போட்டிருக்கீங்க? ஏன் தெரியல?) 

ஒருவர் பேசியது பிடிக்கவில்லை என்றால் அவரிடமே அதை அன்பாய், கோபமாய், கடும்கோபமாய் வெளிப்படுத்தினார். அந்த ஓவியாவை நமக்குப் பிடித்திருந்தது. அவரைப் பலர் ஒதுக்கக் காரணமாய் இருந்த, ‘அவ போகட்டும்’ என்று ஓவியாவைத் தவிர பிற எல்லாரையும் நிற்கவைத்து திருஷ்டி சுற்றிய ஒருவரிடமே ‘உங்கமேல கோபம் இல்லை’ என்று பேசிக் கொண்டிருந்தார். அந்த நபரும், ‘இவ போய்டுவா எப்படியும்’ என்ற உறுதியாகத் தெரிந்தபிறகு ஓவியாவுக்கு ஆதரவு வேடம் பூண்டார்.

 

வெளியில் வந்தபிறகு இந்த நாடகங்களையெல்லாம் ஓவியா தெரிந்து கொண்டிருப்பார். இன்றைக்கு அழுதாலும், அன்றைக்கு இந்த விஷயங்களுக்கு உடந்தையாக சினேகனும் இருந்திருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்த ஓவியா, உள்ளே வந்தால் என்ன ரியாக்ட் செய்வார் என்று சொல்ல முடியாது. விதிகளின்படி வெளியே பார்த்ததை விவாதிக்கக் கூடாது என்றிருக்கும். அதனால்தான் பிந்து மாதவி சில விஷயங்கள் தெரிந்தாலும் கேட்பதில்லை. ஆனால் ஓவியாவால் அப்படி இருக்க முடியாது. ’நான் பார்த்துச்சு. நீ நடிக்காத’ என்று முகத்திலடித்தாற்போல பலமுறை சிலரிடம் சொல்லும் சந்தர்பங்கள் வாய்க்கும். அப்படி ரிவெஞ்ச் ரீட்டாவாக அவர்களைப் பழிவாங்க சிலவற்றைச் செய்தால் ரசிக்கலாம். மாறாக இவரும் ‘மன்னிப்பு கேளு மன்னிப்புக் கேளு’ என்று டார்ச்சர் செய்தால் மீண்டும் இவருக்கெதிராக ஒரு அணி, இவரை ஒதுக்குவதும் இவர் டென்ஷனாவதுமே நடக்கும். இப்படியாக  அந்த ‘ரிட்டர்ன்’ ஓவியா, இன்றைக்கு நம் மனதில் இருக்கும் ‘சூப்பர் கேர்ள்’ ஓவியாவை வெறுக்கச் செய்துவிட வாய்ப்புகள் உண்டு. 

ஆகவே....

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98491-how-is-bigg-boss-house-without-oviya-and-when-is-oviya-returning.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please

Link to comment
Share on other sites

'பிக் பாஸ்' வீட்டில் தற்கொலை முயற்சி ஏன்? - ஓவியா அதிர்ச்சி வாக்குமூலம்

 
 

oviyaa_vc1_15576.jpg

'பிக் பாஸ்' நிகழ்ச்சி டீமில் இருந்தவர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சித்ததாக, 'பிக்பாஸ்' புகழ் ஓவியா போலீஸாரிடம் தெரிவித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டி.வி நடத்திவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி,  நடிகை ஓவியாவின் மேனரிசம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஓவியாவுக்கு என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்திருந்த நிலையில், அந்த  நிகழ்ச்சியில்  உள்ள  ஆரவ் என்பவரை ஓவியா காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஓவியாவை ஆரவ் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், 'பிக் பாஸ்' வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில், கடந்த      4 -ம் தேதி தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது. அதன் காரணமாகவும் ஓவியா, 'பிக்பாஸ்' வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. தற்கொலைக்கு முயற்சிசெய்த அன்று,போலீஸார் அங்கு விரைந்துசென்று  விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஓவியாவின் இந்த தற்கொலை முயற்சிகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம்  புகார்  மனு ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகார் மனு, 113_14066.jpgபூந்தமல்லி காவல்நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப் புகார் மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது என காவல்நிலையத்துக்குச் சென்று கேட்டுள்ளார் பாலாஜி. அப்போது, காவல்துறை அதிகாரிகள் சொன்ன தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் .

