Jump to content

இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம்.

ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும்.

ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது.

பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும்.

இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும்.

இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான்.

அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம்.

இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார்.

பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும்.

இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம்.

நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே.

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் லோங்கிஸ் போட்டது 1999  பத்தாம் வகுப்பு  எப்ப பத்தாம் ஆண்டுக்கு போய் லோங்கிசை போடுவம் என்ற ஆவல்  லோங்கிஸ் போட்ட பிறகே பொடிச்சிகளை பார்க்க ஒரு ஆசை வந்தது அந்த வயது அப்படி :unsure:tw_blush:

மீண்டுமொரு  நினைவுக்குள் இழுத்து சென்று விட்டியளே :104_point_left::104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

நான் லோங்கிஸ் போட்டது 1999  பத்தாம் வகுப்பு  எப்ப பத்தாம் ஆண்டுக்கு போய் லோங்கிசை போடுவம் என்ற ஆவல்  லோங்கிஸ் போட்ட பிறகே பொடிச்சிகளை பார்க்க ஒரு ஆசை வந்தது அந்த வயது அப்படி :unsure:tw_blush:

மீண்டுமொரு  நினைவுக்குள் இழுத்து சென்று விட்டியளே :104_point_left::104_point_left:

முனிவர் 75 அல்லது 80 களின் பின்பே அந்த கலாச்சாரம் முடிந்ததென்றே எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முனிவர் 75 அல்லது 80 களின் பின்பே அந்த கலாச்சாரம் முடிந்ததென்றே எண்ணுகிறேன்.

இல்லை 90 களிலும் இருந்தது, யாழ் நகரப் பகுதிகளில் 10/11 ம் ஆண்டுகளிலேயே போடத் தொடங்கி விட்டார்கள். யாழ் நகர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டு சென்றார்கள்.

(10ம் ஆண்டிலேயே private ஆக O/L சோதனை எடுத்து,  8பாடங்களும் சித்தியடைந்ததால் முன்னரே போட்டாச்சு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இல்லை 90 களிலும் இருந்தது, யாழ் நகரப் பகுதிகளில் 10/11 ம் ஆண்டுகளிலேயே போடத் தொடங்கி விட்டார்கள். யாழ் நகர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டு சென்றார்கள்.

(10ம் ஆண்டிலேயே private ஆக O/L சோதனை எடுத்து,  8பாடங்களும் சித்தியடைந்ததால் முன்னரே போட்டாச்சு)

நான் 77 இலேயே வெளிநாடு புறப்பட்டதால் 80 களிலேயே அந்த கலாச்சாரம் மாறியிருக்கும் என நினைத்தேன்.90 வரை இருந்ததென்றால் ரொம்பவும் அதிசயம் தான்.நன்றி மீரா.

Link to comment
Share on other sites

வேலையில் சேர்ந்த பின்புதான் காக்கித் துணியில் முதன் முதலில் லோங்சை மாட்டியது ஞாபகம்.

அக்காவும் அவரது நண்பியும் அரைத்தாவணி போடும் பருவம் அடைந்ததும், அதற்கேற்ற துணிகள் வாங்கவும், தைக்கவும், நான் விளையாடக்கூடப் போகமுடியாது அவர்களுக்குக் காவல் நாயாக அலைந்ததும், தாவணி போட்டபின் அவர்களுக்கு வந்த வெட்கமும், முகத்தில் ஏற்பட்ட சந்தோசமும்,பூரிப்பும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Bildergebnis für தாவணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு பத்து நிமிடத்துக்கு முன்தான் எனது அயலவர்கள் வீட்டில் வந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது கதை உங்களின் எந்த சிறு வயதில் இருந்து சம்பவங்கள் ஞபகத்தில் இருக்கு என்று சுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். கிட்டதட்ட அதே தலைப்பில் இங்கே கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கு.

நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு ஜி.சி. ஈ-- ஓ எல் வரை கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு பிரிபக்துராக வெள்ளை லோங்ஸ்சும் வெள்ளை சேட்டும் போடுவோம். அது முடிந்ததும் உடனே அரைக்காற் சட்டைக்கு மாறிடுவோம். பின்பு நான் பாடசாலை விட்டதும் கொழும்பில் ஓரிரு வருடங்கள். அங்கு கூச்சமின்றி லோங்ஸ் போட முடிந்தது. ஆனால் யாழ்ப்பாணம் வரும்போது காற்சட்டைதான். பின்பு அத்தான் வற்புறுத்தி லோங்ஸ் போடவைத்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்தேன். அங்கு பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் நல்ல சந்தோசம். பிறகு அப்படியே யாழ்ப்பாணம் வந்தேன்.

அதைவிட எனது நண்பன் ஐந்தாம் வகுப்புடன் வேலைக்கு போய்விட்டான்.அவன்  வாகனத்துக்கு சாமான் எடுக்க கொழும்பு வந்தவன் என்னிடம் மாட்டுப் பட்டு அவன்ர வெட்கம் கீல வெடக் நே. அங்கேயே இரண்டு லோங்ஸ் தைத்து அதைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் தாயார் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை......! நன்றி ஈழப்பிரியன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

அதையேன் பேசுவான்......

ஓஎல் பாஸ் பண்ணினவுடனை லோஞ்சுக்கும் சேட்டுக்கும் துணி எடுக்க ஜப்னா நியூ மாக்கற்ருக்கு போய் அவிஞ்சு கருவாடாகி வந்த கதை பிள்ளையார்கதையை விட பெருங்கதை...:grin:

பாப்பம் ...

நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் ஆயிரம் பக்கக்கங்கள் எழுதலாம்.

நீங்கள் ஆரம்பித்த கதை ஈழத்தவர்களுக்கு மிகமிக சுவாரசியமானது.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நினைவிருக்கின்றன...அந்த நாட்கள்!

அதுவும் வெள்ளை நிறம் தான் எங்களுக்குப் போட அனுமதியுண்டு!

அதுவும் அயன் பண்ணி...அந்த மடிப்புத் தெரிய...!

அதுவும் ஒரு காலம்..!

 

நன்றி....ஈழப்பிரியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினைஞ்சு வயசிலிருந்து  களிசானுடனும்,சாரத்துடனும் திரிந்த காலம் ,1989 கடைசியில் 1990 தொடக்கத்தில் தான் புது உடுப்பு வந்தபோது தான் ரவுசர் போடும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த லோங்ஸ் ஐ வாங்க காசுக்கு படும்பாடு ... நடுத்தர குடும்பத்துக்கு ஒரு  சுமை  யாக இருக்கும்.

 காலங் கடந்த பின் இளமையை அசை போடுவது ஒரு சுகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970s fashion women bell bottom jeans     bell bottom jeans  

"இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்." என்ற வார்த்தையை, நண்பர்களின் வாயால் கேட்கும் போது....
வரும் ஆனந்தத்தையும், பெருமையும் வெறும்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு பரவசம் உடம்பெல்லாம் பரவி இருக்கும்:love:. முதல் கால் சட்டை போட்டால்...  நண்பர்களுக்கு, தேத்தண்ணி கடையில்.. வடை, சூசியம் எல்லாம் வாங்கிக் கொடுத்து பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்தச் செலவு... கால் சட்டை  தைத்ததை  விட அதிகம் பிடிக்கும். :grin:

அப்போது "ஜீன்ஸ்" துணி அவ்வளவு பிரபலமாகாத காலம். ரெடிமேட் கால்சட்டைகளையும் யாரும் விரும்புவதில்லை. நாமே துணி எடுத்து...  தமக்கு பிடித்த, தையல்காரரிடம் கொடுத்து தைப்போம்.
எனது முதல் கால்சட்டை துணியின் நிறம்.. மெல்லிய மண்ணிறம் என்பது. இப்போதும் நினைவில் உள்ளது. 
அந்நேரம் "பெல் பொட்டம்"  தான்.... பலரும் அணிவார்கள். சாதாரண பெல் பொட்டத்தின்  அடிப்பகுதி... 28 இஞ்சியிலிருந்து 30 இஞ்சிக்குள் இருந்தால் தான் நாம் நிற்கும் போது... அது நேராக நிற்கும் என்று ரெய்லர் சொல்லுவார். இன்னும் பெரிதாக இருந்தால் தான்...  "லேடீஸ்  கொளிச்"  பெட்டையள் திரும்பி பார்ப்பார்கள்:D:  என்பதற்காக...  நாங்கள் அதை 32, 33 இஞ்சியாக தைத்து தரும்படிதான்  ரெய்லரிடம் சொல்வோம். ஒரு பெல் பொட்டம் தைக்க... 25 - 30 ரூபாய் வரை   கூலி கொடுக்க வேண்டும்.

