Jump to content

டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா?


Recommended Posts

டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா?

அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன.

 
டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா?
 
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார்.

23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார். 2012-ம் ஆண்டு வரை அந்த கிளப்பிற்காக விளையாடிய அவர், பின்னர் இத்தாலியின் பாலிர்மோ அணிக்கு மாறினார். 2015-ம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடிய அவர், அதன்பின் இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணிக்கு மாறினார். தற்போது அந்த அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். 58 போட்டிகளில் 27 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் டைபாலாவை இந்த டிரான்ஸ்பர் நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சியா ஆகிய அணிகள் குறிவைத்துள்ளன.

201704121905542924_bybala1-s._L_styvpf.g

23 மில்லியன் பவுண்டுக்கு யுவான்டஸ் அணி டைபாலாவை வாங்கியது. தற்போது இவருக்கு 100 மில்லியன் பவுண்டு (சுமார் 808 கோடி ரூபாய்) நிலை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த விலை கொடுத்து வாங்க கிளப்புகள் தயாராக உள்ளன. ஒருவேளை 100 மில்லியன் பவுண்டுக்கு டைபாலா விற்கப்பட்டால் கால்பந்து கிளப் வரலாற்றில் இதுதான் அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகையாகும்.

இதற்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணி போக்பாவை 89.3 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கியதுதான் சாதனையாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/12190546/1079651/Paulo-Dybala-may-become-first-100m-Pound-player-in.vpf

Link to comment
Share on other sites

பவுலோ டைபாலாவின் ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்தது யுவான்டஸ்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலாவின் ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்து டிரான்ஸ்பர் யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது யுவான்டஸ்.

 
 
 
 
பவுலோ டைபாலாவின் ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்தது யுவான்டஸ்
 
அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்கள கால்பந்து வீரரான பவுலோ டைபாலா இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 23 வயதாகும் டைபாலா சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன் லீக் காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை யுவுான்டஸ் 3-0 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் டைபாலா இரண்டு கோல்கள் அடித்தார்.

யுவான்டஸ் உடனான ஒப்பந்தத்தை டைபாலா நீட்டிக்காமல் இருந்தார். இதனால் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்சியா அணிகள் டைபாலாவிற்கு வலை விரித்தது. அவருக்காக 100 மில்லியன் பவுண்டு டிரான்ஸ்பர் தொகையாக கொடுக்க இந்த கிளப்புகள் தயாராக இருந்தது.

201704131808484878_dybala1-s._L_styvpf.g

இந்நிலையில் யுவான்டஸ் அணி மேலும் ஐந்து வருடத்திற்கு, அதாவது 2022 வரை டைபாலா உடனான ஒப்பந்தத்தை யவான்டஸ் அணி நீட்டித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் டைபாலா கையெழுத்திட்டுள்ளார். இதனால் டைபாலா அணி மாறுவாரா? என்ற யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/13180838/1079849/Paulo-Dybala-renews-Juventus-contract-until-2022.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.