Jump to content

பவானி மச்சாள் – இராகவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பவானி மச்சாள் – சிறுகதை – இராகவன்

பவானி மச்சாள்

 

IMG_20170401_011329_processed-1-1024x603

எங்கடை ஊரிலை இருக்கிற ஒரேயொரு முற்போக்குவாதி யாரெண்டு கேட்டால் அப்பவும் இப்பவும் எப்பவுமே அது சற்குணம் மாமாதான். அவரோடை ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையான அம்பிகா மச்சாள் ஓயெல் படிச்சு கொண்டிருந்த மூட்டம் ஒரு நாள் ,

“அப்பா நான் கராட்டி பழகப் போறன்” எண்டு சொன்னாள்.

“அதுக்கென்ன பிள்ளை” எண்டு சற்குணம் மாமா சர்வசாதாரணமாய் சொல்ல சிந்தா மாமிதான் ஆட்லெறி செல் விழுந்து வெடிச்சமாதிரி அதிர்ந்து போனா.

“இதென்ன நாசமறுப்பு. ஒரு குமர்பிள்ளை கதைக்கிற கதையைப் பார். கராட்டி பழகப் போறாவாம் கராட்டி. அதுக்கு இவரும் ஒத்தூதுறார்.” எண்டு சிந்தாமாமி அளப்பரிக்க தொடங்கீட்டா.

“அதுக்கு நீயேனப்பா அளப்பரிக்கிறாய்? அவள் ஆசைப்படுறாள் பழகட்டன். இந்தக்காலத்திலை ஆம்பிளையோ பொம்பிளையோ ஆயகலைகள் அறுபத்திநாலும் தெரிஞ்சிருக்கவேணும். அதுகும் எங்களுக்கிருக்கிறது ஒரே பிள்ளை. அவள் ஆசைப்படுகிறதுகளை செய்யாமல் விடுறதே?”

எனச் சற்குணம் மாமா மறுத்தானடிக்க, சிந்தாமாமிக்கு பத்திக்கொண்டு வந்துது.

“என்னப்பா பேய்க்கதை கதை கதைக்கிறியள்? இப்ப நோர்மலாய் ஒரு பொம்பிளைப்பிள்ளைக்கு மாப்பிளை எடுக்கிறதே வலு கஷ்டமாய் கிடக்கு. அதுக்கை கராட்டியும் பழகினால் இவளுக்கு எங்கை மாப்பிள்ளை எடுக்கிறது? அதுகும் கராட்டி பழகின பெட்டையெண்டால் ஒருத்தனும் கிட்ட வரமாட்டான். பிறகு நாங்கள்தான் தலையிலை கைவைச்சுக்கொண்டு நிக்க வேணும் “.

“போடி விசர்கொந்தி!! அவளுக்கு கராட்டி பழகின ஒருத்தனை மாப்பிளையாய் எடுத்திட்டுப் போறதுக்கு ஒப்பாரி வைச்சுக்க கொண்டு நிக்கிறதே? எனக்கெல்லாம் தெரியும் நீ உன்ரை அலுவலைப் பாரடியாத்தை”. என்று சற்குணம் மாமா விடாப்பிடியாய் நின்றார்.

“ஓமோம் !! கராட்டி எடுத்தவனை மாப்பிளை எடுத்தால் ரெண்டுபேரும் கையைக்காலை விசுக்கிக்கொண்டு நிக்க நல்ல சோக்காய் இருக்கும். அயலட்டை சனங்கள் பிறீயாய் சண்டைப்படம் பாக்குங்கள். நல்லாய்தானிருக்கும்.”

சிந்தாமாமியும்  விட்டுக்குடுக்கேலை.

“அதையெல்லாம் பிறகு பாப்பம். நீ வாயை மூடிக்கொண்டு கொஞ்சம் சும்மா இரடியப்பா” சற்குணம் மாமா தன்ர முடிவிலை உடும்புப்பிடியாய் நிண்டார்.

“தேப்பனும் மோளும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனெக்கென்ன,” சிந்தாமாமியாலை அதுக்குப் பிறகு நிண்டு பிடிக்க முடியேலை. அவாவுக்கு தந்திரோபாயப் பின்வாங்கலைத் தவிர வேற வழியில்லை.

வடமாராட்சிக்குள்ளை இப்ப திறமான கராட்டி மாஸ்ரர் ஆரெண்டு விசாரிச்சுக் கடைசியில சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரரிட்டை அம்பிகா மச்சாளை கராட்டி பழக அனுப்பிறதெண்டு சற்குணம் மாமா முடிவெடுத்தார்.

