Jump to content

மனமிருந்தால்???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  தாயகத்திலிருந்து (மட்டக்கிளப்பு) வைபரில் ஒரு படம் வந்தது

படத்தில்  ஒரு தாய் ஒரு மகள்

இவர் யெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரின் மனைவி  மற்றும் பிள்ளை அண்ணை  என்று எழுதியிருந்தது

தொலைபேசி  எடுத்தேன்

அந்த பிள்ளைக்கு பாடசாலைக்கு போக ஒரு சைக்கிள் கேட்கினமண்ணை என்றார்

சரி சைக்கிள் என்னவிலை? என்பதற்கு

12 500 ரூபாக்கள் என்றார்

உங்களிடம் 12 500 ரூபா  இருந்தால் வாங்கிக்கொடுக்கமுடியுமா 

இந்த மாசம்   ஏலாது

வாற மாசம் அனுப்புகின்றேன் என்றேன்

சரியண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றார்

என்னை அவர்களுடன்  கதைக்கும்படி தொலைபேசி  இலக்கம் அனுப்பியிருந்தார்

அவர்களுக்கான தேவையை  பூர்த்தி  செய்கின்றேன்  

 நான்  தொலைபேசியில்  கதைக்க வேண்டிய அவசியமில்லை என மறுத்துவிட்டேன்.

இப்போ எனது கேள்வி  இதில காசு எவரிடமிருக்கு???

மனசு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் செய்தி உண்மையா?பொய்யா?என்பதை உறுதிப்படுத்துங்கள்.

அடுத்து ஒவ்வொரு தேவைக்கும் உங்களையோ யாரையுமோ காத்துக் கொண்டிருக்காமல் சுயமாக உழைக்க கற்றுக் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உறுதிப்படுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் செய்தி உண்மையா?பொய்யா?என்பதை உறுதிப்படுத்துங்கள்.

அடுத்து ஒவ்வொரு தேவைக்கும் உங்களையோ யாரையுமோ காத்துக் கொண்டிருக்காமல் சுயமாக உழைக்க கற்றுக் கொடுங்கள்.

 

19 hours ago, MEERA said:

விசுகு உறுதிப்படுத்துங்கள்

உதவி  கேட்டவர் நல்லவர் தான்

தெரிந்தவர் தான்

ஆனால் எனது மனதுக்கு உறுத்தியது

அவரது பொக்கற்றுக்குள் காசு இருக்கு...

அவரும் வேலை செய்பவர் தான்  சம்பளம்பெறுபவர் தான்..

ஆனால் புலத்திலிருந்து  தான் இவ்வாறான உதவிகள் வரணும் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறதே..

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஆனால் புலத்திலிருந்து  தான் இவ்வாறான உதவிகள் வரணும் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறதே..

புலம் பெயந்தவர்கள் கட்டாயமாக உதவி செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் - இது இவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

புலம் பெயந்தவர்கள் கட்டாயமாக உதவி செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் - இது இவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல முன்னுதாரணமா ஜீவன் சிவா??

இன்று தாயகத்தில் நடக்கும் பல சீரளிவுகளுக்கு இது தானே காரணம் என சொல்லப்படுகிறது?

இதை எவ்வாறு தடுத்த நிறுத்தப்போகின்றோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் பிறியாக இருந்து கொண்டு மற்றவர்களிடம் சாட்டி விட்டு தப்பிக் கொள்வோர் தான் அதிகம்..ஆனால் நானும் திருந்திறபாட்டைக் காணம்.வெளி நாட்டிலிருந்து பணம் வந்தால் போதும் அடுத்த கேள்வி கேட்க ௬டாது என்ற மாதிரித் தான் உதவி கேட்டு நிற்போரின் மனோ நிலை.

Link to comment
Share on other sites

ஆனாலும் உண்மையாக உதவி தேவையானோர் பலர் - அவர்களுக்கு இந்த உதவிகள் போய் சேரனும் + சேர்ந்தே ஆகணும்.
தரம் பிரிப்பது ரொம்ப கஷ்டம் - பிரித்தே ஆகவேண்டியது கட்டாயம்.