அந்த  பெல் பொட்டம் நிலத்தில்  முட்டாமல் இருக்க... சிங்கப்பூரில் இருந்து வந்த.. ஒரு இஞ்சி மொத்தமான றப்பர் செருப்பு வேறை செலவு. அதற்கிடையில்... சைக்கிள் ஓடும் போது, அது செயின்  கவர் இல்லாத சைக்கிள் என்றால்.... கொழுப்பு பிரண்டுடும் என்று, காலை அகட்டி, குதிக்காலால்  "பெடலை" மிதிக்க வேண்டும். அப்படியும்... சிலவேளை கொழுப்பு   பிரளும். அந்தக் கொழுப்பை எடுக்க, கால்பகுதியை   மண்ணெண்ணெய்க்குள்   ஊறவிட்டு, பொச்சு மட்டையால் உரஞ்ச வேண்டும்.  எத்தனை  கஸ்ரப் பட்டாலும்  அந்த வயதில்... கால் சட் டையுடன் வலம்  வருவது இனிமையான அனுபவம்.:love:

நல்ல தொரு தலைப்பை... நினைவு ஊட்டியதற்கு,  நன்றி ஈழப்பிரியன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எச்என்சிE( HNCE)குறூப் அது 78 இல் பெல்பொட்டம் காலம்.அதுவும் எலிபன்ற் பெல்ஸ் மிகவும் அகலம்.நல்லா காத்து கீழால போகும்.பிறகு ஜீன்ஸ்.அதிலையும் இந்த டெனிம் போட்டா மதிக்க மாட்டாங்கள்.கொசப்புகள்தான் இதைப் போடுறது என்று பெரியாக்கள் சொல்லுவினம். அனா அதுதான் நல்லாப் பாவிக்கும். ஊரிலஒரே ஒரு டெனிம் ஜீன்ஸ் போட்டன். புதது ஆக்களுக்கு நான் இயக்கத்தில சேர்ந்துட்டனோ என்று டவுட். ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார். தம்பி ஏதாவது முவ்மென்ற்றில இருக்கிறீங்களோ னெ;று. அது ஒரு கனாக்காலம். வெளிநாட்டுக்கு வந்த பிறகு டெனிம் ஜீன்ஸ்தான்அதுதான் குளிருக்கும் நல்லது. பட்டையடி அடிக்கும் அதைக் கிழியக்கிழியப் போட்டாலும் ஸ்ரைல்தான் ஊத்தையாப்போட்டாலும் ஸ்ரைல்தான்.யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.

ஒருகாலத்தில ஒரு ஸரையில் பொக்கற் உள்ளே வைச்சிருப்பாங்கள். நான் ரியூசன் காசை உள் பொக்கற்றுக்குள் வைக்கிறதுப்பதிலாக ஆக உள்ளே வைச்சிட்டன் அது கீழால காலுக்குள்ளால கீழ விழுந்துட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

அந்த மண்ணின் மகிமை அப்படி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

அந்த மண்ணின் மகிமை அப்படி !

பின்ன ....மண் அப்படி சந்திச்ச ஆட்கள் அப்படி:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

வேலையில் சேர்ந்த பின்புதான் காக்கித் துணியில் முதன் முதலில் லோங்சை மாட்டியது ஞாபகம்.

