Jump to content

கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்; பெண்களை கவர்ந்த தொழில்நுட்பம்


Recommended Posts

கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்; பெண்களை கவர்ந்த தொழில்நுட்பம்

 
 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டு கேத்தி பியாமன்ட் முயற்சிகள் மேற்கொண்டபோது, கருத்தரிப்பதற்கு மிக சிறந்த காலம் எது என்பதை அறிய, சந்தையில் கிடைத்த பல கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்களை(செயலிகளை) நாடினார்.

கேத்தி பியாமன்ட் அவருடைய கணவர் கிரிஸ்படத்தின் காப்புரிமைKATHY BEAUMONT Image captionகேத்தி பியாமன்ட் அவருடைய கணவர் கிரிஸ் கருத்தரிப்பு காலக்கணிப்பை வழங்கும் மென்பொருளை பயன்படுத்த தீர்மானித்தனர்.

அவருடைய உடல் வெப்பத்தை ஒவ்வொரு நாளும் அளவிட்டு "ஃபெர்ட்டிலிட்டி ஆப்" என்ற மென்பொருளில் சேர்த்து வைத்தார். ஆனால். சீக்கிரமாகவே கருத்தரிப்பு எண்ணங்களில் முடங்கி போகிற ஒருவராக தான் மாறுவதை அப்போது அவர் உணர்ந்தார்.

"என்னுடைய மாதவிடாய் காலம் எவ்வாறு இருக்கிறது, என்னிடம் கரு முட்டை வெளிப்படும் காலத்தை சுட்டிக்காட்டுகின்ற உடல் வெப்பநிலையில் அதிகபட்ச அதிகரிப்பு காணப்படுகிறதா? என்பதை அந்த மென்பொருளிலுள்ள பகுப்பாய்வு பிரிவில் பார்வையிட்டு, நான் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்" என்கிறார் பகுதி நேர பிரதி எழுத்தாளர் 32 வயதான கேத்தி.

"எனது கரு முட்டை கருத்தரிக்க தயாராக இருப்பதாக அந்த மென்பொருள் கணிக்கின்ற காலத்தில் மட்டுமே குழந்தை கருத்தரிப்பதற்கு முயன்று வந்தோம்" என்று மேலும் அவர் கூறுகிறார்.

ஆனால் இவ்வாறு 6 மாதங்கள் "முயன்ற" பின்னரும், கேத்தி கருத்தரிக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது.

 

சில மாதங்களில் எங்களுடைய வாய்ப்பை முழுமையாக நாங்கள் தவற விட்டிருக்கலாம் என்று எண்ணுவதாக விளக்குகிற அவர், இதனை தேவைக்கு அதிகமாகவே முக்கியத்தவம் கொடுத்து செயல்பட்டதால் உருவான அழுத்தங்களால் எழுந்த மிகுந்த மன உளைச்சல் கருத்தரிக்க இயலாமல் செய்திருக்கலாம் அல்லது இந்த கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள் துல்லியமான செயல்திறனற்றதாக இருந்திருக்கலாம் என்கிறார்.

தன்னுடைய நன்மைக்காக, இத்தகைய கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருட்களை பயன்படுத்தி குழந்தை கருத்தரிக்க செய்ய முயலுவதை விட்டுவிட தீர்மானித்த அடுத்த மாதமே அவர் கருவுற்றார்.

இத்தகைய மென்பொருட்கள் நிச்சயமாக ஒருவித நோக்கத்திற்கு உதவுகிறது என்று கூறுகின்ற அவர், ஆனால், அவை தான் எல்லாம்; அவற்றால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்றில்லை என குறிப்பிடுகிறார்.

மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்படத்தின் காப்புரிமைSARA FLYCKT

கருத்தரிக்க உகந்த காலத்தை மென்பொருள் கணிக்குமா?

சில பெண்களுக்கு இந்த கருத்தரிப்பு காலக்கணிப்பு நிச்சயமாக உதவவே செய்கின்றது.

ஸ்வீடனில் கேட்ட போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இதுபற்றி கேள்விப்பட்ட பிறகு, 35 வயதான லண்டனை சேர்ந்த சாரா பிளைக்கிட், "நேச்சுரல் சைக்கிள்ஸ்" என்ற கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருளை பயன்படுத்தினார்.

இந்த மென்பொருளை பயன்படுத்துவோர் கருத்தரிக்கும் நிலையில் இருக்கின்றாரா? அல்லது கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்த வேண்டுமா? என்று உடல் வெப்பநிலையை கணக்கில் கொண்டு தீர்மானித்து இது பகுப்பாய்வு செய்கிறது.

