Jump to content

கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்


Recommended Posts

கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்

 
 

 

“அ.தி.மு.கவில் முப்பது ஆண்டுகளாக ஆளுமை செலுத்தி வந்த சசிகலா குடும்பத்திற்கு அந்த கட்சியில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது” என்கிறார்  தமிழக அமைச்சர் ஒருவர். 

Dina_1_500_03412.jpg

ஆர்.கே நகரில் தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு வாக்குகேட்ட அமைச்சர்கள் எல்லாம் இன்று தினகரன் குடும்பமே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். எந்த குடும்பத்தை சசிகலா பலமாக நினைத்தாரோ அந்த குடும்பத்திலே குழப்பம் உச்சத்துக்கு வந்துள்ளது. திரைமறைவில் திறமையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரால், திரைக்கு முன்னால் தினகரன் திண்டாடுவதை அவர்கள் குடும்ப உறவுகளே ரசிப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மரணம் அடையும் முன்பே சசிகலாவுக்கு கட்சி பதவி தரவேண்டும் என்று  திவாகரன் விரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியபோது தான் சசிகலாவின் குடும்பம் அ.தி.மு.க-வின் தலைமை பதிவிக்கு வந்துவிடும் என்ற கணிப்பு அ.தி.மு.கவினர் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு சசிகலாவிடம் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறித்தியதன் பின்னணியிலும் சசிகலாவின் குடும்ப உறவுகளே இருந்தார்கள். பன்னீர்செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவியின் மீது சசிகலாவின் பார்வையை திரும்ப செய்தவர்களும் அதே குடும்பத்தினர் தான்.

முதல்வராக சசிகலா பதவியேற்கும் விழாவை  தங்கள் குடும்ப விழாவாக கொண்டாட சசிகலா உறவுகள் திட்டமிட்ட போதுதான் திருப்பங்கள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. பன்னீர் போர்க்கொடி, உச்சநீதிமன்ற தீர்ப்பு என  சசிகலாவை நோக்கி ஒவ்வொரு அம்பாக ஏவப்பட்டது. அப்போது தான் மத்திய அரசு தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டதை உணரத் துவங்கியது சசிகலா குடும்பம். பி.ஜே.பி அரசை சரி செய்ய சசிகலா தரப்பில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கும் இன்றுவரை பலனில்லை. 

Dina_2_400_03582.jpg

சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்ததுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வல்லமை சசிகலா தரப்பில் இல்லாமல் போய்விட்டது. சிறைக்கு போகும் வேலையில் அவசர அவசரமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டு கொத்துசாவியை தினகரன் கையில் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. அது வரை தினகரனை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, அவர் மீது கண்வைத்தது. பத்தொன்பது ஆண்டுகள் நிலுவையில் இருந்த பெரா  வழக்கை துாசிதட்டி எடுத்தது. 

அதே நேரம் தினகரன் கட்சிக்குள் குடும்ப உறவுகள் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கடுமையாக இருக்க குடும்ப உறவிலும் சிக்கல் எழுந்தது. தினகரனின் மாமா திவாகரன் பெங்களுர் சிறையில் இருந்த சசிகலாவிடம், “ஆர்.கே நகர் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பதவிவேண்டும்” என்று கோரிக்கைவைத்தார். அதற்குக் காரணம் தினகரன் கட்சியில் செலுத்திய ஆளுமை தான். தங்கள் குடும்ப சொத்தாக அ.தி.மு.கவை கருதிய குடும்ப உறவுகளுக்கு தினகரனின் தனி ஆவர்த்தனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனை காலி செய்ய வேண்டும் என்ற சத்தம் அவர்கள் உறவுகளின் வாயில் இருந்தே கேட்க துவங்கியது.

மத்திய அரசோ தினகரனை கட்சியில் இருந்து கழற்றுவதற்கு முன் அவரை சுற்றி அரணாக நிற்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. தினகரன் பக்கத்தில் இருந்தால் இது தான் நிலை என்ற அச்சத்தை தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் மத்திய அரசு ஏற்படுத்தியது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டு அமைச்சர்களுக்கு தரப்பட்ட எச்சரிக்கை சிக்னலாகவே பார்க்கபட்டது. அதன் பிறகு தான் அமைச்சர்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதை அறிந்து கொண்ட பி.ஜே.பி தரப்பு, தமிழகத்தின் சில முக்கிய புள்ளிகள் மூலம் அமைச்சர்களிடம் தனித்தனியாக மத்திய அரசின் எண்ணத்தை பதியவைத்துள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் காப்பாற்றவேண்டுமானால் ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள். 

