Jump to content

பவானி மச்சாள் – இராகவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பவானி மச்சாள் – சிறுகதை – இராகவன்

பவானி மச்சாள்

 

IMG_20170401_011329_processed-1-1024x603

எங்கடை ஊரிலை இருக்கிற ஒரேயொரு முற்போக்குவாதி யாரெண்டு கேட்டால் அப்பவும் இப்பவும் எப்பவுமே அது சற்குணம் மாமாதான். அவரோடை ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையான அம்பிகா மச்சாள் ஓயெல் படிச்சு கொண்டிருந்த மூட்டம் ஒரு நாள் ,

“அப்பா நான் கராட்டி பழகப் போறன்” எண்டு சொன்னாள்.

“அதுக்கென்ன பிள்ளை” எண்டு சற்குணம் மாமா சர்வசாதாரணமாய் சொல்ல சிந்தா மாமிதான் ஆட்லெறி செல் விழுந்து வெடிச்சமாதிரி அதிர்ந்து போனா.

“இதென்ன நாசமறுப்பு. ஒரு குமர்பிள்ளை கதைக்கிற கதையைப் பார். கராட்டி பழகப் போறாவாம் கராட்டி. அதுக்கு இவரும் ஒத்தூதுறார்.” எண்டு சிந்தாமாமி அளப்பரிக்க தொடங்கீட்டா.

“அதுக்கு நீயேனப்பா அளப்பரிக்கிறாய்? அவள் ஆசைப்படுறாள் பழகட்டன். இந்தக்காலத்திலை ஆம்பிளையோ பொம்பிளையோ ஆயகலைகள் அறுபத்திநாலும் தெரிஞ்சிருக்கவேணும். அதுகும் எங்களுக்கிருக்கிறது ஒரே பிள்ளை. அவள் ஆசைப்படுகிறதுகளை செய்யாமல் விடுறதே?”

எனச் சற்குணம் மாமா மறுத்தானடிக்க, சிந்தாமாமிக்கு பத்திக்கொண்டு வந்துது.

“என்னப்பா பேய்க்கதை கதை கதைக்கிறியள்? இப்ப நோர்மலாய் ஒரு பொம்பிளைப்பிள்ளைக்கு மாப்பிளை எடுக்கிறதே வலு கஷ்டமாய் கிடக்கு. அதுக்கை கராட்டியும் பழகினால் இவளுக்கு எங்கை மாப்பிள்ளை எடுக்கிறது? அதுகும் கராட்டி பழகின பெட்டையெண்டால் ஒருத்தனும் கிட்ட வரமாட்டான். பிறகு நாங்கள்தான் தலையிலை கைவைச்சுக்கொண்டு நிக்க வேணும் “.

“போடி விசர்கொந்தி!! அவளுக்கு கராட்டி பழகின ஒருத்தனை மாப்பிளையாய் எடுத்திட்டுப் போறதுக்கு ஒப்பாரி வைச்சுக்க கொண்டு நிக்கிறதே? எனக்கெல்லாம் தெரியும் நீ உன்ரை அலுவலைப் பாரடியாத்தை”. என்று சற்குணம் மாமா விடாப்பிடியாய் நின்றார்.

“ஓமோம் !! கராட்டி எடுத்தவனை மாப்பிளை எடுத்தால் ரெண்டுபேரும் கையைக்காலை விசுக்கிக்கொண்டு நிக்க நல்ல சோக்காய் இருக்கும். அயலட்டை சனங்கள் பிறீயாய் சண்டைப்படம் பாக்குங்கள். நல்லாய்தானிருக்கும்.”

சிந்தாமாமியும்  விட்டுக்குடுக்கேலை.

“அதையெல்லாம் பிறகு பாப்பம். நீ வாயை மூடிக்கொண்டு கொஞ்சம் சும்மா இரடியப்பா” சற்குணம் மாமா தன்ர முடிவிலை உடும்புப்பிடியாய் நிண்டார்.

“தேப்பனும் மோளும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனெக்கென்ன,” சிந்தாமாமியாலை அதுக்குப் பிறகு நிண்டு பிடிக்க முடியேலை. அவாவுக்கு தந்திரோபாயப் பின்வாங்கலைத் தவிர வேற வழியில்லை.

வடமாராட்சிக்குள்ளை இப்ப திறமான கராட்டி மாஸ்ரர் ஆரெண்டு விசாரிச்சுக் கடைசியில சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரரிட்டை அம்பிகா மச்சாளை கராட்டி பழக அனுப்பிறதெண்டு சற்குணம் மாமா முடிவெடுத்தார்.