"ஒவியாவிடம்  போலீஸார் விசாரணை செய்துள்ளனர். போலீஸாரின்  விசாரணைக்கு  ஒத்துழைத்த அவர், 'பிக் பாஸ்' வீட்டில் அணியில் இருந்தவர்களை ஏமாற்றவே  தற்கொலைக்கு முயற்சிசெய்ததாக  ஒவியா போலீஸாரிடம் தெரிவித்ததாக பாலாஜி கூறினார். மேலும் தொடர்ந்தவர், 'இந்த நிகழ்ச்சியை சிறார்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். அவர்களுடைய மனநிலையைப் பாதிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது . அதனால், நிகழ்ச்சியை  நடத்தும்  நடிகர் கமலஹாசன் மற்றும் அதில் 'பிக் பாஸ்' டீமில் உள்ளவர்களையும்  விசாரிக்க வேண்டும். அதே நேரத்தில், விஜய் டி.வி நிர்வாகத்தின் மீதும் காவல்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்   

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98794-oviya-reveals-reason-behind-her-suicide-attempt-in-bigg-boss-house.html

Link to comment
Share on other sites

'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்?

 

தமிழகத்தின் சமீபத்திய ஹாட் ஆஃப் த டாபிக் 'பிக் பாஸ்' தான். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாலோ என்னவோ, அலுவலகம், டீக் கடை, சமூக வலைதளம் என எங்கும் எதிலும் 'பிக் பாஸ்' டாபிக்தான் அதிகம் ஓடிக்கொண்டிருக்கிறது. 
இந்நிலையில்,  'பிக் பாஸ்' வீட்டிற்குள் ஒருநாள் மட்டும் சிவகார்த்திகேயன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

sivakarthikeyan-d102-600-20-1476934252_1

அதற்குக்  காரணமும் இருக்கிறது. சிவகாத்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் படம், 'வேலைக்காரன்'. இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை விஜய் டி.வி பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான், 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவா செல்லயிருப்பதாகச் சொல்கிறார்கள். 

biggboss_13544_20501.jpg

 

 

ஏற்கெனவே,'புரோ கபடி லீக்' போட்டியின் புரொமோஷனுக்காக 'தமிழ்  தலைவாஸ்' அணி 'பிக் பாஸ்' வீட்டிற்குள்ளே சென்றுவந்தார்கள். அதேபோலத் தான் வேலைக்காரனுக்காக சிவா செல்வார் என்கிறார்கள். சிவாவுடன் நயன்தாராவையும்அனுப்ப பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். 'பிக் பாஸ்' வீட்டிற்குள்  24 மணி நேரம் தங்கவைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருவதாகச் சொல்கிறார்கள். கமலும், கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக, 'பிக் பாஸ்' வீட்டில் புது வரவுகள் பற்றி சொல்லிச் சென்றி ருக்கிறார். எனவே, இவர்கள் இருவரும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/99123-actor-siva-karthikeyan-in-bigg-boss-house.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் வீட்டிற்குள் புது போட்டியாளராக நுழையும் நடிகை..!

 
 

நடிகை சுஜா

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தவர், நடிகை சுஜா. இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் புதுப் போட்டியாளராக நுழையப்போகிறார் என்கிற தகவல், சில நாள்களாக வலம் வந்தன. தற்போது விஜய் டி.வி வெளியிட்ட விளம்பரத்தில், இந்தச் செய்தி உண்மையாகியுள்ளது.

