Jump to content

பவானி மச்சாள் – இராகவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பவானி மச்சாள் – சிறுகதை – இராகவன்

பவானி மச்சாள்

 

IMG_20170401_011329_processed-1-1024x603

எங்கடை ஊரிலை இருக்கிற ஒரேயொரு முற்போக்குவாதி யாரெண்டு கேட்டால் அப்பவும் இப்பவும் எப்பவுமே அது சற்குணம் மாமாதான். அவரோடை ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையான அம்பிகா மச்சாள் ஓயெல் படிச்சு கொண்டிருந்த மூட்டம் ஒரு நாள் ,

“அப்பா நான் கராட்டி பழகப் போறன்” எண்டு சொன்னாள்.

“அதுக்கென்ன பிள்ளை” எண்டு சற்குணம் மாமா சர்வசாதாரணமாய் சொல்ல சிந்தா மாமிதான் ஆட்லெறி செல் விழுந்து வெடிச்சமாதிரி அதிர்ந்து போனா.

“இதென்ன நாசமறுப்பு. ஒரு குமர்பிள்ளை கதைக்கிற கதையைப் பார். கராட்டி பழகப் போறாவாம் கராட்டி. அதுக்கு இவரும் ஒத்தூதுறார்.” எண்டு சிந்தாமாமி அளப்பரிக்க தொடங்கீட்டா.

“அதுக்கு நீயேனப்பா அளப்பரிக்கிறாய்? அவள் ஆசைப்படுறாள் பழகட்டன். இந்தக்காலத்திலை ஆம்பிளையோ பொம்பிளையோ ஆயகலைகள் அறுபத்திநாலும் தெரிஞ்சிருக்கவேணும். அதுகும் எங்களுக்கிருக்கிறது ஒரே பிள்ளை. அவள் ஆசைப்படுகிறதுகளை செய்யாமல் விடுறதே?”

எனச் சற்குணம் மாமா மறுத்தானடிக்க, சிந்தாமாமிக்கு பத்திக்கொண்டு வந்துது.

“என்னப்பா பேய்க்கதை கதை கதைக்கிறியள்? இப்ப நோர்மலாய் ஒரு பொம்பிளைப்பிள்ளைக்கு மாப்பிளை எடுக்கிறதே வலு கஷ்டமாய் கிடக்கு. அதுக்கை கராட்டியும் பழகினால் இவளுக்கு எங்கை மாப்பிள்ளை எடுக்கிறது? அதுகும் கராட்டி பழகின பெட்டையெண்டால் ஒருத்தனும் கிட்ட வரமாட்டான். பிறகு நாங்கள்தான் தலையிலை கைவைச்சுக்கொண்டு நிக்க வேணும் “.

“போடி விசர்கொந்தி!! அவளுக்கு கராட்டி பழகின ஒருத்தனை மாப்பிளையாய் எடுத்திட்டுப் போறதுக்கு ஒப்பாரி வைச்சுக்க கொண்டு நிக்கிறதே? எனக்கெல்லாம் தெரியும் நீ உன்ரை அலுவலைப் பாரடியாத்தை”. என்று சற்குணம் மாமா விடாப்பிடியாய் நின்றார்.

“ஓமோம் !! கராட்டி எடுத்தவனை மாப்பிளை எடுத்தால் ரெண்டுபேரும் கையைக்காலை விசுக்கிக்கொண்டு நிக்க நல்ல சோக்காய் இருக்கும். அயலட்டை சனங்கள் பிறீயாய் சண்டைப்படம் பாக்குங்கள். நல்லாய்தானிருக்கும்.”

சிந்தாமாமியும்  விட்டுக்குடுக்கேலை.

“அதையெல்லாம் பிறகு பாப்பம். நீ வாயை மூடிக்கொண்டு கொஞ்சம் சும்மா இரடியப்பா” சற்குணம் மாமா தன்ர முடிவிலை உடும்புப்பிடியாய் நிண்டார்.

“தேப்பனும் மோளும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனெக்கென்ன,” சிந்தாமாமியாலை அதுக்குப் பிறகு நிண்டு பிடிக்க முடியேலை. அவாவுக்கு தந்திரோபாயப் பின்வாங்கலைத் தவிர வேற வழியில்லை.

வடமாராட்சிக்குள்ளை இப்ப திறமான கராட்டி மாஸ்ரர் ஆரெண்டு விசாரிச்சுக் கடைசியில சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரரிட்டை அம்பிகா மச்சாளை கராட்டி பழக அனுப்பிறதெண்டு சற்குணம் மாமா முடிவெடுத்தார்.

