Jump to content

தமிழ் அகராதி சொல்லில் கவிதைகள்


Recommended Posts

அ ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
அ ருகில் வரவைப்பான்......!

அ ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
அ ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!

அ ற்புதங்கள் என்பது ....
அ திசயம் செய்வதல்ல ...
அ ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் வந்ததால் மெய் மறந்தேன், உயிர்மெய் யில் கவிதை வந்தால் உயிர் தரிப்பேன்....இல்லையேல் மீதமுண்டு ஆய்தம் ....! tw_blush:

Link to comment
Share on other sites

ஆதவன் துயில் எழமுன் ....
ஆராவாரத்துடன் எழுந்த .....
ஆருயிர் நண்பர்களே ....
ஆண்டவன் கிருபையால் .....
ஆசீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

ஆனந்தம் பொங்கிட ....
ஆத்மா திருப்தியுடன் ....
ஆரம்பிப்போம் பணிகளை ....
ஆயிரம் பணிவந்தாலும் ....
ஆர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ஆரம்பிக்கும் வாழ்க்கை ...
ஆலயத்துக்கு சமனாகட்டும்....
ஆண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
ஆனந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ஆருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

ஆதியும் அந்தமும் இல்லாத ....
ஆண்டவனை தினமும் தொழு ....
ஆயிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ஆருயிர் குடும்பத்துடன் ....
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.4.2017 at 5:34 AM, கவிப்புயல் இனியவன் said:

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

- கவிப்புயல் இனியவன் -

 

1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

- கவிப்புயல் இனியவன் -

தமிழ் அகர வரிசை கவிதைகள்...  நன்றாக உள்ளது கவிப்புயல் இனியவன். :)

Link to comment
Share on other sites

On ‎15‎.‎04‎.‎2017 at 5:34 AM, கவிப்புயல் இனியவன் said:

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

ஒவ்வொருவரும் மனப்பாடம் செய்து மாலையில் மறக்கக்கூடாத வரிகள். :unsure: :rolleyes:

Link to comment
Share on other sites

இனிய 
இனிமையான 
இன்பமான 
இல்லத்தில் 
இறையருள்மிக்க 
இல்லறவாழ்க்கை 
இன்றும் என்றும் 
இறையருளால் 
இடையூறுகள் நீங்கி 
இன்பமே 
இடைவிடாமல் கிடைக்க 
இந்தநாள் மட்டுமல்ல 
இதயத்துடிப்பு உள்ளவரை 
இன்பலோகத்தில் வாழ 
இந்த 
இனியவனில் 
இதயம் கனிந்த 
இனிய வணக்கம் 
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள் 
இறைவன் விரும்புவதும் 
இவ்வுலகில் எல்லோரும் 
இன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கவிப்புயல் இனியவன் said:

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 53 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து பச்சைப்புள்ளிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Link to comment
Share on other sites

உள்ளம் தூய்மையாக இருப்பின்... 
உள்ளிருக்கும் மனது இறைவன்......!
உள்ளத்தூய்மை என்பது ....
உயிரினங்கள் அனைத்திலும் ....
உள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

உறவுகளே எனது இனிமையான ....
உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
உழைப்பை உயிராய் மதிப்போம் ....
உற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
உற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

உள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
உள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
உண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
உண்மை அன்பை உதறி விடாதே .....
உள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

உள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
உலகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
உள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
உள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
உயிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்...
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
ஊனம் என்பது உடலில் இல்லை .....
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

எழுந்திரு மனிதா ....
எழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
என்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
எழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
எட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

எவன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
எவன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
எவனல்ல அவன் - இறைவன் .....!
எல்லோர் இதயத்திலும் இருக்கும் 
எல்லையற்றவன் அவன் ....!!!

எங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
எப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
எதற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
எந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
எல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

எதிரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
எடுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
எல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
எடுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
எல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ஏன் என்று கேள்வி கேள் ....
ஏளனமாக இருந்துவிடாதே ....
ஏராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ஏன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ஏளனமாக இருந்தமையே .....!

ஏகாதிபத்தியம் பல தோன்றியதால் ....
ஏழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ஏற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
ஏகாதிபத்திய பொருளாதாரம் ......!

ஏணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
ஏறிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
ஏகலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
ஏகன் அடியே போற்றியேன்று சரணடை ...
ஏழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!

ஏர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
ஏடு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
ஏமாற்றுபவனை காட்டிலும் ....
ஏமாறுபவனே புத்தி அற்றவன் .....
ஏமாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை  நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்  

Link to comment
Share on other sites

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ......!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிவோம்....
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும்.......
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்   

Link to comment
Share on other sites

ஓகோ என்று வாழ ஆசைப்படாதே .....
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ஓரம்போய் மக்களை விற்காதீர் .....
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு....
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ....
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்    

Link to comment
Share on other sites

கண்ணில் காந்த சக்தியுடன் ....
கடமையை மூச்சாய் கொண்டு....
கதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
கண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

கட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
கடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
கண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
கண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

கரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
கதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........
கற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
கல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

கம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
கண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
கருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
கடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.4.2017 at 5:28 PM, கவிப்புயல் இனியவன் said:

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிவோம்....

ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்   

தமிழினத்தின் நிலைமையை.... அழகாக சொல்லிய வரிகள், மிகவும் பிடித்திருந்தது.
அது 100 வீதம் உண்மையானது,  கவிப்புயல்இனியவன். 

Link to comment
Share on other sites

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் 
இயற்கை கவிதை 

Link to comment
Share on other sites

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை  பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பெயர்ச்சியை சாட்டி வாழாதே ....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன துணிச்சல் புயல்.... 246 எழுத்துக்கும் கவிதையா....! இடையில் "ங" என்றொரு எழுத்தும் இருக்கு மறந்திட்டீங்களா.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!

^^^

அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!

^^^

அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன் மனைவிக்கு கேடயம் ....!

கேட்பார் சொல் கேளாதே 
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி 
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன் மனைவிக்கு கேடயம் ....!

கேட்பார் சொல் கேளாதே 
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி 
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.