00000000000000000000000000000

ஒரு சுபயோக சுபதினத்தில சற்குணம் மாமா அம்பிகா மச்சாளை சைக்கிள்ளை ஏத்திக்கொண்டு பருத்தித்துறையிலிருந்த சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் வீட்டுக்குப் போனார். நல்ல எழும்பின தோற்றத்திலை இருந்த மாஸ்ரரைப் பாத்தோண்ண “உந்தாள் நல்லவடிவாய் பிள்ளைக்கு குத்துக்கராட்டி பழக்கும்” என்ற நம்பிக்கை சற்குணம் மாமாவுக்கு வந்திட்டுது.

“மாஸ்ரர் நாங்கள் கரவெட்டியிலயிருந்து வாறம். இது என்ரை மகள் அம்பிகா. கராட்டி பழக விரும்பிறா. நீங்கள்தான் வடிவாய் பழக்குவீங்கள்  எண்டு எல்லாரும் சொல்லீச்சினம். அதுதான் மகளை கூட்டிக்கொண்டு வந்தனான்.

எண்டு சற்குணம் மாமா சொன்னதைக் கேட்டு சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் ஒருக்கால்  திகைச்சுத்தான் போனார். இதுவரைக்கும் ஒரு பொம்பிளைப்பிள்ளையும் கராட்டி பழகப்போறன் எண்டு அவரிட்டை வந்ததேயில்லை. எண்டாலும்  அம்பிகா மச்சாளின்ரை ஆர்வத்தையும் அதுக்கு சற்குணம் மாமா குடுக்கிற சப்போர்ட்டையும் பாத்து சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் அம்பிகா மச்சாளுக்கு கராட்டி பழக்கிறதுக்கு சம்மதிச்சிட்டார். பிறகு அதுக்கேற்ற உடுப்புகளும் தைச்சு அம்பிகா மச்சாள் கராட்டி பழகத்தொடக்கிட்டாள். திங்கள் ,புதன் ,வெள்ளி பின்நேரம் அஞ்சு தொடக்கம் ஆறு வரை வகுப்பு நடக்கும். அம்பிகா மச்சாள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலதான் படிச்சுக்கொண்டிருந்தாள். ராஜரட்ணத்தார் நடத்தின மொடோனுக்கும் ரியூசனுக்கு போறவள். சற்குணம் மாமா  ராஜரட்ணத்தாரோடை வலுஒட்டு. அதால திங்கள் ,புதன் வெள்ளியில ரியூசன் ரைம்ரேபிளையும் ஒருமாதிரி அம்பிகா மச்சாளுக்கேத்தமாதிரி அஜெஸ்ற் பண்ணிப் போட்டார். அவள் ஸ்கூல் முடிஞ்சு வந்து ரியூசனுக்கும் ஓடி நாலுமணியோடை அங்கையிருந்து  வெளிக்கிட்டு ரியூசன் வாசலில, மூண்டு மாசத்துக்கொருக்கால் கழுவி பூட்டின   ஹம்பர்சைக்கிளோட காத்து நிக்கிற சற்குணம் மாமாவோட ஏறிப்போய் துரைரத்தினம் மாஸ்ரர் வீட்டில கராட்டி பழகிட்டுத் திரும்ப சற்குணம் மாமாவோட சைக்கிள்ள ஏறி வீடு வந்து இறங்க இரவு ஏழு மணியாகிவிடும்.

ஒருநாள் கராட்டி வகுப்பு முடிஞ்சாப்போல, “எப்பிடி மாஸ்ரர் என்ரை மகள் வடிவாய் பழகிறாவோ?” எண்டு கேக்க, “இதென்ன ஐஸே உம்மட கேள்வி? ஆம்பிளைப்பிள்ளையள் கூட நான் சொல்லிக்கொடுக்கிறதை கொஞ்சம் தட்டுத்தடுமாறித்தான் பிடிப்பாங்கள். ஆனால் உம்மடை மகளுக்கு ஒருக்கால் காட்டிக்கொடுத்தால் போதும் அப்பிடியே பக்கெண்டு பிடிச்சுடுவா. நுணுக்கம் தெரிஞ்ச பிள்ளை. கெதிலயெல்லோ பிளாக் பெல்ட் எக்ஸாம் எடுத்துடுவா. கவலைப்படாதையும்.” எண்டு புளுகித்தள்ள சற்குணம் மாமா பூரிச்சுப்போனார்.