00000000000000000000000000000

ஒரு சுபயோக சுபதினத்தில சற்குணம் மாமா அம்பிகா மச்சாளை சைக்கிள்ளை ஏத்திக்கொண்டு பருத்தித்துறையிலிருந்த சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் வீட்டுக்குப் போனார். நல்ல எழும்பின தோற்றத்திலை இருந்த மாஸ்ரரைப் பாத்தோண்ண “உந்தாள் நல்லவடிவாய் பிள்ளைக்கு குத்துக்கராட்டி பழக்கும்” என்ற நம்பிக்கை சற்குணம் மாமாவுக்கு வந்திட்டுது.

“மாஸ்ரர் நாங்கள் கரவெட்டியிலயிருந்து வாறம். இது என்ரை மகள் அம்பிகா. கராட்டி பழக விரும்பிறா. நீங்கள்தான் வடிவாய் பழக்குவீங்கள்  எண்டு எல்லாரும் சொல்லீச்சினம். அதுதான் மகளை கூட்டிக்கொண்டு வந்தனான்.

எண்டு சற்குணம் மாமா சொன்னதைக் கேட்டு சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் ஒருக்கால்  திகைச்சுத்தான் போனார். இதுவரைக்கும் ஒரு பொம்பிளைப்பிள்ளையும் கராட்டி பழகப்போறன் எண்டு அவரிட்டை வந்ததேயில்லை. எண்டாலும்  அம்பிகா மச்சாளின்ரை ஆர்வத்தையும் அதுக்கு சற்குணம் மாமா குடுக்கிற சப்போர்ட்டையும் பாத்து சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரர் அம்பிகா மச்சாளுக்கு கராட்டி பழக்கிறதுக்கு சம்மதிச்சிட்டார். பிறகு அதுக்கேற்ற உடுப்புகளும் தைச்சு அம்பிகா மச்சாள் கராட்டி பழகத்தொடக்கிட்டாள். திங்கள் ,புதன் ,வெள்ளி பின்நேரம் அஞ்சு தொடக்கம் ஆறு வரை வகுப்பு நடக்கும். அம்பிகா மச்சாள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலதான் படிச்சுக்கொண்டிருந்தாள். ராஜரட்ணத்தார் நடத்தின மொடோனுக்கும் ரியூசனுக்கு போறவள். சற்குணம் மாமா  ராஜரட்ணத்தாரோடை வலுஒட்டு. அதால திங்கள் ,புதன் வெள்ளியில ரியூசன் ரைம்ரேபிளையும் ஒருமாதிரி அம்பிகா மச்சாளுக்கேத்தமாதிரி அஜெஸ்ற் பண்ணிப் போட்டார். அவள் ஸ்கூல் முடிஞ்சு வந்து ரியூசனுக்கும் ஓடி நாலுமணியோடை அங்கையிருந்து  வெளிக்கிட்டு ரியூசன் வாசலில, மூண்டு மாசத்துக்கொருக்கால் கழுவி பூட்டின   ஹம்பர்சைக்கிளோட காத்து நிக்கிற சற்குணம் மாமாவோட ஏறிப்போய் துரைரத்தினம் மாஸ்ரர் வீட்டில கராட்டி பழகிட்டுத் திரும்ப சற்குணம் மாமாவோட சைக்கிள்ள ஏறி வீடு வந்து இறங்க இரவு ஏழு மணியாகிவிடும்.

ஒருநாள் கராட்டி வகுப்பு முடிஞ்சாப்போல, “எப்பிடி மாஸ்ரர் என்ரை மகள் வடிவாய் பழகிறாவோ?” எண்டு கேக்க, “இதென்ன ஐஸே உம்மட கேள்வி? ஆம்பிளைப்பிள்ளையள் கூட நான் சொல்லிக்கொடுக்கிறதை கொஞ்சம் தட்டுத்தடுமாறித்தான் பிடிப்பாங்கள். ஆனால் உம்மடை மகளுக்கு ஒருக்கால் காட்டிக்கொடுத்தால் போதும் அப்பிடியே பக்கெண்டு பிடிச்சுடுவா. நுணுக்கம் தெரிஞ்ச பிள்ளை. கெதிலயெல்லோ பிளாக் பெல்ட் எக்ஸாம் எடுத்துடுவா. கவலைப்படாதையும்.” எண்டு புளுகித்தள்ள சற்குணம் மாமா பூரிச்சுப்போனார்.