அக்காவும் அவரது நண்பியும் அரைத்தாவணி போடும் பருவம் அடைந்ததும், அதற்கேற்ற துணிகள் வாங்கவும், தைக்கவும், நான் விளையாடக்கூடப் போகமுடியாது அவர்களுக்குக் காவல் நாயாக அலைந்ததும், தாவணி போட்டபின் அவர்களுக்கு வந்த வெட்கமும், முகத்தில் ஏற்பட்ட சந்தோசமும்,பூரிப்பும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Bildergebnis für தாவணி

பாஞ்ச் பெண் பிள்ளைகள் பருவ வயதில் இயற்கை அழகோ அழகு அதிலும் தாவணியில் சொல்லத் தேவையில்லை.

சரி மணிக்கூடு எப்போது?

15 hours ago, suvy said:

இப்ப ஒரு பத்து நிமிடத்துக்கு முன்தான் எனது அயலவர்கள் வீட்டில் வந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது கதை உங்களின் எந்த சிறு வயதில் இருந்து சம்பவங்கள் ஞபகத்தில் இருக்கு என்று சுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். கிட்டதட்ட அதே தலைப்பில் இங்கே கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கு.

நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு ஜி.சி. ஈ-- ஓ எல் வரை கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு பிரிபக்துராக வெள்ளை லோங்ஸ்சும் வெள்ளை சேட்டும் போடுவோம். அது முடிந்ததும் உடனே அரைக்காற் சட்டைக்கு மாறிடுவோம். பின்பு நான் பாடசாலை விட்டதும் கொழும்பில் ஓரிரு வருடங்கள். அங்கு கூச்சமின்றி லோங்ஸ் போட முடிந்தது. ஆனால் யாழ்ப்பாணம் வரும்போது காற்சட்டைதான். பின்பு அத்தான் வற்புறுத்தி லோங்ஸ் போடவைத்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்தேன். அங்கு பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் நல்ல சந்தோசம். பிறகு அப்படியே யாழ்ப்பாணம் வந்தேன்.

அதைவிட எனது நண்பன் ஐந்தாம் வகுப்புடன் வேலைக்கு போய்விட்டான்.அவன்  வாகனத்துக்கு சாமான் எடுக்க கொழும்பு வந்தவன் என்னிடம் மாட்டுப் பட்டு அவன்ர வெட்கம் கீல வெடக் நே. அங்கேயே இரண்டு லோங்ஸ் தைத்து அதைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் தாயார் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை......! நன்றி ஈழப்பிரியன்....! tw_blush:

சுவியர் நான் நினைத்த மாதிரியே உங்களிடமிருந்து அனுபவ ஞாபகம் வந்திருக்கிறது.நன்றி.

12 hours ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்......

ஓஎல் பாஸ் பண்ணினவுடனை லோஞ்சுக்கும் சேட்டுக்கும் துணி எடுக்க ஜப்னா நியூ மாக்கற்ருக்கு போய் அவிஞ்சு கருவாடாகி வந்த கதை பிள்ளையார்கதையை விட பெருங்கதை...:grin:

பாப்பம் ...

நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் ஆயிரம் பக்கக்கங்கள் எழுதலாம்.

நீங்கள் ஆரம்பித்த கதை ஈழத்தவர்களுக்கு மிகமிக சுவாரசியமானது.tw_thumbsup:

குமாரசாமி அந்த நேரங்களில் பண்டதரிப்பு நெசவாலையில் இருந்து கொஞ்சம் மலிவு விலையில் கூப்பன் கடைகளில் கொடுத்ததாக ஞாபகம்.அதிலே தான் எனது முதல் லோங்ஸ்.

பெல்பொட்டமெல்லாம் போடலையோ?

மணிக்கூடு என்ன மாதிரி?எனக்கு கட்ட கிடைக்கவில்லை.

ஆனால் கட்டிய சிலர் அந்த கையால் போற வாறவருக்கெல்லாம் கை காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

இன்னும் நினைவிருக்கின்றன...அந்த நாட்கள்!

அதுவும் வெள்ளை நிறம் தான் எங்களுக்குப் போட அனுமதியுண்டு!

அதுவும் அயன் பண்ணி...அந்த மடிப்புத் தெரிய...!

அதுவும் ஒரு காலம்..!