000000000000000000000000000000

இப்பிடியே ஒரு மூண்டு மாசம் எல்லாமே நல்லாய்தான் போய்கொண்டிருந்திது. நாலாவது மாசம்தான் ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ தொடங்கிச்சுது. அதுக்கு பிறகு எல்லாமே குழம்பி போச்சுது. சற்குணம் மாமா குடும்பம் கரவெட்டியிலை இருந்து வரணிக்கு இடம்பெயர்ந்தோடிச்சுது. வடமராட்சி முழுக்க ஆமிக்கட்டுப்பாட்டுக்குள்ளை வந்து பிறகு நெல்லியடி சென்றல் ஸ்கூல் ஆமிக்காம்பை கரும்புலி மில்லர் அடிச்சு ராஜீவ் காந்தி மிராஜ் பிளேனுகளில சாப்பாட்டு பார்சலுகளைக் கொண்டந்து போட்டு சித்து விளையாட்டு காட்டி, அதுக்குப்பிறகு ராஜிவ் காந்தி கொழும்புக்கு வந்து ஜேஆரோட இலங்கை இந்திய ஒப்பந்தத்திலை கையெழுத்து போட்டு, இலங்கை ஆமி போய் அமைதிப்படை இந்த மண்ணிலை காலடி வைச்சாப்போல தான் சற்குணம் மாமா குடும்பம் கரவெட்டிக்கு திரும்பி வந்தினம்.

இதுக்குள்ளை அம்பிகா மச்சாளுக்கு ஓயெல் சோதனைக்கும் காலம் வந்துட்டுது. அவளுக்கு இப்ப கராட்டி பழகிற மூட் இல்லை. இதால சந்தோசப்பட்ட ஒரேயொருஆள் சிந்தாமாமிதான். சற்குணம் மாமாவும் , ‘பிள்ளை முதல் ஓயெல் சோதனையை எழுதட்டும். அதுக்குப்பிறகு எல்லாத்தையும் கவனிப்பம்’ எண்டு விட்டுட்டார். அம்பிகா மச்சாளும் ஒருமாதிரி ஓயெல் எழுதி திறமாய் பாஸ் பண்ணி ஏயெல்ல மற்ஸ் படிக்க தொடங்கீட்டாள். அப்பவும் அவளுக்கு கராட்டி பழக மூட் வரேல்ல. தட்டித்தவறி அவளுக்கு மூட் வந்தாலும் கராட்டி பழகிற மாதிரி ஊர்நிலவரமும் இல்லை. எல்லாம் தலைகீழாய் மாறீட்டுது . முதல்ல புலிப்பெடியளும் இந்தியனாமியும் தேன்நிலவு  கொண்டாடித் திரிஞ்சினம். பிறகு ரெண்டு கன்னையும் ஊடல் கொண்டாடிச்சினம். குமரப்பா புலேந்தியம்மானோட  பன்ரெண்டு பேர் குப்பியடிச்சு செத்தாப்போல ஊடல் முத்தி முறிக்கத்தொடங்கி கடைசியில வெட்டுப்பகையில முடிஞ்சுது. ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு இந்தியன் ஆமியோட ஒட்டிக்கொண்டு புலிப்பெடியளை மண்டையில போட பிறகு, அவங்கள் இவையளை மண்டையில போட ஊரெல்லாம் அதகளப்பட்டுது. இதுக்குள்ள உந்த இந்தியன் ஆமிக்காறர்முழுப்பேரும் செரியான பொம்பிளை கள்ளராய் இருந்தாங்கள். கொஞ்சம் வடிவான பெடடையாளை கண்டால் கண்வைச்சுடுவாங்கள். அம்பிகா மச்சாளும் பெயருக்கேத்த மாதிரி கண்ணுக்கை குத்துற வடிவான பெட்டைதான்.

ஒருநாள் நெல்லியடி சயன்ஸ்சென்ரர் ரியூசன் முடிஞ்சு அம்பிகா மச்சாள் சைக்கிள்ள வரேக்கை ஒரு சீக்கியன் கண்வைச்சுட்டான். அவன் சரியான பொம்பிளை கள்ளன். அவனுக்கு பூனைக்கண்ணன் எண்டு சனம் பட்டம் வைச்சிருந்தது. அந்தப் பூனைக்கண்ணன் எப்பிடியாவது அம்பிகா மச்சாளை மடக்கிறதெண்டு பிளான் பண்ணி போட்டான். வழமையாய் ரியூசன் முடியேக்குள்ள சற்குணம் மாமா வாசல்ல காத்துக்கொண்டிருந்து அம்பிகா மச்சாளை கூட்டிக்கொண்டு வருவார். அதுவும் அவளை சைக்கிள்ள முன்னுக்கு போகவிட்டு சற்குணம்மாமா பொடிக்காட் மாதிரி பின்னுக்கு தன்ரை சைக்கிள்ளை வருவார். இதுதான் பூனைக்கண்ணனுக்கு செரியான இடைஞ்சலாய் இருந்துது. எப்ப சற்குணம் மாமா இல்லாமல் அவள் தனிய வருவாள் எண்டு பூனைக்கண்ணனும் கண்ணுக்குள்ளை எண்ணை விட்டுக் கொண்டு அலையத்தொடங்கீட்டான்.

