Jump to content

நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து?


Recommended Posts

நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து?

 
 

நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து?படத்தின் காப்புரிமைGARO/PHANIE/SCIENCE PHOTO LIBRARY Image captionநீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து?

வயிற்றில் உண்டாகும் பல விதமான கிருமி பெருக்கத்தால் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தங்களின் புதிய ஆராய்ச்சி முடிவோடு இணைத்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜர்னல் கட் என்ற மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.

 

ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவ நிபுணர்கள், ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மேலும் விசாரணை தேவையென்றும், அதனால் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குடல் சுவரில் உண்டாகும் பாலிப்பஸ் என்ற சிறு சிறு கட்டிகள், பிரிட்டனின் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேரை பாதிப்படையச் செய்கிறது.

பெரும்பாலான சமயங்களில், அவை எந்த அறிகுறியும் ஏற்படாமல் புற்றுநோயாக மாறாமல் இருப்பதுண்டு. அதே வேளையில், சில சமயங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் இவை புற்றுநோயாக மாறக்கூடும்.

குடல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள் என்ன?படத்தின் காப்புரிமைMEHAU KULYK/SCIENCE PHOTO LIBRARY Image captionகுடல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள் என்ன?

செவிலியர் சுகாதார ஆராய்ச்சி என்றழைக்கப்படும் ஒரு நீண்ட கால அமெரிக்க ஆராய்ச்சி பாதையில் பங்கேற்ற 16,000 செவிலியர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை இந்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

தங்களின் 20 மற்றும் 30 வயதுகளில், நீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்ளாதவர்களை ஒப்பிடுகையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கு மேலாக ஆண்டிபயாடிக்குகளை எடுத்துக் கொண்ட 20 முதல் 39 வயது வரையுள்ள செவிலியர்களின் குடலில் பிற்காலத்தில் அடினோமாக்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட வகை குடல் கட்டிகள் உண்டாவது கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல், தங்களின் 40 மற்றும் 50 வயது காலகட்டத்தில் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் பெண்களுக்கு சில தசாப்தங்களுக்கு பின்னர் அடினோமா கட்டிகள் உண்டாவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வு இக்கட்டிகள் எவ்வாறு புற்று நோய் கட்டியாக மாறுகிறது என்பதை விளக்கவில்லை.

 

ஆண்டிபயாடிக்கால் புற்றுநோய் கட்டி வளர்வதை தங்களால் நிரூபிக்க இயலவில்லையென்றும், உட்கொள்ளப்படும் மருந்துகளால் வெளிப்படும் பாக்டீரியாக்கள் இதில் ஒரு முக்கிய பங்காற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புக்கள்

சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் நார்சத்து குறைவான உணவுகளை குறைவாக உண்பது குடல் புற்றுநோய் உண்டாகும் ஆபத்தினை அதிகரிப்பதாக நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் (என்ஹெச்எஸ்) சாய்சஸ் எனப்படும் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைRONALD GRANT Image captionகோப்புப் படம்

மேலும், அதிக எடையுள்ள மற்றும் உடல்பயிற்சி இல்லாத நபர்களுக்கு குடல் புற்று நோய் சாதாரணமாக இருப்பதை என்ஹெச்எஸ் நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

 

மிகுதியான மது அருந்தும் பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவையும் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புக்களை அதிகரிக்கிறது. மேலும், குடும்பத்தில் பரம்பரையாக குடல் புற்றுநோய் இருந்தால், மற்றவர்களுக்கும் குடல் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகமாக உள்ளது.

நீண்ட காலமாக ஆண்டிபயாடிக்குகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

பிரிட்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுகாதார தகவல்துறை பிரிவு அதிகாரியான மருத்துவர் ஜாஸ்மின் ஜஸ்ட் பிபிசியிடம் கூறுகையில், ''இந்த ஆராய்ச்சி, ஆரம்ப நிலையில் தான் தற்போது உள்ளது. அதனால் ஆண்டிபயாடிக்குகளை நீண்ட காலமாக உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து உறுதியான முடிவுகளை இவ்வளவு விரைவாக எடுப்பது இயலாது'' என்று தெரிவித்தார்.

புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் சிவப்பு இறைச்சிபடத்தின் காப்புரிமைAFP Image captionபுற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் சிவப்பு இறைச்சி

''மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டிபயாடிக்குகளை மக்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அது குறித்து அவர்கள் தங்களின் மருத்துவரோடு ஆலோசிக்க வேண்டும்'' என்று மேலும் கூறினார்.

ஆண்டிபயாடிக்குளால் ஏற்படும் ஆபத்தின் தன்மை

ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆராயும் போது, இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின்படி தனி நபர்களுக்கு ஏற்படும் ஆபத்தின் அளவை சரியாக கணிப்பது மிகவும் சிரமம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், இந்த ஆராய்ச்சி புற்றுநோய் குறித்து கவனம் செலுத்தவில்லை. புற்றுநோய் உண்டாவதற்கான காரணிகளைத்தான் உற்று நோக்குகிறது.

குடல் புற்றுநோய் உண்டாவதற்கு, மிகுதியான மதுப்பழக்கம், புகைப்பழக்கம், குடும்ப ரீதியான குடல் புற்று நோய், உணவு பழக்கம் என பல காரணங்கள் உண்டு.

புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் மிகுதியான மது மற்றும் புகைப்பழக்கம்படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSHEILA TERRY/SCIENCE PHOTO LIBRARY Image captionபுற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் மிகுதியான மது மற்றும் புகைப்பழக்கம்

இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விளக்கிய மருத்துவர் குருக்க்ஷங், ஆண்டிபயாடிக் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவும், அதன் தன்மை மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளதாக கூறினார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ஜஸ்ட் கூறுகையில், ''இந்த ஆராய்ச்சியின் மூலம் இது குறித்த சரியான காரணம் மற்றும் பாதிப்பு குறித்து அறிய முடியாது. ஆனால், ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு அதிகப்படியான புற்றுநோய் ஆபத்து ஏற்படுமா என்று பரிந்துரைக்க இந்த ஆராய்ச்சி ஒரு படி முன்னோக்கி செல்கிறது'' என்று எடுத்துரைத்தார்.

''குடலில் உண்டாகும் நுண்ணுயிரிகள் நமது உடல்நலனை எவ்வாறு பாதிக்கும் என்று ஆராய்ந்து வரும் மற்ற ஆராய்ச்சிகளுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முன்மாதிரியாகவும், ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் '' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.bbc.com/tamil/global-39516409

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.