15 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், பலர் வெளியேறி, பிந்து மாதவி உள்ளே வந்துள்ளார். தற்போது ஏழு நபர்கள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கின்றனர். இவர்களோடு, நடிகை சுஜாவும் தற்போது சேர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாள்கள் முடிந்தநிலையில், மீதமிருக்கும் 50 நாள்களில் இன்னும் சில பிரபலங்கள் வருவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதேபோல, தற்போது சுஜா இணைந்துள்ளார். இவருக்கு அடுத்த போட்டியாளராக, நடிகர் விடிவி கணேஷும், 'வேலைக்காரன்' படத்தின் புரமோஷனுக்காக ஒரு நாள் மட்டும் சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள் எனத் தகவல்கள் வருகின்றன. 

http://www.vikatan.com/news/cinema/99248-fresh-visitor-to-enter-into-bigg-boss-home.html

Link to comment
Share on other sites

சுஜாவுக்குப் பிறகு பிக் பாஸுக்குள் நுழைந்த மற்றொரு புதிய வரவு!

 

 
bb_harish_kalyan21

 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவுக்குப் பிறகு மற்றுமொரு புது வரவு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் நடிகை சுஜா களத்தில் குதித்தார். 

இந்நிலையில் அடுத்தநாளே இன்னொரு புதுவரவை உள்ளே களமிறக்கியுள்ளது பிக் பாஸ் நிர்வாகம். இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதுவரவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார்.

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர், ஹரிஷ் கல்யாண். பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய அறிமுகம் குறித்த விளம்பரத்தை விஜய் டிவி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/17/biggbosstamil-harishkalyan-2756919.html

Link to comment
Share on other sites

ஓவியா அப்பவும், இப்பவும், எப்பவும் அப்படித்தான்! #Oviya #BiggBossTamil 

 
 

ஓவியா

“வடபழனி க்ரீன் பார்க் ஹோட்டல்ல களவாணி பட ஹீரோயின் ப்ரஸ் மீட்னு சொன்னாங்க.  நான் அப்ப ஆஹா எஃப்.எம்ல இருந்தேன். பேட்டி எடுக்க கார்ல போய் இறங்கினேன். நான் இறங்கறப்ப எனக்குப் பின்னால ஒரு ஆட்டோல வந்து ஒரு பொண்ணு இறங்கி ஹோட்டலுக்குள்ள போனாங்க. நான் டாக்ஸிய கட் பண்ணிட்டு மேல போனப்பதான் தெரிஞ்சது,  அந்த ஆட்டோல வந்த பொண்ணுதான் களவாணி ஹீரோயின் ஓவியான்னு” - தற்போது காவேரி தொலைக்காட்சியில் பணிபுரியும் ரோகிணி, நம்மிடம் பகிர்ந்து கொண்டது இது. 

ஓவியா பற்றி ரோகிணி“ ‘என்னப்பா... பேட்டி எடுக்கற நான் கார்ல வர்றேன். ஹீரோயின் ஆட்டோல வர்றீங்க?’னு நான் அங்கவெச்சே கேட்டுட்டேன்.. அதுக்கு ஓவியா சொன்னாங்க; ‘மொத படம் ஆட்டோல வரும். இந்தப் படம் ஹிட்டாச்சுன்னா கார்ல வரும்’னு சிரிச்சுட்டே சொன்னாங்க. 

அதுக்கப்பறம் ஆஹா எஃப்.க்கு வந்தாங்க. அப்பவும் அப்படித்தான். ‘ஹீரோயின்’ அப்டிங்கற பந்தாவ அவங்ககிட்ட பார்க்க முடியாது. ‘எல்லாரும் மனுஷங்கதானே’னு கூலா நின்னுட்டிருப்பாங்க. சிலர் வந்து ‘நான் ஸ்டார்’ங்கற ரேஞ்சுல கெத்தா நிப்பாங்க, எல்லாரும் நம்மளைப் பார்க்கறாங்க’ங்கற உடல்மொழி இருக்கும். இவங்ககிட்ட அதப் பார்க்க முடியாது. ரொம்ப அம்மா செண்டிமெண்ட். அம்மா உடம்பு சரியில்லாம இருந்தப்ப எல்லா மாதிரி படங்களும் ஒப்புகிட்டாங்க. அதை அவங்களே சொல்லவும் செஞ்சாங்க. ‘ஓவியான்னா எதும் ஓசில தருவாங்களா... என்ன வாங்கினாலும் பில்லு குடுக்கணும்ல”’ அப்டின்னாங்க. அவங்களைப் பொறுத்தவரை எதுக்காகவும் நடிக்கணும்ன்ற வேலைய பண்ற டைப் இல்ல” என்றார் ரோகிணி. 