000000000000000000000000000000

இப்பிடியே ஒரு மூண்டு மாசம் எல்லாமே நல்லாய்தான் போய்கொண்டிருந்திது. நாலாவது மாசம்தான் ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ தொடங்கிச்சுது. அதுக்கு பிறகு எல்லாமே குழம்பி போச்சுது. சற்குணம் மாமா குடும்பம் கரவெட்டியிலை இருந்து வரணிக்கு இடம்பெயர்ந்தோடிச்சுது. வடமராட்சி முழுக்க ஆமிக்கட்டுப்பாட்டுக்குள்ளை வந்து பிறகு நெல்லியடி சென்றல் ஸ்கூல் ஆமிக்காம்பை கரும்புலி மில்லர் அடிச்சு ராஜீவ் காந்தி மிராஜ் பிளேனுகளில சாப்பாட்டு பார்சலுகளைக் கொண்டந்து போட்டு சித்து விளையாட்டு காட்டி, அதுக்குப்பிறகு ராஜிவ் காந்தி கொழும்புக்கு வந்து ஜேஆரோட இலங்கை இந்திய ஒப்பந்தத்திலை கையெழுத்து போட்டு, இலங்கை ஆமி போய் அமைதிப்படை இந்த மண்ணிலை காலடி வைச்சாப்போல தான் சற்குணம் மாமா குடும்பம் கரவெட்டிக்கு திரும்பி வந்தினம்.

இதுக்குள்ளை அம்பிகா மச்சாளுக்கு ஓயெல் சோதனைக்கும் காலம் வந்துட்டுது. அவளுக்கு இப்ப கராட்டி பழகிற மூட் இல்லை. இதால சந்தோசப்பட்ட ஒரேயொருஆள் சிந்தாமாமிதான். சற்குணம் மாமாவும் , ‘பிள்ளை முதல் ஓயெல் சோதனையை எழுதட்டும். அதுக்குப்பிறகு எல்லாத்தையும் கவனிப்பம்’ எண்டு விட்டுட்டார். அம்பிகா மச்சாளும் ஒருமாதிரி ஓயெல் எழுதி திறமாய் பாஸ் பண்ணி ஏயெல்ல மற்ஸ் படிக்க தொடங்கீட்டாள். அப்பவும் அவளுக்கு கராட்டி பழக மூட் வரேல்ல. தட்டித்தவறி அவளுக்கு மூட் வந்தாலும் கராட்டி பழகிற மாதிரி ஊர்நிலவரமும் இல்லை. எல்லாம் தலைகீழாய் மாறீட்டுது . முதல்ல புலிப்பெடியளும் இந்தியனாமியும் தேன்நிலவு  கொண்டாடித் திரிஞ்சினம். பிறகு ரெண்டு கன்னையும் ஊடல் கொண்டாடிச்சினம். குமரப்பா புலேந்தியம்மானோட  பன்ரெண்டு பேர் குப்பியடிச்சு செத்தாப்போல ஊடல் முத்தி முறிக்கத்தொடங்கி கடைசியில வெட்டுப்பகையில முடிஞ்சுது. ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு இந்தியன் ஆமியோட ஒட்டிக்கொண்டு புலிப்பெடியளை மண்டையில போட பிறகு, அவங்கள் இவையளை மண்டையில போட ஊரெல்லாம் அதகளப்பட்டுது. இதுக்குள்ள உந்த இந்தியன் ஆமிக்காறர்முழுப்பேரும் செரியான பொம்பிளை கள்ளராய் இருந்தாங்கள். கொஞ்சம் வடிவான பெடடையாளை கண்டால் கண்வைச்சுடுவாங்கள். அம்பிகா மச்சாளும் பெயருக்கேத்த மாதிரி கண்ணுக்கை குத்துற வடிவான பெட்டைதான்.

ஒருநாள் நெல்லியடி சயன்ஸ்சென்ரர் ரியூசன் முடிஞ்சு அம்பிகா மச்சாள் சைக்கிள்ள வரேக்கை ஒரு சீக்கியன் கண்வைச்சுட்டான். அவன் சரியான பொம்பிளை கள்ளன். அவனுக்கு பூனைக்கண்ணன் எண்டு சனம் பட்டம் வைச்சிருந்தது. அந்தப் பூனைக்கண்ணன் எப்பிடியாவது அம்பிகா மச்சாளை மடக்கிறதெண்டு பிளான் பண்ணி போட்டான். வழமையாய் ரியூசன் முடியேக்குள்ள சற்குணம் மாமா வாசல்ல காத்துக்கொண்டிருந்து அம்பிகா மச்சாளை கூட்டிக்கொண்டு வருவார். அதுவும் அவளை சைக்கிள்ள முன்னுக்கு போகவிட்டு சற்குணம்மாமா பொடிக்காட் மாதிரி பின்னுக்கு தன்ரை சைக்கிள்ளை வருவார். இதுதான் பூனைக்கண்ணனுக்கு செரியான இடைஞ்சலாய் இருந்துது. எப்ப சற்குணம் மாமா இல்லாமல் அவள் தனிய வருவாள் எண்டு பூனைக்கண்ணனும் கண்ணுக்குள்ளை எண்ணை விட்டுக் கொண்டு அலையத்தொடங்கீட்டான்.