"முன்பு நான் மாத்திரை சாப்பிட்டு வந்தேன். ஹார்மோன்கள் என்னை மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாக்கியது எனவே, இந்த மென்பொருள் பற்றி கேள்விப்பட்டபோது, இதனை முயற்சி செய்வதில் புத்திசாலித்தனம் எதுவும் தேவையில்லையே என்று உணர்ந்தேன்" என்கிறார் ஸ்வீடனில் பிறந்த பிளைக்கிட்.

 

தொடக்கத்தில் இந்த மென்பொருளை கருத்தடைச் சாதனமாக பயன்படுத்திய அவர், கடந்த ஆண்டு தான் கருத்தரிக்க திட்டமிடுவதற்கு இந்த மென்பொருளை பயன்படுத்தி கொண்டார்.

"இந்த மென்பொருள் என்னுடைய கருத்தரிப்பு காலத்தை கணிப்பதற்கு நிச்சயமாக உதவியது. இதனை பயன்படுத்துவதும் எளிது. நானும் என்னுடைய கணவரும் உபசரிக்கும் விருந்தோம்பல் சேவை துறையில் பணியாற்றுவதால் எங்களுக்கு குறிப்பாக இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சில நாட்கள் நாங்கள் ஒருவரையொருவர் சந்திப்பதுகூட கிடையாது.

"இந்த மென்பொருள் மூலம் நாம் எப்போது குழந்தை கருத்தரிக்க முயல வேண்டும், ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்"

ஸ்வீடனில் தொடங்கப்பட்ட இந்த "நேச்சுரல் சைக்கிள்ஸ் ஆப்", கருத்தடைச் சாதனம் என்பதற்கான மருத்துவ அனுமதியை சமீபத்தில் வென்றிருக்கிறது.

மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்படத்தின் காப்புரிமைNATURAL CYCLES

பெண்களை குறிவைக்கும் தொழில்நுட்பம்

ஃபெம்டெக் என்று குறிப்பிடப்படும் பெண்களை இலக்கு வைத்து உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், கருத்தடை மற்றும் மாதவிடாய் காலக்கணிப்பு மென்பொருட்கள் முதல் ஆபாச பொம்மைகள் மற்றும் மார்பக குழாய்கள் வரை அனைத்தையும் உள்ளடக்குகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த சந்தை வளர்ந்து வருகிறது.

"ஃபெம்டெக் பொருட்களின் தயாரிப்பை தொடங்க முதலீடு செய்வதில் முக்கிய வளர்ச்சியை காண்கிறோம்" என்று சிபி இன்சைட்ஸ் தொழில்நுட்ப ஆய்வாளர் ஸோய் லியாவிட் கூறுகிறார்.

இது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் 2014 ஆம் ஆண்டு 20 என்பதில் இருந்து 2015 ஆம் ஆண்டு 40 ஆக உயர்ந்த்து. 2016 ஆம் ஆண்டு மொத்தம் 52 ஒப்பந்தங்களும், டாலர் மதிப்பில் மொத்தம் 540.5 மில்லியன் டாலர் என்ற மதிப்பிலும் உயர்ந்தது.

 

2009 ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 173 ஒப்பந்தங்களில் 1.26 பில்லியன் முதலீடு செய்யப்பட்டிருப்பதை தெரியவந்துள்ளது.

ஆனால், சில பெண்கள் இத்தகைய மென்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படலாம் என்ற கவலை இருக்கவே செய்கிறது.

பெண்கள் கருவுற உகந்த நிலையில் இருப்பதை உடனடியாக தெரிவிக்கும் அணியக்கூடிய காப்பு மற்றும் மென்பொருளை தயாரித்துள்ள ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் லியே வோன் பிட்டர்.

ஆனால், கருத்தரிக்கும் வேளையை அறிவது என்பது தற்போதைய தெரிவில் ஒரு பெண்ணுக்கு பகுதி நேர வேலை என்ற நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்படத்தின் காப்புரிமைANA SANTL

ஒரு நாளில் பலமுறை குச்சிகளில் சிறுநீர் கழிப்ப்த, ஒவ்வொரு நாளும் காலை எழுந்து, ஒரே நேரத்தில் உடல் வெப்பநிலையை பதிவு செய்வது அல்லது கழிவறைக்கு செல்கின்ற ஒவ்வொரு முறையும் கர்ப்பப்பை வாய் சளியை சோதித்து கொள்வது என பல வேலைகளை பெண்கள் செய்ய வேண்டியுள்ளது.

"இந்த பணிகள் தையும் செய்யாமல், இரவு மட்டும் அணிந்து கொள்ளக்கூடிய காப்பு ஒன்றை உருவாக்கி இருப்பதன் மூலம், பெண்களின் அழுத்தத்தையும், கருத்தரிப்பு காலம் பற்றி கவலைப்படுவதையும் குறைக்க உதவி இருப்பதாக உறுதியாக நம்புகிறோம்" என்று லியே வோன் பிட்டர் கூறகிறார்.