prem news 18

நியூஸ் 18 பிரேம் சொல்வதும் அதுதான்: ‘‘ப்ரோ.. நான் எடுத்தது வீடியோ இண்டர்வ்யூ.  ஸ்டார்ஸ் பொறுத்தவரைக்கும் பேட்டி குடுக்கறப்ப ‘கட் பண்ணிடுங்க’, ‘எடிட் பண்ணிடுங்க’னு பலமுறை சொல்றத பார்த்ததுண்டு. ஆனா இவங்க எந்தக் கேள்வியையும் கட் பண்ணச் சொல்ல மாட்டாங்க. கேமரா ரோல்லயே இருக்கும். கிசுகிசு, பிரச்னைனு எந்த பெர்சனல் கேள்வியா இருந்தாலும் தடுமாற்றமே இல்லாம பதில் சொல்லுவாங்க. அவங்க பிக் பாஸுக்குள்ள பண்றத பாத்து என் ஃப்ரெண்ட்ஸ் ஸ்கிரிப்டட்னு சொல்றப்ப ‘ஓவியா வெளில எப்படி இருக்காங்களோ. அப்டித்தான் இருந்தாங்க’ன்னுதான் சொன்னேன்’’ என்றார்.

நேற்றைக்கு ஓவியா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியவற்றைக் கேட்கும்போது ‘இந்தப் பொண்ணு யுனிக்’ என்றுதான் தோன்றியது. ‘பிக் பாஸ்ல இருந்து வெளில இருந்து வந்தவங்களைத் திட்டாதீங்க - இன்னொருத்தங்களைத் திட்ற ஃபேன்ஸ் எனக்குத் தேவையே இல்லை’, “என் படம்கறதுக்காக பாக்காதீங்க - நல்லா இருந்தா மட்டும் பாருங்க. நல்லா இல்லைன்னா கேவலமா திட்டுங்க”. இந்த இரண்டு ஸ்டேட்மெண்ட்ஸை விடவும் முக்கியமான ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது.  அதை கடைசியில் சொல்கிறேன்;

சக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் சொன்னது இன்னும் ஆச்சர்யப்படுத்தியது. ‘‘நிறைய ஸ்டார்ஸ் பேட்டி எடுத்திருக்கேன். ஒருத்தரை பலமுறை தொடர்பு கொள்ளும்போதும், நம்மளை அறிமுகப்படுத்திக்கணும். ஓவியாவை ’களவாணி’ டைம்ல பேட்டி எடுத்தேன். அதுக்கறப்பறம் பல மாதங்கள் கழிச்சு பேசறப்ப ஃபோன் அடிச்சதும் எடுத்து ‘சொல்லுங்க’னு என் பேரைச் சொல்லிட்டு பேசினார். அதாவது நம்ம நம்பரை சேவ் பண்ணிருக்காங்கனு தெரிஞ்சது. வழக்கமா நடிகர் - நடிகைகள் அதப் பண்ண மாட்டாங்க. என் ஃப்ரெண்ட்ஸும் இதை சொல்லிருக்காங்க. அதே மாதிரி பேட்டி வெளில வந்ததும் ‘இதை ஏன் எழுதினீங்க? அதை அப்படி எழுதிருக்கலாமே’ அப்டினு எந்த ஒரு கமெண்ட்டும் வராது. பேசினா, அதைப் பேசலைன்னு சொல்ல மாட்டாங்க. பூசிமொழுக மாட்டாங்க. கொஞ்சம் சாஃப்டா எழுதிருக்கலாமேனு கேட்க மாட்டாங்க’’ என்றார். 

