Jump to content

தினகரனுக்கு திகார்?


Recommended Posts

gallerye_005434701_1753453.jpg

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர, சசிகலாவின் அக்கா மகன், தினகரன் முயற்சித்தது அம்பலமாகி உள்ளது. இடைத்தரகராக செயல்பட்டவன், 1.30 கோடி ரூபாயுடன் டில்லியில் சிக்கியதை அடுத்து, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள டில்லி போலீசார், இன்று அவரிடம் விசாரணை நடத்தியதும், கைது செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil_News_large_1753453_318_219.jpg


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, ஓட்டுக்களை பெற முற்பட்ட தினகரனின், அடுத்த தில்லாலங்கடி தற்போது அம்பலமாகி உள்ளது.

இரட்டை இலை சின்னத்துக்கு, தேர்தல் கமிஷனில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் உரிமை கொண்டாடியதால், இருதரப்புக்கும் இடையிலான பஞ்சாயத்து, சமீபத்தில், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, ஊடகங்களில் வெளியான செய்தியில், 'சின்னத்தை கைப்பற்ற, அதிகார, அரசியல் தரகர்கள் பலரை, இருதரப்பினரும் களமிறக்கி, பல கோடி ரூபாய் பேரம் பேசி வருகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியை உண்மையாக்கும் விதமாக, நேற்று டில்லியில், சுகேஷ் சந்தர், 27, என்ற அதிகார தரகரை, போலீசார் கைது செய்தனர். ஒரு மாதமாகவே, இவனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும், டில்லி போலீஸ் கண்காணித்து வந்துள்ளது.

இவனுடன், தினகரனுக்கு ஏற்கனவே, நான்கு ஆண்டுகளாக தொடர்பு இருந்து உள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் தான், இரு தரப்பினரும் நேரடியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது, தனக்கு, 10 கோடி ரூபாய், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சமாக தர, 50 கோடி ரூபாய் என, 60 கோடி ரூபாய்க்கு, சுகேஷ் சந்தர் பேரம் பேசியுள்ளான்.
 

கண்காணித்தனர்


இதன்பின், கேரளாவின் கொச்சியிலும், டில்லியில், சாந்தினி சவுக் பகுதியிலும் உள்ள ஹவாலா புரோக்கர்கள் மூலமாக, முதல் கட்டமாக, இரண்டு கோடி ரூபாய், சுகேஷ் சந்தருக்கு கைமாறியுள்ளது. அதனால், டில்லியில், சுகேஷ் சந்தரின் நடவடிக்கைகளை, போலீசார் கண்காணிக்க துவங்கினர்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான பின், மீண்டும் சின்னம் விவகாரம் சூடுபிடித்ததால், அதை மையமாக வைத்து, தொலைபேசி உரையாடல்களும் தீவிரமடைந்தன. எனவே, சுகேஷ் சந்தரின் ஒவ்வொரு அசைவையும், டில்லி துணை கமிஷனர் மாதுார் வர்மா தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த வாரத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு என பேரம் பேசப்பட்ட, ௫௦ கோடி ரூபாய், வெவ்வேறு ஹவாலா வழிகளில் கைமாறியதாக தெரிகிறது. இதையடுத்து, டில்லி மோதிபாக்கில் உள்ள ஹயாத் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த, சுகேஷ் சந்தர், நேற்று வளைக்கப்பட்டான். அவன்பயன்படுத்திய, பி.எம்.டபிள்யூ., உயர் ரக காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1.30 கோடி ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுகேஷ் சந்தர் பயன்படுத்திய, மற்றொரு மெர்சிடிஸ் காரும் அங்கு இருந்தது. அதில், 'பார்லிமென்ட் உறுப்பினர்' என்ற, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஓட்டலுக்கு இந்த காரில் தான், அவன் வந்து போவது வழக்கம். அதில் தான், எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும், கார் பாஸ் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளான். அந்த காரும், பறிமுதல் செய்யப்பட்டது.
 