00000000000000000000000000000

ஒரு சுபயோக சுபதினத்தில சற்குணம் மாமா அம்பிகா மச்சாளை சைக்கிள்ளை ஏத்திக்கொண்டு பருத்தித்துறையிலிருந்த சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் வீட்டுக்குப் போனார். நல்ல எழும்பின தோற்றத்திலை இருந்த மாஸ்ரரைப் பாத்தோண்ண “உந்தாள் நல்லவடிவாய் பிள்ளைக்கு குத்துக்கராட்டி பழக்கும்” என்ற நம்பிக்கை சற்குணம் மாமாவுக்கு வந்திட்டுது.

“மாஸ்ரர் நாங்கள் கரவெட்டியிலயிருந்து வாறம். இது என்ரை மகள் அம்பிகா. கராட்டி பழக விரும்பிறா. நீங்கள்தான் வடிவாய் பழக்குவீங்கள்  எண்டு எல்லாரும் சொல்லீச்சினம். அதுதான் மகளை கூட்டிக்கொண்டு வந்தனான்.

எண்டு சற்குணம் மாமா சொன்னதைக் கேட்டு சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் ஒருக்கால்  திகைச்சுத்தான் போனார். இதுவரைக்கும் ஒரு பொம்பிளைப்பிள்ளையும் கராட்டி பழகப்போறன் எண்டு அவரிட்டை வந்ததேயில்லை. எண்டாலும்  அம்பிகா மச்சாளின்ரை ஆர்வத்தையும் அதுக்கு சற்குணம் மாமா குடுக்கிற சப்போர்ட்டையும் பாத்து சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் அம்பிகா மச்சாளுக்கு கராட்டி பழக்கிறதுக்கு சம்மதிச்சிட்டார். பிறகு அதுக்கேற்ற உடுப்புகளும் தைச்சு அம்பிகா மச்சாள் கராட்டி பழகத்தொடக்கிட்டாள். திங்கள் ,புதன் ,வெள்ளி பின்நேரம் அஞ்சு தொடக்கம் ஆறு வரை வகுப்பு நடக்கும். அம்பிகா மச்சாள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலதான் படிச்சுக்கொண்டிருந்தாள். ராஜரட்ணத்தார் நடத்தின மொடோனுக்கும் ரியூசனுக்கு போறவள். சற்குணம் மாமா  ராஜரட்ணத்தாரோடை வலுஒட்டு. அதால திங்கள் ,புதன் வெள்ளியில ரியூசன் ரைம்ரேபிளையும் ஒருமாதிரி அம்பிகா மச்சாளுக்கேத்தமாதிரி அஜெஸ்ற் பண்ணிப் போட்டார். அவள் ஸ்கூல் முடிஞ்சு வந்து ரியூசனுக்கும் ஓடி நாலுமணியோடை அங்கையிருந்து  வெளிக்கிட்டு ரியூசன் வாசலில, மூண்டு மாசத்துக்கொருக்கால் கழுவி பூட்டின   ஹம்பர்சைக்கிளோட காத்து நிக்கிற சற்குணம் மாமாவோட ஏறிப்போய் துரைரத்தினம் மாஸ்ரர் வீட்டில கராட்டி பழகிட்டுத் திரும்ப சற்குணம் மாமாவோட சைக்கிள்ள ஏறி வீடு வந்து இறங்க இரவு ஏழு மணியாகிவிடும்.

ஒருநாள் கராட்டி வகுப்பு முடிஞ்சாப்போல, “எப்பிடி மாஸ்ரர் என்ரை மகள் வடிவாய் பழகிறாவோ?” எண்டு கேக்க, “இதென்ன ஐஸே உம்மட கேள்வி? ஆம்பிளைப்பிள்ளையள் கூட நான் சொல்லிக்கொடுக்கிறதை கொஞ்சம் தட்டுத்தடுமாறித்தான் பிடிப்பாங்கள். ஆனால் உம்மடை மகளுக்கு ஒருக்கால் காட்டிக்கொடுத்தால் போதும் அப்பிடியே பக்கெண்டு பிடிச்சுடுவா. நுணுக்கம் தெரிஞ்ச பிள்ளை. கெதிலயெல்லோ பிளாக் பெல்ட் எக்ஸாம் எடுத்துடுவா. கவலைப்படாதையும்.” எண்டு புளுகித்தள்ள சற்குணம் மாமா பூரிச்சுப்போனார்.

