Jump to content

உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது!


Recommended Posts

உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது!

 

 
 
ilamai_3154160f.jpg
 
 
 

நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.

இந்தத் தளம் அப்படி என்ன செய்கிறது? உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதைப் புரியவைக்கிறது. என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் அதுவல்ல. ஒருவரது ஃபேஸ்புக் பயன்பாட்டை இன்னொருவரால் எட்டிப் பார்க்க முடியும் என்பதையே இந்த இணையதளம் உணர்த்துகிறது.

நட்பு வளையம்

ஃபேஸ்புக்கில் நட்பு வளையத்தில் இருப்பவர்கள்தானே நாம் பகிரும் தகவல்களைப் பார்க்க முடியும்? அப்படியிருக்க யாரோ ஒருவரால் எப்படி நம் ஃபேஸ்புக் செயல்பாட்டை அறிய முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள இந்தத் தளத்தை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள். யாரோ ஒரு ஃபேஸ்புக் பயனாளி தொடர்பான எத்தனை தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்ற வியப்பு ஏற்படும். இதற்கு, குறிப்பிட்ட பயனாளியின் ஃபேஸ்புக் முகவரி மட்டும் இருந்தால் போதுமானது.

ஸ்டாக்ஸ்கேன் தளத்தில் ஃபேஸ்புக் பயனாளி முகவரியை டைப் செய்து தேடினால், அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் எவை எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன என்பதை இந்தத் தளம் காண்பிக்கிறது. பொதுவெளியில் இருந்தால், அந்தத் தகவல்கள் வேறு யாரால் வேண்டுமானாலும் பார்க்கப்படலாம் என்று பொருள்.

எந்த வகையான விவரங்கள் எல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஒருவரது ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள், காணொலிகள், கலந்து கொண்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவருடைய வயது, உறவு நிலை, பாலினம் போன்ற தகவல்கள், அவர் மற்ற ஒளிப்படங்களில் ‘டேக்’ செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அறியலாம். அதே போல ஒருவர் இதற்கு முன்னர் எந்தப் படங்கள் அல்லது விஷயங்களை எல்லாம் ‘லைக்’ செய்திருக்கிறார், யாருடைய பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டம் அளித்திருக்கிறார், எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருக்கிறார், உறவினர்கள் யார், உடன் பணியாற்றியவர்கள் யார், எந்தக் குழுக்களில் எல்லாம் உறுப்பினராக உள்ளார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் அறிய முடியும்.

ஃபேஸ்புக் தேடல்

ஃபேஸ்புக் உறுப்பினர் முகவரியைச் சமர்ப்பித்ததுமே, அந்த முகவரி தொடர்பாகத் திரட்டப்பட்ட தகவல்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திக்காட்டுகிறது. ஒவ்வொரு வகையாகத் தேர்வு செய்து ஆய்வு செய்து பார்க்கலாம்.

பொதுவாக ஃபேஸ்புக்கை நண்பர்களும், நண்பர்களின் நண்பர்கள் சூழ்ந்த அறையாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த உணர்வுடன்தான் தகவல்களையும், ஒளிப்படங்களையும் பகிர்ந்துகொள்கிறோம். விவாதிக்கிறோம், உரையாடுகிறோம். நட்பு வளையத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், ஃபேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் எந்த அளவுக்குப் பொதுவெளியில் சிதறிக் கிடக்கின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. இதைத்தான் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையச் சேவை அம்பலப்படுத்துகிறது. ஃபேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் அணுகுவது எளிது என்பதையும் புரிய வைக்கிறது.

ஆனால், இந்தத் தளம் அத்துமீறி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது பிரமாதமாக எதையுமே செய்யவில்லை. ஃபேஸ்புக் தகவல்களில் பொதுவெளியில் காணக் கூடியவற்றை அது அடையாளம் காட்டுகிறது, அவ்வளவே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த அடையாளம் காட்டுதலையும் ஃபேஸ்புக் வழங்கும் தேடல் வசதி கொண்டே சாத்தியமாக்குகிறது.

அதாவது இந்தத் தேடலுக்கு இந்தத் தளம் கண்டிப்பாகத் தேவை என்றில்லை. 2013-ம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகம் செய்த‌ ‘கிராஃப் சர்ச்’ தேடல் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் இது போன்ற தகவல்களைத் தேட முடியும். அப்படித் தேடக்கூடிய தகவல்களை எல்லாம் ஒரே இடத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாக அணுகக்கூடிய வகையில் ஸ்டாக்ஸ்கேன் அளிக்கிறது என்பதே அதன் சிறப்பு.

