Jump to content

பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு


Recommended Posts

பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு
 

article_1492500558-kanamal-new.jpg - காரை துர்க்கா 

பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். 

 பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட அசுர பலம் கொண்டும் பல நாடுகளது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்தழைப்புடனும் தமிழ் மக்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு 18.05.2009 இல் முடிவுரையும் எழுதினர் கடந்த ஆட்சியாளர்கள்.   

ஆனால், அவ்வாறு நடைபெற்ற இறுதிப் போரில் மனித குலத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய பல போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் நிறையவே உள்ளன. இதனைக் கண் கண்ட காட்சிகளாக இறுதிப் போரில் தீக்குளித்து வெளியேறிய தமிழ் மக்கள் உள்ளனர்.   

காலங்காலமாக வாழ்ந்த மண்னை விட்டு, இராணுவத்தின் எறிகணைகளும் வான் படையின் குண்டுகளும் கடற்படையின் பீரங்கி வேட்டுகளும் என ஒன்றை மாறி இன்னொன்று தொடர்ந்து துரத்தி துரத்தி தாக்கிக் கொண்டிருந்தன.   

இறந்தவருக்காக அழ நேரமில்லை. இறந்தவரது உடலைக் கூட தகனம் செய்ய அவகாசமில்லை. அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க ஓடியோர் ஏராளம். ஏனெனில், இறந்தவருக்காக அழுதால் அழுதவருக்காக அழ எவரும் இருக்கமாட்டார்கள்.   

இரண்டு, மூன்று உழவு இயந்திரங்களிலும் பாரஊர்திகளிலும் வீட்டுப் பொருட்களை ஏற்றி இடம்பெயர்ந்தவர்கள், இறுதியில் முள்ளிவாய்க்காலில் வெற்றுக் கையுடனும் கையே இல்லாமலும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தவிர்த்தனர். இவ்வாறு நடைபெற்ற யுத்தத்துக்குப் பெயர் மனிதாபிமானத்துக்கான போர்.  

பொதுவாகத் தமிழ் மக்கள் ஒருவர் இறந்தால், இறந்த நாளை அடுத்து எட்டுச்செலவு என்ற சமயக் கிரியையை உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் சமைத்துக் கூடி உண்பர். அடுத்துவரும் 31 ஆம் நாளில் அந்தியெட்டி எனப் பிறிதொரு சமய நிகழ்வை இறந்த நாள் அன்று வருகை தந்த மற்றும் வருகை தர முடியா விட்டாலும் உறவினர்கள், நண்பர்கள் என்ற கோதாவில் முறையாக அழைப்புக் கொடுத்து, இறந்த ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தனை செய்து, படைத்து உண்பர்.

அதனைத் தொடர்ந்து ஆறாவது மாதம், ஒரு வருட நிறைவு மற்றும் புரட்டாதி மாதத்தில் மாளயம் என அவரின் சந்ததி தொடர்ந்து இறந்தவரை நினைத்துப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளும்.  

இவை வெறுமனே பிரார்த்தனை அல்ல; மாறாக ஆழமாகப் பதிந்த உள்ளத்து உணர்வுகள். அவற்றால் ஒரு விதமான உள ஆற்றுப்படுத்தல் நடைபெறுகின்றது. உள்ளம் சாந்தி, சமாதானம் அடைகின்றது. ஆகவே, இவற்றைச் சுமாராக எடை போட முடியாது. அத்துடன் இவைகள் ஓர் இனத்தின் நீண்ட பாரம்பரியப் பண்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் ஆகும்.

ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், கணவன், தம்பி மீள திரும்பி வருவான் என்ற முழு நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்களுக்கு இவ்வாறான சமய சம்பிரதாயங்களை ஆற்ற எப்படி மனம் விளையும்?   

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிக்கா குமாரதுங்க, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அவரது அமைப்பால் பல திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்தும் பல திட்டங்களது முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.   

அவ்வேளையில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய படைவீரர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ள முடியாது என அங்கு அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.   