ஒருநாள் சற்குணம் மாமாவுக்கு எதோ அவசர அலுவல். அம்பிகா மச்சாளை பின்னேரம் ரியூசனால கூட்டிக்கொண்டு வர ஏலாமல் போச்சுது.

“பிள்ளை !இண்டைக்கு பின்னேரம் நான் உன்னை ரியூசனால கூட்டிக்கொண்டு வரேலாது. எனக்கு முக்கியமான வேலை கிடக்கு. நீ இண்டைக்குப்பாட்டுக்கு உன்ரை கிளாஸ் பிள்ளையளோட கூடிக்கொண்டு வாவன்”

எண்டு சொல்லிட்டு வெளிக்கிட்டார். அதை கேட்டு கொண்டு நிண்ட சிந்தா மாமி ,

“காலங்கெட்டு கிடக்கு. பிள்ளையை கூட்டிக்கொண்டு வாறதைவிட உங்களுக்கென்ன ஆத்துப்பறந்த வேலை? பின்னாலை ஏதாவது இசக்கு பிசக்காய் நடந்தால் என்ன செய்யிறதப்பா?” எண்டு சிந்தாமாமி குறுக்கால பாய, சற்குணம்மாவுக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்திக்கொண்டு வந்துட்டுது.

“மனுசன் வெளிக்கிடேக்கை பல்லி சொல்லுற மாதிரி ஒருக்காலும் கதையாதையப்பா. அவளுக்கு எல்லாம் தெரியும். அதொண்டும் நடக்காது.” எண்டு பொரிஞ்சு தள்ளிப் போட்டு தன்ரை அலுவலாய் போட்டார்.

அம்பிகா மச்சாளுக்கு என்ன நேரம் ரியூசன் முடியிறதெண்டு பூனைக்கண்ணனுக்கு வடிவாய்த்தெரியும். அதுகும் அண்டைக்கு சற்குணம் மாமாவை காணேல எண்ட உடன என்னவிதப்பட்டெண்டாலும் அம்பிகா மச்சாளை மடக்கி போடவேணுமெண்டு தன்ரை நாலு கூட்டாளியளையும் கூட்டிக்கொண்டு அவளுக்கு பின்னாலை போன பூனைக்கண்ணனை, ஒரு சமசியத்திலை  ‘ஜெராட்’ எண்ட எல்ரிரி  காறனும் பின்னாலை போனது ஒருகுருவிக்கும் தெரியாது. அந்தமூட்டம் இந்தியன்ஆமியை  குச்சொழுங்கைக்குள்ளை வைச்சு ‘மண்டையிலை போட்டு’ அவையின்ரை ஆயுதங்களை எடுத்து கொண்டு ஓடுறதிலை ஜெராட் தான் பேமஸ்.

அம்பிகா மச்சாளோட கூடியந்த சிநேகித பெட்டையள் எல்லாம் நாற்சந்தியிலை ஆளுக்கொரு பக்கமாய் பிரிஞ்சு போயிட்டினம். அம்பிகா மச்சாள் தனிச்சு போனாள். அவள் குளத்தடி றோட்டாலை திரும்பி குச்சொழுங்கைக்குள்ள சைக்கிளை விட ,பூனைக்கண்ணன் குறூப் எதிர்ப்பக்கத்தால வந்து அம்பிகா மச்சாளை நிப்பாட்டிச்சினம். ‘இண்டைக்கு என்னை துலைக்கத்தான் போறாங்கள்’. எண்டு அவளுக்கு பயம் தொடுட்டுட்டுது. எண்டாலும் அவள் பயத்தை முகத்தில காட்டேல. பூனைக்கண்ணன்  முன்னால நிக்க மற்றவங்கள் அம்பிகா மச்சாளை ரவுண்ட்அப் பண்ணீட்டாங்கள். பூனைக்கண்ணன் அவளை பாத்து “எல்ரிரி” ? எண்டு கேக்க அவள் “நோ ஸ்ருடன்ற்”  எண்டாள். அவன் அதை பறுவாய் பண்ணாமல் “பொம் ….பொம், செக்கிங்” எண்டு அவளின்ரை நெஞ்சுப்பக்கமாய் கைவைக்க வெளிக்கிட்டான். அம்பிகா மச்சாளுக்கு என்ன நடக்க போகுதெண்டு கிளியராய் விளங்கீட்டுது. அவள் ஒன்றுக்கும் யோசிக்காமல் சைக்கிளை கீழை போட்டாள். சாண்டோ துரைரத்தினம் மாஸ்ரறிட்டை பழகின கராட்டி அப்பத்தான் வேலை செய்ய தொடங்கீச்சுது. கண்மூடி முழிக்கிறதுக்குள்ளை காலைத்தூக்கி குயிக்காய் சுழண்டு அஞ்சுபேருக்கும் அடிவயித்துக்கு கீழை திறம் ஷொட் ஒண்டு குடுத்தாள். அவையள்  இதை கொஞ்சம் கூட எதிர்பாக்கேல. எல்லாரும் கையளை கீழை பொத்திக்கொண்டு விழுந்தினம். பேந்து எப்பிடி சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டை வந்தாள் எண்டு அவளுக்கே தெரியாது.

