Jump to content

திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி?


Recommended Posts

திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி?

 
திருமணத்தைத் தாண்டிய உறவுகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பைத்தியகாரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை.

கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார்.

தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் 2013ல் பெண்களின் தற்கொலை 44256 இருந்தது என்றும் அது 2015ல் 42088ஆக குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பெண்களின் தற்கொலை எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள் என்ன? குறிப்பாக குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்ற பிடியில் இருந்து விலகிய பெண்கள் தங்களது முடிவை மாற்றிக் கொண்டது எப்படி என ஆராய்கிறது இந்த கட்டுரை.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியரான பிரதீபா அதிக சம்பளம் பெறுவது அவரது கணவரை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளியது. கணவரின் உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பொறுக்க முடியமால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

உரிய நேரத்தில் ஒரு ஆண் நண்பரின் உதவி பிரதீபாவை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டது. சிறிது காலத்தில் கணவரை விட நண்பரின் உறவே தனக்கு தேவை என முடிவு செய்தார். கணவருடனான வாழ்க்கையில் இருந்து தனது மகளுடன் வெளியேறினார். தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

பிரதீபாவுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தற்கொலை தீர்வு இல்லை என முடிவெடுப்பதற்கு பல வாரங்கள் எடுத்தது. ''குற்ற உணர்ச்சி இருந்தது. வீட்டில் பார்த்து வைத்த திருமணத்திற்காக, குடும்ப கௌரவத்திற்காக, மகளுக்காக என பல காரணங்கள் என்னை அழுத்தியது. ஒரு கட்டத்தில் என் வாழக்கையை இழக்க விரும்பவில்லை,''என தனது தற்கொலை எண்ணத்திற்கு முடிவுகட்டியது பற்றி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிரதீபா போல திருமண உறவுகளைத் தாண்டிய உறவுகளை அமைத்துக்கொள்வது, தனது வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்வது, திருமணம் தாண்டிய உறவுகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது ஆகிய காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள் தன்னார்வலர்கள்.

திருமணத்தைத் தாண்டிய உறவுகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேசிய குற்றப்பதிவு காப்பகத்தில் பதிவாகியுள்ள எண்கள் இந்த மாற்றத்திற்கு சாட்சியாக உள்ளன.

2005முதல் 2015 வரையிலான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, தற்கொலையை தடுக்கும் ஆலோசனை வழங்கும் மருத்துவர் மற்றும் இந்தத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசியதில் இந்தக் கருத்து தெளிவாகிறது.

இந்தியாவில், 2005ல் திருமணத்தை தாண்டிய உறவை ஏற்ற காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 1,220ஆக இருந்தது.

அது 2015ல் 474ஆக குறைந்துள்ளது. அதாவது 46.6% குறைந்துள்ளது.

தற்கொலை செய்ய முயற்சித்த பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

 

அதுபோலவே திருமணத்தைத் தாண்டிய உறவுகளால் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை 171ல் இருந்து கடந்த 10 ஆண்டு காலத்தில் 49ஆக குறைந்துள்ளது. அதாவது 28.6% குறைந்துள்ளது. இந்த எண்ணங்களுக்கு பின் பிரதீபா போல பல பெண்களின் துணிச்சலான முடிவும், தனது வாழ்க்கை, விருப்பங்கள் மீதான முடிவெடுக்கும் உரிமை இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தின் தலைவர் லட்சுமி விஜயகுமாரின் விளக்கம் புள்ளிவிவரங்கள் பற்றிய தெளிவைத் தருகிறது.

''முன்பை போல சகித்துக் கொண்டு வாழ்வது என்பது தேவை இல்லை என பெண்கள் முடிவெடுப்பது ஒரு காரணம். விவாகரத்து பெற்றுக்கொண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவது என்ற பண்பாட்டுக்கு சமூகத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்துவிட்டது முக்கிய காரணம்,'' என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

திருமணம் தாண்டிய பாலுறவு காரணமாக தீயிட்டுக் கொளுத்தி தற்கொலை செய்யும் முறை முற்றிலுமாக மாறியுள்ளது என்கிறார் அவர்.

திருமணத்தைத் தாண்டிய உறவுகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அடுத்து திருமணத்தை தாண்டிய பாலுறவால் தேவையற்ற கர்ப்பம் ஏற்பட்டால், அதைக் கலைத்துவிடுவது அல்லது கர்ப்பம் தரிக்காத வகையில் பாதுகாப்பான பாலுறவு ஆகியவை பெண்களின் தற்கொலை எண்ணிக்கையை குறைத்துள்ளது என்கிறார்.

''கர்ப்பமாக உள்ளேனா இல்லையா என்று ஒரு பெண் தெரிந்துகொள்ள மருத்துவ சாதனங்கள் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க சிகிச்சைகள் பெரும்பாலான மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன. காலம் முழுவதும் சிரமப்படாமல் தனது வாழ்க்கையின் போக்கை மாற்றுவதற்கு பெண்கள் துணிந்துவிட்டதும் தற்கொலைகளை தடுத்துள்ளது,'' என்றார் லட்சுமி விஜயகுமார்.

 

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''35 வயது மதிக்கத்தக்கப் பெண், கணவரின் குடிப்பழக்கத்தால், தனது அலுவலக நபரின் உறவை நாடினர். விவாகரத்து பெற்று இரண்டாவது வாழ்க்கையை மிக மகிழ்வுடன் நடத்திவ ருகிறார். வாழ்க்கைத் துணை என்ற தேர்வில் தோற்றுப்போனால் தற்கொலை தேவையில்லை என்ற முடிவை எடுத்ததால் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறார் அந்த பெண். அவரின் குடும்பம் அவரை தற்போது ஏற்றுக்கொண்டது,'' என்கிறார் ஹரிஹரன்.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திருமணம் உறவில் பாலுறவு பிரச்சனைகள் ஏற்படும்போதும், அதுவே சுமையாக மாறும்போதும் தற்கொலை செய்துகொள்ள தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திரவெளியை பெண்கள் தேட தொடங்கிவிட்டனர் என்ற மாற்றத்திற்கான புள்ளிதான் இந்த புள்ளிவிவரம் என்கிறார் இந்திய சமூக நல அமைப்புபை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரிஹரன்.

தற்கொலை செய்வதற்கு பதிலாக தன்னம்பிக்கையையுடன் தன் விருப்பத்திற்கு உட்பட நபருடன் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள் பிரதீபா முடிவு எடுத்த அந்த அதிகாலை பொழுது, அதே காரணத்திற்காக மரணித்த பல பெண்களின் ஆன்மாக்களின் மௌனத்தில் இருந்து உருவானது என்று நம்புகிறார்.

http://www.bbc.com/tamil/india-39610467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா யாரும் இருக்கியளா இங்கே புதுசா ஒன்று வந்திருக்கிறது   படங்கள் அட்டகாசம் ,ஆசம் நவீனன் அண்ணtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.