Jump to content

சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி


Recommended Posts

சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி

 

 
pushpa

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் அல்லோகலப் பட்டுக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கினால் அரசு இயந்திரம் இயங்குகிறதா என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

தொட்டதெற்கெல்லாம் தெருவில் வந்து போராடவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு திட்டங்கள் வெறும் திட்டங்களாகவே மட்டும் உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலும் கட்சியை கைப்பற்றவும் மட்டுமே திட்டம் போட்டு அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆளும் தரப்பினரிடம் கோடை நேரத்திற்கான ஒரு தண்ணீர் பந்தலை கூட எதிர்பார்க்க முடியாமல் மக்கள் தவித்துள்ளனர்.

நாற்காலி சண்டையில் சசிகலா தரப்பு, ஓ. பன்னீர் செல்வம் தரப்பு,  தீபா தரப்பு என மூன்று கால்களை பார்த்த நமக்கு இப்போது நாற்காலியின் 4 வது காலாக முளைத்திருப்பது சசிகலா புஷ்பா. ஆம் இவருக்கும் முதல்வர் நாற்காலி மீது இப்போது ஆசை வந்திருப்பதுதான் விந்தையான ஒன்று. 

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த அவருக்கு அ.தி.மு.க பிரமுகர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் அரசியல் ஆசை ஏற்பட்டு கட்சியில் தன்னை மிகுந்த பிரயத்தனத்திற்கு பிறகு இணைத்துக் கொண்டார்.

அதுமுதல் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை பெற்ற அவர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட  நெருக்கம் காரணமாக  மேயர் பொறுப்பு, மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு, மாநில மகளிரணி செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இப்படி வளர்ச்சிப் படியிலேயே சென்று கொண்டிருந்த அவருக்கு ஒரு ஆடியோ கசிவுக்குப் பின் வீழ்ச்சி ஏற்பட்டது.

சொந்த கட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய அந்த ஆடியோ பதிவு கட்சியின் தலைமைக்கு கிடைத்ததோடு வலைத்தளங்களிலும் பரவி அவரது இமேஜை கெடுத்தது. அதன்பிறகு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள், அவருடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் போன்ற நிகழ்வுகளும் அவரது அரசியல் செல்வாக்கை அசைக்க தொடங்கியது.

இதையடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக மறுத்ததோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை ஊடங்களில் பேசி தன்னை ஒரு நியாயவாதியாக காட்டிக் கொள்ள முயன்றார். இந்த பரபரப்புக்கிடையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

அதன்பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு, ஆட்சி அதிகார வர்க்கத்தின் மோதல், அரசியல் பரபரப்பு, வருமான வரி சோதனை, இடைத் தேர்தல் ரத்து, என அடுத்தடுத்து பல்வேறு சுனாமி அலைளுக்குள் சிக்கி தமிழகம் தவித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் அடுத்து என்ன நடக்குமோ என்று யோசிக்க கூட முடியாத நிலையில் முதல்வர் நாற்காலியின் நான்காவது காலை கரம்பற்றி எனக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சசிகலா புஷ்பா வார இதழுக்கு பேட்டி கொடுத்திருப்பதை பார்த்து நகைப்பதா, திகைப்பதா என்று தெரியாமல் மக்களும் விக்கித்துள்ளனர்.

வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், அக்கட்சி நிலைத்திருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால், எந்தக் கட்சியிலிருந்து முதல்வராக வருவேன் என்பதையெல்லாம் சொல்லமுடியாது. ஆனால், தமிழகத்தின் முதல்வர் ஆவதே என் லட்சியம். தமிழக மக்கள் அனைவரது எதிர்பார்ப்பும் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தக்க சூழ்நிலை வரும்போது பெரிய அளவில் களத்தில் இறங்குவேன். நீங்கள்தான் எங்கள் சி.எம்-மாக வரவேண்டும்' என்றெல்லாம் நிறைய இடங்களில் மக்கள் என்னிடம் சொல்கிறார்கள் என்று அவர் கூறியிருப்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்றுதான் தெரியவில்லை.

அவரது இந்த பேட்டியின் பின்னணியில் இருக்கும் முக்கிய பிரமுகர் யார், ஆரம்ப காலகட்டத்தில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சிக்கு உதவி புரிந்ததாக சொல்லப்படும் வைகுண்டராஜன் தற்போது டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிகிறது. அப்படி இருக்க இவரின் முதல்வர் கனவுக்கு பக்கபலமாக, செயல்படும் பெரும் புள்ளி யாராக இருக்க கூடும் என்றும் மக்கள் வினவ தொடங்கியுள்ளனர்.

அதோடு தமிழக முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் சசிகலா புஷ்பாவின் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மக்கள் அவரிடம் சில கேள்விகளையும் முன்வைக்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் முறையான குடிநீர் வசதி, சாலை வசதி அங்கு அமைக்கப்படவில்லை. 

திருச்செந்தூர், உவரி, மணப்பாடு, எட்டையபுரம் போன்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த போதும், மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தும் இதுவரை அவர் என்ன செய்து கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் - ஆறுமுகநேரி இடையே 10 கிலோமீட்டர் தொலைவில் ரயில் இணைப்பு பாதை ஒன்றை ஏற்படுத்தினாலே திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க முடியும் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆனால் தமிழக முதல்வர் நாற்காலிக்கு மட்டும் அனைவரும் ஆசைப்படுகின்றனர். அந்தவரிசையில் தற்போது சசிகலா புஷ்பாவும் சேர்ந்திருப்பது உண்மையில் அந்த நாற்காலியை நகைப்புக்குள்ளாக்கி இருப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். 
                                                                           - திருமலை சோமு

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.