Jump to content

சரத்குமாருக்காக நடந்த சடுகுடு ஆட்டம்!


Recommended Posts

சரத்குமாருக்காக நடந்த சடுகுடு ஆட்டம்!

 
 

 

p12b.jpg

ருமானவரித் துறை ரெய்டு சூறாவளி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையே போட்டுத்தாக்கிவிட்டது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி போன்றவர்களுடன் நடிகர் சரத்குமாரும் கடும் சேதத்துக்கு ஆளாகி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அவரிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி, ‘நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்பதுதான். அதைத்தான், தன் பேட்டியில் குமுறித் தீர்த்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அந்த அளவுக்கு சரத்குமாரை வருமானவரித் துறை அதிகாரிகள் குறிவைக்கக் காரணம் என்ன? ‘‘ சரத்குமார்  தனது வழக்கமான ஆட்டத்தை, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யோடும் ஆடிப் பார்த்தார். அதன்விளைவுதான், ரெய்டு சூறாவளியில் வசமாக சிக்கிக்கொண்டார்” என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

பல ஆண்டுகளாக சரத்குமாருக்குப் பட வாய்ப்புகள் இல்லை. நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பும் போய்விட்டது. கட்சியில் இருந்த வசதிபடைத்தவர்களும் தொழிலதிபர்களும் அவரைவிட்டு விலகிவிட்டனர். இந்த நிலையில், அடுத்த வாய்ப்பை  எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார் சரத்குமார். 

p12a.jpg

மும்முனைப் பேச்சுவார்த்தை!

முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார் சரத்குமார். இருவருக்கும் இடையே, பன்னீர்செல்வம் வீட்டில் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு, “பன்னீர்செல்வத்துக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனார். அந்த நேரத்தில், டெல்லி உத்தரவின்பேரில், பி.ஜே.பி சார்பிலும் சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. “சமத்துவ மக்கள் கட்சியை பி.ஜே.பி-யோடு இணைத்துவிடுங்கள்” என்பதுதான் முக்கியமான பேரம். அதற்கு ஒப்புக்கொண்ட சரத்குமார், அதற்கான பேரத்தை தொடங்கினார். அதில், கொஞ்சம் இழுபறி இருந்தது. இந்த நேரத்தில், வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தரப்பு களமிறங்கி, சரத்குமாரைக் தினகரனுக்கு ஆதரவாகக் கொண்டுவரும் வேலையைச் செய்தது. அங்கும் சரத்குமார் பேரம் பேசினார். எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த தினகரன், அந்த பேரத்துக்கு ஒப்புக்கொண்டார். சில கொடுக்கல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஒரு நிறுவனத்தின் முக்கியப் புள்ளிக்கு, சரத்குமார் மெசேஜ் அனுப்பினார். வில்லங்கம் அங்குதான் ஆரம்பித்தது. சரத்குமார் அனுப்பிய அந்த மெசேஜை அந்த நிர்வாகி பத்திரமாக வைத்திருந்தார்’’ என்கிறார்கள்.
 
வி.வி.மினரல்ஸ் vs தமிழக அரசு

அ.தி.மு.க-வின் ‘பிசினஸ் பார்ட்னர்’ வி.வி.மினரல்ஸ் என்று சொல்லும் அளவுக்கு ஆரம்பத்தில் இரண்டு தரப்புக்கும் உறவு இருந்தது. பிறகு, ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும், வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனோடு உரசல் ஏற்பட்டது. வைகுண்டராஜனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தார். அவரின் குவாரிகளில் ரெய்டு நடத்தப்பட்டு, அவருடைய தொழில் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறைக்குப்போன பிறகு, மீண்டும் இரண்டு தரப்புக்கும் உறவு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். வைகுண்டராஜனை அழைத்து வந்து தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கவைத்தார். ஆனால், அதன்பிறகுதான் வைகுண்டராஜனின் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் கொதித்துப்போன வைகுண்டராஜன், சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அப்போதுதான், இந்த மெசேஜ் சிலரின் கைகளில் மாட்டியது. அதை அப்படியே வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கொண்டுபோய் கொடுத்தார்கள்.  ஏற்கெனவே, அமைச்சர் விஜயபாஸ்கரின் தொலைபேசி உரையாடல்கள், இ-மெயில் விவரங்கள், செல்போன் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட விவரங்கள் ஐ.டி துறையிடம் இருந்தன. இதை எல்லாம் வைத்து தினகரனை முடக்க டெல்லி நடத்திய ரெய்டில் சரத்குமார் சிக்கிக்கொண்டது அவருடைய விதி வசம்.

p12.jpg

அள்ளப்பட்ட ஆவணங்கள்...

சரத்குமாரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அங்கு ரொக்கமாக எதுவும் சிக்கவில்லை. அதையடுத்து, அவரிடம் பண விவகாரம் குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப் பட்டது. ராதிகாவுக்குச் சொந்தமான ராடன் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கும் பணம் சிக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக, ராடன் நிறுவனம் நடத்திய வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரி அதிகாரிகள் சொல்கிறார்கள். ‘‘நான்கு கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததை சரத்குமாரும் ராதிகாவும் ஒத்துக்கொண்டுள்ளனர்” என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.

இந்த ரெய்டுகள் மூலம் பி.ஜே.பி அரசு மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புவது, “எங்களுக்கு ஆதரவாக வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், தினகரனுக்கு ஆதரவாக யாரும் போகக்கூடாது” என்பதுதான். மீறிப் போனால், இப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதே இதனால் சொல்லப்படும் செய்தி.

நொந்துபோன தினகரன்...

வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை,  ஆர்.கே. நகர் தேர்தல் தள்ளிப்பு, குறிவைக்கப்படும் அமைச்சர்கள் எனப் பல்முனைத் தாக்குதல்களால் நொந்துபோய் உள்ளார் தினகரன். ‘வைகுண்டராஜனை நம் பக்கம் இழுத்துவந்ததுதான், அத்தனைப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம்’ என்று புலம்பும் தினகரன், யாரையும் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார். தினகரனை நம்பிய வைகுண்டராஜனுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. வைகுண்டராஜனை நம்பிய சரத்குமாரால் ராதிகாவும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். இவர்களால், தன் அரசியல் எதிர்காலத்தை ஏறத்தாழ இழந்துவிட்டு நிற்கிறார் தினகரன்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.