000000000000000000000000000000

இப்பிடியே ஒரு மூண்டு மாசம் எல்லாமே நல்லாய்தான் போய்கொண்டிருந்திது. நாலாவது மாசம்தான் ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ தொடங்கிச்சுது. அதுக்கு பிறகு எல்லாமே குழம்பி போச்சுது. சற்குணம் மாமா குடும்பம் கரவெட்டியிலை இருந்து வரணிக்கு இடம்பெயர்ந்தோடிச்சுது. வடமராட்சி முழுக்க ஆமிக்கட்டுப்பாட்டுக்குள்ளை வந்து பிறகு நெல்லியடி சென்றல் ஸ்கூல் ஆமிக்காம்பை கரும்புலி மில்லர் அடிச்சு ராஜீவ் காந்தி மிராஜ் பிளேனுகளில சாப்பாட்டு பார்சலுகளைக் கொண்டந்து போட்டு சித்து விளையாட்டு காட்டி, அதுக்குப்பிறகு ராஜிவ் காந்தி கொழும்புக்கு வந்து ஜேஆரோட இலங்கை இந்திய ஒப்பந்தத்திலை கையெழுத்து போட்டு, இலங்கை ஆமி போய் அமைதிப்படை இந்த மண்ணிலை காலடி வைச்சாப்போல தான் சற்குணம் மாமா குடும்பம் கரவெட்டிக்கு திரும்பி வந்தினம்.

இதுக்குள்ளை அம்பிகா மச்சாளுக்கு ஓயெல் சோதனைக்கும் காலம் வந்துட்டுது. அவளுக்கு இப்ப கராட்டி பழகிற மூட் இல்லை. இதால சந்தோசப்பட்ட ஒரேயொருஆள் சிந்தாமாமிதான். சற்குணம் மாமாவும் , ‘பிள்ளை முதல் ஓயெல் சோதனையை எழுதட்டும். அதுக்குப்பிறகு எல்லாத்தையும் கவனிப்பம்’ எண்டு விட்டுட்டார். அம்பிகா மச்சாளும் ஒருமாதிரி ஓயெல் எழுதி திறமாய் பாஸ் பண்ணி ஏயெல்ல மற்ஸ் படிக்க தொடங்கீட்டாள். அப்பவும் அவளுக்கு கராட்டி பழக மூட் வரேல்ல. தட்டித்தவறி அவளுக்கு மூட் வந்தாலும் கராட்டி பழகிற மாதிரி ஊர்நிலவரமும் இல்லை. எல்லாம் தலைகீழாய் மாறீட்டுது . முதல்ல புலிப்பெடியளும் இந்தியனாமியும் தேன்நிலவு  கொண்டாடித் திரிஞ்சினம். பிறகு ரெண்டு கன்னையும் ஊடல் கொண்டாடிச்சினம். குமரப்பா புலேந்தியம்மானோட  பன்ரெண்டு பேர் குப்பியடிச்சு செத்தாப்போல ஊடல் முத்தி முறிக்கத்தொடங்கி கடைசியில வெட்டுப்பகையில முடிஞ்சுது. ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு இந்தியன் ஆமியோட ஒட்டிக்கொண்டு புலிப்பெடியளை மண்டையில போட பிறகு, அவங்கள் இவையளை மண்டையில போட ஊரெல்லாம் அதகளப்பட்டுது. இதுக்குள்ள உந்த இந்தியன் ஆமிக்காறர்முழுப்பேரும் செரியான பொம்பிளை கள்ளராய் இருந்தாங்கள். கொஞ்சம் வடிவான பெடடையாளை கண்டால் கண்வைச்சுடுவாங்கள். அம்பிகா மச்சாளும் பெயருக்கேத்த மாதிரி கண்ணுக்கை குத்துற வடிவான பெட்டைதான்.

ஒருநாள் நெல்லியடி சயன்ஸ்சென்ரர் ரியூசன் முடிஞ்சு அம்பிகா மச்சாள் சைக்கிள்ள வரேக்கை ஒரு சீக்கியன் கண்வைச்சுட்டான். அவன் சரியான பொம்பிளை கள்ளன். அவனுக்கு பூனைக்கண்ணன் எண்டு சனம் பட்டம் வைச்சிருந்தது. அந்தப் பூனைக்கண்ணன் எப்பிடியாவது அம்பிகா மச்சாளை மடக்கிறதெண்டு பிளான் பண்ணி போட்டான். வழமையாய் ரியூசன் முடியேக்குள்ள சற்குணம் மாமா வாசல்ல காத்துக்கொண்டிருந்து அம்பிகா மச்சாளை கூட்டிக்கொண்டு வருவார். அதுவும் அவளை சைக்கிள்ள முன்னுக்கு போகவிட்டு சற்குணம்மாமா பொடிக்காட் மாதிரி பின்னுக்கு தன்ரை சைக்கிள்ளை வருவார். இதுதான் பூனைக்கண்ணனுக்கு செரியான இடைஞ்சலாய் இருந்துது. எப்ப சற்குணம் மாமா இல்லாமல் அவள் தனிய வருவாள் எண்டு பூனைக்கண்ணனும் கண்ணுக்குள்ளை எண்ணை விட்டுக் கொண்டு அலையத்தொடங்கீட்டான்.