ஒருநாள் சற்குணம் மாமாவுக்கு எதோ அவசர அலுவல். அம்பிகா மச்சாளை பின்னேரம் ரியூசனால கூட்டிக்கொண்டு வர ஏலாமல் போச்சுது.

“பிள்ளை !இண்டைக்கு பின்னேரம் நான் உன்னை ரியூசனால கூட்டிக்கொண்டு வரேலாது. எனக்கு முக்கியமான வேலை கிடக்கு. நீ இண்டைக்குப்பாட்டுக்கு உன்ரை கிளாஸ் பிள்ளையளோட கூடிக்கொண்டு வாவன்”

எண்டு சொல்லிட்டு வெளிக்கிட்டார். அதை கேட்டு கொண்டு நிண்ட சிந்தா மாமி ,

“காலங்கெட்டு கிடக்கு. பிள்ளையை கூட்டிக்கொண்டு வாறதைவிட உங்களுக்கென்ன ஆத்துப்பறந்த வேலை? பின்னாலை ஏதாவது இசக்கு பிசக்காய் நடந்தால் என்ன செய்யிறதப்பா?” எண்டு சிந்தாமாமி குறுக்கால பாய, சற்குணம்மாவுக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்திக்கொண்டு வந்துட்டுது.

“மனுசன் வெளிக்கிடேக்கை பல்லி சொல்லுற மாதிரி ஒருக்காலும் கதையாதையப்பா. அவளுக்கு எல்லாம் தெரியும். அதொண்டும் நடக்காது.” எண்டு பொரிஞ்சு தள்ளிப் போட்டு தன்ரை அலுவலாய் போட்டார்.

அம்பிகா மச்சாளுக்கு என்ன நேரம் ரியூசன் முடியிறதெண்டு பூனைக்கண்ணனுக்கு வடிவாய்த்தெரியும். அதுகும் அண்டைக்கு சற்குணம் மாமாவை காணேல எண்ட உடன என்னவிதப்பட்டெண்டாலும் அம்பிகா மச்சாளை மடக்கி போடவேணுமெண்டு தன்ரை நாலு கூட்டாளியளையும் கூட்டிக்கொண்டு அவளுக்கு பின்னாலை போன பூனைக்கண்ணனை, ஒரு சமசியத்திலை  ‘ஜெராட்’ எண்ட எல்ரிரி  காறனும் பின்னாலை போனது ஒருகுருவிக்கும் தெரியாது. அந்தமூட்டம் இந்தியன்ஆமியை  குச்சொழுங்கைக்குள்ளை வைச்சு ‘மண்டையிலை போட்டு’ அவையின்ரை ஆயுதங்களை எடுத்து கொண்டு ஓடுறதிலை ஜெராட் தான் பேமஸ்.

அம்பிகா மச்சாளோட கூடியந்த சிநேகித பெட்டையள் எல்லாம் நாற்சந்தியிலை ஆளுக்கொரு பக்கமாய் பிரிஞ்சு போயிட்டினம். அம்பிகா மச்சாள் தனிச்சு போனாள். அவள் குளத்தடி றோட்டாலை திரும்பி குச்சொழுங்கைக்குள்ள சைக்கிளை விட ,பூனைக்கண்ணன் குறூப் எதிர்ப்பக்கத்தால வந்து அம்பிகா மச்சாளை நிப்பாட்டிச்சினம். ‘இண்டைக்கு என்னை துலைக்கத்தான் போறாங்கள்’. எண்டு அவளுக்கு பயம் தொடுட்டுட்டுது. எண்டாலும் அவள் பயத்தை முகத்தில காட்டேல. பூனைக்கண்ணன்  முன்னால நிக்க மற்றவங்கள் அம்பிகா மச்சாளை ரவுண்ட்அப் பண்ணீட்டாங்கள். பூனைக்கண்ணன் அவளை பாத்து “எல்ரிரி” ? எண்டு கேக்க அவள் “நோ ஸ்ருடன்ற்”  எண்டாள். அவன் அதை பறுவாய் பண்ணாமல் “பொம் ….பொம், செக்கிங்” எண்டு அவளின்ரை நெஞ்சுப்பக்கமாய் கைவைக்க வெளிக்கிட்டான். அம்பிகா மச்சாளுக்கு என்ன நடக்க போகுதெண்டு கிளியராய் விளங்கீட்டுது. அவள் ஒன்றுக்கும் யோசிக்காமல் சைக்கிளை கீழை போட்டாள். சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரறிட்டை பழகின கராட்டி அப்பத்தான் வேலை செய்ய தொடங்கீச்சுது. கண்மூடி முழிக்கிறதுக்குள்ளை காலைத்தூக்கி குயிக்காய் சுழண்டு அஞ்சுபேருக்கும் அடிவயித்துக்கு கீழை திறம் ஷொட் ஒண்டு குடுத்தாள். அவையள்  இதை கொஞ்சம் கூட எதிர்பாக்கேல. எல்லாரும் கையளை கீழை பொத்திக்கொண்டு விழுந்தினம். பேந்து எப்பிடி சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டை வந்தாள் எண்டு அவளுக்கே தெரியாது.

