Jump to content

ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்?


Recommended Posts

ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்?

 

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் அதிக ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்- டி20 கிரிக்கெட்டின் 10-வது தொடர் ஏப்ரல் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளதுபடத்தின் காப்புரிமைAFP Image captionஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது

56 லீக் ஆட்டங்கள், ஃபிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் 2017 ஐபிஎல் தொடரில் நடைபெறுகின்றன.

 

இந்த தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வரம்

இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காத பல இளைஞர்களுக்கு, ஐபிஎல் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. மேலும், கிரிக்கெட் விளையாட்டை உலகெங்கும் பிரபலப்படுத்த ஐபிஎல் போன்ற தொடர்களால் மட்டுமே முடியும் என்று சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். அதே வேளையில், நாளடைவில் ஐபிஎல் தொடர் , கிரிக்கெட் விளையாட்டின் மீதிருந்த விருப்பம் மற்றும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற இளைஞர்களின் ஆர்வம் ஆகியவற்றை குறைக்கிறது என்பது போன்ற விமர்சனங்களும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கள் மீது வைக்கப்படுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார்படத்தின் காப்புரிமைBBC SPORT Image captionநடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார்

ஐபிஎல் தொடர் மீது கூறப்படும் நிறை, குறைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வல்லுனருமான சக்தி கூறுகையில், ''ஆரம்பத்தில், 15 வயதுகுட்பட்ட மாணவர்கள் மற்றும் இளையோரின் நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் ஐபிஎல் தொடர்கள் தொடங்கப்பட்டதாக நான் கருதினேன்'' என்று குறிப்பிட்டார்.

 

மேலும், அவர் கூறுகையில், ''ஆனால், தொடர்ந்து நடந்த முதல் 3 ஐபிஎல் தொடர்களில், சர்வதேச வீரர்கள், முன்னணி இந்திய வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் ஆகியோருக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் தரப்பட்டன. உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால்தான், இத்தொடரை மக்கள் மத்தியில் பிரபலமாக்க முடியும் என்று காரணங்கள் சொல்லப்பட்டது '' என்று நினைவு கூர்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களால் சாதிக்க முடியுமா?

''பின்னர் வந்த ஐபிஎல் தொடர்கள் சில சிறந்த டெஸ்ட் வீரர்களை உருவாக்கியது. டெஸ்ட் வீரர்களாலும் ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியும் என்பதற்கு முரளி விஜய் போன்ற வீரர்களே சிறந்த உதாரணமாகும்'' என்று சக்தி குறிப்பிட்டார்.

ஐபிஎல் தொடர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு சாதகமா? பாதகமா?

''ஆரம்பத்தில், ஐபிஎல் தொடரில் சில குறைகள் காணப்பட்டாலும், அதில் உள்ள நிறைகளையும் புறந்தள்ள முடியாது'' என்று சக்தி மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், ஆஷிஷ் நெஹ்ரா, தாம்பே, பிராட் ஹாட்ஜ் போன்ற பல மூத்த வீரர்கள், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி கிரிக்கெட் களத்தில் நீடித்து நிலைப்பதற்கு ஐபிஎல் தொடர்களே காரணம் என்று சக்தி தெரிவித்தார்.

 

''ஆரம்பத்தில், ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இளைய வீரர்களால் இந்திய அணியில் இடம்பெற முடியும். தற்போது, நாடு முழுவதிலும் பிரபலமாக உள்ள ஐபிஎல் தொடர் , பலரின் வருத்தங்கள் மற்றும் ஏக்கங்களை களைவதாக அமைகிறது'' என்று சக்தி கூறினார்.

இந்திய அணிக்கு கிடைத்த கொடைகள்

முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த கொடைகள் என குறிப்பிடலாம் என்று சக்தி குறிப்பிட்டார்.

முரளி விஜய்படத்தின் காப்புரிமைEMPICS Image captionமுரளி விஜய்

பல வெளிநாட்டு வீரர்களும், ஐபிஎல் தொடர்களில் விளையாடி, இந்திய ஆடுகளத்தின் தன்மை மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களை எளிதில் கணிக்க முடிகிறது. அதனால், அண்மைக் காலமாக இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களால் நன்கு விளையாட முடிகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பாதகமாக அமையும் என்று பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

உண்மையான கிரிக்கெட் போட்டியா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட்டை மரணமடைய செய்து விடும் என்று கூறப்படுவது குறித்து பிபிசி தமிழிடம் உரையாடிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அலுப்பை ஏற்படுத்தி விடும்'' என்று கூறினார்.

ஐபிஎல் அணி உரிமையாளர்களான முகேஷ், நீதா அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐபிஎல் அணி உரிமையாளர்களான முகேஷ், நீதா அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

''ஊறுகாய் சாதம் என்றாவது ஒருநாள் சாப்பிட முடியும், தினமும், அதனை உண்ண முடியாது. அது போல தான் ஐபிஎல் தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே உண்மையான, நிலைத்து நிற்கும் கிரிக்கெட் போட்டியாகும்'' என்று ரகுராமன் மேலும் குறிப்பிட்டார்.

 

''இந்திய வீரர்களின் பீல்டிங் முன்னேற்றம் அடைந்ததற்கு ஐபிஎல் தொடர்கள் ஒரு குறிப்பிட்ட காரணம் என சொல்லலாம்'' என்று ஐபிஎல் தொடரால் விளைந்த நன்மைகள் குறித்து குறிப்பிட்ட ரகுராமன், ''ரோகித் ஷர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்ட் போட்டிகளில், அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. மேலும், அடிக்கடி நடக்கும் ஐபிஎல் தொடர்களால் வெளிநாட்டு அணிகள் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வெல்லவும், சமன் செய்யவும் முடிகிறது'' என்று கூறினார்.

விளையாட்டா? கேளிக்கையா?

கிரிக்கெட் விளையாட்டை கேளிக்கையாக பார்க்க கூடாது, இரண்டையும் ஒன்றாக கலந்தால் பாதகமான முடிவுகளே ஏற்படும் என்று ரகுராமன் எச்சரித்தார்.

ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறப்பாக பங்களிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறப்பாக பங்களிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஆதாரங்கள் இல்லையென்றாலும், ஐபிஎல் தொடர்களில் சூதாட்டம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ரகுராமன் மேலும் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் முற்றாக பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.படத்தின் காப்புரிமைPTI Image captionஐபிஎல் போட்டிகள் முற்றாக பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான், ஃ பாப் டு பிளஸ்ஸிஸ் மற்றும் மிட்சல் ஜான்சன் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதன் பின்னர் தேசிய அணிகளில் சிறப்பாக பங்களித்த வீரர்கள் என்று ரகுராமன் கூறினார்.

 

இந்திய அணியில் இடம்பெற முடியாத பல இளைய வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் போட்டிகள் வாய்ப்புக்களை அளிக்கிறது, ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் அமைகிறது என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

 

அதே வேளையில், இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுவதில்லை என்ற விமர்சனம் அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதே போன்ற விமர்சனங்களை இந்திய வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் மீது வைக்கப்படும் சாத்தியம் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் ஐயம் வெளிப்படுத்தியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sport-39500690

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.