Jump to content

அற்புதம் - மஹாத்மன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம்

maha 5

அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும்.

மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்வோரிடம் விசேஷக் கூட்டத்தைக் குறித்தான கைப்பிரதிகள் கட்டுக்கட்டாக கொடுக்கப்படும். இவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் கம்பங்களுக்கும் பக்கத்துப் பட்டணங்கள் வரையிலும் வீடு வீடாகச்சென்று கொடுத்துவிட்டு வருவர். மேலும் கூட்டத்தைக் குறித்தான பத்திரிக்கை விளம்பரங்கள் ஞாயிற்றுப் பதிப்பில் வெளிவர ஆவன செய்யப்படும்.

சபையின் தூண்களாக இருக்கும் ஆத்தும ஆதாய வீரர்களும் ஜெப வீரர்களும் வீராங்கனைகளும் முழங்காலிட்டு, தொடர் சங்கிலி ஜெபத்தில் கூட்டத்திற்காக எழுப்புதல் ஆவியில் துதிமகிமையோடு மன்றாடுவர். இந்தக் கூட்டத்திற்கு பொறுப்பேற்றவனாய் நான் இருந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஜெப அறை திறக்கப்படும். நான்தான் முதல் ஆளாக இருக்கவேண்டும். ஆனால், எனக்கு முன்னதாக சிஸ்டர் கேரன் ஹெப்பியூச் வந்துவிடுவார். வரிசையாக சிஸ்டர் ரூத், பிரதர் சேம், பிரதர் மைக்கல், பிரதர் அன்பழகன், சிஸ்டர் ரேச்சல், சிஸ்டர் லில்லி வந்துவிடுவார்கள்.

விசேஷ கூட்டத்திற்கான அந்தக் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்க நெருங்க எங்களுக்குள் பதைபதைப்பு உண்டானாலும் அவ்வப்போது மூப்பர்களும் போதகரும் வந்து ஆவிக்குள் அனல்கொள்ளச் செய்தனர். ஒரு பெரிய ஆத்தும ஆதாய அறுவடையைச் செய்திட திருவிழாக் கொண்டாட்டத்தின் மலர்ச்சியோடு அந்நாளை எதிர்கொண்டோம்.

வியாழன் இரவு:

தமிழ்நாட்டிலிருந்து வருகைதரு சிறப்புப் பிரசங்கியார் ஜீவானந்தம் மூப்பர்களின் துணையோடு பலத்த பாதுகாப்பில் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அறைக்குள் போதகர் மட்டுமே இருக்க அனுமதி. மூப்பர்கள் ஒருவருக்கும் கூட பிரசங்கியாரிடம் பேசுவதற்கு அனுமதியில்லை.

அதிகாலை ஜெபக்குழு, மதிய ஜெபக்குழு மற்றும் மாலை ஜெபக்குழு ஆகிய மொத்த ஜெபவீரர்களும் ஒன்றுகூடி முன்னிரவு வரை ஜெபித்தனர்.

வெள்ளி மாலை:

மாலை நான்குக்கெல்லாம் ஜெபக்குழுக்களை ஏற்றிச்செல்ல மூடுந்து வந்தது. பிரிவு பிரிவாக ஏறிக்கொண்டோம். முதலில் நாங்கள் பயணப்பட்டோம். பாதி வழியிலேயே கனமழை பாதையை மறைத்தது. உற்சாகத்தோடு பாடல்களைப் பாடினோம். கைகள் தட்டி ஓசை எழுப்பினோம். “. . . யோர்தானைக் கடந்து வந்தோம் எங்கள் யேசுவின் பெலனடைந்தோம்.”

நெடுஞ்சாலையை விட்டுக் கீழிறங்கும் சாலையில் போகும்போது வாகனம் சறுக்கியது. ஓட்டுநரையும் மீறி வாகனத்தின் முன்னம்பகுதி சிறுகால்வாயில் மாட்டிக்கொண்டது. என்ன முறுக்கிப் பார்த்தும் முடியவில்லை, வாகனத்தின் பின்பகுதி மேலெழுந்து ஆட்டங்கண்டது. பெண்கள் அலறிக் கத்தினர். கொஞ்சம் வாட்டசாட்டமான உடலைக் கொண்ட பிரதர் சேம் மூடுந்தின் கதவைத்திறந்து ஆண்களை வெளியேறுமாறு பணிக்க, எது எதுவோ பிடித்து வெளியேறினோம்.

கனமழையில் புயலடித்தது.

