Jump to content

60 ஏழை மாணவர்களை மருத்துவம் படிக்க வைத்திருக்கும் ‘முகவரி’: ஒரு சாமானியரின் சாதனை பயணம்


Recommended Posts

‘முகவரி’க்கு உதவிக்கரம் நீட்டிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ‘முகவரி’ அமைப்பின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள்.
‘முகவரி’க்கு உதவிக்கரம் நீட்டிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ‘முகவரி’ அமைப்பின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள்.
 
 

திறமையும் ஆர்வமும் இருந்தும் வறுமையின் காரணத்தால் உயர் கல்விக்குப் போகமுடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் ஏணியாய் நிற்கிறது சென்னை போரூரில் உள்ள ‘முகவரி’ அமைப்பு.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் கே.ரமேஷ். பட்டய கணக்கர் படிப்பைத் தொடரும் இவர் தான் ஏழை மாணவர்களுக்காக ‘முகவரி’யை உருவாக்கியவர். “எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் கஸ்தூரிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. 2003-ல் ‘ப்ளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். ஆனால், குடும்ப வறுமை அந்தப் பெண்ணின் லட்சியத்தைத் தகர்த்துவிடும் போலிருந்தது.

இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு ஊக்கம் கொடுத்து எனது செலவில் கோச்சிங் கொடுத்து நுழைவுத் தேர்வை எழுத வைத்தேன். மாநிலத்திலேயே 3-வது ‘ரேங்க்’ எடுத்தார் கஸ்தூரி. அடுத்து, கல்லூரியில் சேர்க்க பணம் தேவைப்பட்டது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக சினிமா இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். கஸ்தூரி மருத்துவப் படிப்பை முடிப்பதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். அதன்படியே முருகதாஸின் உதவியால் கஸ்தூரி மருத்துவரானார்’’ என்கிறார் சாமானியராக இருந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘முகவரி’ ரமேஷ்.

கஸ்தூரி விவகாரத்தில் கிடைத்த தன்னம்பிக்கையால் அடுத்தடுத்த வருடங்களிலும் தயாள உள்ளங்களின் தயவில் தனது ஊரின் ஏழைப் பிள்ளைகள் சிலரை மேல்படிப்புக்கு அனுப்பினார் ரமேஷ். இதையே இன்னும் கொஞ்சம் விசாலமாக்க வேண்டும் என்பதற்காக 2006-ல், அப்துல்கலாம் பிறந்த நாளில் ‘முகவரி’ என்ற அமைப்பை தொடங்கினார். அடுத்தடுத்த வருடங்களில் ‘முகவரி’யால் தங்களை உயர்த்திக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக வளர்ந்தது.

கடந்த 14 வருடங்களில் 300 பேருக்கு உயர்கல்வி தந்தும், தந்து கொண்டும் இருக்கிறது ‘முகவரி’. இவர்களில் 42 பேர் பணியில் இருக்கிறார்கள். இதுவரை 3 மருத்துவர்களை உருவாக்கி இருக்கும் இந்த அமைப்பு, 2 பேரை இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சியும் அடைய வைத்திருக்கிறது. ‘முகவரி’யின் முயற்சியில் 60 மாணவர்கள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் 25 பேர் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“கல்விக்கு உதவும் பட்டியலில் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் முன்னுரிமை வைத்திருக்கிறோம். தொடக்க ஆண்டுகளில் எங்களின் பணிகளைப் பார்த்துவிட்டு மேலும் பலர் எங்கள் முயற்சிக்கு உதவ முன் வந்தார்கள். அப்படித்தான் சேலம் தொழிலதிபர் வைத்தியலிங்கத்தின் உதவியுடன் 18 மாணவர்களும், சென்னையில் பள்ளிக்கூடம் நடத்தும் கிருஷ்ணமூர்த்தியின் உதவியுடன் 21 மாணவர்களும், இயக்குநர் முருகதாஸின் உதவியுடன் 9 மாணவர்களும் உயர்கல்வி படித்துக் கொண்டிருக் கிறார்கள்.

இந்த மூவரையும் சேர்த்து மொத்தம் 230 கொடையாளர்கள் எங்களின் முயற்சிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். 2007-ல் சென்னையில் எங்கள் மாணவர்கள் 20 பேர் தங்குவதற்கு இடமும் உணவும் அளித்த சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இப்போதும் 30 மாணவர்களுக்கு தங்குமிடமும் உணவும் தந்து உதவிக் கொண்டிருக்கிறார். இவர்கள் அத்தனை பேரின் கருணையால்தான் எங்களால் இத்தனை மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்ப முடிந்திருக்கிறது’’ என்று சொல்லும் ரமேஷ், “ஏழைகளுக்காக நேர்மையாக பணி செய்யும் அதிகாரிகளையும் மனிதாபிமானத்துடனும் கருணையுட னும் சேவை செய்யும் மருத்துவர் களையும் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது லட்சியம்” என்கிறார். அவரது தொடர்பு எண்: 98400 30942.

‘முகவரி’யால் முன்னேறியவர்களின் உதவி

‘முகவரி’யால் உயர் கல்வி முடித்து பணியில் சேர்ந்தவர்கள் ‘வானவில்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் தங்களது ஊதியத்தில் 7 சதவீதத்தை ‘வானவில்’லுக்கு கொடையாகத் தருகிறார்கள். இதைக் கொண்டு ‘வானவில்’லும் தற்போது 7 மாணவர்களை உயர் கல்வி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/60-ஏழை-மாணவர்களை-மருத்துவம்-படிக்க-வைத்திருக்கும்-முகவரி-ஒரு-சாமானியரின்-சாதனை-பயணம்/article9647940.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுக்கு மீன் வாங்கிக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு.....! நல்லதொரு சேவை.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.