 

நன்றி....ஈழப்பிரியன்!

புங்கை உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்த்தேன்.மடிப்பு கலையாமல் போடுறதிலேயே கவனமாக இருந்திருக்கிறிர்கள்.

அந்த நாட்களில் மின்சார அயன் இல்லை.சிரட்டையை எரித்து தணல் போட்டுத் தான் அயன்.இத்தனையும் செய்வதை விட மடித்து போட்டு பேப்பருக்குள் வைத்து கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்தால் அயன் பண்ணியது போலவே வரும்.

10 hours ago, நந்தன் said:

பதினைஞ்சு வயசிலிருந்து  களிசானுடனும்,சாரத்துடனும் திரிந்த காலம் ,1989 கடைசியில் 1990 தொடக்கத்தில் தான் புது உடுப்பு வந்தபோது தான் ரவுசர் போடும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

நந்தன் எமது காலம் தான் அப்படி.பின்னால் வந்தவர்கள் சிறு வயதிலேயே போட்டிருப்பார்கள் என தவறான எண்ணம் கொண்டுவிட்டேனோ என்று எண்ண தோன்றுகின்றது.

9 hours ago, நிலாமதி said:

அந்த லோங்ஸ் ஐ வாங்க காசுக்கு படும்பாடு ... நடுத்தர குடும்பத்துக்கு ஒரு  சுமை  யாக இருக்கும்.

 காலங் கடந்த பின் இளமையை அசை போடுவது ஒரு சுகம் 

நிலாமதி நீங்கழுமா லோங்ஸ் போட்டீர்கள்.நான் நினைத்தேன் உங்கள் தாவணிக் கனவுகளைத் தான் எழுதப் போகிறீர்கள் என்று.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

"இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்." என்ற வார்த்தையை, நண்பர்களின் வாயால் கேட்கும் போது....
வரும் ஆனந்தத்தையும், பெருமையும் வெறும்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு பரவசம் உடம்பெல்லாம் பரவி இருக்கும்:love:. முதல் கால் சட்டை போட்டால்...  நண்பர்களுக்கு, தேத்தண்ணி கடையில்.. வடை, சூசியம் எல்லாம் வாங்கிக் கொடுத்து பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்தச் செலவு... கால் சட்டை  தைத்ததை  விட அதிகம் பிடிக்கும். :grin:

சிறி லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.படித்தவன் என்ற மரியாதையையும் சமூகத்தில் தந்துவிடும்.

இந்த பெல்பொட்டங்களை நினைக்க உண்மையிலேயே சரியான வெட்கமாக இருக்கிறது சிறி.காலுக்கு கீழ் பெரிதாக ஆட வேண்டும்.பொக்கிளுக்கு மேல் நிற்க வேண்டும்.நீங்கள் எழுதியது போல் அதை பராமரிப்பது மகா கஸ்டம்.

உங்களிடமிருந்து எதை எதிர்பார்த்தேனோ அதைவிட மிக அழகாக படங்களுடன் விபரமாக எழுதி இருக்கிறீர்கள்.நன்றி சிறி.

3 hours ago, புலவர் said:

நான் எச்என்சிE( HNCE)குறூப் அது 78 இல் பெல்பொட்டம் காலம்.அதுவும் எலிபன்ற் பெல்ஸ் மிகவும் அகலம்.நல்லா காத்து கீழால போகும்.பிறகு ஜீன்ஸ்.அதிலையும் இந்த டெனிம் போட்டா மதிக்க மாட்டாங்கள்.கொசப்புகள்தான் இதைப் போடுறது என்று பெரியாக்கள் சொல்லுவின

புலவர் எமக்கு பின் வந்தவர்களை என் சி ஈ ஈ  ஏச் என் சி ஈ என்று பாடங்களையும் கூட்டி பிள்ளைகளை குழப்பியடித்த காலம்.

இருந்தும் இலகுவாக சித்தியடையலாம் என்று சொன்னார்கள்.