ஆர்.ஜே ஒருவர் ஓவியாவைப் பற்றி சொல்லும் போது, ‘‘ ‘சண்டமாருதம்’ ரிலீஸ நேரத்தில் மதுரை ஹோட்டல்ல நைட் 10 மணிக்கு ஓவியா பேட்டி எடுக்க வரச்சொல்லிருந்தாங்க. நான் போய் ஹோட்டல் ரூம் கதவ தட்னப்ப, அசிஸ்டெண்ட் பொண்ணு தூக்கக் கலக்கத்தோட கதவைத் தொறந்தாங்க. ஓவியா உள்ள பெட்ல உட்கார்ந்திருந்தாங்க. ஆடியோ பேட்டிதான். ஓவியா எங்களுக்குப் பேட்டி குடுக்கத் தயாரானதும், அந்த அசிஸ்டெண்ட் பொண்ணு ஓவியா தோள்ல கைவெச்சுட்டே பெட்ல ஏறி, அதே பெட்ல படுத்து தூங்க ஆரம்பிச்சாங்க. ஓவியா உட்கார்ந்து பேட்டி குடுத்துட்டிருந்தாங்க. வழக்கமா அசிஸ்டெண்ட்ஸை சோஃபோல தூங்க சொல்லுவாங்க, இல்லன்னா ப்ரைவசிக்காக வேற ரூம்ல இருக்கச் சொல்லுவாங்க. ஒரே ரூம்ல, ஒரே பெட்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரி ஓவியா ட்ரீட் பண்ணிட்டிருந்தது ஆச்சர்ய்மா இருந்தது” என்றார்.

பலரிடம் பேசியதில் இருந்து, அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும், வெளியில் இருக்கும்போதும் எப்போதுமே எப்படி இருக்கிறாரோ.. அப்படித்தான் இருக்கிறார் என்பது தெரிந்தது. நான் பேசிய நிருபர்களில் பலர் அவரது தற்போதைய பேட்டிக்காக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இதில் யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பமும், ஒருத்தருக்குக் கொடுத்தா இன்னொருத்தர் ஃபீல் பண்ணுவாங்க’ என்கிற எண்ணமும்தான் ஓவியா நேற்று வீடியோ வெளியிடுவதற்கான காரணம் என்று நினைக்கிறேன். 

 

 

சரி.. அந்த வீடியோவில் ஓவியாவின் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்திய அந்த விஷயம் என்ன தெரியுமா?  அவர் முடிவெட்டிக் கொண்டதற்கான காரணத்தைச் சொன்னதுதான் அது.  அதுவும் பெருமைக்காகச் சொல்லவில்லை. யோசித்து யோசித்து ‘சரி.. சொல்றேன்’ என்பதுபோல சொன்னதில் இருந்தே அதில் தெரிகிறது.

'ரொம்பவும் அழகான விஷயம் அது: ஒரு ‘விக்  கம்பெனி’ அவரை விளம்பரத்துக்காக அணுகுகிறது. 'கேன்சர் ட்ரீட்மெண்ட்டுக்காக முடி இழக்கும் பெண்கள், தங்கள் அழகு குறைவதாய் எண்ணுகிறார்கள். ஆகவே அவர்கள் விக் வைத்துக் கொள்ளலாம். அழகு குறையாது’ என்பதுதான் அவர்கள் விளம்பர எண்ணம். அதற்கு ஓவியாவை அணுகுகிறார்கள். ஒப்புக் கொள்ளவில்லை ஓவியா.

‘முடில என்னடா அழகு இருக்கு? சொட்டையானாலும், மொட்டையானாலும் அழகு எப்படி இருக்கோமோ அப்படி இருக்கறதுதான்’ என்று நினைத்து அந்த விளம்பரத்துக்கு ஒப்புக் கொள்ளாத ஓவியா,  ஹேர் கட் செய்து கொள்கிறார்.  ‘கான்ஃபிடெண்டா இருக்கறதுதான் அழகு. இல்ல?’ என்கிறார்.  அந்த விக் பிஸினஸை வளர்த்துவிடப் பிடிக்கல’ என்ற ஓவியா ‘ Its Just My Hair.. Nothing Else. Girls, Try. ரொம்ப ஃப்ரீயா இருக்கு’ என்கிறார். 

இதே ‘Hair’ என்ற வார்த்தையை பிக் பாஸில்  வேறொருவர் வாயிலிருந்து  பலமுறை கேட்டோம். இப்போது ஓவியாவும் அதே வார்த்தையைச் சொல்கிறார். இரண்டுமே எதற்காகச் சொல்லப்பட்டது என்பதில்தான் நமக்கான பாடம் இருக்கிறது!

