Jump to content

தோனிக்கு என்னதான் ஆச்சு... ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்க போச்சு?#MSD


Recommended Posts

தோனிக்கு என்னதான் ஆச்சு... ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்க போச்சு?#MSD

 
 

இரண்டு உலகக்கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை, அயல் நாட்டில் பல வெற்றிகள். பாகிஸ்தானுக்கு எதிராக 148, இலங்கைக்கு எதிராக 183*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக தோனிக்கு இந்தியாவில் மாபெரும் ரசிகர் பட்டாளம் குவிந்ததற்கு முக்கிய காரணம் ஐபிஎல். 

சர்வதேச போட்டிகளில் அவர், அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கியரை மாற்றிக்கொண்டிருப்பார். ஆனால் அதிரடி... சரவெடி எல்லாம் ஐபிஎல்லில் தான். எப்பேர்ப்பட்ட பவுலர்களையும் கலங்கடிக்கும் பேட்ஸ்மேன் தோனி . அது மட்டுமல்ல, மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவர் தலைமையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. மஞ்சள் ஜெர்சிக்கும், தோனிக்கும், சென்னைக்கும் இந்தியாவே ஒரு காலத்தில் 'ஓ’  போட்டது. மும்பையோ, பெங்களூருவோ, கொல்கத்தாவோ எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும், எதிரணியின் சொந்த ஊரைத்தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மஞ்சளைப் பரவிவிட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள். ஆனால் இதெல்லாம் ஒரு காலத்தில்! 

தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் சூதாட்ட புகாரில் சிக்க... சென்னை அணி ஐபிஎல்லில் இருந்தே நீக்கப்பட... தோனி புனே அணிக்குச் செல்ல.... சர்வதேச போட்டிகளிலும்  சரி, ஐபிஎல்லில்லும் சரி தோனியிடம் இப்போது கேப்டன் பதவி இல்லை. இது கடந்த ஒன்றரை ஆண்டு வரலாறு. எப்படி சில ஆண்டுகளில் விறுவிறுவென முன்னேறியதோ, இப்போது அதே வேகத்தில் தோனி சாம்ராஜ்யம் சரிந்து வருகிறது. உலகின் டி20 லீக்களில் ஆடும் அணிகளில் அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கும் அணி, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி என்ற சிறப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே உண்டு. அதே போல லீக் தொடரில்  தலைசிறந்த கேப்டனும் தோனி தான். ஆனால் இப்போது அவருக்கு போதாத காலம். 

புனே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனியிடம் ஆலோசித்தே, ஸ்மித்தை கேப்டன் ஆக்கினோம் எனச் சொன்னார் புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயிங்கா. இதோ இந்த சீசனில், தனது முதல் போட்டியிலேயே மும்பை அணியை எதிர்கொண்டு வெற்றியுடன் ஆரம்பித்தது புனே அணி. அந்த போட்டியில் புனேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.  பொல்லார்டு பந்து வீசினார். தோனி ஒவ்வொரு ரன்னாக எடுக்க, ஸ்மித் கடைசி ரெண்டு பந்துகளில் தோனி அவதாரம் எடுத்தார். நிஜ தோனி எதிரில் இருந்தாலும் தோனியின் நிழல் ஷாட் விளாசியது ஸ்டீவன் ஸ்மித். தகுந்த பினிஷர், தகுந்த தலைவன் என ஸ்மித்துக்கு புகழாரம் சூடினார்கள் ரசிகர்கள். 

ஹர்ஷ் கோயிங்கா

அந்த சமயத்தில், சஞ்சீவ் கோயிங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயிங்கா  ஒரு ட்வீட் போட்டார். " Smith Proves who's the King of the jungle, Overshadows Dhoni totally. Captain Innings. Great Move to appoint him as captain". "காட்டுக்கு யார் ராஜா என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார்" என ஹர்ஷ் போட்ட ட்வீட் காட்டுத் தீயாய் பரவியது. ட்விட்டரில் ஹர்ஷ் மீது காட்டுத்தனமான விமர்சனங்களை வைத்தார்கள் தோனியின் ரசிகர்கள். கடும் கண்டனங்கள் எழ ட்வீட்டை   டெலிட்  செய்தார்.