ஒருநாள் சற்குணம் மாமாவுக்கு எதோ அவசர அலுவல். அம்பிகா மச்சாளை பின்னேரம் ரியூசனால கூட்டிக்கொண்டு வர ஏலாமல் போச்சுது.

“பிள்ளை !இண்டைக்கு பின்னேரம் நான் உன்னை ரியூசனால கூட்டிக்கொண்டு வரேலாது. எனக்கு முக்கியமான வேலை கிடக்கு. நீ இண்டைக்குப்பாட்டுக்கு உன்ரை கிளாஸ் பிள்ளையளோட கூடிக்கொண்டு வாவன்”

எண்டு சொல்லிட்டு வெளிக்கிட்டார். அதை கேட்டு கொண்டு நிண்ட சிந்தா மாமி ,

“காலங்கெட்டு கிடக்கு. பிள்ளையை கூட்டிக்கொண்டு வாறதைவிட உங்களுக்கென்ன ஆத்துப்பறந்த வேலை? பின்னாலை ஏதாவது இசக்கு பிசக்காய் நடந்தால் என்ன செய்யிறதப்பா?” எண்டு சிந்தாமாமி குறுக்கால பாய, சற்குணம்மாவுக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்திக்கொண்டு வந்துட்டுது.

“மனுசன் வெளிக்கிடேக்கை பல்லி சொல்லுற மாதிரி ஒருக்காலும் கதையாதையப்பா. அவளுக்கு எல்லாம் தெரியும். அதொண்டும் நடக்காது.” எண்டு பொரிஞ்சு தள்ளிப் போட்டு தன்ரை அலுவலாய் போட்டார்.

அம்பிகா மச்சாளுக்கு என்ன நேரம் ரியூசன் முடியிறதெண்டு பூனைக்கண்ணனுக்கு வடிவாய்த்தெரியும். அதுகும் அண்டைக்கு சற்குணம் மாமாவை காணேல எண்ட உடன என்னவிதப்பட்டெண்டாலும் அம்பிகா மச்சாளை மடக்கி போடவேணுமெண்டு தன்ரை நாலு கூட்டாளியளையும் கூட்டிக்கொண்டு அவளுக்கு பின்னாலை போன பூனைக்கண்ணனை, ஒரு சமசியத்திலை  ‘ஜெராட்’ எண்ட எல்ரிரி  காறனும் பின்னாலை போனது ஒருகுருவிக்கும் தெரியாது. அந்தமூட்டம் இந்தியன்ஆமியை  குச்சொழுங்கைக்குள்ளை வைச்சு ‘மண்டையிலை போட்டு’ அவையின்ரை ஆயுதங்களை எடுத்து கொண்டு ஓடுறதிலை ஜெராட் தான் பேமஸ்.

அம்பிகா மச்சாளோட கூடியந்த சிநேகித பெட்டையள் எல்லாம் நாற்சந்தியிலை ஆளுக்கொரு பக்கமாய் பிரிஞ்சு போயிட்டினம். அம்பிகா மச்சாள் தனிச்சு போனாள். அவள் குளத்தடி றோட்டாலை திரும்பி குச்சொழுங்கைக்குள்ள சைக்கிளை விட ,பூனைக்கண்ணன் குறூப் எதிர்ப்பக்கத்தால வந்து அம்பிகா மச்சாளை நிப்பாட்டிச்சினம். ‘இண்டைக்கு என்னை துலைக்கத்தான் போறாங்கள்’. எண்டு அவளுக்கு பயம் தொடுட்டுட்டுது. எண்டாலும் அவள் பயத்தை முகத்தில காட்டேல. பூனைக்கண்ணன்  முன்னால நிக்க மற்றவங்கள் அம்பிகா மச்சாளை ரவுண்ட்அப் பண்ணீட்டாங்கள். பூனைக்கண்ணன் அவளை பாத்து “எல்ரிரி” ? எண்டு கேக்க அவள் “நோ ஸ்ருடன்ற்”  எண்டாள். அவன் அதை பறுவாய் பண்ணாமல் “பொம் ….பொம், செக்கிங்” எண்டு அவளின்ரை நெஞ்சுப்பக்கமாய் கைவைக்க வெளிக்கிட்டான். அம்பிகா மச்சாளுக்கு என்ன நடக்க போகுதெண்டு கிளியராய் விளங்கீட்டுது. அவள் ஒன்றுக்கும் யோசிக்காமல் சைக்கிளை கீழை போட்டாள். சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரறிட்டை பழகின கராட்டி அப்பத்தான் வேலை செய்ய தொடங்கீச்சுது. கண்மூடி முழிக்கிறதுக்குள்ளை காலைத்தூக்கி குயிக்காய் சுழண்டு அஞ்சுபேருக்கும் அடிவயித்துக்கு கீழை திறம் ஷொட் ஒண்டு குடுத்தாள். அவையள்  இதை கொஞ்சம் கூட எதிர்பாக்கேல. எல்லாரும் கையளை கீழை பொத்திக்கொண்டு விழுந்தினம். பேந்து எப்பிடி சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டை வந்தாள் எண்டு அவளுக்கே தெரியாது.

