Jump to content

கோபம்


Recommended Posts

ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அருமையாக இருக்கும் என தோன்றியது. கைத்தொலைபேசியில் தலைபேசி வழி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் டவாலி போல மூன்று முறை கேட்ட பின்னரும் அவள் அசைவதாயில்லை. பல்லாயிரத்தி பல நூற்றி சொச்சம் முறையாக அவள் மீது கோபம் வந்தது.
"தேநீர் வருமா வராதா?"
"ஆ..." காதிலிருந்ததை அகற்றி கேட்டாள். உள்ளே கோபம் வந்தாலும் அமைதியாய்..
"தேநீர் வருமா வராதா?"
" தேநீர் எப்படி தானாய் வரும்?"
இது நகைச்சுவையாய் தோன்றவில்லை
"எனக்கு இப்போது தேநீர் வேண்டும்"
"எனக்கும் இப்போது வைர அட்டிகை..தங்க காப்பு பட்டுசேலை எல்லாம் வேண்டும்..ஆசைப்படுவதெல்லாம் உடனே நடக்குமா என்ன"
"சாதரண தேநீருக்கு என்ன எகத்தாளம்"
"அப்படியா..சாதரண தேநீரா..நீங்களே தயாரித்து அருந்துங்கள்"
கோபம் தலைக்கேற அவள் கையிலிருந்த கைத்தொலைபேசியை வாங்கி ஓங்கி நிலத்தில் எறிந்தேன். பிரதிபலிப்பாய் பெருங்கோபத்தை எதிர்பார்த்தேன். அமைதியாக உள்ளே போனவள். சிறிது நேரத்தில் தேநீருடன் வந்தாள்.
"ஒரு கோப்பை தேநீருக்காக உங்கள் தொலைபேசியையே உடைத்துவிட்டீர்களே..நல்ல வேளை நான் என் கைத்தொலைபேசியை வைத்திருக்கவில்லை"
ஆ..உடைந்தது எனது கைத்தொலைபேசியா..தலை கிறுகிறுக்க அப்படியே உறைந்துபோனேன்.

ஆத்திரம் கண்ணை மறைக்கும்.
நமது கோபம் நமக்கே நம் சாபம். 1f642.png:-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பை தேநீருக்கு ஒரு போண் போன கதை நன்றாக இருக்கிறது விகட கவி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா..., உங்களுக்கு ஒரு புதுக் கைபேசி கிடைக்கப் போகிறது. நல்லதொரு மாடலாய் வாங்க வாழ்த்துகின்றேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் சந்தோசம்.

போன் காசுக்கு எத்தினயோ தேநீர் வாங்கியிருக்கலாம்.

நாமெல்லாம் சமைச்சே சாப்பிடறம் நீங்கள் என்னடாவென்றால் ஒரு தேநீருக்கு இவ்வளவு பிபி ஏறுறது கூடாதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தைவிட பெண்டாட்டி மேலான அதிகாரம்தான் கதையில் தெரிந்தது.. கற்பனைதானே விகடகவி?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தலைபேசி

என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

என்றால் என்ன?

 head  phone....?

Link to comment
Share on other sites

கதையின் முடிவில் சிரிப்பு தவிர்க்க முடியவில்லை விகடகவி. அதுசரி கோபம் வந்தா நீங்களும் தொலைபேசியை உடைப்பீங்களோ ?

Link to comment
Share on other sites

எனக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது .ஆரம்ப காலத்தில் நானும் கொஞ்சம் ஆணாதிக்க பேர்வழியாக இருந்திருக்கிறேன் .இரண்டு குழந்தைகள்  பத்து வருட வாழ்வில் பெண்கள் மீது மரியாதையும் மதிப்பும் உருவாகிவிட்டது.தாய்மை கொஞ்சம்  எனக்கும் புரிகிறது.இது கதை மட்டுமே .கோபம் மீறி எதையும் செய்ய கூடாது என்ற நீதிக்கதை மட்டுமே :-)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.