இலங்கையில் அந்த காலத்தில் யாரும் டெனிம் போட்டதாக ஞாபகம் இல்லை.வெளிநாடு வந்த பின்பே டெனிமைப் பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி புலவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

புத்து வெளிநாட்டு கலாசாரம் 80 களிலேயே வந்தபடியால்

ஒ எல் பாசாகி தான் லோங்ஸ் ஏ எல் பாசாகி தான் மணிக்கூடு என்ற வரையறை முடிந்திருக்குமென எண்ணிவிட்டேன்.

3 hours ago, putthan said:

....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்

எல்லாம் உங்களை சந்தித்ததன் பலன் தான்.

உனது நண்பன் யாரென்று சொல்லு
நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

Link to comment
Share on other sites

 

37 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

ஞாலத்துக்கே முதல்வர் விநாயகர். அவர்காலத்திலேயே கோவணமும் வந்துவிட்டது. உள்ளே தெரிகிறதா சுவியரே.! :103_point_down:

Bildergebnis für கோவணம் 

Link to comment
Share on other sites

எழுதாத சட்டங்கள் ஏராளம். இச்சட்டங்கள் எப்போதும் மிக மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். சமூக ஒடுக்குமுறைகள் வாய்வழியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் எம்மவர்கள் சிறு சுடு சொல்லையும் தாங்க மாட்டார்கள். சில பேர்  10. 20 வருடமாக பகையாக இருப்பார்கள் ஆராய்ந்துபார்த்தால் சிறு வார்த்தைப் பிரயோகம் நொட்டை சொட்டை  சுடுசொல் காரணமாக இருக்கும். இதற்கு உதாரணம் இக்களத்தில் கோபித்துக்கொண்டு போகின்றவர்களில் கூட காண முடியும். அடுத்தவன் என்ன நினைப்பானோ சொல்வானோ என்று தமது சந்தோசத்தை அழித்தவர்கள் உலகில் நம்மவர்கள் தான் அதிகம் என்பேன். எத்தனையோ பேர் வாங்கிய உடுப்பை போடாமலே இருப்பார்கள். 

இவ்வாறான பல கட்டமைப்புகளை எழுதாத சட்டங்களை உடைத்தெறிந்தது போராட்டமே !  சிங்களவனிடம் போராட்டம் தோற்றபோதிலும் பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றது. இவ்வாறான சின்ன சின்ன விடயங்களை ஆராயும் போதுதான் இதற்கு பின்னாலான பெரும் சமூக ஒடுக்குமுறைகள் புரியும். 

பதிவுக்கு நன்றி

 

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ பதிவு ஈழப்பிரியன். 

எனக்கு நினைவில் உள்ளபடி நான் 8 ம் வகுப்பு படிக்கும்போது லோங்ஸ் போட்டேன். பாடசாலை நேரம் போடாவிடினும் கிரிக்கெட் விளையாட போடுவது. 

நீள காற்சட்டையை எல்லா இடமும் தைக்க கொடுப்பதில்லை. யாழ் நகரில் மின்சார நிலைய வீதியால்  மலாயன்கபே தாண்டி போக அதே பக்கம் ஒரு சிறு ஒடுக்கமான வீதி வரும். அதில் இருக்கும் முதல் கடை முஸ்லிம் ஆட்களது அங்குதான் தைக்க கொடுப்போம். அவர்கள் இடம் கொடுத்தால் எப்படியும் தைத்து தர 15 இல் இருந்து 20 நாள் எடுக்கும். அந்த அளவு அவர்கள் பிஸி. :)

அதே போல அந்த நேரத்தில் காதை மூடி தலைமயிர் வளர்ப்பதுதான் ஸைரைல் அதை சக்கி கட் என்பார்கள்.tw_blush: அதற்கும் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு சலூன் இருந்து. அதன் பெயரே சக்கி சலூன் என நினைக்கிறேன். அங்கு தலைமயிர் வெட்ட அந்த காலத்திலேயே Appoinment வைக்க வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சண்டமாருதன் said:

அடுத்தவன் என்ன நினைப்பானோ சொல்வானோ என்று தமது சந்தோசத்தை அழித்தவர்கள் உலகில் நம்மவர்கள் தான் அதிகம் என்பேன்.

 

உண்மை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.