இது எனது அனுபவப் பகிர்வு + மனத்தாங்கல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனாலும் உண்மையாக உதவி தேவையானோர் பலர் - அவர்களுக்கு இந்த உதவிகள் போய் சேரனும் + சேர்ந்தே ஆகணும்.
தரம் பிரிப்பது ரொம்ப கஷ்டம் - பிரித்தே ஆகவேண்டியது கட்டாயம்.

இது எனது அனுபவப் பகிர்வு + மனத்தாங்கல் 

உண்மைதான் ஜீவன் சிவா

இரண்டு மூன்று தரம் வாங்கிக்கட்டினாலும்

கேட்கும் போது இல்லை என்று சொல்வதில்லை..

காரணம் நீங்க  சொல்வது தான்

சொல்வார்களே

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்

ஒரு சுற்றவாளி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று

யாயினிக்கு விருப்பு வாக்கு போட்டது

அவரும் பல உதவிகளை  தொடர்ந்து செய்பவர்.

அவரது அனுபவங்களும் எமக்குத்தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, யாயினி said:

தாங்கள் பிறியாக இருந்து கொண்டு மற்றவர்களிடம் சாட்டி விட்டு தப்பிக் கொள்வோர் தான் அதிகம்..ஆனால் நானும் திருந்திறபாட்டைக் காணம்.வெளி நாட்டிலிருந்து பணம் வந்தால் போதும் அடுத்த கேள்வி கேட்க ௬டாது என்ற மாதிரித் தான் உதவி கேட்டு நிற்போரின் மனோ நிலை.

யாயினி தேவையில்லாத போது கொடுக்கும் பணம் அவர்களை அழிவிற்கே கொண்டு போகிறது.

பணத்தைக் திரும்ப திரும்ப கொடுத்துக் கொண்டிருக்காமல் ஏதாவது தொழிலை இயலுமானவரை nhதடங்க முயலுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த  உதவி  செய்யப்பட்டு

நான்  எவ்வளவோ மறுத்தபோதும்

அந்த பிள்ளையுடனும் தாயுடனும் தொலைபேசியில் கதைக்க வைத்து

படங்களும்  வந்திருந்தன

அதை  இங்கே இணைக்கின்றேன்

நன்றாக படிப்பதாக சொன்னார்

படிப்பதற்கு உதவிகள் தேவைப்படும் போது 

சைக்கிள்  வாங்கிக்கொடுத்தவருடன் தொடர்பு கொள்ளுங்கள்  என சொல்லியுள்ளேன்

தாய் வீதியோரமாக மரவள்ளி  பொரித்து விற்கும்  தொழிலை வீட்டுடன் இருந்து செய்து வருவதாக சொன்னார்

கொஞ்சம் உதவினால் மகளின் படிப்பை அவரே பார்த்துக்கொள்வார்

 பார்க்கலாம் 

image.jpg

 

 image.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் விசுகு....! உதவிகள் சரியான நபருக்கு சரியான சமயத்தில் சேரும்பொழுது மனசு நிம்மதி அடைகின்றது....!

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 6/23/2017 at 8:22 PM, விசுகு said:

இந்த  உதவி  செய்யப்பட்டு

நான்  எவ்வளவோ மறுத்தபோதும்

அந்த பிள்ளையுடனும் தாயுடனும் தொலைபேசியில் கதைக்க வைத்து

படங்களும்  வந்திருந்தன

அதை  இங்கே இணைக்கின்றேன்

நன்றாக படிப்பதாக சொன்னார்

படிப்பதற்கு உதவிகள் தேவைப்படும் போது 

சைக்கிள்  வாங்கிக்கொடுத்தவருடன் தொடர்பு கொள்ளுங்கள்  என சொல்லியுள்ளேன்

தாய் வீதியோரமாக மரவள்ளி  பொரித்து விற்கும்  தொழிலை வீட்டுடன் இருந்து செய்து வருவதாக சொன்னார்

கொஞ்சம் உதவினால் மகளின் படிப்பை அவரே பார்த்துக்கொள்வார்

 பார்க்கலாம் 

 

விசுகு உங்கள் உதவிகளுக்கும் , உயர்ந்த சேவை மனப்பாண்மைக்கும் நன்றிகள் பல..........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.