Jump to content

வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8


Recommended Posts

வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8

 
 

சாம்சங் #GalaxyS8

சாம்சங் மீம்ஸ் ஆல்பம்

ஆண்ட்ராய்டு காதலர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் #GalaxyS8. இன்று இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8+ விலை என்ன, வசதிகள் என்ன என பார்ப்போம்.

இரண்டு மாடல்களுமே Snapdragon 835 புதிய வகை பிராசஸருடன் வருகின்றன. குவால்காமின் இந்த புதிய புராஸசர் மின்னல் வேக செயல்பாட்டுக்கு உதவும் என்கிறது சாம்சங். 4ஜிபி ரேம் “எப்படியும் ஆண்ட்ராய்டு ஹேங் ஆகும்” என்ற ஆல்டைம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் எதிர்பார்த்ததுதான். 

5 அல்லது 5.5 இன்ச் டிஸ்ப்ளேவே பார்த்தவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக, 5.8 இன்ச் டிஸ்ப்ளே தந்திருக்கிறார்கள். Curved edge ஸ்க்ரீன் என்பதால், முழுமையான ஒரு விஷுவல் அனுபவம் கிடைக்கும். ஹோம் பட்டனை திரைக்கு உள்ளே கொண்டு சென்றிருக்கிறார்கள். அதனால், அந்த இடமும் ஸ்க்ரீனுக்கு கிடைத்திருக்கிறது. எஸ்7 மாடலை விட எஸ்8 ஸ்க்ரீன் 18% அதிகம் என ஒரு கணக்கு சொல்கிறது சாம்சங்.

HDR என கிட்டத்தட்ட அனைத்து மொபைல்களும் சொல்லிக்கொண்டாலும், முதல் சர்டிஃபைட் HDR சாம்சங் எஸ்8 மாடல்தான். 
பின்பக்க கேமரா 12 மெகாபிக்ஸல். கேமரா தரத்தில் சாம்சங் எப்போதும் சறுக்கியதில்லை. எஸ்8ல் ஸ்பெஷல் கேமரா இருக்கும் டிசைந்தான். கொஞ்சம் கூட வெளியே எட்டிப்பார்க்காமல், ஸ்மூத் ஆக ஒட்டிக்கொண்டிருக்கிறது கேமரா. முன்புறம் 8 மெகாபிக்ஸல் கேமரா, செல்ஃபிக்கு நான் கியாரண்டி என்கிறது.

டூயல் கலர் எல்.ஈ.டி ஃப்ளாஷும் கலர்ஃபுல்லான வசதிதான். C-Type usbயும், ஃபாஸ்ட் சார்ஜிங் மோடும் இருப்பதால் “பட்டுனு ஏறும்.. சட்டுன்னு கிளம்பலாம்” வகை ஆட்களுக்கு டபுள் சந்தோஷம். 3000mAh பேட்டரி எப்படியும் ஒரு நாளை கடத்த உதவும் என எதிர்பார்க்கலாம். எஸ்8+ மாடலில் 35000 mAh பேட்டரி.  வயர்லெஸ் சார்ஜிங்கும் உண்டு என்பது இந்த மாடலை அதிகம் எதிர்பார்க்க செய்கிறது. 

ஜியோ ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். ஜியோ சிம்மை சப்போர்ட் செய்யும் சாம்சங் எஸ்8. 

சாம்சங்

சாம்சங் மீம்ஸ் ஆல்பம்

ஐபோன் சிரி போல, சாம்சங் பிக்ஸ்பி என்னும் அஸிஸ்டெண்ட்டை களம் இறக்கியிருக்கிறது. மற்ற போட்டியாளர்களை விட பிக்ஸ்பி அறிவாளி என்கிறது சாம்சங். ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் பிக்ஸ்பி செய்து முடிக்குமாம். ஆனால், இன்று அறிமுகமாகும் மாடல்களில் வாய்ஸ் அஸிச்டெண்ட் வசதி இருக்காது என சொல்லியிருக்கிறார்கள். பின்னர், இது சேர்க்கப்படலாம் என்கிறார்கள் டெக் ஆர்வலர்கள்.

எஸ்8 மாடல் மொபைல்களோடு புதிதாக டாக்கிங் (Docking) சிஸ்டத்தையும் இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங். இந்த dock மூலம் மொபைலை எளிதில் டி.வியுடன் இணைக்கலாம். டி.வி திரைக்கு ஏற்ப டிஸ்ப்ளே அளவையும் மாற்றிக்கொள்ளலாம். 42 இன்ச் டி.வியில் ஆங்க்ரி பேர்டில் இருந்து எல்லாம் மொபைல் கேம்களையும் விளையாடலாம் என்பது வாவ் விஷயம் தானே?

இதுவரை வந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் எஸ்8 மாடலில்தான் சிறந்த ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் புதுமைகள் இருப்பதாக பெருமையுடன் சொல்கிறது சாம்சங். விலையும் அந்த ரேஞ்சில் தான் இருக்கும் என்பதற்கான லீடாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆரம்ப விலையே 55000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நோட் தந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல எழுந்து வருகிறது சாம்சங். இந்திய மார்க்கெட் அவர்களுக்கு என்ன தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/news/information-technology/86888-samsung-launches-galaxy-s8-today-in-india.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.