அம்பிகா மச்சாள் விழுந்தடிச்சு வீட்டுக்குள்ளை போக நாலைஞ்சு வெடி சத்தம் கேட்டுது. அவளுக்கு வயித்தை கலக்கிச்சுது. அப்ப தாய்க்காறிதான் வீட்டிலை  நிண்டவ. அவாவிட்டை  நடந்ததை சொன்னால் அவா பதகளிச்சு  ஊரைக்கூட்டிபோடுவா. பேந்து கதை வெளியாலை போய் சனம் ஒண்டுக்குப்  பத்தாய் கதைக்குமெண்டு அம்பிகா மச்சாள் மூச்சும் காட்டேல. அவளுக்கு ரென்சனிலை செரியாய் வேத்து கொட்டீச்சுது. கைகாலெல்லாம் தன்ரை பாட்டுக்கு நடுங்கீச்சுது. நல்லாய் பொழுது பட்டா பிறகுதான் சற்குணம் மாமா வந்து சேர்ந்தார்.

வந்ததும் வராததுமாய்,”பிள்ளை ரியூசனால வந்திட்டாளோ?” எண்டுதான் முதல்ல கேட்டார். “ஓமோம்!வந்திட்டாள்”. எண்டு குசினிக்குள்ளை இருந்த சிந்தாமாமி சவுண்ட் விடத்தான் அவருக்கு நெஞ்சுக்குள்ளை தண்ணி வந்துது. எண்டாலும் ஆள் ரென்சனாய்த்தான் இருந்தார். “பிள்ளை நீ வரேக்குள்ள மண் ஒழுங்கையாலேயே வந்தனி”? எண்டு அம்பிகா மச்சாளை பாத்து கேட்டார். அவள் ஓமெண்டு தலையாட்டினாள். “அப்ப நீ வந்தாப் போலதான் நடந்திருக்கு” எண்டு சற்குணம் மாமா சொல்லுறதுக்கிடையிலை சிந்தாமாமி பதக்களிச்சு கொண்டு குசினிக்குள்ளாலை வந்திட்டா. “என்னப்பா என்ன நடந்தது”? “இப்ப பின்னேரம் மணல் ஒழுங்கையுக்குள்ளை வைச்சு இந்தியன் ஆமி அஞ்சு பேரை இயக்கப் பொடியள் மண்டையில போட்டுட்டு அவங்கடை ஆயுதங்களை எடுத்து கொண்டு ஓடிட்டாங்களாம். அந்த ஏரியா முழுக்க இந்தியன் ஆமி குவிஞ்சு போய் நிக்கிறாங்கள். போன வந்த சனத்துக்கெல்லாம் நல்ல அடியாம். நான் இப்ப றோட்டு சுத்திதான் வந்தநான். எண்டு சற்குணம்மாமா சொன்னாப் போலதான் அம்பிகாமச்சாளுக்கு நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சுது.

“ஐயோ இவள் பிள்ளை போய் வாற பாதையெல்லே? அழிவார் சனத்தை நிம்மதியாய் இருக்க விட்டால்தானே. இக்கணம் நாளைக்கு இஞ்சாலை றவுண்டப்போ தெரியாது. என்ர தச்சந்தோப்பானே …….நீதானப்பா அவளை காப்பாத்தோணும் ” எண்டு சிந்தாமாமி பிலாக்கணம் பாட, அம்பிகா மச்சாளுக்கு நெஞ்சு பக்கு பக்கெண்டு அடிக்க தொடங்கீட்டுது. ரா முழுக்க அவளுக்கு பயத்தில நித்திரை வரேல.