வாகனத்தின் முன்புறத்தை ஆண்கள் சேர்ந்து தூக்கினோம். முடியவில்லை. ஓட்டுநரையும் வெளியேற்றி, ஓட்டத்தெரிந்த சிஸ்டர் லில்லியை உட்காரச் சொன்னோம். மற்ற பெண்களும் தங்கள் கைப்பைகளை பத்திரப்படுத்தி வெளியே குதித்து வாகனத்தைத் தூக்கியெடுக்க உதவினர். லில்லியைத் தவிர மற்ற யாவரும் தொப்பலாய் நனைந்த உடலோடு வாகனத்தில் பயணப்பட்டோம்.

பத்தே நிமிடத்தில் ஸ்டேடியத்தை அடைந்தோம். பின்வாசல் வழியாக நுழைந்து கழிப்பறையில் எங்கள் உடைகளைக் கழற்றிப் பிழிந்து மறுபடி உடுத்திக்கொண்டோம்.

எங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேடையின் வலதுபுற மூலைத் திரைமறைவில் தொடர் சங்கிலியாக கைகோர்த்து சத்தமின்றி ஜெபித்தோம். மேடையில் துதி ஆராதனைக் குழுவினர், வருகையாளர்களின் இருக்கைகள் பல காலியாகக் கிடந்தன.

மணி ஆறரைக்கெல்லாம் மழை நின்று போயிற்று. ஏழரைக்கெல்லாம் இருக்கைகளில் மனித உருவங்கள். வாத்திய இசைக்கருவிகளின் முழக்கங்கள். வெவ்வேறான எக்காளங்களின் தொனி. அதிர்ந்தது இடம்.

வருகையாளர்களில் பெரும்பாலானோர் பூவும் பொட்டுமாக விதவிதமான சேலைகளில் வண்ணமயமாக, குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர்.

பிரசங்கியாரின் நேரம் வந்தது. கையில் விவிலியத்தைப் பிடித்துக்கொண்டு பிரசங்க பீடத்தில் நின்றார். ஜெபித்துவிட்டு பிரசங்கித்தார். கணீரென்ற குரல். தடையில்லாத ஆற்று வெள்ளம் போல வார்த்தைகள் சாரை சாரையாக வெளிப்பட்டன. இருபது நிமிடத்திற்குள் முடித்துக்கொண்டு திடீரென அதட்டும் குரலில் கட்டளைகளைப் பிறப்பித்தார்.

“இங்குள்ள அத்தனை அசுத்த ஆவிகளுக்கும் ஆண்டவரின் நாமத்தில் கட்டளையிடுகிறேன். இங்கே இந்தச் சிலுவைக்கு முன்பாக வரிசையாக நின்று மண்டியிட வேண்டும்.”

மேடை நடுவே இருந்த சிலுவைக்கு முன்பாக வருகையாளர் பகுதியிலிருந்து ஆணும் பெண்ணுமாக அரற்றிக்கொண்டும் கத்திக்கொண்டும் வீரிட்டுக்கொண்டும் நடந்தோடி வந்து வரிசையில் நின்றனர். ஒருவர் குரங்குத் தாவலாக தாவித்தாவி வந்து யாரிடமோ எதனையோ கேட்டுவிட்டு வரிசையில் நின்றார். அவருடைய கைகள் மட்டும் எதையோ கேட்டுக்கொண்டே இருந்தன.

வரிசையில் நின்ற பெண்கள் ஆடிக்கொண்டே தங்கள் கூந்தலைக் கலைத்து பூச்சரத்தை பிய்த்துக் கொண்டிருந்தனர். ஆண் ஒருவர் சுருட்டு இல்லாமலேயே அந்த பாவனையில் ஊதிக்கொண்டிருந்தார். வரிசையில் குத்துமதிப்பாக முப்பது பேர் இருந்தார்கள்.

maha 4

“இதோ தேவனுடைய மகிமையைக் காண்கிறீர்கள்…” என்று சொல்லிக்கொண்டே ஒலிப்பெருக்கியைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டே கீழிறங்கி வந்து வரிசையில் நின்றவர்களில் முதலாமவரின் நெற்றி நடுப்பகுதியில் தன் விரல்களை வைத்து “இந்த உடலை விட்டு வெளியேறு என்று ஆண்டவரின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன்,” என்று சொன்னதும் அவர் பொத்தெனத் தரையில் விழ, அடுத்த நபரிடம் செல்கிறார். இப்படியே வரிசையாய் யாவரும் பொத்துப் பொத்தென விழுந்தார்கள். ஆயத்தமாய் இருந்த ஊழியக்காரிகளான சபையின் பெண் பிரிவினர் விழுந்த பெண்ணுடல்களின் இடுப்புக்குக் கீழே போர்வையைப் போர்த்தினர். விழுந்தவர்கள் மயக்கமடைந்திருந்தனர்.