இத்தகைய பல மென்பொருட்கள் குழந்தை பெற்றுகொள்ள முயல்வோரை மட்டுமே இலக்கு வைப்பதில்லை.

 

பெர்லினை தலைமையிடமாக கொண்டு விளங்கும் "குளு" நிறுவனத்தின் இணை நிறுவனர் ஐடா டின், இந்த நிறுவனத்தின் மாதவிடாய் சுழற்சியை அறிவிக்கும் கருவி "பெண்களுக்கு அதிகாரம் வழங்கும்" முயற்சி என்று குறிப்பிடுகிறார்.

சிலருக்கு, தங்களுடைய உடலை பற்றிய உள்ளூர பார்வைகளை முதல்முறையாக பெறுகின்ற தருணமாக இது அமைகிறது. மக்கள் தங்களுடைய உடலை நன்றாக புரிந்து கொள்வதற்கு இந்த மென்பொருட்கள் உதவுகின்றன

குழந்தைகளை பெற்றெடுக்க அல்லது அடுத்த மாதவிடாய் காலத்தை அறிய இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இதே கருத்தை பல பெண்கள் ஒப்புக் கொள்வதாக தெரிகிறது. குளு நிறுவனம் உலகளவில் 5 மில்லியன் தீவிர பயன்பாட்டாளர்களை கொண்டு விளங்குகிறது.

மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்படத்தின் காப்புரிமைALEXANDER CRISPIN

ஆனால், ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேசிய சுகாதார மற்றும் சிறப்பு பராமரிப்பு நிறுவனம் (என்ஐசியி) இத்தகைய கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருட்களை எச்சரிக்கையோடு பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.

"நோயாளிகளுக்கும், பயன்பாட்டாளருக்கும் கருத்தரிப்பு தொடர்பாக பலன்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் மாதிரிகள் இன்று உள்ளன. அவை அனைத்தையும் சுகாதார பாரமரிப்பில் பயன்படுத்துவதற்கு முன்னர் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தேசிய சுகாதார மற்றும் சிறப்பு பராமரிப்பு நிறுவனத்தின் சாட்சிய ஆதாரங்களின் இயக்குநர் அலெக்ஸியா டோனெல் கூறுகிறார்.

"எங்கெல்லாம் முடியுமோ, அங்கு பயன்பாட்டாளர்கள் பலன்கள் என்று சொல்லப்படுபவற்றை தனிப்பட்ட முறையில் மீளாய்வு செய்திட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய மென்பொருட்களின் செயல்திறனில் ஒரு சில லாப நோக்கமற்ற பாலுறவு சுகாதார நிறுவனங்களும், நிபுணர்களும் கவலைகளை தெரிவித்துள்ளன.

ஆனால் உலக அளவிலுள்ள மில்லியன் கணக்கான பெண்கள். இதனை முக்கிய கருத்தடை சாதனமாக, தங்களின் மாதவிடாய் சுழற்சிக் காலத்தை புரிந்துகொள்ள உதவும் வழிமுறையில் கருத்தரிப்புக்கு உதவும் கருவியாக இருப்பதை நிரூபித்துள்ளனர்.

மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்படத்தின் காப்புரிமைCLEARBLUE

தன்னுடைய இரண்டாவது குழந்தைக்காக முயலுகின்றபோது, கெம்மா மூரே "கிளியர்புளூ" என்ற மென்பொருளை பயன்படுத்தினார்.

"என்னுடைய ஹார்மோன் நிலைகளையும், பெரும்பாலும் கருத்தரிக்கக்கூடிய நான்கு நாட்களையும் அறிந்துகொள்ள கிளியர்புளூ கருவள கண்காணிப்பு கருவியை நான் பயன்படுத்தினேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனை பயன்படுத்திய இரண்டாவது மாதமே கருத்தரித்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய மகன் ஆஸ்காரை பெற்றெடுத்தார்.

எதிர்காலத்திலும், ஃபெம்டெக் துறை பெரும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"நாங்கள் பெண்களின் சுகாதரத்தில் வெற்றிகரமாக அமைவதை மட்டுமே பாப்பதில்லை. தனிப்பட்ட சுகாதாரம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் மார்பக குழாய்கள் போன்ற பகுதிகளிலும் கவனம் செலுத்துகின்றோம்" என்று அவாவிலிருந்து லியே வோன் பிட்டர் தெரிவிக்கிறார்.

நாம் ஏற்கெனவே பிற வாழ்க்கை அம்சங்களில் பயன்படுத்திக் கொண்டுவரும், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மாற்றங்களோடு பல நிறுவனங்கள் இப்போதுதான் வளர்ந்து வருவதால் இந்த தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

http://www.bbc.com/tamil/science-39617027

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.