மூன்றுபிரிவுகளில் வழக்கு


உடனடியாக, சாணக்யபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுகேஷ் அழைத்து வரப்பட்டான்; அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தினகரனுடன், அவன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளது உறுதியானது. இருவரும், 40 நிமிடங்கள் பேசிய பதிவையும், டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், தினகரனின் துாதர்களாக, சில முக்கிய வக்கீல்களும் செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், விரைவில் வளைக்கப்பட உள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீசார், குற்றச் சதி, லஞ்சம் தருதல் உட்பட, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையில், முதல் குற்றவாளியாக தினகரனும், இரண்டாம் குற்றவாளியாக சுகேஷ் சந்தரும் இடம் பெற்றுள்ளனர்.

தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்குவதற்காக, டில்லி துணை கமிஷனர் சஞ்சய் ஷெராவத், சென்னை வந்துள்ளார். இன்று, தினகரனை சந்தித்து, சம்மனை வழங்குவதோடு, அவரிடம் விசாரணையும் நடத்தப்படலாம். அதன்பின், அவரை டில்லி அழைத்துச் சென்று, சுகேஷ் சந்தருடன் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்த, டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின், தினகரன் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்படலாம் என, டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


 

ஆடம்பரத்தில் திளைத்தவன்


டில்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர், ஆடம்பரமாக வாழ்வதில் விருப்பம் உடையவன். நாட்டின் பல பகுதிகளில், அவனுக்கு சொந்தமாக, ஏராளமான பண்ணை வீடுகள் உள்ளன.
சுகேஷ் சந்தர், கையில் அணிந்திருந்த, 'பிரேஸ்லெட்'டின் விலை, 6.5 கோடி ரூபாய் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த, விதம் விதமான, 'ஷூ'க்களை, சுகேஷ் சந்தர் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
 

அவர் யாரென்றே தெரியாது: தினகரன்


''டில்லியில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்பவர், யார் என்றே தெரியாது,'' என, சசிகலா அக்கா மகன் தினகரன் தெரிவித்தார்.தினகரன் அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னத்தை பெற, நான் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுவது, தவறான தகவல். டில்லியில் கைது செய்யப்பட்ட, சுகேஷ் சந்திரசேகர், யார் என்றே தெரியவில்லை.
எனக்கு எதுவும் புரியவில்லை. 'டிவி' பார்த்து தான் தெரிந்து கொண்டேன். என்னிடம் பணம் வாங்கினார் என்றால், எங்கு வாங்கினார்?இதன் பின்னணி புரியவில்லை. இப்பிரச்னையை, சட்டப்படி சந்திப்பேன். என் வாழ்க்கையில், சுகேஷ் சந்திரசேகர் என, யாரிடமும் பேசியதில்லை. வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்களிடம் பேசி உள்ளேன்.
அ.தி.மு.க.,வை அழிப்பதற்காக, இது போன்ற தகவலை பரப்புகின்றனர்; அது, யாருடைய திட்டம் என, தெரியவில்லை. சசிகலாவை சந்திக்க, பெங்களூருக்கு புறப்பட்ட போது, 'டிவி'யில் செய்தி பார்த்தேன். இது தொடர்பாக, போலீசாரிடம் இருந்தும், எந்த தகவலும் வரவில்லை.
என்னுடன், ஆயிரம் பேர் போனில் பேசுவர்; ஆயிரம் விஷயங்கள் சொல்வர்; எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுவர். அந்த நேரத்தில், சரி என்போம். அதற்காக, பேசிய எல்ேலாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, ஆவணங்கள் எதையும், அமைச்சர்கள் அழிக்கவில்லை. கட்சியில், பிரச்னை எதுவும் இல்லை. என்னை விலகும்படி, அமைச்சர்கள் யாரும் கூறவில்லை. விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படியும், யாரும் வற்புறுத்தவில்லை; அவரிடமும், யாரும் பேசவில்லை.
இவ்வாறு தினகரன் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753453

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.