வரிசை முடிந்ததும் நான்குபேர் சூழ பிரசங்கியார் அழைத்துச் செல்லப்பட்டார். மயக்கத்திலிருந்து தெளிந்தவர்களிடம் மூப்பர்கள் ஆண் என்றால் ஆணும் பெண் என்றால் பெண்ணுமாகச் சென்று சமாதானப்படுத்தி ஆண்டவரைக் குறித்து அறிவித்தனர். இன்றைய கடமை முடிந்ததென நாங்கள் மூடுந்தில் வீடு வந்து சேர்ந்தோம்.

சனி மாலை:

மாலைநேரத்து மஞ்சள் வெயில் அதிகமானோரைக் கூட்டத்திற்கு வரவழைத்தது. காலியில்லாத இருக்கைகள். இருக்கைகளைத் தேடித்தேடி அமர்ந்திடப் பரபரத்தனர்.

பிரசங்கியாரின் நேரம் வந்தது. பிரசங்கம் முடிந்ததும், “நேற்று இங்கே வரிசையாய் நின்ற அத்தனை பேரும் வாருங்கள்,” என்றார். சிலர் தாமாக முன்வந்தனர். தயங்கிய சிலரை சபை மூப்பர்கள் புன்முறுவலோடு அணுகி அழைத்து வந்து நிறுத்தினர்.

“நேற்று ஒன்றுபோன்று நேர்க்கோட்டில் நின்றீர்கள், இப்போது அப்படியல்ல. இடமிருந்து வலமாக நில்லுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் சபை விசுவாசிகள் நிற்பார்கள். . .” என்றதும் வரிசை அவர் சொற்படி ஆனது.

வரிசையில் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டார்:

“உங்களில் யாருக்காவது பரிசுத்தாவி அபிஷேகத்தைப் பற்றித் தெரியுமா. . .?” தெரியாதெனத் தலையசைத்தனர் வரிசையில் நின்றோர்.

“இன்றிரவு தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். அனுபவிக்கப் போகிறீர்கள். தேவனுக்கு முன்பாக maha 3

இன்று நீங்களே அழகாய் நிற்பவர்கள். . .” என்று சொல்லியவாறே தம் கரங்கள் இரண்டையும் ஏறெடுத்து ஜெபிக்க இடி இடித்தது போல மின்னல் அடித்தது போல விழுந்து புரண்டு, கத்திக் கதறி அறியாத மொழியில், புரியாத மொழியில் பட்டாசு வெடித்தது போல சடசடவென்று அவர்களிடமிருந்து வெளிப்பட்டன வார்த்தைகள். சில உடல்கள் அனல் தகிப்பும் சில உடல்கள் குளிர்மிகு நடுக்கமும் கொண்டவையாகக் காட்டிக்கொண்டன. ஊழியக்காரிகள் போர்வைக்காக விரைந்தோடினர்.

நடுப்பகுதியில் இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலருக்கு இதேபோன்று நடந்தது. உடனே மூப்பர்களில் சிலர் அவர்களை மேடை முன்புறத்திற்குக் கொண்டுவந்தனர். பேரிரைச்சல் ஏற்பட்டது. அது ஓய்ந்து அமைதியடைய இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது.

அதி உற்சாகத்திலிருந்த பிரசங்கியார் ஒலிபெருக்கியில், “நாளை அற்புதமான நாள். தேவன் அற்புதங்களைச் செய்கிற நாள். ஆகவே படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளை, கண் தெரியாதவர்களை, கைகால் இல்லாதவர்களைக் கொண்டுவாருங்கள். இதைவிட அதிகமாய் நம்முடைய ஆண்டவர் செய்வார்,” என்றதும் பலத்த கரவொலி எழுந்தது.

போதகரும் பிரசங்கியாரும் புறப்பட்ட பிறகு மூப்பர்கள் எங்கள் எல்லோரையும் ஒன்றுகூட்டி உரையாடினார்கள்.

“சொல்லுங்க, பேரலைஸ் பேஷண்ட்டை எங்கிருந்து எப்படிக் கூட்டி வரப்போறீங்க?”

