Jump to content

தமிழ் அகராதி சொல்லில் கவிதைகள்


Recommended Posts

அ ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
அ ருகில் வரவைப்பான்......!

அ ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
அ ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!

அ ற்புதங்கள் என்பது ....
அ திசயம் செய்வதல்ல ...
அ ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் வந்ததால் மெய் மறந்தேன், உயிர்மெய் யில் கவிதை வந்தால் உயிர் தரிப்பேன்....இல்லையேல் மீதமுண்டு ஆய்தம் ....! tw_blush:

Link to comment
Share on other sites

ஆதவன் துயில் எழமுன் ....
ஆராவாரத்துடன் எழுந்த .....
ஆருயிர் நண்பர்களே ....
ஆண்டவன் கிருபையால் .....
ஆசீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

ஆனந்தம் பொங்கிட ....
ஆத்மா திருப்தியுடன் ....
ஆரம்பிப்போம் பணிகளை ....
ஆயிரம் பணிவந்தாலும் ....
ஆர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ஆரம்பிக்கும் வாழ்க்கை ...
ஆலயத்துக்கு சமனாகட்டும்....
ஆண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
ஆனந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ஆருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

ஆதியும் அந்தமும் இல்லாத ....
ஆண்டவனை தினமும் தொழு ....
ஆயிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ஆருயிர் குடும்பத்துடன் ....
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.4.2017 at 5:34 AM, கவிப்புயல் இனியவன் said:

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

- கவிப்புயல் இனியவன் -

 

1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

- கவிப்புயல் இனியவன் -

தமிழ் அகர வரிசை கவிதைகள்...  நன்றாக உள்ளது கவிப்புயல் இனியவன். :)

Link to comment
Share on other sites

On ‎15‎.‎04‎.‎2017 at 5:34 AM, கவிப்புயல் இனியவன் said:

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

ஒவ்வொருவரும் மனப்பாடம் செய்து மாலையில் மறக்கக்கூடாத வரிகள். :unsure: :rolleyes:

Link to comment
Share on other sites

இனிய 
இனிமையான 
இன்பமான 
இல்லத்தில் 
இறையருள்மிக்க 
இல்லறவாழ்க்கை 
இன்றும் என்றும் 
இறையருளால் 
இடையூறுகள் நீங்கி 
இன்பமே 
இடைவிடாமல் கிடைக்க 
இந்தநாள் மட்டுமல்ல 
இதயத்துடிப்பு உள்ளவரை 
இன்பலோகத்தில் வாழ 
இந்த 
இனியவனில் 
இதயம் கனிந்த 
இனிய வணக்கம் 
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள் 
இறைவன் விரும்புவதும் 
இவ்வுலகில் எல்லோரும் 
இன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கவிப்புயல் இனியவன் said:

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 53 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து பச்சைப்புள்ளிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Link to comment
Share on other sites

உள்ளம் தூய்மையாக இருப்பின்... 
உள்ளிருக்கும் மனது இறைவன்......!
உள்ளத்தூய்மை என்பது ....
உயிரினங்கள் அனைத்திலும் ....
உள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

உறவுகளே எனது இனிமையான ....
உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
உழைப்பை உயிராய் மதிப்போம் ....
உற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
உற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

உள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
உள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
உண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
உண்மை அன்பை உதறி விடாதே .....
உள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

உள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
உலகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
உள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
உள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
உயிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்...
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
ஊனம் என்பது உடலில் இல்லை .....
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

எழுந்திரு மனிதா ....
எழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
என்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
எழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
எட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

எவன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
எவன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
எவனல்ல அவன் - இறைவன் .....!
எல்லோர் இதயத்திலும் இருக்கும் 
எல்லையற்றவன் அவன் ....!!!

எங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
எப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
எதற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
எந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
எல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

எதிரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
எடுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
எல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
எடுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
எல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ஏன் என்று கேள்வி கேள் ....
ஏளனமாக இருந்துவிடாதே ....
ஏராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ஏன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ஏளனமாக இருந்தமையே .....!

ஏகாதிபத்தியம் பல தோன்றியதால் ....
ஏழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ஏற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
ஏகாதிபத்திய பொருளாதாரம் ......!

ஏணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
ஏறிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
ஏகலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
ஏகன் அடியே போற்றியேன்று சரணடை ...
ஏழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!

ஏர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
ஏடு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
ஏமாற்றுபவனை காட்டிலும் ....
ஏமாறுபவனே புத்தி அற்றவன் .....
ஏமாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை  நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்  

Link to comment
Share on other sites

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ......!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிவோம்....
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும்.......
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்   

Link to comment
Share on other sites

ஓகோ என்று வாழ ஆசைப்படாதே .....
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ஓரம்போய் மக்களை விற்காதீர் .....
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு....
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ....
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்    

Link to comment
Share on other sites

கண்ணில் காந்த சக்தியுடன் ....
கடமையை மூச்சாய் கொண்டு....
கதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
கண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

கட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
கடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
கண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
கண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

கரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
கதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........
கற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
கல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

கம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
கண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
கருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
கடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.4.2017 at 5:28 PM, கவிப்புயல் இனியவன் said:

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிவோம்....

ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்   

தமிழினத்தின் நிலைமையை.... அழகாக சொல்லிய வரிகள், மிகவும் பிடித்திருந்தது.
அது 100 வீதம் உண்மையானது,  கவிப்புயல்இனியவன். 

Link to comment
Share on other sites

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் 
இயற்கை கவிதை 

Link to comment
Share on other sites

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை  பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பெயர்ச்சியை சாட்டி வாழாதே ....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன துணிச்சல் புயல்.... 246 எழுத்துக்கும் கவிதையா....! இடையில் "ங" என்றொரு எழுத்தும் இருக்கு மறந்திட்டீங்களா.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!

^^^

அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!

^^^

அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன் மனைவிக்கு கேடயம் ....!

கேட்பார் சொல் கேளாதே 
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி 
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன் மனைவிக்கு கேடயம் ....!

கேட்பார் சொல் கேளாதே 
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி 
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100%  அல்ல). இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள்.
    • ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் . https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml @goshan_che சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு நேரடியாகவரும் மிளகாய் தூள் மற்றும் கோப்பி தூள் என்பவற்றில் Aflatoxin மற்றும் Pesticide residues என்பவற்றின் நிலை என்ன?  
    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.