Jump to content

''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive


Recommended Posts

''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive

 
 

‘டாப் சின்னத்திரை ஸ்டார்கள்’ என்று லிஸ்ட் போட்டால், தவிர்க்கவே முடியாத நபர்... டிடி!  சர்ச்சைகளைத் தாண்டி, திவ்யதர்ஷினியிடம் பேச எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 

'அன்புடன் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மூலம் நிதிஉதவி பெற்று, தான்  படிக்க வைக்கிற மாணவரை அறிமுகப்படுத்தினார் டிடி. அதே மாணவரின் தம்பியைப் படிக்க வைப்பதும் டிடிதான். வாரம் ஒருமுறை ஆதரவற்ற முதியோர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வருவதும் டிடியின் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் கேட்டால் அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார் டிடி. ''இதையெல்லாம் வெளியில சொல்லிக்கணுமா? வேணாமே ப்ளீஸ்...'' என்கிற கோரிக்கையுடன் பேட்டிக்குத் தயாரானார்.

டிடி

''எக்ஸாம் ரிசல்ட்டுக்குக் கூட இப்படிப் பயந்திருக்க மாட்டேன். 'அன்புடன் டிடி' ஒளிபரப்பாகிற அன்னைக்கு, செம டென்ஷன். புரோகிராமைப் பார்க்காம தூங்கிடலாமானுகூட நினைச்சேன். அப்புறம் மனசு கேட்காம பார்க்க ஆரம்பிச்சேன். 'நல்லாத்தான் பண்ணியிருக்கேன்'னு தோணிச்சு. தெரிஞ்ச, தெரியாதவங்க பலரிடம் இருந்தும் 'ஷோ சூப்பரா இருக்கு'னு பாராட்டுகள் வந்தது. அப்புறம்தான் நிம்மதியானேன்'' டிரேட்மார்க் சிரிப்புடன் ஆரம்பமாகிறது டிடியின் பேச்சு. 

''தனிப்பட்ட முறையில என்கிட்ட நல்லாப் பேசுற பிரபலங்களை 'என் ஷோவுக்கு வாங்க'னு நான் கூப்பிடவே மாட்டேன். அந்த நட்பையோ செல்வாக்கையோ பயன்படுத்தி யாரையும் கூப்பிடவும் நினைச்சதில்லை. அதனாலேயே என் ஷோவுக்கு வரும் பிரபலங்களுக்கு என் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. என் ஷோவுக்கு வரும் கெஸ்ட், 'நீ என்ன வேணா கேளும்மா'னு சொல்வாங்க.  அந்த நம்பிக்கையைக் காப்பாத்தவேண்டிய பொறுப்பு என்கிட்ட இருக்கு. என் வீட்டுக்கு ஒருத்தங்க வந்தா நான் எப்படிக் கவனிச்சுப்பேனோ, அதே அக்கறை ஷோவுல இருக்கும். என் ஷோவைப் பார்த்துட்டு எத்தனையோ பேர், 'உங்களைப் பார்த்துட்டுதான் எப்படி இன்டர்வியூ பண்ணணும்ங்கிறதையே கத்துக்கிட்டோம்'னு சொல்றவங்க இருக்காங்க. என்னையும் என் வேலைகளையும் நிறைய பேர் கவனிச்சிட்டிருக்காங்க... சந்தோஷமா இருக்கு!'' என்றவரிடம், சில கேள்விகள். 

டிடி

''சிரித்துக்கொண்டே இருப்பதும் உடன் இருப்பவர்களைக் கலகலப்பாக்குவதும் டிடிக்கு எப்படிக் கைவந்தது?''

''அது இயல்பா எனக்குள்ள வளர்ந்த விஷயம்னுதான் நினைக்கிறேன். நான் இருக்கிற இடத்துல ரொம்ப இறுக்கமான சூழல் நிலவறதை நான் அனுமதிக்க மாட்டேன். சின்ன வயசுலேருந்தே அது எனக்குப் பிடிக்காது. என்னைக் கிண்டல் பண்ணியாவது அந்தச் சூழலை லேசாக்கிடுவேன். பிளான் பண்ணி வர்ற விஷயமில்லை காமெடி.''