“தேடுவதற்கே நேரம் போயிருமய்யா.”

“ஃபேஸ்புக்ல போட்டுருவோமா?”

“ஆ… அதைச்செய்யுங்க. இப்பவே இங்கயே. . .”மூப்பர்கள் உட்பட அனைவரும் முகநூலில் பதிந்தார்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பதில்கள் வந்துகொண்டேயிருந்தன.

“அந்தந்த வீட்ல உள்ளவங்களே அழைத்துவர முடியுமான்னு கேளுங்க. எத்தனை பேருக்கு டிரான்ஸ்போர்ட் வேணுமுன்னு கேட்டு வைச்சு லிஸ்ட் கொடுங்க.”

நேரம் தேவைப்பட்டது. இதற்கிடையில் மூப்பர்களில் ஒருவர் வெளியே சென்று எல்லோருக்குமாக சூடாக நெஸ்கேஃபி வாங்கி வந்து கொடுத்தார். மெதுவாய் பருகியபடி வேலை பார்த்தோம்.

பட்டியல் ஆயத்தமானதும் சமர்ப்பித்தோம். கண் தெரியாதவர்களை அழைத்துவர ஒரு பேருந்து தேவைப்பட்டது. உடற்பேறு குறைந்தோருக்கு நான்கு மூடுந்துகள். மற்றோருக்கு எட்டு வாகனங்கள். மூப்பர்கள் யாவரும் ஓட்டுநர் வேலையைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு மூப்பருக்கும் எங்களிலிருந்து இரண்டு உதவியாளர்களைத் தேர்வு செய்தார்கள். எல்லாம் ஆயிற்று. ஐந்து மணிநேரத் தூக்கத்திற்குப் பிறகு குளித்து வந்துவிட உத்தரவு பெற்றோம்.

நான், மைக்கேல், ரேச்சல், ஓரிடக் குடிவாசிகள். கேரன் – ரூத் வீட்டைத் தாண்டித்தான் எங்கள் இருப்பிடத்தை அடைய முடியும். மைக்கேலின் வாகனத்தில் அனைவரையும் இறக்கிவிட்டு எங்கள் இடத்திற்குச் சேர்ந்த நேரம் எங்கள் மூவருக்கும் குறுஞ்செய்தி வந்தது. கேரன் – ரூத்தின் அம்மம்மா இறந்து விட்டார்களாம். மருத்துவமனையின் பிணவறையில் உள்ளதாம் பிரேதம். குறுஞ்செய்தி அனுப்பினோம்: ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம். முதல்நாளே சோதனைக்காரன் சோதிக்கத் தொடங்கிவிட்டான் என்பதை அறிவீர்கள். கவனம்.’

வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கெல்லாம் யாவரும் கூடினோம். ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை இருந்தது. விரும்பத்தகாத கதை. கேரன் – ரூத் வந்திருந்தார்கள். ஆண்டவர்தான் முக்கியம் என்றார்கள். ஆனால் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. பலபேருடைய முகங்களிலும் மெய்மலர்ச்சி இல்லை. போலித்தன்மையான மலர்ச்சி, அவர்களுக்கே தெரியாமல் முகங்கள் காட்டிக்கொடுத்தன.

மூப்பர்களின் தலைவர் பேனட் ராஜ், “நீங்க பண்ற எல்லா செலவுக்கும் பில் வைச்சிருங்க. அவுங்கவுங்க மூப்பர்கிட்ட பணத்தை வாங்கிக்கலாம். ஒவ்வொரு மூப்பர்கிட்டேயும் முந்நூறு வெள்ளி ஒப்படைக்கிறேன்,” என்று சொல்லி பாக்கெட்டிலிருந்து பணக்கட்டுகளை எடுத்துத் தந்து வழியனுப்பினார்.

maha 2

ஜேம்ஸ் நவரத்தினத்தின் வெண்தாடி எங்களிடையே பிரசித்தம். அதைவிட அவரின் இயல்பான நகைச்சுவையானது அவரைச்சுற்றி எப்போதுமே ஒரு கூட்டத்தை இருக்கச் செய்யும். மூப்பர்களிடையே இவர் வித்தியாசமானவர். தனித்துவமானவர். மூப்பர் என்றாலே இறுகிய முகம், ஒழுக்கசீலர், அறிவுரையாளர், கண்டிப்பாளர் என்ற எதுவுமே இல்லாதவர். எல்லோருக்கும் இவரைப் பிடிக்கும். பாதிக்கும் மேற்பட்ட மூப்பர்களுக்கு இவர் என்றால் ஆகாது, தேறாது, திருந்தா ஜென்மம். இவருடைய சொந்த வாகனத்தில் நானும் லில்லியும் பயணித்தோம். வழிநெடுக அமைதியாய் இருந்தார். இறுகிய முகம். வாகனத்தை ஓட்டுவதில் முழுக் கவனம்