அம்பிகா மச்சாள் விழுந்தடிச்சு வீட்டுக்குள்ளை போக நாலைஞ்சு வெடி சத்தம் கேட்டுது. அவளுக்கு வயித்தை கலக்கிச்சுது. அப்ப தாய்க்காறிதான் வீட்டிலை  நிண்டவ. அவாவிட்டை  நடந்ததை சொன்னால் அவா பதகளிச்சு  ஊரைக்கூட்டிபோடுவா. பேந்து கதை வெளியாலை போய் சனம் ஒண்டுக்குப்  பத்தாய் கதைக்குமெண்டு அம்பிகா மச்சாள் மூச்சும் காட்டேல. அவளுக்கு ரென்சனிலை செரியாய் வேத்து கொட்டீச்சுது. கைகாலெல்லாம் தன்ரை பாட்டுக்கு நடுங்கீச்சுது. நல்லாய் பொழுது பட்டா பிறகுதான் சற்குணம் மாமா வந்து சேர்ந்தார்.

வந்ததும் வராததுமாய்,”பிள்ளை ரியூசனால வந்திட்டாளோ?” எண்டுதான் முதல்ல கேட்டார். “ஓமோம்!வந்திட்டாள்”. எண்டு குசினிக்குள்ளை இருந்த சிந்தாமாமி சவுண்ட் விடத்தான் அவருக்கு நெஞ்சுக்குள்ளை தண்ணி வந்துது. எண்டாலும் ஆள் ரென்சனாய்த்தான் இருந்தார். “பிள்ளை நீ வரேக்குள்ள மண் ஒழுங்கையாலேயே வந்தனி”? எண்டு அம்பிகா மச்சாளை பாத்து கேட்டார். அவள் ஓமெண்டு தலையாட்டினாள். “அப்ப நீ வந்தாப் போலதான் நடந்திருக்கு” எண்டு சற்குணம் மாமா சொல்லுறதுக்கிடையிலை சிந்தாமாமி பதக்களிச்சு கொண்டு குசினிக்குள்ளாலை வந்திட்டா. “என்னப்பா என்ன நடந்தது”? “இப்ப பின்னேரம் மணல் ஒழுங்கையுக்குள்ளை வைச்சு இந்தியன் ஆமி அஞ்சு பேரை இயக்கப் பொடியள் மண்டையில போட்டுட்டு அவங்கடை ஆயுதங்களை எடுத்து கொண்டு ஓடிட்டாங்களாம். அந்த ஏரியா முழுக்க இந்தியன் ஆமி குவிஞ்சு போய் நிக்கிறாங்கள். போன வந்த சனத்துக்கெல்லாம் நல்ல அடியாம். நான் இப்ப றோட்டு சுத்திதான் வந்தநான். எண்டு சற்குணம்மாமா சொன்னாப் போலதான் அம்பிகாமச்சாளுக்கு நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சுது.

“ஐயோ இவள் பிள்ளை போய் வாற பாதையெல்லே? அழிவார் சனத்தை நிம்மதியாய் இருக்க விட்டால்தானே. இக்கணம் நாளைக்கு இஞ்சாலை றவுண்டப்போ தெரியாது. என்ர தச்சந்தோப்பானே …….நீதானப்பா அவளை காப்பாத்தோணும் ” எண்டு சிந்தாமாமி பிலாக்கணம் பாட, அம்பிகா மச்சாளுக்கு நெஞ்சு பக்கு பக்கெண்டு அடிக்க தொடங்கீட்டுது. ரா முழுக்க அவளுக்கு பயத்தில நித்திரை வரேல.

