Jump to content

மீண்டும் கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா?


Recommended Posts

மீண்டும் கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா?

 

 
 
 
tn_secretariat_2_2358985f.jpg
 
 
 

மீண்டும் ஒரு கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா ?

டிசம்பர் 5, 2016க்கு பிறகு தொடங்கிய அரசியல் நிலையற்ற சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டியும், குழப்பும் வரும் போதெல்லாம் உடனே எழுப்பபடும் கேள்வி இந்த ஆட்சி நீடிக்குமா? ஆளுநர் ஆட்சியை கலைப்பாரா என்பது தான்?

 

மிக சொற்பமான இடங்களிலேயே பெரும்பான்மையை பெற்றுள்ள அஇஅதிமுகவின் ஆட்சி நீடிப்பதற்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பன்னீர் செல்வம் பிரிந்து சென்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. அத்தோடு குழப்பங்கள் தீர்ந்தது என்று எண்ணியிருந்த நிலையில் நடந்த சம்பவங்கள் மீண்டும் தலை கீழ் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. ஆர்கேநகர் தேர்தல், தினகரன் போட்டி, பண வேட்டை, தேர்தல் தடை, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இறுதியாக தினகரன் மீது லஞ்சம் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையும், நேற்று இரவு தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிராக அமைச்சர்கள் அனைவரும் போர்க் கொடி தூக்கியிருப்பதும் கால வரிசைப்படியிலான நிகழ்வுகள். சசிகலா ஆதரவு அணி ஓபிஎஸ் ஆதரவு அணி என இரண்டு அணிகளாக இருந்த அதிமுக தற்போது மூன்று அணியாக மாறி இருக்கிறது.

 

தற்போதைய தகவலின்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், வெற்றிவேல், கதிர்காமு ராமகிருஷ்ணன்,செல்வ மோகன்தாஸ்,ஏழுமலை,சின்னதம்பி ஆகிய 8 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் ஆதரவில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க முடியும்.

 

அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து தி இந்து தமிழ் இணையதளத்திடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் மணி, “ தற்போதைய குழப்பங்களால் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன, ஜெயலலிதா போன்ற தலைவர் ஒருவர் இல்லாத நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க அமைச்சர்கள் குழுவாக இணைந்து செயல்படுவதாக எடுத்துள்ள முடிவின் காரணம் ஒன்று மட்டும் அது ஆட்சியும் அதிகாரமும், அஇஅதிமுகவில் உள்ள கடைக் கோடி தொண்டன் முதல் மூத்த அமைச்சர் வரை ஆட்சியை விட்டு விட துணிய மாட்டார்கள், அதற்கான அடிப்படையே, இரு பிரிவும் இணைய வேண்டும் என்கிற கருத்துக்கு இழுத்து வந்து நிறுத்தியுள்ளது. ஆனால் அதன் நிச்சயதன்மை என்பது கேள்விகுறியான ஒன்று தான், இப்போதைக்கு தப்பித்தாலும் அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் ஒரு புது குழப்பம் ஏற்படுவதற்கான அனைத்து உள் முரண்பாடுகளுடன் அதிமுக பயணித்து வருகிறது என்றார். கட்சியிலிருந்து ஒதுங்குகிறேன் என்று தினகரன் கூறியிருந்தாலும், அவர் அப்படியே இருந்து விடுவாரா? அவருக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்னவாகும் ? என்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் சட்டப்பேரவையை உடனே கூட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரியிருக்கிறார். மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பா? மீண்டும் கூவத்தூரா? அடுத்த சில நாட்களுக்கு தமிழக அரசியல் களம் விறுவிறுப்புடன் தான் செல்லப் போகிறது….

http://tamil.thehindu.com/tamilnadu/மீண்டும்-கூவத்தூரா-மீண்டும்-நம்பிக்கை-வாக்கெடுப்பா/article9648905.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.