நாங்களும் பேசவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடி விழுந்திருக்கிறது. இவருக்கே இந்த இறுக்கமென்றால் அடி பலமாகத்தான் விழுந்திருக்க வேண்டும். கேட்காமல் இருப்பதே உத்தமம் என்றிருந்தேன். லில்லியின் முகம் தொய்ந்து போயிருந்தது.

பசியாறுதலும் பிற்பகல் உணவும் மாலை சிற்றுண்டியும் ஒப்புக்குச் சப்பாக இருந்தது. எங்களுக்குக் குறிக்கப்பட்ட பிணியாளர்களை ஏற்றிக்கொண்டு வரும்போதும் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வாகன கேசட்டில் ஜோன் ரபீந்தரநாத் பாடிக் கொண்டிருந்தார். “பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ. . .”

அடுத்த நோயாளியை அழைத்துவர ஒருவரே போதுமென நினைத்து லில்லியை மூன்றாவது மாடிக்கு அனுப்பி வைத்தேன். பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் லில்லியும் நோயாளியும் திரும்பவில்லை. மூப்பர் என்னைப் பார்க்க நான் கண்களால் ஆமோதித்து துர்போ வாகனத்தின் கதவைத் திறந்து மாடிக்கு ஏறினேன். மூன்றாவது மாடிப் படிக்கட்டில் லில்லி உட்கார்ந்திருந்தாள். கால்களுக்கு நடுவே முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுவது தெரிந்தது.

“சிஸ்டர் என்ன இது? என்ன ஆச்சு சிஸ்டர்…?” என்றவாறே பக்கத்தில் அமர்ந்தேன்.

“பிரதர், அம்மாவுக்கு ஓப்பரேஷன்.”

“சரி. அதுக்கு?”

“பிரீஸ்ட் கேன்ஸர் கொன்ஃபோம் பண்ணிட்டாங்க பிரதர். ரெண்டு பகுதியையும் வெட்டி எடுக்கப் போறாங்களாம். என்னாலயே தாங்க முடியலயே. அம்மா எப்படி தாங்கிக்குவாங்க… அம்மா செஞ்ச ஊழியத்துக்கு இதுதா பரிசா… ஆண்டவரோட கருணை, இரக்கம், அற்புதம் எங்கே பிரதர்…?”

மனம் மருகியது. சங்கடத்துக்குள்ளானேன். லில்லியின் தாயாரை நான் அறிவேன். ஊழியத்திற்காகத் தன் நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் செலவு செய்பவள்.

“யோபுவை சோதிக்கறதுக்காக சாத்தான் தேவன்கிட்டப் போய் ஸ்பெஷல் அனுமதி வாங்குனா இல்லையா… இப்ப நம்ம சபையை ஒட்டுமொத்தமா சோதிக்கறதுக்கு ஸ்பெஷல் அனுமதி வாங்கிட்டான் போல. ஆண்டவர் மேல பாரத்தைப் போடுவோம். அவர் பார்த்துக்குவார். கண்ணைத் தொடச்சிட்டு வாங்க சிஸ்டர்.”

நான் மட்டும் மேலே ஏறி நோயாளியையும் அவர் தகப்பனையும் அழைத்துக் கீழே வர, லில்லி எங்களுக்காக வாகனக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்தாள்.

அவரவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழைத்துவரும் வேலைகளை எவ்விதத் தடையுமின்றி கனகச்சிதமாகச் செய்து முடித்திருந்தோம். மழை இல்லை. வாகனச் சக்கர வெடிப்பு இல்லை. நோயாளி தாமதமில்லை. வாகன நெரிசல் இல்லை. விபத்து ஏதுமில்லை என்பது ஒருபக்கம் ஆச்சரியத்தைத் தந்தாலும் அது முக்கியத்துவம் பெறவில்லை.

