Jump to content

சட்டத்தைக் கையிலெடுக்கும் சமுதாயங்கள்


Recommended Posts

சட்டத்தைக் கையிலெடுக்கும் சமுதாயங்கள்
 
 

article_1492436265-m34-new.jpg - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இந்தியாவும் இலங்கையும், ஒரே பிராந்தியத்தில் இருப்பதனால் என்னவோ, சில நேரங்களில், இரு நாடுகளில் நடக்கும் விடயங்களையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு இயலுமாக இருக்கிறது. அவ்வாறு தான், இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்கள், சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆள்வார் மாவட்டத்தின் ஆள்வார் என்ற நகரப் பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி, முஸ்லிமொருவர் கொல்லப்பட்டார். இந்தப் பந்தியில், அவரது இனக் குழுமம் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், அவரது மரணத்துக்கு, அவரது இனம் காரணமாக அமைந்தது என்பதனாலேயே ஆகும்.

பெஹ்லு கான் என்ற குறித்த நபர், பசுக்களை இறைச்சியாக்குவதற்காகக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில், குழுவொன்றால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். ஆனால் உண்மையில் அவர், பால் விற்பனை செய்யும் ஒருவர் ஆவார். ஆனால், இவை அனைத்தும், அவரின் உயிர் பிரிந்த பின்னரே, தெரிய வந்தன. போன உயிரைத் தான் இனியும் கொண்டுவர முடியுமா?

இந்துத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவிரக் கொள்கைகளைக் கொண்ட இந்துக்கள் குழு, சட்டத்துக்கு அப்பாற்பட்டுச் செயற்பட முடியுமென எண்ணுகின்றது என்ற நிலை உருவாகியுள்ளது போல் தோன்றுகின்றது. அதற்கு முன்னைய ஆட்சிகளிலும், இந்நிலை இருந்த போதிலும், பா.ஜ.க ஆட்சியில், இந்நிலைமை, வெளிப்படையாக இடம்பெறுகின்றன போன்றதொரு நிலை காணப்படுகிறது.

குறித்த நபர், பசுவை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றார் என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன தவறு இருக்கிறது? பல ஆண்டுகளாகத் தன்னுடைய பசுவைப் பேணிப் பாதுகாத்துவந்த ஒருவர், அது முதுமையடைந்த பின்னர், அதைவைத்து என்ன செய்ய முடியும்? விற்பனை செய்யாமல், அதைத் தொடர்ந்தும் வைத்துப் பராமரிப்பதில் என்ன நன்மை இருக்கிறது? அவருக்கான செலவு தான் அதிகரிக்குமே?

இவற்றுக்கு மத்தியில் கருத்துத் தெரிவித்துள்ள இந்துத் தேசியவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத், பசுவதையை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்கள், தங்களுடைய நோக்கத்தைச் சிதைப்பதாகவும், இவற்றை நிறுத்துமாறு தெரிவித்திருப்பதோடு, நாடு முழுவதும், மாடுகளை அறுப்பதைத் தடை செய்ய வேண்டுமெனவும் கோரியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக் கோருகின்ற ஒரு கொள்கைக்காக, பல உயிர்கள், இதுவரை எடுக்கப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றிய வருத்தம், கொஞ்சம் கூட இல்லாமல், தங்களுடைய நோக்கத்தை, இக்கொலைகள் சிதைக்கின்றன என்று இரக்கமின்றிச் சொல்ல,  இவரைப் போன்ற கடும்போக்குவாதிகளால் தான் முடியுமாக இருக்கிறது.

இதில், மரக்கறி உண்பதென்பது, இந்துக்களில் ஒரு தரப்பினரின் தெரிவு. அந்தத் தெரிவை மதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவை, ஏனையோரிடம் திணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

மரக்கறி மாத்திரம் உண்பவர்கள், தங்களுடைய உணவுப் பழக்கத்தை ஏனையோரிடம் திணிக்க முற்படுவது போன்று, புலால் உண்பவர்கள், தங்கள் உணவுப் பழக்கத்தைத் திணிப்பதில்லை. விரத நாளில், மாட்டிறைச்சி தான் சாப்பிட வேண்டுமென்று, எங்குமே வற்புறுத்தப்படுவதில்லை. இந்தத் தெரிவை, இந்துத் தேசியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தனைக்கும், உலகில், அதிகளவு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில், இந்தியா, முதலிடத்தில் காணப்படுகிறது. அந்நாட்டிலிருந்து, கடந்தாண்டில் 1,850,000 மெற்றிக் தொன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அதன்மூலம், ஏராளமான வருமானத்தை, இந்திய அரசாங்கம் பெற்றுக் கொள்கிறது.
இந்தியாவின் நிலைமை இவ்வாறு என்றால், இலங்கையின் யாழ்ப்பாணத்தின் நல்லூரில், மாடு திருடிய குற்றச்சாட்டில், இளைஞரொருவர் அண்மையில் நையப்புடைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தின் புனிதமான இடங்களுள் ஒன்றாக நல்லூர் கருதப்படுகின்ற போதிலும், அந்தப் புனிதத்துக்கும் அந்தத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, திருடனுக்கு நீதி வழங்கும் செயற்பாடாகத் தான் அது இடம்பெற்றிருக்கின்றது.

