Jump to content

முதல் வசந்தப் பாடல் ...............வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

ஈழப்போர் முறிந்தபின் வந்த 
2010 வசந்த காலத்தில் கண்ணீரோடு எழுதிய கவிதை.
*
முதல் வசந்தப் பாடல்
வ.ஐ.ச.ஜெயபாலன்
*
சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில்
மீனவ குப்பங்களில்.
பூத்த மரங்களின் எச்சங்களில்
குயில்கள் பாட
மாலைசூடிய குழந்தைகள்
எசப்பாட்டுப் பாடியதை
கண்ணீரூடு பார்த்தது போல
இன்றும் கரைந்தபடி..
.

மனிதனின் வாழும் ஆசையை
எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும்
பறித்து விட முடியாது என்றபடி
வருடந் தோறும்
கீரோசீமா நாகசாக்கியில்
செறிகள் மலர்கிறதுபோல
என் மண்ணிலும் முறிந்த வேம்புகள்
மலர்கின்றன.. .
.

இற்றை வசந்த இப்பூந் தென்றலில்
சுட்டெரிக்கப் பட்ட எங்கள்
சோலைகளின் எச்சங்களில்
பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று
குயில்கள் பாடுகின்றன
.

பாதைகளில் கால் மிதிக்க
உயிர் கிழிகிறது.
குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து
எலும்புகளோடும் தலை மயிரோடும்
வீதிக் குண்டு குழிகளை நிரவுகிறார்கள் கொடியோர். 
.

இரணியா இரணியா
எங்கள் பிள்ளைகளின் கனவுகள்
ஒவ்வொரு தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்குமடா..
சாம்பலை உதறியபடிக்கு
இடிபாடுகளை விலக்கிக்கொண்டு
உயிர்தெழுகிறது வாழ்வு,.
.

ஊர் உலகோடு பாரிபோல் பகைத்த
இருண்ட நாட்களே போ..
எங்கள் கிரேத யுகத்து முதல் வசந்தமே வா..
.

இற்றை வசந்த இப்பூந்தென்றலில்
வைகலும் சுதந்திர
வாழ்வையே எண்ணினோம்.

 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.