முள்ளிவாய்க்காலிலும் ஓமந்தையிலும் தாங்கள் பார்த்திருக்க படையினரால் பேரூந்து வண்டிகளில் ஏற்றப்பட்ட தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் அவர்களில் தம் குடும்பங்களில் பலரைப் பறிகொடுத்து பரிதவிக்கின்றனர்.  

 அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா எனத் தெரியாமல் ஏங்குகின்றனர். ஒரு தாய் தன் பிள்ளையை ஆயிரம் கனவுகளுடன் வளர்ப்பாள்; பல்லாயிரம் மனக் கோட்டை கட்டுவாள். அப்படி வளர்த்து தன் கண் முன்னே ‘புலி’ என்று தனது அப்பாவிச் செல்வத்தை கைது செய்து விட்டு, இப்போது கைது செய்யவில்லை; காணவில்லை; சாட்சி உண்டா? ஆதாரங்கள் உண்டா? என்றால் என்ன செய்வது?   

ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே? அவர்கள் குற்றம் இழைத்துள்ளார்கள் எனில் நீதிமன்றம் முன் நிறுத்துவது தானே நீதி? எனவே, அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டது அநீதி இல்லையா? எனக் கேள்விகள் நீண்டு செல்கின்றன.   

நம் ஊரில் உள்ள சிறு விளையாட்டுக் கழகங்கள் சனசமூக நிலையங்களில் கூட ஒரு நிதியாண்டின் வருமானங்கள், செலவினங்கள் தொடர்பில் கணக்கு சமர்ப்பித்தல், பின் அவற்றைக் கணக்காய்வுக்கு உட்படுத்துதல், அடுத்து சகலருக்கும் தெரியப்படுத்தல் போன்ற வகைகூறல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

இவை கூட ஒரு விதமான பொறுப்பு கூறலே. ஆகவே, அவற்றைப் பொறுப்பு உள்ள நிர்வாக சபை தட்டிக் கழிக்க முடியாது; தனக்கு அதில் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது.   

இந்நிலையில், “ஜக்கிய நாடுகள் சபை சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட முடியாது; எம் நாட்டு இறையாண்மையில் மாற்றார் தலையிட முடியாது; எமது நாட்டு நீதித்துறை தனித்துவமாகவும் நடுநிலையாகவும் இயங்குகின்றது” என்றவாறான அமைச்சர்களில் சிலர் மற்றும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளது சொல்லாடல்கள் மட்டுமல்லாது, காலையில் ஜெனீவாவில் ஒரு மாதிரியும் மாலையில் கொழும்பில் வேறு மாதிரியும் கருத்து உரைத்து வருகின்றனர் நாட்டில் பொறுப்புக்கூற வேண்டிய அரசியல்வாதிகள்.  

இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கான தீர்வு உள்நாட்டில் இல்லை என்பதாலேயே எல்லை தாண்டியது. தமிழ் மக்களுக்குத் தொடர் தொல்லை கொடுத்து பொறுமையின் எல்லை மீற வைத்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே என்பதை இவர்கள் இன்னும் உணராமை வேதனையிலும் வேதனை.  

கடந்த மூன்றாம் திகதி யாழ். வந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன போர்க்குற்றம் என்ற ஒன்று இறுதி யுத்தத்தில் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார். நடு நிலையான போக்கு உள்ளவர் எனத் தமிழ் மக்கள் கருதிய அமைச்சர் தனது போக்கை மாற்றி விட்டார்.   

லக்ஸ்மன் கிரியெல்ல என்ற அமைச்சர் “வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமாக தமிழ் மக்கள் மறந்து விட்டனர். ஆனால் அரசியல்வாதிகளே அவற்றை தூக்குகின்றனர்” எனக் கூறுகின்றார். 

தமிழ் மக்கள் இணைப்பை மறக்க அது என்ன சில்லறை விடயமா? தமிழ் மக்களது ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் பெரும் ஆல விருட்சம். சில வேளைகளில் அதனை எம் அரசியல்வாதிகள் மறந்தாலும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.   

ஜனாதிபதி ஒருபடி மேலே சென்று, “முன்னைய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட முடியாது. தற்போது அவ்வாறான நிலையில்லை; நாட்டில் முழுமையான சுதந்திரம் உள்ளது” என்று தெரிவிக்கின்றார்.   