அம்பிகா மச்சாள் விழுந்தடிச்சு வீட்டுக்குள்ளை போக நாலைஞ்சு வெடி சத்தம் கேட்டுது. அவளுக்கு வயித்தை கலக்கிச்சுது. அப்ப தாய்க்காறிதான் வீட்டிலை  நிண்டவ. அவாவிட்டை  நடந்ததை சொன்னால் அவா பதகளிச்சு  ஊரைக்கூட்டிபோடுவா. பேந்து கதை வெளியாலை போய் சனம் ஒண்டுக்குப்  பத்தாய் கதைக்குமெண்டு அம்பிகா மச்சாள் மூச்சும் காட்டேல. அவளுக்கு ரென்சனிலை செரியாய் வேத்து கொட்டீச்சுது. கைகாலெல்லாம் தன்ரை பாட்டுக்கு நடுங்கீச்சுது. நல்லாய் பொழுது பட்டா பிறகுதான் சற்குணம் மாமா வந்து சேர்ந்தார்.

வந்ததும் வராததுமாய்,”பிள்ளை ரியூசனால வந்திட்டாளோ?” எண்டுதான் முதல்ல கேட்டார். “ஓமோம்!வந்திட்டாள்”. எண்டு குசினிக்குள்ளை இருந்த சிந்தாமாமி சவுண்ட் விடத்தான் அவருக்கு நெஞ்சுக்குள்ளை தண்ணி வந்துது. எண்டாலும் ஆள் ரென்சனாய்த்தான் இருந்தார். “பிள்ளை நீ வரேக்குள்ள மண் ஒழுங்கையாலேயே வந்தனி”? எண்டு அம்பிகா மச்சாளை பாத்து கேட்டார். அவள் ஓமெண்டு தலையாட்டினாள். “அப்ப நீ வந்தாப் போலதான் நடந்திருக்கு” எண்டு சற்குணம் மாமா சொல்லுறதுக்கிடையிலை சிந்தாமாமி பதக்களிச்சு கொண்டு குசினிக்குள்ளாலை வந்திட்டா. “என்னப்பா என்ன நடந்தது”? “இப்ப பின்னேரம் மணல் ஒழுங்கையுக்குள்ளை வைச்சு இந்தியன் ஆமி அஞ்சு பேரை இயக்கப் பொடியள் மண்டையில போட்டுட்டு அவங்கடை ஆயுதங்களை எடுத்து கொண்டு ஓடிட்டாங்களாம். அந்த ஏரியா முழுக்க இந்தியன் ஆமி குவிஞ்சு போய் நிக்கிறாங்கள். போன வந்த சனத்துக்கெல்லாம் நல்ல அடியாம். நான் இப்ப றோட்டு சுத்திதான் வந்தநான். எண்டு சற்குணம்மாமா சொன்னாப் போலதான் அம்பிகாமச்சாளுக்கு நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சுது.

“ஐயோ இவள் பிள்ளை போய் வாற பாதையெல்லே? அழிவார் சனத்தை நிம்மதியாய் இருக்க விட்டால்தானே. இக்கணம் நாளைக்கு இஞ்சாலை றவுண்டப்போ தெரியாது. என்ர தச்சந்தோப்பானே …….நீதானப்பா அவளை காப்பாத்தோணும் ” எண்டு சிந்தாமாமி பிலாக்கணம் பாட, அம்பிகா மச்சாளுக்கு நெஞ்சு பக்கு பக்கெண்டு அடிக்க தொடங்கீட்டுது. ரா முழுக்க அவளுக்கு பயத்தில நித்திரை வரேல.