ஹர்ஷ் கோயிங்கா

அடுத்த மேட்ச் பஞ்சாப்புடன் நடந்தது. இதில் 11 பந்துகளை சந்தித்தது வெறும் 5 ரன்கள் எடுத்தார் தோனி. மீண்டும் சீறினார் ஹர்ஷ் கோயிங்கா. ஸ்டீவன் ஸ்மித், ரஹானே, தோனி, பென் ஸ்டோக்ஸ், மனோஜ் திவாரி, டேனியல் கிறிஸ்டியன் என ஆறு பேரின் இந்த சீசன் ஐபிஎல் ஸ்ட்ரைக் ரேட்டை குறிப்பிட்டு, இதில் ரஹானே, திவாரி, கிறிஸ்டியன் ஆகியோர் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்கள் என மீண்டும் மறைமுகமான சீண்டல் ட்வீட் போட்டார். மீண்டும் கண்டனம் தெரிவித்தார்கள் ரசிகர்கள். 

#RPS batting statistics until now - Manoj Tiwari, Rahane , Christian have the best strike rates. pic.twitter.com/JKya3lxHKC

— Harsh Goenka (@hvgoenka) April 8, 2017

ஹர்ஷ் கோயிங்கா

எந்தவொரு வீரருக்கும் ஃபார்ம் அவுட் என்பதோ, நேரம் கை கூடி வராமல் போவதோ சகஜம் தான். மிகச்சிறந்த அதிரடி வீரர் ஒருவரை வெறும் மூன்று போட்டிகளில் நன்றாக விளையாடாத காரணத்தால் அவர் லாயக்கற்றவர் என்ற ரீதியில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியதே. எனினும், தோனியை கடந்த மூன்று போட்டிகளில் மிகவும் திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறுகிறார். அவரது ஷாட் தேர்வுகள் மிகச்சரியானதாக இல்லை. 

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பிறகுதான், ஜார்கண்ட் அணிக்கு கேப்டன் பதவியேற்று விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதி வரை அணியை அழைத்து வந்தார் தோனி. அந்தத் தொடரில் அவர் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இப்போது புனே அணி நிர்வாகத்துக்கும் தோனிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பது நிஜம். தன்னால் முன்பு போல பினிஷிங் ரோல் செய்ய முடியவில்லை என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் தோனியே சொல்லியிருக்கிறார். அதிக நேரம் களத்தில் நின்று பந்துகளை சந்தித்து பழகிவிட்டார் அதிரடி காட்டத் தயார் என்பதை இங்கிலாந்து தொடரில் நிரூபித்தார். புனே அணியில் மூன்றாவது அல்லது நான்காவது ஆட்டக்காரராக களம் இறங்கி வெளுத்துக்காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், ஐந்து அல்லது ஆறாவது நிலை ஆட்டக்காரராக  தோனியை களம் இறக்கி வருகிறது புனே நிர்வாகம். 

தோனி

தொடர்ச்சியாக சோதனைகளை சந்தித்து வரும் தோனிக்கு இது மற்றுமொரு சோதனை. அதன் காரணமாக முழு கவனத்துடன் கிரிக்கெட் ஆட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் வேண்டுவது எல்லாம் தோனியின் அந்த பழைய அதிரடி தான். அடுத்தடுத்த போட்டிகளிலாவது அவர்  தனது டிரேட்மார்க் ஷாட்கள் ஆட வேண்டும். அதிரடியாக ஆடி அணிக்கு ரன்களைச் சேர்க்க வேண்டும். வின்னிங் ஷாட் ஆடி மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஒரே ஒரு மேட்ச், ஒரே ஒரு ஓவர் கூட ஐபிஎல்லில் ஒருவனை ஹீரோ ஆக்கிவிடும். இப்போது தோனியின் மீது வைக்கப்படும் அத்தனை விமர்சனங்களும் நொறுங்க, அவருக்கு தேவைப்படுவது ஒரே ஒரு போட்டி தான். ஒரே ஒரு ஓவர் தான். அது அவருக்கு வெகு சீக்கிரத்திலேயே அமையட்டும். 

சாக்ஷி தோனி

நேற்று தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டா கிராமில் ஒரு போட்டோ கார்டை பதிந்திருந்தார். அதில்  ஊழ்வினைபற்றிய ஒரு குறிப்பு இருந்தது. "ஒரு  பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளைத் தின்னும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை தின்னும். நேரமும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்" 

இது ஹர்ஷ் கோயிங்காவுக்கான பதிலடி என தோனி ரசிகர்கள் சொல்கிறார்கள். அது ஹர்ஷ் கோயிங்காவுக்கு மட்டும்தானா?