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99454-now-then-and-ever-oviya-is-oviya---bigg-boss-tamil.html

Link to comment
Share on other sites

பிக் பாஸில் மூன்றாவது புதிய போட்டியாளர்: முதல் நாளிலேயே ஆரவிடம் ஓவியா குறித்து கேள்வி!

 

 
bb_kajal123xx

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா, ஹரிஷ் கல்யாணுக்குப் பிறகு மற்றுமொரு புது வரவு போட்டியாளராகக் களமிறங்கியுள்ளார். 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு புதுவரவாக நடிகை சுஜா களத்தில் குதித்தார். அடுத்தநாளே இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதுவரவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர், ஹரிஷ் கல்யாண். பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இன்றும் ஒரு புதிய போட்டியளார் பிக் பாஸ் களத்திற்குள் நுழைந்துள்ளார். சின்னத்திரையில் கவனம் பெற்றுள்ள நடிகை காஜல் பசுபதி தான் அந்தப் புதிய போட்டியாளர். இவர் முதலில் விஜே-வாகப் பணியாற்றினார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார்.

இவருடைய அறிமுகம் குறித்த வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ஆரவிடம், உலகமே ரசிக்கும் ஓவியாவை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டு அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் காஜல். 

இதுபோல வெவ்வேறு குணாதியசங்கள் கொண்ட மூன்று பேர் பிக் பாஸ் போட்டியில் நுழைந்திருப்பதால் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/18/biggbosstamil-2757619.html

Link to comment
Share on other sites

'பிக் பாஸ்' நிகழ்ச்சி: சுஜாவின் செயல்பாடுகளை மறைமுகமாக சாடிய காயத்ரி

 

 
gayathrisuja

காயத்ரி ரகுராம் மற்றும் சுஜா வரூணி | கோப்புப் படம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சுஜாவின் செயல்பாடுகளை மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியவுடன், புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பட்டவர் சுஜா வாரூணி. பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா இருக்கும் போதே, தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக ட்வீட்களை வெளியிட்டு வந்தவர் சுஜா வாரூணி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டு வாசலில் 'OVIYA COME SOON' என்று கோலமிட்டிருந்தார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓவியாவைப் பற்றி உண்மையாக தெரிந்தவர்கள், அவரது பெயரை ஜெயிப்பதற்காக உபயோகிக்கக் கூடாது" என்று ட்வீட்டியுள்ளார். இதன் மூலம் சுஜாவை மறைமுகமாக சாடியுள்ளார் காயத்ரி ரகுராம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், சுஜாவின் செயல்பாடுகளுக்கும் இணையத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தொடர்ச்சியாக ஓவியாவைப் போலவே தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் ரசிகர்களை கவர முயற்சிக்கிறார் அது நடைபெற வாய்ப்பில்லை என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19546540.ece

Link to comment
Share on other sites

Wildcard round-ல் வெற்றி பெற்று வீட்டிற்குள் மீண்டும் செல்ல போவது இவர்கள் தான்.!

 
 
 
 
59a2a32420758-IBCTAMIL.jpg
59a2a32447a84-IBCTAMIL.jpg

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு போல் எந்த ஒரு பரபரப்பும் இல்லை. கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் பலரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜுலி, ஆர்த்தி, சக்தி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால், ரசிகர்கள் எல்லோரும் ஓவியா..ஓவியா என கூச்சலிட உடனே கமல் 'நீங்கள் சொல்வதெல்லாம் அப்படியே நடந்துவிடுமா?' என கேட்கின்றார்.

ஆனால், இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வரப்போவது இல்லை. மக்கள் ஓவியா ஓவியா என்று கத்தினாலும் வரபோவது காயத்ரி தான். இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் wildcard round நடக்க போகிறது. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துக்கொள்ள போவது இல்லை. இந்த wildcard round-ல் ஜூலி மற்றும் ஆர்த்தி தான் தேர்வு செய்யப்பட போகிறார்கள். மீண்டும் நாளை ஆர்த்தி மற்றும் ஜூலி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார்கள்.