அடுத்த நாள் காலமை அஞ்சாறு ஏரியாக்களை றவுண்டப்பண்ணி ஆம்பிளையளையெல்லாம் வீடு வீடாய் போய் சாய்ச்சு கொண்டு நெல்லியடி மகாத்மா தியேட்டருக்கு கொண்டு போனாங்கள். அங்கை சுகுமார் எண்ட ஆமிப் பெரியவன் வந்து கூட்டம் வைச்சான்.”இங்கை இருக்கிற ஆக்கள் எல்லாரும் எல் ரி ரி ஆக்கள் இல்லையெண்டு எனக்கு தெரியும். ஆனா நேற்று என்ன நடந்தது எண்டு உங்கள் எல்லாருக்கும் தெரியும். எங்கடை அஞ்சு ஜவான்களை எல் ரி ரி ஆக்கள் சுட்டு போட்டாங்கள். நீங்கள் அவங்களிட்டை போய் சொல்லுங்கோ, இப்பிடியே போனால் இதாலை அஃபெக்டாகிறது அப்பாவி சனங்கள் நீங்கள்தான்.” எண்டு அந்த கூட்டத்திலை அவன் சொல்லியனுப்பினான். செரியான செக்குயூறிட்டி இல்லாமல் ஆமிக்காறரை வெளிக்கிட்டு திரிய கூடாதெண்டும் ஓடர் போட்டான். அதுக்கு பிறகு பெரிசாய் ஒண்டும் நடக்கேல.

அம்பிகா மச்சாளும் பயம் தெளிஞ்சு நோமலுக்கு வந்திட்டா. ஆனா அண்டைக்கு நடந்ததை மட்டும் ஒருத்தருக்கும் சொல்லேலை. இடைக்கிடை தகப்பனுக்கு மட்டும் சொல்லுவம் எண்டு உன்னுவாள் ஆனா ஏதுமொரு தடங்கல் வந்திடும். பேந்து அதை கைவிட்டுட்டாள். அதோடை அண்டைக்குப் பிறகு சற்குணம்மாமா என்ன அலுவலெண்டாலும் அதை விட்டு போட்டு அம்பிகா மச்சாளை ரியூசனிலை இருந்து கூட்டிக்கொண்டு வந்திட்டுத்தான் மிச்ச வேலை பாப்பார்.

000000000000000000000000000

ஜே ஆர் போய் பிரேமதாசா வந்து இந்தியன் ஆமியெல்லாம் மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு போக யாழ்ப்பாணத்தை இயக்கம் எடுத்துட்டுது. அம்பிகா மச்சாளும் ஏயெல் சோதனை எடுத்து திறமாய் பாஸ் பண்ணி, என்ஜினியரிங் கிடைச்சு பெரதேனியா கம்பசுக்கு போய் அஞ்சுவரியம் படிச்சு ஒரு எஞ்சினியராகி, அவளுக்கு சற்குணம் மாமா  ஒரு எஞ்சினியர் மாப்பிளையை பாத்து எக்கச்சக்கமாய் சீதனமும் கொடுத்து கலியாணம் கட்டி வைச்சு ஒரு பொம்பிளைப்பிள்ளையும் பிறந்து, அந்த பிள்ளைக்கு ‘வைதேகி ‘ எண்ட பேரும் வைச்சு சிந்தாமாமியும் சற்குணம்மாமாவும் செல்லம் கொஞ்சேக்கைதான் ரணிலும் தம்பியும் ஒரு ஆக்ரிமெண்ட்  சைன் பண்ணிச்சினம். இந்தநேரம் வைதேகி  ஓயெல் படிக்கிறாள். தேப்பனுக்கு கொழும்பிலை வேலை. தாய்க்கு யாழ்ப்பாணத்திலை வேலை. வைதேகியை சின்னனிலை சற்குணம் மாமாதான் ஸ்கூலுக்கும் ரியூசனுக்கும் கொண்டே விட்டு ஏத்திக் கொண்டு வாறவர். பிறகு அம்பிகா மச்சாள் மோளுக்கு சைக்கிள் எடுத்து குடுத்துப் பழக்கி அவள் இப்ப பருத்தித்துறை மெதடிஸ்ற்ருக்கும் வதிரி பீக்கொன் ரியூசனுக்கும் சைக்கிள்ள தான் போய் வாறாள். வைதேகியும் அம்பிகா மச்சாளைப் போலை அம்சமான பெட்டைதான். அதாலைதான் இப்ப ஒரு சின்ன பிரச்சனை.