ஸ்டேடியத்திற்குள்ளேயே குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டோம். சிலர் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். கீத ஆராதனை ஆரம்பம். பொங்கோ, தபேலா, மிருதங்கம், கீ போர்டு, பியானோ, இரண்டு வகையான கீத்தார், இரண்டுவிதமான புல்லாங்குழல், டிரம், டெம்பரின் மூன்று வகை மற்றும் சில வாத்தியக் கருவிகளை அபாரமாக இசைத்தனர் எங்களது சபை இசைக்குழுவினர். ஒரு அபத்தமும் ஏற்படவில்லை. ஆடல் குழுவினரும் அழகாகவே ஆடினர். கண்கொள்ளாக்காட்சி என்பார்களே, அப்படி இருந்தது.

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிரசங்கியாரின் நேரம் வந்தது. மிகுந்த கம்பீரத்தோடும் மிடுக்கோடும் அப்போஸ்தலர்களாகிய பவுலும் சீலாவும் சிறையில் சங்கிலிகளால் கட்டப்பட்ட சம்பவத்தைக் குறித்துப் பேசினார். துதி மகிமையால் சங்கிலிகள் அறுபட்டதையும் நிலநடுக்கத்தினால் சுவர்க்கதவுகள் அகண்டதைக் குறித்தும் கூறி வார்த்தைகளால் அதிரவைத்தார். கேட்டவர்கள் பலத்த கரவொலியை எழுப்பினர்.

ஜனக்கூட்டத்தின் கரங்கள் வானத்தை நோக்கியபடி மேலெழுந்தவாறு இருந்தன. சரணடைகிறோம் என்றும் உமது அற்புதங்களைப் பெற்றுக்கொள்ள இதோ ஆயத்தமாயிருக்கிறோம் என்றும் அர்த்தமாகும். ஒருவர் விடாமல் எல்லோருமே கைதூக்கி நின்றனர்.

இதோ இந்த நேரமே தேவனுடைய ஆசிர்வாதங்களையும் அற்புதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்வீர்களாக,” என்று சொல்லிவிட்டுப் புரியாத மொழியில் கட்டளையிட்டவாறே ஜெபித்தார். நேரம் கடந்தது.

நோயாளிகள் மத்தியிலிருந்து எந்தவொரு ஆனந்தக் கூத்தாடலுமில்லை, கத்தலுமில்லை.

பிரசங்கியார் மேடையிலேயே முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். மூப்பர்களும் சபை விசுவாசிகளும் நாங்களும் அப்படியே செய்தோம். முன்னிரவு நெருங்கியது.

அற்புதம் வேண்டி நின்றவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

பிரசங்கியார் கண்ணீரோடே மன்றாடினார். எங்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வந்தது.

கண்ணீருக்கான பலன் கிடைத்தபாடில்லை.

முடிவாக பிரசங்கியார் பீடத்தில் நின்று, “தேவனுடைய சித்தம் என்று ஒன்று இருக்கிறது. அது யாதெனில் கூட்டம் முடிந்து நீங்கள் வீடுபோய்ச் சேரும்போது அற்புதம் நிகழலாம். அல்லது ஒருநாள் கழித்து, ஒருவாரம் கழித்து, ஒருமாதம் கழித்துக்கூட அற்புதம் நடக்கலாம். இந்த நாளை உங்களுக்கு ஆண்டவர்வை அறிந்துகொண்ட வாய்ப்பாகக் கருதிக்கொள்ளுங்கள். . .”

செருப்பு ஒன்று பறந்துபோய் பீடத்தை அடித்து விழுந்தது. பின், வரிசையாகப் பல செருப்புகள் சரமாரியாக வீசப்பட்டன.

மூப்பர்கள் சிலர் உடனே விரைந்து பிரசங்கியாரைச் சூழ்ந்து அங்கிருந்து வெளியேற்றினர்.
செருப்புகள் மட்டுமின்றி கையில் கிடைத்ததையெல்லாம் மேடையை நோக்கி வீசினர்.

ஏராளமான கைபேசிகள் மின்னின.

அப்போது, மத்தியிலிருந்த நீள் இருக்கையிலிருந்து நடுத்தர வயதுடைய மாது ஒருத்தி திடுமென எழுந்து மேடையருகே போனாள். அவளிடம் ஒருவித பரபரப்பு இருந்தது. மேடையின் ஓரத்தில் இருந்த காணிக்கைப் பெட்டியினருகே சென்று சட்டெனக் கழுத்திலிருந்த சங்கிலியையும் கைகளிலிருந்த  தங்க வளையல்களையும் கழற்றிப் போட்டுவிட்டு மலர்ந்த முகத்துடன் வெளியேறினாள்.

 

http://vallinam.com.my/version2/?p=4020

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.