நல்லெண்ண ஹேக்க‌ர்

ஃபேஸ்புக் பயன்பாட்டின் தனியுரிமை அம்சம் தொடர்பான‌ விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் தளம் முயற்சிக்கிறது. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த ஆன்தி த க்யூக்லேர் எனும் நல்லெண்ண ஹேக்க‌ர் இந்தச் சேவையை உருவாக்கியிருக்கிறார். கிராஃப் சர்ச் தேடலின் வீச்சும், பிரச்சினையும் பரவலாக அறியப்படாமல் இருப்பதால், சாதாரண இணையவாசிகளும் இதை அறிந்துகொள்ளும் வகையில் இந்தச் சேவையை உருவாக்கியதாக ‘மதர்போர்ட்’ இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

பெரும்பாலான சாமானியர்களுக்குத் தாங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்பவை பற்றிய புரிந்துணர்வு இல்லாத நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ‘யூஸர் ஃப்ரெண்ட்லி’யாக‌ இந்தச் சேவையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராஃப் சர்ச் அறிமுகமானபோது அதன் அந்தரங்க மீறல் தன்மைக்காகப் பெரும் சர்ச்சை உண்டானது. பின்னர் ஃபேஸ்புக் இந்தத் தேடல் சேவையை அதிகம் முன்னிறுத்துவதில்லை. மற்ற தேடல் அம்சங்களிலேயே கவனம் செலுத்துகிறது. எனினும் விஷயம் அறிந்தவர்கள் கிராஃப் சர்ச் தேடலைப் பயன்படுத்தி, தகவல் வேட்டை நடத்திக்கொள்ளலாம். இதைத்தான் ஸ்டாக்ஸ்கேன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்தச் சேவை ஃபேஸ்புக்கின் தனியுரிமைக் கொள்கையை மீறவில்லை என்றும், பொதுவெளியில் பார்க்கக்கூடிய, ஆனால் மறைந்திருக்கும் தகவல்களை மட்டுமே காட்டுவதாகவும் தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, ஃபேஸ்புக் பயனாளி, தான் பகிரும் தகவல்களை நண்பர்கள் பார்வைக்கு மட்டும் என அமைத்திருந்தார் என்றால், அதற்குள் யாரும் எட்டிப் பார்க்க முடியாது. ஆனால் எப்படிப் பகிர்ந்துகொள்கிறோம் என அறியாமல் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டவர்களின் தகவலை எல்லோரும் பார்க்க முடியும்.

நீங்களும் உஷார்

நீங்களும்கூட இந்தத் தளத்தில் உங்கள் ஃபேஸ்புக் முகவரியை டைப் செய்து பார்த்தால், உங்கள் ஃபேஸ்புக் விவரங்களில் எத்தகைய தகவல்கள் மற்றவர் பார்வைக்குக் கடை பரப்பி வைக்கப்படுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதிகத் தகவல்கள் இல்லை எனில், நீங்கள் தனியுரிமை அமைப்பை நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள் எனத் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். மாறாக, உங்களைத் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அல்லது சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல்கள் எல்லாம் தேடலில் கிடைக்கக் கூடியதாக இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கான தனியுரிமைப் பாதுகாப்பு போதுமானதல்ல என உணர வேண்டும்.

உடனடியாக, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி அமைப்பை ஆய்வு செய்து, எவற்றை எல்லாம் நண்பர்கள் பார்க்கலாம், எவை எல்லாம் பொது வெளியில் தோன்றலாம் என்பன போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஒவ்வொரு முறை நிலைத்தகவல் பதியும்போது அல்லது பின்னூட்டம் அளிக்கும்போதும்கூட இதை நினைவில் கொள்வது இன்னும் நல்லது. இதற்கான இணைய

முகவரி: https://www.facebook.com/help/443357099140264 இணையதள முகவரி: https://www.stalkscan.com/

http://tamil.thehindu.com/society/lifestyle/இளமை-நெட்-உஷார்-உங்கள்-பேஸ்புக்-கண்காணிக்கப்படுகிறது/article9638083.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.