Jump to content

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்


Recommended Posts

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

 
 
 
 
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக்கில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

இந்த லீக் தொடர்களில் சிக்சர் மழை பொழிவதால் கெய்லுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 286 போட்டிகளில் 9937 ரன்கள் எடுத்திருந்தார். 63 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்னைக் கடக்கும் முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைக்கும் நோக்கத்தில் ஐ.பி.எல். சீசன் 2017-ல் களமிறங்கினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 32 ரன்னும், டெல்லிக்கெதிராக 6 ரன்னும், மும்பை அணிக்கெதிராக 22 ரன்களும் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கினார்.

201704182119251257_gayle-s._L_styvpf.gif

இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்திருக்கும்போது 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

டி20 போட்டிகளில் இந்த போட்டிக்கு முன்பு வரை 289 போட்டிகளில் 18 சதங்கள், 60 அரைசதங்கள் அடித்திருந்தார். இதில் 736 சிக்சர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.
 
Link to comment
Share on other sites

நான் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறேன்: 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்ல் நெகிழ்ச்சி

 

கிறிஸ் கெய்ல். | படம்: பிடிஐ.
கிறிஸ் கெய்ல். | படம்: பிடிஐ.
 
 

கிறிஸ் கெய்லை எப்படியாவது அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று ஆர்சிபிக்கு கங்குலி ஆலோசனை வழங்கினார், அது போலவே செய்தார் கோலி, கெய்ல் வந்தார் விளாசினார், ஆர்சிபி வென்றது.

38 பந்துகளில் 77 ரன்கள் என்ற அவரது தொடக்கம் ஆர்சிபி அணியை அசைக்க முடியாத ஒரு நிலைக்கு இட்டுச்சென்று வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு வழிவகை செய்யுமாறு காயமடைந்த டிவில்லியர்சுக்குப் பதிலாக மிகச்சரியாக கிறிஸ் கெய்லை உள்ளே நுழைத்தனர்.

தனது சாதனை, இந்த இன்னிங்ஸ் பற்றி கிறிஸ் கெய்ல் கூறும்போது, “சாதனை குறித்து சாமுவேல் பத்ரீ எனக்கு நினைவூட்டினார். எனவே அது என் மனதில் நிலைபெற்று விட்டது. சாதனையைக் கடந்தவுடன் அடித்து ஆடும் நேரம் என்று நினைத்தேன், அது கைகொடுத்தது. இந்த ரன்களை எடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகப் போனது 10,000 ரன்கள் மைல்கல்லை முதல் வீரராக எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது, ரசிகர்கள் இன்னமும் கிறிஸ் கெய்லுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இந்த உலகின் பாஸ் இன்னும் இங்குதன இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிரடி மூலம் விருந்து படைப்பேன்” என்றார் கெய்ல்

http://tamil.thehindu.com/sports/நான்-இன்னமும்-உயிருடன்தான்-இருக்கிறேன்-10000-ரன்கள்-மைல்கல்லை-எட்டிய-கிறிஸ்-கெய்ல்-நெகிழ்ச்சி/article9647948.ece?homepage=true

Link to comment
Share on other sites

10 போட்டிகளுக்குப் பின் ஃபார்முக்குத் திரும்பிய கொம்பன் கெய்ல்! - 'அட்ரா சக்க' சாதனை

 

டி-20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளார்.

டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த கெய்ல்

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுப்பதே கடினம் என்ற நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இந்த ரன்களை அநாயசமாகக் கடந்திருக்கிறார் கிறிஸ் கெய்ல். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இதில் 7 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் 3 ரன்களை எடுத்த போது கெய்ல் டி-20 போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கெய்லுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. முன்னதாக நடந்த ஆட்டங்களில் அவர் முறையே  32, 6, 22 ரன்களே எடுத்திருந்தார். 

தற்போதையை நிலையில், டி-20 போட்டியைப் பொறுத்த வரை, வேறு எந்த வீரரும் 8 ஆயிரம் ரன்களைக் கூட எட்டவில்லை. கெய்லுக்கு அடுத்ததாக நியூசிலாந்து வீரர் பிரண்ன்ட மெக்கலம் அதிகபட்சமாக 7,596 ரன்களை அடித்துள்ளார். மெக்கல்லம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸுக்காக ஆடிவருகிறார். ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹட்ஜ் 7,338 ரன்களையும், சன்ரைசர்ஸ் அணி கேப்டனான ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 7,156 ரன்களையும்  எடுத்துள்ளனர். 