அடுத்த நாள் காலமை அஞ்சாறு ஏரியாக்களை றவுண்டப்பண்ணி ஆம்பிளையளையெல்லாம் வீடு வீடாய் போய் சாய்ச்சு கொண்டு நெல்லியடி மகாத்மா தியேட்டருக்கு கொண்டு போனாங்கள். அங்கை சுகுமார் எண்ட ஆமிப் பெரியவன் வந்து கூட்டம் வைச்சான்.”இங்கை இருக்கிற ஆக்கள் எல்லாரும் எல் ரி ரி ஆக்கள் இல்லையெண்டு எனக்கு தெரியும். ஆனா நேற்று என்ன நடந்தது எண்டு உங்கள் எல்லாருக்கும் தெரியும். எங்கடை அஞ்சு ஜவான்களை எல் ரி ரி ஆக்கள் சுட்டு போட்டாங்கள். நீங்கள் அவங்களிட்டை போய் சொல்லுங்கோ, இப்பிடியே போனால் இதாலை அஃபெக்டாகிறது அப்பாவி சனங்கள் நீங்கள்தான்.” எண்டு அந்த கூட்டத்திலை அவன் சொல்லியனுப்பினான். செரியான செக்குயூறிட்டி இல்லாமல் ஆமிக்காறரை வெளிக்கிட்டு திரிய கூடாதெண்டும் ஓடர் போட்டான். அதுக்கு பிறகு பெரிசாய் ஒண்டும் நடக்கேல.

அம்பிகா மச்சாளும் பயம் தெளிஞ்சு நோமலுக்கு வந்திட்டா. ஆனா அண்டைக்கு நடந்ததை மட்டும் ஒருத்தருக்கும் சொல்லேலை. இடைக்கிடை தகப்பனுக்கு மட்டும் சொல்லுவம் எண்டு உன்னுவாள் ஆனா ஏதுமொரு தடங்கல் வந்திடும். பேந்து அதை கைவிட்டுட்டாள். அதோடை அண்டைக்குப் பிறகு சற்குணம்மாமா என்ன அலுவலெண்டாலும் அதை விட்டு போட்டு அம்பிகா மச்சாளை ரியூசனிலை இருந்து கூட்டிக்கொண்டு வந்திட்டுத்தான் மிச்ச வேலை பாப்பார்.

000000000000000000000000000

ஜே ஆர் போய் பிரேமதாசா வந்து இந்தியன் ஆமியெல்லாம் மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு போக யாழ்ப்பாணத்தை இயக்கம் எடுத்துட்டுது. அம்பிகா மச்சாளும் ஏயெல் சோதனை எடுத்து திறமாய் பாஸ் பண்ணி, என்ஜினியரிங் கிடைச்சு பெரதேனியா கம்பசுக்கு போய் அஞ்சுவரியம் படிச்சு ஒரு எஞ்சினியராகி, அவளுக்கு சற்குணம் மாமா  ஒரு எஞ்சினியர் மாப்பிளையை பாத்து எக்கச்சக்கமாய் சீதனமும் கொடுத்து கலியாணம் கட்டி வைச்சு ஒரு பொம்பிளைப்பிள்ளையும் பிறந்து, அந்த பிள்ளைக்கு ‘வைதேகி ‘ எண்ட பேரும் வைச்சு சிந்தாமாமியும் சற்குணம்மாமாவும் செல்லம் கொஞ்சேக்கைதான் ரணிலும் தம்பியும் ஒரு ஆக்ரிமெண்ட்  சைன் பண்ணிச்சினம். இந்தநேரம் வைதேகி  ஓயெல் படிக்கிறாள். தேப்பனுக்கு கொழும்பிலை வேலை. தாய்க்கு யாழ்ப்பாணத்திலை வேலை. வைதேகியை சின்னனிலை சற்குணம் மாமாதான் ஸ்கூலுக்கும் ரியூசனுக்கும் கொண்டே விட்டு ஏத்திக் கொண்டு வாறவர். பிறகு அம்பிகா மச்சாள் மோளுக்கு சைக்கிள் எடுத்து குடுத்துப் பழக்கி அவள் இப்ப பருத்தித்துறை மெதடிஸ்ற்ருக்கும் வதிரி பீக்கொன் ரியூசனுக்கும் சைக்கிள்ள தான் போய் வாறாள். வைதேகியும் அம்பிகா மச்சாளைப் போலை அம்சமான பெட்டைதான். அதாலைதான் இப்ப ஒரு சின்ன பிரச்சனை.