 

https://news.ibctamil.com/ta/celeberities/Julie-and-Harathi-going-back-to-bigg-boss-house

Link to comment
Share on other sites

ஜூலியை விமர்சிப்பவர்கள் அரசியல்வாதிகளையும் விமர்சிக்கலாமே: பிக் பாஸ் பார்வையாளர்களை சாடிய கமல்

 

 
biggboss1

கோப்புப் படம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஜூலியைச் சாடிய பார்வையாளரை, அரசியல்வாதிகளைக் குறிப்பிட்டுப் கடுமையாக சாடிப் பேசினார் கமல்

நேற்றைய (ஆகஸ்ட் 27) 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆர்த்தி, ஜூலி, ஷக்தி, பரணி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோருடன் கமல் கலந்துரையாடினார். அப்போது ஒவ்வொருவரிடம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்றவுடன் மக்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்டிருந்தார்.

அப்போது ஜூலி "எங்கள் வீட்டு பிள்ளையாகத் தானே உன்னை அனுப்பினோம். நீ போய் பொய் சொல்லிட்டயம்மா" என்று கூறியவுடன் அரங்கிலிருந்த பார்வையாளர்களில் சிலர் கடும் அதிருப்தி தெரிவித்தார்கள்.

அப்போது ஜூலியைப் பார்த்து கமல் "புரிந்துக் கொண்டீர்களா.. இதையும் வெல்ல முடியும். உங்களுடைய குணாதிசயங்கள் எல்லாம் இவர்களுக்குள்ளும் இருக்கிறது. அதை குத்திக்காட்டுகிறாரோ என்று கூட கோபம் வரலாம்" என்று தெரிவித்தார்.

மேலும், பார்வையாளர்களைப் பார்த்து கமல், "இவ்வளவு கோபப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சின்ன விஷயத்துக்காக பொய் கூறினார். அதற்காக இவ்வளவு கோபம்.

அப்படியென்றால் அரசியல்வாதிகளை எல்லாம் ஏன் விட்டு வைத்தீர்கள். இவ்வளவு கோபத்தை ஒரு சின்ன பெண் மீது காட்டுகிறீர்களே. எத்தனையோ பேர் குண்டர் சட்டத்தில் உள்ளே போக வேண்டியவர்கள் எல்லாம், நம் மீது அதை பாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கோபத்தை எல்லாம் பாதுகாத்து வையுங்கள். அதை வெளிக்கொண்டு வர வேண்டிய காலம் விரைவில் வரும். நான் ஜூலிக்கு பரிந்து பேசவில்லை. எதிர்த்துப் பேசுகிறேன். நீங்களும் நியாயமான நேரத்தில் எதிர்த்து பேசியாக வேண்டும்.

ஜூலி, காயத்ரி ஆகியோரின் பெயரில் கோபத்தை வீணடிக்காதீர்கள். இவர்கள் எல்லாம் உங்களையும் என்னையும் போன்று சாதாரண மக்கள். கோபம் அனைவருக்கும் தேவை தான். சும்மா பல ஓட்டைகள் கொண்ட ஷவர் மாதிரி இருக்கக் கூடாது. தீயணைப்பு வண்டியில் இருந்து வரும் தண்ணீர் ஜெட் போன்று இருக்க வேண்டும்.

அறிவுரை சொல்வதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு நான் சொல்லிக் கொள்ளும் தைரியம், அறிவுரை. ஏனென்றால் எனக்கு நிறைய தேவைப்படுகிறது. அதற்கு உங்களுடைய கோபம் மட்டுமே எனக்கு ஊக்க சக்தியாகும்.

பிக் பாஸ் வீட்டு பிள்ளைகளை எல்லாம் மன்னிக்க முயற்சி செய்யுங்கள். திருத்துங்கள். திருந்தவில்லை என்றால் திருத்த முயற்சி செய்யுங்கள். அதைக் கோபத்தால் செய்ய முடியாது. நான் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். இவர்களை திருத்த முற்படும் போது நான் திருந்தி விடுகிறேன்" என்று பேசினார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19574976.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.