அடுத்த நாள் காலமை அஞ்சாறு ஏரியாக்களை றவுண்டப்பண்ணி ஆம்பிளையளையெல்லாம் வீடு வீடாய் போய் சாய்ச்சு கொண்டு நெல்லியடி மகாத்மா தியேட்டருக்கு கொண்டு போனாங்கள். அங்கை சுகுமார் எண்ட ஆமிப் பெரியவன் வந்து கூட்டம் வைச்சான்.”இங்கை இருக்கிற ஆக்கள் எல்லாரும் எல் ரி ரி ஆக்கள் இல்லையெண்டு எனக்கு தெரியும். ஆனா நேற்று என்ன நடந்தது எண்டு உங்கள் எல்லாருக்கும் தெரியும். எங்கடை அஞ்சு ஜவான்களை எல் ரி ரி ஆக்கள் சுட்டு போட்டாங்கள். நீங்கள் அவங்களிட்டை போய் சொல்லுங்கோ, இப்பிடியே போனால் இதாலை அஃபெக்டாகிறது அப்பாவி சனங்கள் நீங்கள்தான்.” எண்டு அந்த கூட்டத்திலை அவன் சொல்லியனுப்பினான். செரியான செக்குயூறிட்டி இல்லாமல் ஆமிக்காறரை வெளிக்கிட்டு திரிய கூடாதெண்டும் ஓடர் போட்டான். அதுக்கு பிறகு பெரிசாய் ஒண்டும் நடக்கேல.

அம்பிகா மச்சாளும் பயம் தெளிஞ்சு நோமலுக்கு வந்திட்டா. ஆனா அண்டைக்கு நடந்ததை மட்டும் ஒருத்தருக்கும் சொல்லேலை. இடைக்கிடை தகப்பனுக்கு மட்டும் சொல்லுவம் எண்டு உன்னுவாள் ஆனா ஏதுமொரு தடங்கல் வந்திடும். பேந்து அதை கைவிட்டுட்டாள். அதோடை அண்டைக்குப் பிறகு சற்குணம்மாமா என்ன அலுவலெண்டாலும் அதை விட்டு போட்டு அம்பிகா மச்சாளை ரியூசனிலை இருந்து கூட்டிக்கொண்டு வந்திட்டுத்தான் மிச்ச வேலை பாப்பார்.

000000000000000000000000000

ஜே ஆர் போய் பிரேமதாசா வந்து இந்தியன் ஆமியெல்லாம் மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு போக யாழ்ப்பாணத்தை இயக்கம் எடுத்துட்டுது. அம்பிகா மச்சாளும் ஏயெல் சோதனை எடுத்து திறமாய் பாஸ் பண்ணி, என்ஜினியரிங் கிடைச்சு பெரதேனியா கம்பசுக்கு போய் அஞ்சுவரியம் படிச்சு ஒரு எஞ்சினியராகி, அவளுக்கு சற்குணம் மாமா  ஒரு எஞ்சினியர் மாப்பிளையை பாத்து எக்கச்சக்கமாய் சீதனமும் கொடுத்து கலியாணம் கட்டி வைச்சு ஒரு பொம்பிளைப்பிள்ளையும் பிறந்து, அந்த பிள்ளைக்கு ‘வைதேகி ‘ எண்ட பேரும் வைச்சு சிந்தாமாமியும் சற்குணம்மாமாவும் செல்லம் கொஞ்சேக்கைதான் ரணிலும் தம்பியும் ஒரு ஆக்ரிமெண்ட்  சைன் பண்ணிச்சினம். இந்தநேரம் வைதேகி  ஓயெல் படிக்கிறாள். தேப்பனுக்கு கொழும்பிலை வேலை. தாய்க்கு யாழ்ப்பாணத்திலை வேலை. வைதேகியை சின்னனிலை சற்குணம் மாமாதான் ஸ்கூலுக்கும் ரியூசனுக்கும் கொண்டே விட்டு ஏத்திக் கொண்டு வாறவர். பிறகு அம்பிகா மச்சாள் மோளுக்கு சைக்கிள் எடுத்து குடுத்துப் பழக்கி அவள் இப்ப பருத்தித்துறை மெதடிஸ்ற்ருக்கும் வதிரி பீக்கொன் ரியூசனுக்கும் சைக்கிள்ள தான் போய் வாறாள். வைதேகியும் அம்பிகா மச்சாளைப் போலை அம்சமான பெட்டைதான். அதாலைதான் இப்ப ஒரு சின்ன பிரச்சனை.