மறுபுறம் சசிகலா குடும்பத்தில் இருந்தே தினகரனுக்கு நெருக்கடிகளை கொடுக்க முடிவு செய்து, சில அமைச்சர்களை தினகரனுக்கு எதிராக பேசச் சொல்லியுள்ளார்கள். திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராகவே செயல்பட நெருக்கடியின் உச்சத்துக்கு சென்றார் தினகரன். ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று குடும்பத்தையும் மத்திய அரசையும் சரி செய்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய தினகரனுக்கு தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு அடுத்த சோதனையாக அமைந்தது. தேர்தல் ரத்து செய்யபட்டாலே அ.தி.மு.கவில் மீண்டும் ஒரு குழப்பம் வந்துவிடும் என  மத்திய உளவுத்துறை சொன்ன தகவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

OPS_and_EPS_400_03503.jpg

மத்திய அரசு எதிர்பார்த்தது போலவே ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதும் கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக வாய்திறக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த நினைத்த மத்திய அரசு, தினகரனுக்கு அடுத்த நெருக்கடி கொடுக்க இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கை டெல்லியில் பதிவு செய்ய அமைச்சர்கள் மனநிலை அப்போதே சசிகலா குடுமபத்துக்கு எதிராக மாறியுள்ளது. அதே நேரம் திவாகரன் தரப்பில் இருந்து சில அமைச்சர்களிடம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்குங்கள், ஓ.பி.எஸ் அணியுடன் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று சொன்னதாக ஒரு தகவல் உள்ளது.

குடும்ப  உறவுகள் ஓருபுறம், மத்திய அரசு ஒருபுறம் என தினகரனுக்கு கொடுக்கபட்ட நெருக்கடியால் தனது பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் தான் தினகரன் இருந்துள்ளார். ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு தகவலால் தான் நேற்று காலை வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் சில அமைச்சர்களை வீட்டிக்கு வர வைத்துள்ளார். அவர்ளிடம் என்னை ஒதுக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும். மத்திய அரசு இந்த அரசை செயல்படவிடாது என்று சொல்லியுள்ளார். அதற்குள் ஓ.பி.எஸ், “சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி ஒன்றிணைய வாய்ப்பில்லை” என்று சொன்னதும், அமைச்சர்கள் தரப்பினர் இதைப் பார்த்து காத்திருந்தது போல “தினகரன், சசிகலா குடும்பத்தின் தலையீடு இனி இருக்காது” என்று பேட்டி கொடுத்துள்ளார்கள். இப்படி பேட்டி கொடுப்பார்கள் என்று தினகரனும் எதிர்பார்த்திருந்தாராம். இந்த சிக்கலில் தனது குடும்ப உறவுகள் சிலருக்கு போன் போட்டு என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்து இவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். “இத்தனை நாள் நீதானே எல்லாம்னு சொன்ன, இந்த பிரச்னையும் நீயே பார்த்துக்கோ” என்ற ரீதியில் கடுப்பாக பேசியுள்ளார் குடும்ப உறவினர் ஒருவர். 

தலைக்கு மேல் தண்ணீர் போய்விட்டதை தினகரனும் உணர்ந்துள்ளார். "எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு பெரிதாக இருக்காது, மத்திய அரசுக்கு  பயந்து தான் அவர்கள்  செயல்படுவார்கள், இனி  விசுவாசத்துக்கு வேலையில்லை” என்று தனது நண்பரிடம் போனில் சொல்லியுள்ளார். ஆனாலும் “கட்சியை விட்டு விலகாமல் கடைசி வரை போராட வேண்டும் என்ற முடிவில் தினகரன் இருக்கிறார். இரண்டு அணியும் ஒன்றிணைந்தாலே அங்கு கிளம்ப போகும் பிரச்னைக்குப் பிறகு நாம் அடுத்த கட்டமாக விஸ்வரூபம் எடுப்போம், மாவட்டச் செயலாளர்களை சரி செய்தாலே  இப்போது போதும் என்ற முடிவில் தினகரன் உள்ளார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தகவல் வந்ததும் மன்னார்குடியில் இருந்து திவாகரன் புறப்பட்டு சென்னை வந்துவிட்டாராம். இன்று கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் அறிவிப்பே தன் பின்னால் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து கொள்ளதானாம். ஆனால் இந்த கூட்டத்தையும் நடத்தவிடாத வேலைகளில் அமைச்சர்கள் தரப்பினர் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

“கண் அசைவிக்கு கட்டுபட்டவர்கள் எல்லாம், கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள் ”என்ற கவலை தினகரனை இப்போது வாட்டிவருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/86875-as-tension-within-admk-increases-ttv-dinakaran-struggling-to-hold-his-power.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Coco Gauff Fansite  ·  Suivre   · La plus grande paire de double de l'histoire : Steffi Graf et Gabriela Sabatini  
    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.