'' 'பவர் பாண்டி'யில நடிச்சிருக்கீங்க. இயக்குநர் தனுஷ் என்ன சொல்றார்?"

''என்னை நடிக்கச் சொல்லும்போதே 'பொண்ணு நிறைய டேக் எடுக்கப்போகுது... குழந்தைக்கு ஒழுங்கா நடிப்பு சொல்லித்தரணும்'னு நினைச்சிருப்பார். ஆனா நான் டேக் வாங்காம முடிச்சிட்டேன். என்கூட அந்த சீன்ல இருந்தவங்க ரேவதி மேடம். அவங்களுக்கு நான் அட்வைஸ் பண்ற மாதிரியான சீன். 'ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க.. ஈஸியா பண்ணிட்டீங்க'னு  தனுஷ் சார் அடுத்த நாளே ட்வீட் பண்ணியிருந்தார். தனுஷ் சார் மாதிரி ஒருத்தர்கிட்டருந்து இப்படியொரு வாய்ப்பு வரும்போது வேணாம்னு சொல்ல யாருக்குத்தான் மனசு வரும்?''

டிடி

''உங்களுக்கு எதிரான விமர்சனங்கள்?"

''வருத்தமாதான் இருக்கும். ஆனா வருத்தப்படுறது வேற டிபார்ட்மென்ட்டுனு நினைச்சுக்கிட்டு வேலையைப் பார்க்கப் போயிடுவேன். வருத்தமே படமாட்டியானு கேட்டீங்கன்னா, எல்லாத்துக்கும் வருத்தப்படுவேன்னு சொல்வேன். வருத்தப்படுறதைவிட வேலை செய்றது முக்கியம். தவிர, என்னைக் காயப்படுத்துற விஷயங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். இந்த விஷயத்துக்கு அரை மணிநேரம் சோகமா இருப்போம். இந்த விஷயத்துக்கு ரெண்டு நாள் சோகமா இருப்போம்னு எனக்கு நானே டைம் ஃபிக்ஸ் பண்ணி, அழுது முடிச்சிடுவேன். பிறகு, அதுல இருந்து வெளியே வந்துடுவேன்!''

''சுச்சிலீக்ஸ்...?"

'தயவுசெஞ்சு அதைப்பத்தி பேசவேணாமே ப்ளீஸ்!''

டிவி-யில் மீண்டும் டிடி. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் `அன்புடன் டிடி' நிகழ்ச்சிக்கு லைக்ஸ் குவிந்ததில் ஸ்வீட்டிக்கு செம சந்தோஷம்!

``சின்னத்திரைக்குள் டிடி வந்து 20 வருஷங்கள் ஆகப்போகுதாமே?''

``ஆமாம். 13 வயசுல நான் டிவி-க்குள்ள வந்தேன்.  அப்ப பெரிய ஆளா வரணும்கிற எண்ணமெல்லாம் இல்லை. `சொல்லிக்கொடுத்ததைத் தப்பு இல்லாம சொல்லிட்டா, வீட்டுக்குப் போயிடலாம்... ஜாலி!'ங்கிற எண்ணம் மட்டும்தான் இருந்தது. அப்புறம் ஒருகட்டத்துல வேலை பார்க்கணும், சம்பாதிச்சு வீட்டுக்குக் காசு கொடுக்கணும்னு தீவிரமா இருந்தேன். முழு அர்ப்பணிப்போடு உழைச்சேன்.

இப்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சா, எத்தனை மணிக்கு முடியும்னு தெரியாது. ஆனா, பத்து நிமிஷம்கூட ஷூட்டிங்குக்கு என்னால் லேட்டா போக முடியாது. `இப்பவுமா நீ சீக்கிரம் கிளம்பணும்?'னு என் கணவரும் அக்காவும் கேட்பாங்க. எல்லாருக்கும் முன்னாடி முதல் ஆளா நான்தான் ஸ்பாட்ல இருப்பேன்.

