Jump to content

“நான் ஒதுங்கி போக மாட்டேன்”- மல்லுக்கட்டும் தினகரன்!


Recommended Posts

“நான் ஒதுங்கி போக மாட்டேன்”- மல்லுக்கட்டும் தினகரன்!

 
 

Dina_1_500_05220.jpg

அ.தி.மு.க-வை விட்டு தினகரனை வெளியேற்றும் திருவிளையாடல்களை அவரது அணியில் உள்ளவர்களே ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மன்னார்குடி உறவுகளிடம் கட்சியை விட்டு நான் ஒதுங்கி போகமாட்டேன் என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளார் தினகரன்.

சசிகலா உறவுகளிடம் அ.தி.மு.க.வினர் காட்டிய பயமும், பவ்வியமும் இள்று காணமல் போய்விட்டது. சசிகலா உறவுகள் இனிமேல் அ.தி.மு.க.வில் கோலோச்ச வேண்டாம் என்ற கருத்துகள் பரவிவரும் நிலையில் சசிகலா உறவுகளுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. 

சசிகலாவினால் துணைப் பொதுச்செயெலாளராக அறிவிக்க தினகரன் கட்சி, ஆட்சி என இரண்டிலும் கோலோச்சுவதை பிற உறவுகள் விரும்பவில்லை. தினகரன் தனி ஆவர்த்தனம் செய்வதை திவாகரனும், அவருடைய மகன்  ஜெயஆனந்தும் விரும்பாமல் இருந்தனர். எடப்பாடியிடம் தனக்கு வேண்டிய சிலருக்கு பணியிடம் மாற்றம் குறித்து திவாகரன் கேட்டுள்ளார். அதற்கு முட்டுக்கட்டை போட்ட தினகரன், தனது உறவினர்கள் எதைக் கேட்டாலும் செய்ய வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இந்த புகைச்சலில் உறவுகள் இருந்து வந்த நேரத்தில், அமைச்சர்கள் சிலர் தினகரனுக்கு எதிராக திரும்பியுள்ள சூழ்நிலையில், திவாகரன் தரப்பு அந்த அமைச்சர்களுக்கு ஆதவராக இப்போது களத்தில் இறங்கியுள்ளார்.

தினகரனுக்கு எதிராக இருக்கும்  அவருடை உறவினர்கள், கட்சியில் இருந்து அவரை வெளியேற்றுங்கள், நாங்கள் வழக்கம் போல் பின்னால் இருந்தே கட்சியை இயக்குகின்றோம். ஆட்சியையும் கட்சியையும் நீங்கள் நடத்துங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அதே போல் பன்னீர் தரப்பிடமும் திவாகரன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சசிகலா உறவினர் மகாதேவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தஞ்சாவூர் வந்திருந்த தினகரனிடம் உறவுகள் அனைவரும் சரியாக பேசவில்லையாம். இவர்களுக்குள் இருந்த மோதல் அங்கு வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த நிலையில் தான் கொங்கு அமைச்சர்கள் வேறு தனக்கு எதிராக திரும்பி நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது தினகரனை மேலும் கடுப்பேற்றியுள்ளது. அமைச்சரவையில் தினகரன் ஆதரவாளராக விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் மட்டுமே உள்ளனர். திவாகரன் ஆதரவு அமைச்சர்களாக சிலரும் உள்ளார்கள். தனக்கு வேண்டிய உறவினர் ஒருவரிடம் தஞ்சாவூரில் வைத்து தினகரன், “சித்தி கட்சியை என்னை நம்பி தான் விட்டு போய் உள்ளார்கள். இந்த கட்சியின் வளர்ச்சியில் எனது பங்கும் உள்ளது. உறவுகளால் கட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று தான் அனைவரையும் ஒதுக்கி வைத்தேன். ஆனால், இப்போது அவர்களே எனக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்துள்ளனர். நான் ஒதுங்கிபோய்விடுவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் ஒதுங்கிபோகும் நிலை வந்தால், கட்சிக்கும் ஆட்சிக்கும் முடிவுரை எழுதிவிட்டு தான் ஒதுங்கிபோவேன்” என்று ஆக்ரோஷமாக பேசியதை பார்த்த அந்த உறவினர் கொஞ்சம் ஆடிப்போய்விட்டாராம்.

தினகரனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள் இருக்கும் தைரியத்தில் தான் அவர் இப்படி பேசுகிறார் என்கிறார்கள் திவாகரன் ஆதரவு அமைச்சர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/86662-i-will-not-go-away-ttv-dinakaran-affirms.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.