 

http://www.vikatan.com/news/sports/86217-dhonis-disappointing-run-continues-in-ipl.html

Link to comment
Share on other sites

21 minutes ago, நவீனன் said:

தோனிக்கு என்னதான் ஆச்சு

தோனிக்கு வயசு போச்சு..:grin:

22 minutes ago, நவீனன் said:

 ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்க போச்சு?

 
 
 

 

ஹெலிகாப்ட்டர் காத்து போச்சு..:grin:

இதை சொன்னவர் மீரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நவீனன் said:

தோனிக்கு வயசு போச்சு..:grin:

ஹெலிகாப்ட்டர் காத்து போச்சு..:grin:

இதை சொன்னவர் மீரா

வயசு போனா காத்து தான் வரும், எப்பிடி போகும்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நவீனன் said:

தோனிக்கு வயசு போச்சு..:grin:

ஹெலிகாப்ட்டர் காத்து போச்சு..:grin:

இதை சொன்னவர் மீரா

 

33 minutes ago, நந்தன் said:

வயசு போனா காத்து தான் வரும், எப்பிடி போகும்:grin:

இரண்டு மச்சில் இருத்தினால் தான் சரி, 

CSK இன் உரிமையாளர்களில் ஒருவரான தோனி இந்த வருடத்தை இப்படியே கடத்திவிட்டு அடுத்த வருடம் CSK க்கு வாற பிளான். ஆனால் RPS நிர்வாகம் இவரை இப்பவே கலைத்துவிட நிற்கிறது.

Link to comment
Share on other sites

டோனி: ஆட்ட நாயகனா, நடன நாயகனா?

 

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனத ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோனி வல்லவர்.

நடனத்தில் கலக்கிய டோனிபடத்தின் காப்புரிமைINSTAGRAM Image captionநடனத்தில் கலக்கிய டோனி

கிரிக்கெட் மைதானத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசுவது அல்லது களத்தில் வேடிக்கையாக ஏதாவது செய்து ரசிகர்களை டோனி மகிழ்ச்சியடைச் செய்வார்.

ஆனால், வேடிக்கையாக அவர் நடனமாடும் காணொளி ஒன்றை தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த காணொளி குறித்து அதிகமாகப் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் டோனி விளையாடும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி இந்த காணொளி பகிரப்படுவதற்கு முன்னர் தான் தோல்வியுற்றது.

டோனிபடத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट Image captionடோனி

2017 ஐபிஎல் தொடரில் நடந்த இந்த போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. ஆனால், இந்த தோல்வி டோனியின் மகிழ்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

இந்த காணொளியில் அவர் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியின் பிரத்யேக ஆடையை அணிந்திருந்தார். அவருக்கு அருகில் நின்ற சக அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் டோனியின் நடனத்தை ரசித்தவாறு தாளமிட முயற்சித்தார்.

டோனியின் நடனத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பதிவை 8 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இது தொடர்பாக கருத்து பதிவு செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் டோனியை புகழ்ந்த ரசிகர்கள்படத்தின் காப்புரிமைINSTAGRAM Image captionஇன்ஸ்டாகிராமில் டோனியை புகழ்ந்த ரசிகர்கள்

டோனியின் நடனம் அற்புதமாக இருந்ததாகவும், அவரை இவ்வாறு மகிழ்ச்சியாக பார்ப்பதை தங்கள் விரும்புவதாகவும் பலரும் பதிவு செய்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/sport-39579975

Link to comment
Share on other sites

தோனி எதையும் நிரூபிக்கத் தேவையில்லை! ஷேன் வார்ன்

 
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஆதரவாக, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், ஆஸ்திரேலியமுன்னாள் வீரர் ஷேன் வார்ன்.

warne

ஐபிஎல் தொடரின் 10-வது சீசன் அமர்க்களமாய் நடந்துவருகிறது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இதுவரை தோனி விளையாடிய ஐந்து போட்டிகளில், 61 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதுவரை, இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அவர் விளாசியுள்ளார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் தோனியை விமர்சித்து பலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். மேலும், புனே அணியின் உரிமையாளரும் தோனியின் ஆட்டத்திறனை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில்,' தோனி எதையும் யாருக்காகவும் நிரூபிக்கத் தேவையில்லை. அனைத்து தர போட்டிகளிலும் அவர் சிறந்த வீரர். தோனி ஒரு மிகச் சிறந்த தலைவர்' எனக் கூறியுள்ளார்.    

http://www.vikatan.com/news/sports/86818-shane-warne-supports-ms-dhoni-over-a-tweet.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.