0000000000000000000000000000

மகிந்தா ராஜபக்ஸ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிஞ்சு போச்சுது எண்டு அறிவிச்சாலும் அறிவிச்சார் யாழ்ப்பாணத்துக்கு மோட்டசைக்கிள் வந்து குவியத்தொடங்கீட்டுது. வெளிநாட்டு காசு ஒருபக்கம், தாய்தேப்பன் கடன்பட்டு ஒருபக்கம், இங்காலை லீசிங்காலை ஒருபக்கமெண்டு இளந்தாரிப் பெடியள் எல்லாம் இப்ப மோட்டசைக்கிள் எடுத்து முறுக்கி கொண்டு திரியுதுகள். இந்த மாதிரி முறுக்கி கொண்டு திரியுறதுகளிலை ஒராள் தான் எங்கடை ஹீரோ ‘ரஜனிமுருகன்’. அவரைப் பாத்தாலே ஒரு மார்க்கமாய்த்தான் இருப்பார். காதிலை ஒரு கடுக்கன்.  சுவரிலை கரிகட்டியாலை கீறின மாதிரி கோடு கோடாய் ஒதுக்கின தாடி. கைமூட்டிலை ரெண்டிலையும் பச்சை குத்தி கூலிங்கிளாசும் அடிச்சு மாடு சூப்பின பனங்கொட்டை  மாதிரித் தலையோடைதான் மைனர் குஞ்சு மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு  திரிவார்.  பெட்டையள் ஆரும் சைக்கிளிலை வந்தால் காணும், மைனர் குஞ்சு மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு போய் மடக்கி ஒரு வெட்டு வெட்டுவார். அதுக்கு சில பெட்டையள்  சைக்கிளோடை விழுந்து போவாளுகள். உப்பிடித்தான் அண்டைக்கு வைதேகி ரியூசன் கிளாஸ் முடிஞ்சு வரேக்கை எங்கடை மைனர் குஞ்சு ரஜனிமுருகன்  மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு போய் மடக்கி வெட்டேக்குள்ளை பிள்ளை சைக்கிளோடை தடக்குப்பட்டு விழுந்திட்டாள். அதுதான் செய்தாரெண்டால் வைதேகி யைப் பாத்து,

” ஹலோ பியூட்டி என்னை லவ் பண்ணுறியா? நாளைக்கு உன்ரை முடிவை சொல்லாட்டில் உன்னை கட்டிபிடிச்சு கிஸ் அடிப்பன்” எண்டு இவர் சொல்ல, பிள்ளை அழுதழுது போய் நடந்ததையெல்லாம் போய் அம்பிகா மச்சாளுக்கு சொல்ல , ” நாளைக்கு எந்த நேரம் கிளாஸ் முடியும்”? எண்டு அம்பிகா மச்சாள் பிள்ளையை பாத்து கேட்டா. பிள்ளையும் அம்மாதானேயெண்டு எல்லாத்தையும் விட்டுவீதியாய் சொல்லிச்சுது. ” சரி நீ பயப்பிடாமல் நாளைக்கு கிளாசுக்கு போ. எல்லாத்தையும் நான் பாத்து கொள்ளுறன்” எண்டு அம்பிகா மச்சாள் சொன்னா.

அடுத்த நாள் அம்பிகா மச்சாள் வேலையாலை வந்து சாறியை கழட்டி போட்டு சல்வாரை போட்டுக்கொண்டு தன்ரை ஸ்கூட்டியை முறுக்கிக்கொண்டு வெளிக்கிட்டா. இவா ரியூட்டறியடிக்கு போக அங்கை பிள்ளையள் எல்லாம் கிளாஸ் முடிஞ்சு போய் கொண்டிருக்குதுகள். ஆனா வைதேகியை மட்டும் காணேலை. அம்பிகா மச்சாள் பாதகளிப்பட்டு கிளாஸ் முடிஞ்சு வந்து கொண்டிருந்த பிள்ளையளை மறிச்சு, “வைதேகி எங்கை”? எண்டு கேட்டா. அதிலை ஒரு பிள்ளை, “அவா அந்த ஒழுங்கைக்குள்ளாலை போறா” எண்டு கையைக் காட்டிச்சுது. அம்பிகா மச்சாளும் கையோடை கம்மாறிசாய் அந்த ஒழுங்கைக்குள்ளாலை  ஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு போக அங்கை எங்கடை மைனர் குஞ்சு ரஜனிமுருகன் தன்ரை மோட்டசைக்கிளை நிப்பாட்டிப் போட்டு வைதேகியை மறிச்சு செல்லம் பொழிஞ்சு கொண்டு நிக்கிறார். அம்பிகா மச்சாளுக்கு உச்சியிலை இருந்து உள்ளங்கால் வரை பத்திக்கொண்டு வந்துது. ஒரு கதையுமில்லை. ஸ்கூட்டியை ஓரமாய் நிப்பாட்டிப் போட்டு சல்வாரின்ரை சோலை எடுத்து இடுப்பில கட்டினா. மைனர் குஞ்சு நிண்டு நிதானிக்கிறதுக்குள்ளை அம்பிகா மச்சாள் காலைத்தூக்கி மைனர்  குஞ்சருக்கு  கழுத்தாங்குத்தியிலை ஒண்டு இடுப்பில ஒண்டு எண்டு ரெண்டு ஷொட் குடுத்தா. ஆள் திகைச்சுப் போய் சுருண்டு விழுந்தார். விழுந்தகையோடை எழும்பி மோட்டச்சைக்கிளிலை  ஏறி , “இருங்கோடி ரெண்டு பேரையும் இண்டைக்கிரவுக்கு தூக்கிறன்”. எண்டு  சிலுப்பிக்கொண்டு ஒரு முறுக்கு முறுக்கிக்கொண்டு மெயின்றோட்டுக்குப் பறந்தார்.