0000000000000000000000000000

மகிந்தா ராஜபக்ஸ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிஞ்சு போச்சுது எண்டு அறிவிச்சாலும் அறிவிச்சார் யாழ்ப்பாணத்துக்கு மோட்டசைக்கிள் வந்து குவியத்தொடங்கீட்டுது. வெளிநாட்டு காசு ஒருபக்கம், தாய்தேப்பன் கடன்பட்டு ஒருபக்கம், இங்காலை லீசிங்காலை ஒருபக்கமெண்டு இளந்தாரிப் பெடியள் எல்லாம் இப்ப மோட்டசைக்கிள் எடுத்து முறுக்கி கொண்டு திரியுதுகள். இந்த மாதிரி முறுக்கி கொண்டு திரியுறதுகளிலை ஒராள் தான் எங்கடை ஹீரோ ‘ரஜனிமுருகன்’. அவரைப் பாத்தாலே ஒரு மார்க்கமாய்த்தான் இருப்பார். காதிலை ஒரு கடுக்கன்.  சுவரிலை கரிகட்டியாலை கீறின மாதிரி கோடு கோடாய் ஒதுக்கின தாடி. கைமூட்டிலை ரெண்டிலையும் பச்சை குத்தி கூலிங்கிளாசும் அடிச்சு மாடு சூப்பின பனங்கொட்டை  மாதிரித் தலையோடைதான் மைனர் குஞ்சு மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு  திரிவார்.  பெட்டையள் ஆரும் சைக்கிளிலை வந்தால் காணும், மைனர் குஞ்சு மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு போய் மடக்கி ஒரு வெட்டு வெட்டுவார். அதுக்கு சில பெட்டையள்  சைக்கிளோடை விழுந்து போவாளுகள். உப்பிடித்தான் அண்டைக்கு வைதேகி ரியூசன் கிளாஸ் முடிஞ்சு வரேக்கை எங்கடை மைனர் குஞ்சு ரஜனிமுருகன்  மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு போய் மடக்கி வெட்டேக்குள்ளை பிள்ளை சைக்கிளோடை தடக்குப்பட்டு விழுந்திட்டாள். அதுதான் செய்தாரெண்டால் வைதேகி யைப் பாத்து,

” ஹலோ பியூட்டி என்னை லவ் பண்ணுறியா? நாளைக்கு உன்ரை முடிவை சொல்லாட்டில் உன்னை கட்டிபிடிச்சு கிஸ் அடிப்பன்” எண்டு இவர் சொல்ல, பிள்ளை அழுதழுது போய் நடந்ததையெல்லாம் போய் அம்பிகா மச்சாளுக்கு சொல்ல , ” நாளைக்கு எந்த நேரம் கிளாஸ் முடியும்”? எண்டு அம்பிகா மச்சாள் பிள்ளையை பாத்து கேட்டா. பிள்ளையும் அம்மாதானேயெண்டு எல்லாத்தையும் விட்டுவீதியாய் சொல்லிச்சுது. ” சரி நீ பயப்பிடாமல் நாளைக்கு கிளாசுக்கு போ. எல்லாத்தையும் நான் பாத்து கொள்ளுறன்” எண்டு அம்பிகா மச்சாள் சொன்னா.

அடுத்த நாள் அம்பிகா மச்சாள் வேலையாலை வந்து சாறியை கழட்டி போட்டு சல்வாரை போட்டுக்கொண்டு தன்ரை ஸ்கூட்டியை முறுக்கிக்கொண்டு வெளிக்கிட்டா. இவா ரியூட்டறியடிக்கு போக அங்கை பிள்ளையள் எல்லாம் கிளாஸ் முடிஞ்சு போய் கொண்டிருக்குதுகள். ஆனா வைதேகியை மட்டும் காணேலை. அம்பிகா மச்சாள் பாதகளிப்பட்டு கிளாஸ் முடிஞ்சு வந்து கொண்டிருந்த பிள்ளையளை மறிச்சு, “வைதேகி எங்கை”? எண்டு கேட்டா. அதிலை ஒரு பிள்ளை, “அவா அந்த ஒழுங்கைக்குள்ளாலை போறா” எண்டு கையைக் காட்டிச்சுது. அம்பிகா மச்சாளும் கையோடை கம்மாறிசாய் அந்த ஒழுங்கைக்குள்ளாலை  ஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு போக அங்கை எங்கடை மைனர் குஞ்சு ரஜனிமுருகன் தன்ரை மோட்டசைக்கிளை நிப்பாட்டிப் போட்டு வைதேகியை மறிச்சு செல்லம் பொழிஞ்சு கொண்டு நிக்கிறார். அம்பிகா மச்சாளுக்கு உச்சியிலை இருந்து உள்ளங்கால் வரை பத்திக்கொண்டு வந்துது. ஒரு கதையுமில்லை. ஸ்கூட்டியை ஓரமாய் நிப்பாட்டிப் போட்டு சல்வாரின்ரை சோலை எடுத்து இடுப்பில கட்டினா. மைனர் குஞ்சு நிண்டு நிதானிக்கிறதுக்குள்ளை அம்பிகா மச்சாள் காலைத்தூக்கி மைனர்  குஞ்சருக்கு  கழுத்தாங்குத்தியிலை ஒண்டு இடுப்பில ஒண்டு எண்டு ரெண்டு ஷொட் குடுத்தா. ஆள் திகைச்சுப் போய் சுருண்டு விழுந்தார். விழுந்தகையோடை எழும்பி மோட்டச்சைக்கிளிலை  ஏறி , “இருங்கோடி ரெண்டு பேரையும் இண்டைக்கிரவுக்கு தூக்கிறன்”. எண்டு  சிலுப்பிக்கொண்டு ஒரு முறுக்கு முறுக்கிக்கொண்டு மெயின்றோட்டுக்குப் பறந்தார்.

