Jump to content

ஒக். 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்!


Recommended Posts

ஒக். 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்!

 

 

களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5_V_Cricket_Rules.jpg

கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் ‘மெரில்போன்’ கிரிக்கெட் சங்கமே இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி:

• களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை அந்த ஆட்டத்தை விட்டு தற்காலிகமாகவோ, குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ விலக்கிவைக்கும் அதிகாரம் நடுவருக்கு உண்டு.

• இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நடுவர்கள் விரும்பினால் எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்களைக் கொடுக்கலாம்.

• வீரர் ஒருவரை வெளியேற்ற அவ்வணித் தலைவர் மறுக்கும் பட்சத்தில், எதிரணியினர் வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவிக்கலாம்.

• ஒரு முடிவுக்கு இரு அணித் தலைவர்களும் இணங்க மறுத்தால் ஆட்டத்தைக் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவிக்கலாம்.

• பந்தைச் சேதப்படுத்துவது, களத்தைச் சேதப்படுத்துவது ஆகிய இரண்டு குற்றங்களும் ஒரே வகையாகவே இனங்காணப்படும். இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆட்டமிழப்பை செல்லுபடியற்றதாக அறிவிக்கலாம்.

• மாற்று வீரர்கள் விக்கெட் காப்பாளராகப் பணியாற்றலாம்.

• பெய்ல்களை ஸ்டம்ப்புகளுடன் பொருந்தியதாக அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், விக்கெட் காப்பாளர்களின் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படவுள்ளது. 

பெய்ல் தாக்கியதில் கண்கள் பாதிக்கப்பட்டதால், தென்னாபிரிக்க வீரர் மார்க் பௌச்சர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதைக் குறிப்பிட்டே இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஸ்டம்ப்புகளுடன் பொருத்தப்பட்டதாக இருப்பதால் பெய்ல்கள் கூடிய தூரம் பறந்து செல்ல முடியாததாக அமைக்கப்படும் என்றும், எவ்வாறெனினும் அவற்றின் தற்போதைய நெகிழ்வுத் தன்மையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் மேற்படி கிரிக்கெட் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/18997

Link to comment
Share on other sites

ஒழுங்கீனமாக நடக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வருகிறது வேட்டு: அக்டோபர் 1-ல் விதிமுறை அறிமுகம்

கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடக்கும் வீரர்களை கள நடுவரே வெளியேற்றும் அல்லது எதிரணிக்கு 5 ரன்கள் கொடுக்கும் வகையிலான புதிய விதிமுறை அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

 
ஒழுங்கீனமாக நடக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வருகிறது வேட்டு: அக்டோபர் 1-ல் விதிமுறை அறிமுகம்
 
கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகள் விளையாடும்போது பொதுவாக வீரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். முக்கியமான போட்டிகளில் அதிக அளவில் தங்களது எமோஷன்களை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தற்போது வீரர்கள் வார்த்தை போர்களில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள்.

பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஸ்மித் டி.ஆர்.எஸ். ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த சக வீரர்களின் உதவியை கேட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் ஸ்மித் - விராட் கோலி நடவடிக்கையை பெரும்பாலான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதுபோன்ற பிரச்சினை ஏற்படும்போது கள நடுவர்கள் வீரர்களை தண்டிக்கும்படி வதிமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கால்பந்து போட்டியில் மஞ்சள் மற்றும் ரெட் கார்டு கொடுப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று இங்கிலாந்தில் உள்ள மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பிற்கு (MCC) பரிந்துரைகள் செய்யப்பட்டன.

201704122033016059_ViatKohli-s._L_styvpf

அந்த பரிந்துரைகளை ஆராய்ந்த எம்.சி.சி. தற்போது மைதானத்தில் உள்ள நடுவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவில் விதிமுறைகளை மாற்ற அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ஒரு நடுவர் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஒரு வீரரை போட்டியில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது ஐந்து ரன்கள் எதிரணிக்கு வழங்க முடியும். இந்த முடிவை அணியின் கேப்டன் ஏற்க மறுத்துவிட்டால், எதிரணி வெற்றி பெற்றதாகக் கூட அறிவிக்க இயலும். அதேவேளையில் இரண்டு கேப்டன்களும் அந்த முடிவை எதிர்த்தால், போட்டியை கைவிடக்கூட நடுவர்களால் முடியும்.

201704122033016059_ViatKohli1-s._L_styvp

இந்த விதிமுறை அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது. எனவே, இனிமேல் வீரர்கள் மைதானத்திற்குள் மோதிக்கொண்டால் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/12203253/1079659/MCC-Allows-Umpires-to-Send-Off-Unruly-Players-Post.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.