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, முன்னர் தம் உறவுகளைக் காணவில்லை என வீடுகளுக்குள் இருந்து, பயத்தில் யாருக்கும் தெரியாது தனிமையில் அழுதவர்கள், தற்போது வீதியில் பந்தல் போட்டு, ஏனையவர்களுடன் சேர்ந்து கட்டிப் பிடித்து கதறி அழுகின்றார்கள்.   

ஆகவே வீட்டுக்குள் அழுதவனை தெருவுக்குக் கூட்டி வந்து அழுமாறு செய்தது தான் நல்லாட்சியின் சாதனை ஆகும். 

ஆனால் மறுவளமாக நல்லாட்சி அரசாங்கத்தின் 2015 ஜனவரி தேர்தல் காலத்தில், அன்னம் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க தவறியிருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள பலருக்கு உணவாக அன்னம் கூட இருந்திருக்காது.   

இந்நிலையில் ஏப்ரல் முதலாம் திகதி திருமலை மெக்கெய்ஸர் விளையாட்டுத் திடலில் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

அதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க் கட்சி தலைவர் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வின் பெயர் ‘யொவுன்புர’. எல்லோரும் ‘யொவுன்புர’, ‘யொவுன்புர’ என அழைக்கின்றனர். 

பாவம் தமிழ் பேசும் மக்களும் அர்த்தம் புரியாமல் ‘யொவுன்புர’ என உச்சரிக்க வேண்டிய நிலை. இந்த சிறு நிகழ்வில் கூட தமிழ் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாடு என்ற ஒற்றைப் புள்ளியை தமிழ் மனம் நாடும்? 
ஆகவே, அந்த எம் நாடு என்ற உயர் நிலைக்கு நாடு நீண்ட தூரம் நடக்க வேண்டி உள்ளது. அதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கால் தடம் மாறக் கூடாது. தடம் மாறின் ஊர் கூடி வடம் இழுக்கும் நிலை மாறும்; மிகக் கவனம்.  

மே மாதம் 2009 ஆம் ஆண்டு வரை சிங்களம் நடாத்திய அனைத்து யுத்தங்களும் உண்மையிலேயே சமாதானத்துக்கான போர் அல்ல. துப்பாக்கி ரவையில் மட்டுமே தங்கியிருந்த முழுமையான வெற்றிக்கான யுத்தம். 
மாறாகத் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் முழு வெற்றியுமே உண்மையான சமாதானத்துக்கான யுத்தத்தில் தங்கியுள்ளது; மனங்களை வெற்றி கொள்வதில் தங்கியுள்ளது.   

உண்மையான நீதியான போர்க் குற்ற விசாரனை கூட சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தமாட்டார்கள். அதற்கான மன வலு, மன விருப்பம், ஈடுபாடு இவர்களிடம் இல்லை; வரப்போவதும் இல்லை என்பதாலேயே தமிழ் சமூகம் சர்வதேசத்திடம் நீதி வேண்டி நிற்கின்றது.   

ஓர் அரசியல்வாதி அடுத்த தேர்தலை எண்ணியே காய்களை நகர்த்துவார். ஆனால் ஓர் இராஜதந்திரி அடுத்த தலைமுறையை எண்ணியே சிந்தனையை வளர்ப்பார்.

இங்கு தமிழ்ப் பிரதேசங்களில் ஒரு தலைமுறை தனது அடுத்த வருங்கால சந்ததி தொடர்பில் பெரிய அச்சத்துடனும் ஜயப்பாட்டுடனும் அல்லல்பட்டு வாழ்கின்றது. 

ஆகவே இவ்விடத்தில் பல தடைகளைத் தாண்டி தீர்வு வேண்டி நிற்கும் ஒரு சமூகத்தின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றுமா ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான நல்லாட்சி அரசு?   

- See more at: http://www.tamilmirror.lk/194958/ப-ற-ப-ப-க-றல-ல-ப-ற-ப-ப-உள-ளவர-கள-ன-ப-ற-ப-ப-ல-ல-த-ப-க-க-#sthash.VXnnqs1S.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.