இவர் பறந்தநேரம் இவற்றை கெடுகாலத்துக்கு கள்ள மண் ஏத்தி கொண்டு வந்த கன்ரரை பொலிஸ் விட்டுக்கலைக்க, கன்ரர்காறன் விண்மண்ணாய் மெயின் றோட்டாலை வந்தான். மெயின் றோட்டுக்கு பறந்த மைனர் குஞ்சுவாலை ஸ்பீட்டை கொன்றோல் பண்ணேலாமல் போச்சுது. உடனை கன்ரரோடை முட்டுப்படாமல் விடுறதுக்காய் டக்கெண்டு ஒரு வெட்டு  வெட்டினார். அது இழுத்துக்கொண்டு போய் றோட்டுக்கரை லைற் போஸ்ரோடை தூக்கி ஒத்திச்சுது.  மைனர் குஞ்சர்  லைற் போஸ்ரோடை நெஞ்சடிபட்டு தெறிச்சு விழ மோட்டச்சைக்கிள் பக்கத்து வயலுக்கை விழுந்து சிதறிச்சுது. இந்த சீனை பாக்கேக்குள்ளை ஒரு இங்கிலீசு பட ஷொட்டை பெரிய திரையிலை பாத்த மாதிரி கிடந்தது.

இந்த விசயமெல்லாம் அம்பிகா மச்சாளுக்கு தெரியாது. அவா மகளை கூட்டிக்கொண்டு அடுத்த பக்கத்தாலை வீட்டை போய் சேந்திட்டா. இராமுழுக்க தாய்க்கும் மோளுக்கும் பயத்தில நித்திரையே வரேல. அடுத்த நாள்தான் ‘மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி’ எண்ட நியூஸை தினக்குரல் பேப்பரிலை படிச்சாப்பிறகுதான் அம்பிகா மச்சாளுக்கு ரஜனிமுருகன் செத்தது தெரியும். அண்டைக்கு வேலைக்கு லீவு போட்டுட்டு பிள்ளையை வெளிக்கிடுத்தி ஸ்கூட்டியிலை ஸ்கூலிலை விட்டு போட்டு பின்னேரம் போய் ஏத்திக்கொண்டு வந்தா. பேந்து ரியூட்டறிக்கும் கூட்டி கொண்டு போய் விட்டு ஏத்திக்கொண்டு வந்தா. பிறகு தன்னோடை வேலை செய்யிற ஆக்கள் கொஞ்சப்பேரோடை ரெலிபோனிலை கதைச்சு இப்ப ஆர் நல்லாக கராட்டி  பழக்க கூடிய ஆள் எண்டு விசாரிச்சா.எல்லாரும் பருத்தித்துறை இரத்தினசோதி  மாஸ்ரரைத்தான் சொல்லிச்சினம். அடுத்த நாள் பின்னேரம் அம்பிகா மச்சாள் வைதேகியை கூட்டிக்கொண்டு இரத்தினசோதி  மாஸ்ரரை சந்திக்க வெளிக்கிட்டா.

இராகவன் -இலங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

மைனர் குஞ்சு நிண்டு நிதானிக்கிறதுக்குள்ளை அம்பிகா மச்சாள் காலைத்தூக்கி மைனர்  குஞ்சருக்கு  கழுத்தாங்குத்தியிலை ஒண்டு இடுப்பில ஒண்டு எண்டு ரெண்டு ஷொட் குடுத்தா.

மைனர் குஞ்சிலயும் ஒன்று போட்டிருக்க்லா:10_wink:ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கும் கீழுள்ள செய்திக்கும் தொடர்பு உள்ளது என்று எனக்குப் புரிந்தது!

 

Link to comment
Share on other sites

'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2017 at 2:36 PM, Innumoruvan said:

'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம் :)

இன்னுமொருவன் குறிப்பிடும்மட்டும் நானும் கவனிக்கவேயில்லை!!tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/04/2017 at 3:22 PM, கிருபன் said:

இன்னுமொருவன் குறிப்பிடும்மட்டும் நானும் கவனிக்கவேயில்லை!!tw_blush:

நானும் உந்தப் பெயருக்காகவே கதையைப் படித்தேன்...., எந்தப் பெயரால் அழைத்தால் என்ன ரோஜா மணக்கும். இந்தக் கதையும் மணக்குது....!  tw_blush:

Link to comment
Share on other sites

"ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு".   ?????  தீரிஸ்ராரில பிளட் இருந்திச்சா??? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.