0000000000000000000000000000

மகிந்தா ராஜபக்ஸ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிஞ்சு போச்சுது எண்டு அறிவிச்சாலும் அறிவிச்சார் யாழ்ப்பாணத்துக்கு மோட்டசைக்கிள் வந்து குவியத்தொடங்கீட்டுது. வெளிநாட்டு காசு ஒருபக்கம், தாய்தேப்பன் கடன்பட்டு ஒருபக்கம், இங்காலை லீசிங்காலை ஒருபக்கமெண்டு இளந்தாரிப் பெடியள் எல்லாம் இப்ப மோட்டசைக்கிள் எடுத்து முறுக்கி கொண்டு திரியுதுகள். இந்த மாதிரி முறுக்கி கொண்டு திரியுறதுகளிலை ஒராள் தான் எங்கடை ஹீரோ ‘ரஜனிமுருகன்’. அவரைப் பாத்தாலே ஒரு மார்க்கமாய்த்தான் இருப்பார். காதிலை ஒரு கடுக்கன்.  சுவரிலை கரிகட்டியாலை கீறின மாதிரி கோடு கோடாய் ஒதுக்கின தாடி. கைமூட்டிலை ரெண்டிலையும் பச்சை குத்தி கூலிங்கிளாசும் அடிச்சு மாடு சூப்பின பனங்கொட்டை  மாதிரித் தலையோடைதான் மைனர் குஞ்சு மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு  திரிவார்.  பெட்டையள் ஆரும் சைக்கிளிலை வந்தால் காணும், மைனர் குஞ்சு மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு போய் மடக்கி ஒரு வெட்டு வெட்டுவார். அதுக்கு சில பெட்டையள்  சைக்கிளோடை விழுந்து போவாளுகள். உப்பிடித்தான் அண்டைக்கு வைதேகி ரியூசன் கிளாஸ் முடிஞ்சு வரேக்கை எங்கடை மைனர் குஞ்சு ரஜனிமுருகன்  மோட்டச்சைக்கிளை முறுக்கி கொண்டு போய் மடக்கி வெட்டேக்குள்ளை பிள்ளை சைக்கிளோடை தடக்குப்பட்டு விழுந்திட்டாள். அதுதான் செய்தாரெண்டால் வைதேகி யைப் பாத்து,

” ஹலோ பியூட்டி என்னை லவ் பண்ணுறியா? நாளைக்கு உன்ரை முடிவை சொல்லாட்டில் உன்னை கட்டிபிடிச்சு கிஸ் அடிப்பன்” எண்டு இவர் சொல்ல, பிள்ளை அழுதழுது போய் நடந்ததையெல்லாம் போய் அம்பிகா மச்சாளுக்கு சொல்ல , ” நாளைக்கு எந்த நேரம் கிளாஸ் முடியும்”? எண்டு அம்பிகா மச்சாள் பிள்ளையை பாத்து கேட்டா. பிள்ளையும் அம்மாதானேயெண்டு எல்லாத்தையும் விட்டுவீதியாய் சொல்லிச்சுது. ” சரி நீ பயப்பிடாமல் நாளைக்கு கிளாசுக்கு போ. எல்லாத்தையும் நான் பாத்து கொள்ளுறன்” எண்டு அம்பிகா மச்சாள் சொன்னா.

அடுத்த நாள் அம்பிகா மச்சாள் வேலையாலை வந்து சாறியை கழட்டி போட்டு சல்வாரை போட்டுக்கொண்டு தன்ரை ஸ்கூட்டியை முறுக்கிக்கொண்டு வெளிக்கிட்டா. இவா ரியூட்டறியடிக்கு போக அங்கை பிள்ளையள் எல்லாம் கிளாஸ் முடிஞ்சு போய் கொண்டிருக்குதுகள். ஆனா வைதேகியை மட்டும் காணேலை. அம்பிகா மச்சாள் பாதகளிப்பட்டு கிளாஸ் முடிஞ்சு வந்து கொண்டிருந்த பிள்ளையளை மறிச்சு, “வைதேகி எங்கை”? எண்டு கேட்டா. அதிலை ஒரு பிள்ளை, “அவா அந்த ஒழுங்கைக்குள்ளாலை போறா” எண்டு கையைக் காட்டிச்சுது. அம்பிகா மச்சாளும் கையோடை கம்மாறிசாய் அந்த ஒழுங்கைக்குள்ளாலை  ஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு போக அங்கை எங்கடை மைனர் குஞ்சு ரஜனிமுருகன் தன்ரை மோட்டசைக்கிளை நிப்பாட்டிப் போட்டு வைதேகியை மறிச்சு செல்லம் பொழிஞ்சு கொண்டு நிக்கிறார். அம்பிகா மச்சாளுக்கு உச்சியிலை இருந்து உள்ளங்கால் வரை பத்திக்கொண்டு வந்துது. ஒரு கதையுமில்லை. ஸ்கூட்டியை ஓரமாய் நிப்பாட்டிப் போட்டு சல்வாரின்ரை சோலை எடுத்து இடுப்பில கட்டினா. மைனர் குஞ்சு நிண்டு நிதானிக்கிறதுக்குள்ளை அம்பிகா மச்சாள் காலைத்தூக்கி மைனர்  குஞ்சருக்கு  கழுத்தாங்குத்தியிலை ஒண்டு இடுப்பில ஒண்டு எண்டு ரெண்டு ஷொட் குடுத்தா. ஆள் திகைச்சுப் போய் சுருண்டு விழுந்தார். விழுந்தகையோடை எழும்பி மோட்டச்சைக்கிளிலை  ஏறி , “இருங்கோடி ரெண்டு பேரையும் இண்டைக்கிரவுக்கு தூக்கிறன்”. எண்டு  சிலுப்பிக்கொண்டு ஒரு முறுக்கு முறுக்கிக்கொண்டு மெயின்றோட்டுக்குப் பறந்தார்.