மாடு திருடியவரைப் பொலிஸில் ஒப்படைப்பதற்கு முன்பாக, அந்தத் தவறைச் செய்தவருக்கு, அந்தத் தவறுக்கான விளைவுகளைச் சந்திக்கச் செய்ய வேண்டுமென்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

அங்கு நடந்த விடயம் என்னவென, உறுதிப்படுத்தப்பட்ட வகையில் தகவல்கள் வெளியாகவில்லை. அங்கிருந்தவர்களை, அச்சந்தேகநபரும் அவரின் மனைவியும் தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால், அவ்வாறு நடந்திருந்தாலும் கூட, ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படும் அளவுக்கு, தாக்குதல் நடத்தப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்தச் சம்பவம், பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. “மாடு களவெடுத்தவனுக்கு எல்லாம் பரிந்து பேசாதீர்கள்” என்பது, அந்த வன்முறையை நியாயப்படுத்துபவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், களவெடுப்பதென்பது சட்டத்தின்படி குற்றமாக இருப்பதைப் போல், வன்முறையைப் பயன்படுத்துவதும் குற்றம் தானே? ஒருவரைத் தாக்குவதை, எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

இந்த இடத்தில் தான், மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும், ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவையாக மாறுகின்றன. பொதுமக்கள், தமது கையில் சட்டத்தை எடுப்பது தான் அது.

செப்டெம்பர் 11 தாக்குதல், ஐக்கிய அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஈராக் மீது படையெடுப்பதற்கு, அப்போதைய ஐ.அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முயன்றார். அப்போது, அந்தப் போரை எதிர்த்தோர் மீது, “ஒன்றில் எங்கள் பக்கம், இல்லாவிட்டால் அவர்கள் (தீவிரப் போக்குடையவர்கள் அல்லது ஆயுததாரிகள்) பக்கம்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதைப் போன்றே, மாடு திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறுவது, மாடு திருடுவதை நியாயப்படுத்துவதாகவும் என்று கூறுவது ஆகும். இரண்டு விடயங்களையும் எதிர்ப்பது சாத்தியமாகும் என்பதை, “அதில்லை என்றால் இது” என்று கூறுவோர் புரிந்துகொள்வதில்லை.

பசுவதைக்கெதிராக இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம், அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் பறித்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோன்று, மாடு திருடிய குற்றத்துக்காக இன்றைக்கு நையப்புடைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம், இன்னொருவர், இன்னொரு பிரச்சினைக்காக நையப்புடைக்கப்படுவார், மறுநாள் இன்னொருவர். இவ்வாறு, சட்டத்தை மீறிய சமூகமொன்று உருவாக்கப்படுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?

அதேபோன்று, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் கோஷ்டிச் சண்டைகள், வாள்வெட்டுகள் போன்றவற்றுக்குப் பதிலாக, “திருட முயன்றார்” எனக்கூறப்பட்டு, நபர்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லையென்று கூற முடியுமா? யாரையாவது கொன்றுவிட்டு, காரணத்தைக் கூற முடியும். இல்லாவிடில், மக்களோடு மக்களாக இணைந்து, இவ்வாறான குற்றங்களைப் புரிய முடியும். இதனால் தான், பொதுமக்களே தண்டனை வழங்குதல் என்ற நடைமுறை, ஆபத்தானது.

ஒரு வகையில், பொதுமக்களின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு, சட்ட அமுலாக்கப் பிரிவினரில் அவர்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கை, முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, சட்ட அமுலாக்கத்தில் சம்பந்தப்படும் அனைத்துத் தரப்பினரிலும், வெளிப்படைத்தன்மையையும் ஊழலற்ற தன்மையையும் ஊக்குவிக்க வேண்டும்.

சல்லிக்கட்டுக்கெதிரான போராட்டம், ரஜினிகாந்த் வரவிடாமல் தடுக்கப்பட்டமைக்கெதிராகப் போராட்டம் என, இந்தியாவின் பாணியில் சிறிது சிறிதாக மாற்றமடைந்துவரும் யாழ்ப்பாணம், பசுவதை தொடர்பாகக் காணப்படும் பாணியையும் பின்பற்றக்கூடாது என்ற கரிசனை, அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

இது, தனித்தே நடக்கும் சம்பவங்கள் கிடையாது. மாறாக, அடுத்தடுத்த சந்ததிகளின் வாழ்க்கைமுறைகளைத் தீர்மானிக்கும் சம்பவங்களாகும். இந்த விடயத்தில், புத்திஜீவிகளின் செயற்பாடுகள், அதிகமாகத் தேவைப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை கிடையாது என்பதே எதிர்பார்ப்பாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/194928#sthash.HUQ1Pl2q.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.