என் வேலைதான் என் முதல் காதல்!''

p68a.jpg

``உங்கள் ரோல்மாடல் யார்... ஒரு தொகுப்பாளினியா நீங்க இன்னும் மிஸ் பண்றதா நினைக்கிறது எதை?''

``என் அக்கா டைம்ல இருந்த எல்லா தொகுப்பாளர்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் அக்கா, ஜேம்ஸ் வசந்தன் சார், உமா பத்மநாபன் இவங்க எல்லாரும் என்னோட ஃபேவரிட்ஸ். அவங்க பேச்சுல உள்ள அந்த அழகுத் தமிழ் என்கிட்ட இல்லையேன்னு அடிக்கடி நினைப்பேன்.''

`` `நளதமயந்தி' படத்துக்குப் பிறகு, மீண்டும் சினிமா. `பவர் பாண்டி' அனுபவம் எப்படியிருந்தது?''

``ஒரே ஒரு சீன்தான். ஆனா, அதுல நான்தான் எல்லாம்; என் ஷோ மாதிரி. அதுவும் தனுஷ் சார் மாதிரி ஒருத்தர்கிட்டயிருந்து இப்படியொரு வாய்ப்பு வரும்போது `வேணாம்'னு சொல்ல யாருக்குத்தான் மனசு வரும்? படத்துல நான் மிகவும் முக்கியமான ஒரு கருத்து சொல்வேன். அந்தக் கருத்து எனக்கும் தனிப்பட்டமுறையில் ரொம்பவே பிடிக்கும். படத்துல நான் சொல்லியிருக்கும் அந்தக் கருத்து, குழந்தைங்க, பெற்றோர்னு எல்லாருக்குமானது.''

`` `பவர் பாண்டி'க்குப் பிறகு, டிடி-யை முழுநேர நடிகையாகப் பார்க்கலாமா?''

``நல்ல வாய்ப்பு வந்தா நான் ரெடி. யார்கூட வேலை பண்றோம், என்ன மாதிரியான கதைங்கிறதைப் பொறுத்து முடிவு பண்ண வேண்டியதுதான்.''

``டிடி என்றால் கலாய்... கலகலப்பு. இதுதான் எல்லோருக்கும் தெரிந்தது. உண்மையிலேயே, டிடி வீட்டில் எப்படி?''

``நான் ரொம்ப ரிசர்வ்டு. எதையும் வெளியே சொல்லாமல் மனசுக்குள்ளேயே வெச்சுக்குவேன். அம்மா, கணவர்னு எல்லாரும் என்னைப் பற்றிச் சொல்ற ஒரு விஷயம், `அவளுக்கு அழுத்தம் அதிகம்'கிறதுதான். மனசுல உள்ளதைச் சொல்லிடுறது நல்லதுதான். ஆனா, நான் சொல்ல மாட்டேன். அது என் வழக்கம்.

103 டிகிரி காய்ச்சல் அடிச்சாக்கூட டேக் முடியுற வரைக்கும் வெளியே அதைக் காட்டிக்க மாட்டேன்.

`நீ இப்படி எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வெச்சுக்கிறது சரியில்லை'னு நிறையப் பேர் சொல்வாங்க. எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவுனு சொன்னா நம்புவீங்களா? ஆனா, அதுதான் உண்மை.''

``உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை, கிசுகிசுக்களை எப்படி எடுத்துப்பீங்க?''

``நான் யாரையுமே காயப்படுத்துற மாதிரி பேச மாட்டேன். ஆனா, என்னைப் பற்றி வரும் ஒவ்வொரு விமர்சனமும் என்னைக் காயப்படுத்தும். ஆனால் என்ன செய்ய... இந்த உலகம் முழுக்க முழுக்க விமர்சகர்களால்தானே நிறைஞ்சிருக்கு?''

http://www.vikatan.com/cinema/tamil-cinema/television/86406-anchor-dd-to-fix-a-time-for-crying.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.