இவர் பறந்தநேரம் இவற்றை கெடுகாலத்துக்கு கள்ள மண் ஏத்தி கொண்டு வந்த கன்ரரை பொலிஸ் விட்டுக்கலைக்க, கன்ரர்காறன் விண்மண்ணாய் மெயின் றோட்டாலை வந்தான். மெயின் றோட்டுக்கு பறந்த மைனர் குஞ்சுவாலை ஸ்பீட்டை கொன்றோல் பண்ணேலாமல் போச்சுது. உடனை கன்ரரோடை முட்டுப்படாமல் விடுறதுக்காய் டக்கெண்டு ஒரு வெட்டு  வெட்டினார். அது இழுத்துக்கொண்டு போய் றோட்டுக்கரை லைற் போஸ்ரோடை தூக்கி ஒத்திச்சுது.  மைனர் குஞ்சர்  லைற் போஸ்ரோடை நெஞ்சடிபட்டு தெறிச்சு விழ மோட்டச்சைக்கிள் பக்கத்து வயலுக்கை விழுந்து சிதறிச்சுது. இந்த சீனை பாக்கேக்குள்ளை ஒரு இங்கிலீசு பட ஷொட்டை பெரிய திரையிலை பாத்த மாதிரி கிடந்தது.

இந்த விசயமெல்லாம் அம்பிகா மச்சாளுக்கு தெரியாது. அவா மகளை கூட்டிக்கொண்டு அடுத்த பக்கத்தாலை வீட்டை போய் சேந்திட்டா. இராமுழுக்க தாய்க்கும் மோளுக்கும் பயத்தில நித்திரையே வரேல. அடுத்த நாள்தான் ‘மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி’ எண்ட நியூஸை தினக்குரல் பேப்பரிலை படிச்சாப்பிறகுதான் அம்பிகா மச்சாளுக்கு ரஜனிமுருகன் செத்தது தெரியும். அண்டைக்கு வேலைக்கு லீவு போட்டுட்டு பிள்ளையை வெளிக்கிடுத்தி ஸ்கூட்டியிலை ஸ்கூலிலை விட்டு போட்டு பின்னேரம் போய் ஏத்திக்கொண்டு வந்தா. பேந்து ரியூட்டறிக்கும் கூட்டி கொண்டு போய் விட்டு ஏத்திக்கொண்டு வந்தா. பிறகு தன்னோடை வேலை செய்யிற ஆக்கள் கொஞ்சப்பேரோடை ரெலிபோனிலை கதைச்சு இப்ப ஆர் நல்லாக கராட்டி  பழக்க கூடிய ஆள் எண்டு விசாரிச்சா.எல்லாரும் பருத்தித்துறை இரத்தினசோதி  மாஸ்ரரைத்தான் சொல்லிச்சினம். அடுத்த நாள் பின்னேரம் அம்பிகா மச்சாள் வைதேகியை கூட்டிக்கொண்டு இரத்தினசோதி  மாஸ்ரரை சந்திக்க வெளிக்கிட்டா.

இராகவன் -இலங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

மைனர் குஞ்சு நிண்டு நிதானிக்கிறதுக்குள்ளை அம்பிகா மச்சாள் காலைத்தூக்கி மைனர்  குஞ்சருக்கு  கழுத்தாங்குத்தியிலை ஒண்டு இடுப்பில ஒண்டு எண்டு ரெண்டு ஷொட் குடுத்தா.

மைனர் குஞ்சிலயும் ஒன்று போட்டிருக்க்லா:10_wink:ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கும் கீழுள்ள செய்திக்கும் தொடர்பு உள்ளது என்று எனக்குப் புரிந்தது!

 

Link to comment
Share on other sites

'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2017 at 2:36 PM, Innumoruvan said:

'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம் :)

இன்னுமொருவன் குறிப்பிடும்மட்டும் நானும் கவனிக்கவேயில்லை!!tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/04/2017 at 3:22 PM, கிருபன் said:

இன்னுமொருவன் குறிப்பிடும்மட்டும் நானும் கவனிக்கவேயில்லை!!tw_blush:

நானும் உந்தப் பெயருக்காகவே கதையைப் படித்தேன்...., எந்தப் பெயரால் அழைத்தால் என்ன ரோஜா மணக்கும். இந்தக் கதையும் மணக்குது....!  tw_blush:

Link to comment
Share on other sites

"ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு".   ?????  தீரிஸ்ராரில பிளட் இருந்திச்சா??? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.