இவர் பறந்தநேரம் இவற்றை கெடுகாலத்துக்கு கள்ள மண் ஏத்தி கொண்டு வந்த கன்ரரை பொலிஸ் விட்டுக்கலைக்க, கன்ரர்காறன் விண்மண்ணாய் மெயின் றோட்டாலை வந்தான். மெயின் றோட்டுக்கு பறந்த மைனர் குஞ்சுவாலை ஸ்பீட்டை கொன்றோல் பண்ணேலாமல் போச்சுது. உடனை கன்ரரோடை முட்டுப்படாமல் விடுறதுக்காய் டக்கெண்டு ஒரு வெட்டு  வெட்டினார். அது இழுத்துக்கொண்டு போய் றோட்டுக்கரை லைற் போஸ்ரோடை தூக்கி ஒத்திச்சுது.  மைனர் குஞ்சர்  லைற் போஸ்ரோடை நெஞ்சடிபட்டு தெறிச்சு விழ மோட்டச்சைக்கிள் பக்கத்து வயலுக்கை விழுந்து சிதறிச்சுது. இந்த சீனை பாக்கேக்குள்ளை ஒரு இங்கிலீசு பட ஷொட்டை பெரிய திரையிலை பாத்த மாதிரி கிடந்தது.

இந்த விசயமெல்லாம் அம்பிகா மச்சாளுக்கு தெரியாது. அவா மகளை கூட்டிக்கொண்டு அடுத்த பக்கத்தாலை வீட்டை போய் சேந்திட்டா. இராமுழுக்க தாய்க்கும் மோளுக்கும் பயத்தில நித்திரையே வரேல. அடுத்த நாள்தான் ‘மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி’ எண்ட நியூஸை தினக்குரல் பேப்பரிலை படிச்சாப்பிறகுதான் அம்பிகா மச்சாளுக்கு ரஜனிமுருகன் செத்தது தெரியும். அண்டைக்கு வேலைக்கு லீவு போட்டுட்டு பிள்ளையை வெளிக்கிடுத்தி ஸ்கூட்டியிலை ஸ்கூலிலை விட்டு போட்டு பின்னேரம் போய் ஏத்திக்கொண்டு வந்தா. பேந்து ரியூட்டறிக்கும் கூட்டி கொண்டு போய் விட்டு ஏத்திக்கொண்டு வந்தா. பிறகு தன்னோடை வேலை செய்யிற ஆக்கள் கொஞ்சப்பேரோடை ரெலிபோனிலை கதைச்சு இப்ப ஆர் நல்லாக கராட்டி  பழக்க கூடிய ஆள் எண்டு விசாரிச்சா.எல்லாரும் பருத்தித்துறை இரத்தினசோதி  மாஸ்ரரைத்தான் சொல்லிச்சினம். அடுத்த நாள் பின்னேரம் அம்பிகா மச்சாள் வைதேகியை கூட்டிக்கொண்டு இரத்தினசோதி  மாஸ்ரரை சந்திக்க வெளிக்கிட்டா.

இராகவன் -இலங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

மைனர் குஞ்சு நிண்டு நிதானிக்கிறதுக்குள்ளை அம்பிகா மச்சாள் காலைத்தூக்கி மைனர்  குஞ்சருக்கு  கழுத்தாங்குத்தியிலை ஒண்டு இடுப்பில ஒண்டு எண்டு ரெண்டு ஷொட் குடுத்தா.

மைனர் குஞ்சிலயும் ஒன்று போட்டிருக்க்லா:10_wink:ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கும் கீழுள்ள செய்திக்கும் தொடர்பு உள்ளது என்று எனக்குப் புரிந்தது!

 

Link to comment
Share on other sites

'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2017 at 2:36 PM, Innumoruvan said:

'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம் :)

இன்னுமொருவன் குறிப்பிடும்மட்டும் நானும் கவனிக்கவேயில்லை!!tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/04/2017 at 3:22 PM, கிருபன் said:

இன்னுமொருவன் குறிப்பிடும்மட்டும் நானும் கவனிக்கவேயில்லை!!tw_blush:

நானும் உந்தப் பெயருக்காகவே கதையைப் படித்தேன்...., எந்தப் பெயரால் அழைத்தால் என்ன ரோஜா மணக்கும். இந்தக் கதையும் மணக்குது....!  tw_blush:

Link to comment
Share on other sites

"ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு".   ?????  தீரிஸ்ராரில பிளட் இருந்திச்சா??? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.