Jump to content

பிரதமர் மோடி வேடமணிந்து சாட்டையடி! நூதனப்போராட்டத்தில் விவசாயிகள்


Recommended Posts

பிரதமர் மோடி வேடமணிந்து சாட்டையடி! நூதனப்போராட்டத்தில் விவசாயிகள்

 
 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த விவசாயி ஒருவர், பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்று செய்கை செய்து வருகிறார்.

TN farmers protest
 

டெல்லியில் 36-வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

TN farmers protest
 

எலிக்கறி, பாம்புக்கறி உண்ணும் போராட்டம் தொடங்கி நிர்வாணப் போராட்டம் வரை நடத்திவிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

TN farmers
 

இந்நிலையில் 36-வது நாளான இன்று, தமிழக விவசாயிகளில் ஒருவர், பிரதமர் மோடி போன்று வேடமணிந்து, பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துகிறார். தங்களை அடிக்க வேண்டாம் என்று விவசாயிகள், மோடி போன்று வேடமணிந்தவரிடம் மன்றாடுகின்றனர். இவ்வாறு நடித்து விவசாயிகள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

http://www.vikatan.com/news/india/86783-tn-farmers-protest-in-delhi-enters-day-36.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.