கிரிக்கெட்டைப் பொறுத்த வரை முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய இரு வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 1987ம் ஆண்டு அகமதாபாத்தில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் முதல் வீரராக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். சர்வதேசக் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் இவர். இந்தூரில் சச்சின் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். தற்போது டி-20 போட்டியில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் கெய்ல். 

கங்கணம் ஸ்டைல் நடனமாடும் கெயில்

தற்போது 37 வயதான கெய்ல் வெஸ்ட் இன்டீஸ் ஒருநாள் அணியில் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னரும் டி-20 அணியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகும் இடம்பெறவில்லை. வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இதையெல்லாம் பற்றி கவலைப்படாத கெய்ல் உலகம் முழுக்க பயணித்து டி-20 போட்டிகளில் அசத்துகிறார். கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், வங்கதேச பிரீமியர் லீக், இலங்கை பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.

சொல்லப் போனால் கெய்ல் எந்த ஒரு டி20 தொடரையும் விட்டு வைப்பதில்லை. டி-20 போட்டிகளில் கெய்லுக்கு அப்படி ஒரு மவுசு. கெய்லை அணிகள் விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஜாலியான மனிதர், கங்னம் ஸ்டைல் டான்ஸில் கில்லி என இவர் ரொம்பவே ஃப்ரெண்ட்லி.  களத்தில் நின்று விட்டால் எதிர் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்தான். தேசிய அணிக்காக கிளப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதே இல்லை. அதனால் கிளப் அணிகளைப் பொறுத்தவரை கெய்ல் ஒரு டார்லிங்.

ஐபிஎல் தொடரில் மட்டும் 5 சதங்களை அடித்துள்ளார். இதில் 30 பந்துகளில் 100 அடித்த சாதனையும் இருக்கிறது. பிக் பாஷ் தொடரில் 12 பந்துகளில் அரை சதம் விளாசியுள்ளார். தற்போது கிறிஸ் கெய்ல் டி-20 போட்டிகளில் 10,074 ரன்களை அடித்திருக்கிறார். அதில்,18 சதங்களும் 743 சிக்ஸர்களும் அடங்கும்.  நேற்றைய ஆட்டத்துக்கு முன்னதாக 10 ஆட்டங்களில் கெய்ல் சோபிக்கவில்லை. கடைசியாக கராச்சி கிங்ஸ் அணிக்காக 44 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது குஜராத் அணிக்கு எதிராக 77 ரன்களை விளாசி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் இந்த டி-20 கிங்!

http://www.vikatan.com/news/sports/86911-chris-gayle-becomes-the-first-batsman-to-score-10000-runs-in-t20-format.html

Link to comment
Share on other sites

கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்

 

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள கிறிஸ் கெய்லை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 
கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட்டின் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். குஜராத் அணிக்கெதிரான போட்டியில் 33 பந்தில் 77 ரன்கள் குவித்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டினார்.

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். இவரது சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கவுதம் காம்பீரும் கிறிஸ் கெய்லை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கிறிஸ் கெய்ல் சாதனைக் குறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் மார்க்கெட்டிங் நபர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் எங்களை போன்றோர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டியில் கெய்ல் 10 ஆயிரம் ரன்களைத் தொட்டது குறித்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடையமாட்டார்கள்.

ரன்குவிப்பதற்கான பார்முலாவாக 4-3-2-1 என்பதைத்தான் என்னிடம் ஏராளமான பயிற்சியாளர் சொல்வார்கள். நாம் முதலில் நான்கு ரன்கள், அதன்பின் 3, 2, 1 என தேர்வு செய்வேன். கெய்லோடு இந்த பார்முலாவை பார்த்தால், அவர் 6-6-6 என்றுதான் நினைப்பார். அவர் ஒன்று, இரண்டு, மூன்று ரன்களை வெறுப்பார். ஏராளமானவர்கள் அவருடைய பேட்டின் தடிமன் குறித்து பேசுகிறார்கள். ஆனால், எனக்கு அவருடைய போட்டிக்கான திட்டமிடலை நம்புகிறேன்.

என்னால் பப்பில் அவருக்கு 1 மணிக்குமேல் கம்பெனி கொடுக்க இயலாது. ஆனால், அவர் பேட்டிங் செய்தால், விடியற்காலை 2 மணியாக இருந்தாலும், டி.வி.யை ஆன்செய்வதில் முதல் நபராக நான்தான் இருப்பேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/21214559/1081209/Would-wake-up-at-2-AM-to-watch-Chris-Gayle-play-says.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.