Jump to content

ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்?


Recommended Posts

ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்?

 

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் அதிக ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்- டி20 கிரிக்கெட்டின் 10-வது தொடர் ஏப்ரல் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளதுபடத்தின் காப்புரிமைAFP Image captionஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது

56 லீக் ஆட்டங்கள், ஃபிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் 2017 ஐபிஎல் தொடரில் நடைபெறுகின்றன.

 

இந்த தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வரம்

இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காத பல இளைஞர்களுக்கு, ஐபிஎல் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. மேலும், கிரிக்கெட் விளையாட்டை உலகெங்கும் பிரபலப்படுத்த ஐபிஎல் போன்ற தொடர்களால் மட்டுமே முடியும் என்று சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். அதே வேளையில், நாளடைவில் ஐபிஎல் தொடர் , கிரிக்கெட் விளையாட்டின் மீதிருந்த விருப்பம் மற்றும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற இளைஞர்களின் ஆர்வம் ஆகியவற்றை குறைக்கிறது என்பது போன்ற விமர்சனங்களும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கள் மீது வைக்கப்படுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார்படத்தின் காப்புரிமைBBC SPORT Image captionநடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார்

ஐபிஎல் தொடர் மீது கூறப்படும் நிறை, குறைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வல்லுனருமான சக்தி கூறுகையில், ''ஆரம்பத்தில், 15 வயதுகுட்பட்ட மாணவர்கள் மற்றும் இளையோரின் நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் ஐபிஎல் தொடர்கள் தொடங்கப்பட்டதாக நான் கருதினேன்'' என்று குறிப்பிட்டார்.

 

மேலும், அவர் கூறுகையில், ''ஆனால், தொடர்ந்து நடந்த முதல் 3 ஐபிஎல் தொடர்களில், சர்வதேச வீரர்கள், முன்னணி இந்திய வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் ஆகியோருக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் தரப்பட்டன. உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால்தான், இத்தொடரை மக்கள் மத்தியில் பிரபலமாக்க முடியும் என்று காரணங்கள் சொல்லப்பட்டது '' என்று நினைவு கூர்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களால் சாதிக்க முடியுமா?

''பின்னர் வந்த ஐபிஎல் தொடர்கள் சில சிறந்த டெஸ்ட் வீரர்களை உருவாக்கியது. டெஸ்ட் வீரர்களாலும் ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியும் என்பதற்கு முரளி விஜய் போன்ற வீரர்களே சிறந்த உதாரணமாகும்'' என்று சக்தி குறிப்பிட்டார்.

ஐபிஎல் தொடர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு சாதகமா? பாதகமா?

''ஆரம்பத்தில், ஐபிஎல் தொடரில் சில குறைகள் காணப்பட்டாலும், அதில் உள்ள நிறைகளையும் புறந்தள்ள முடியாது'' என்று சக்தி மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், ஆஷிஷ் நெஹ்ரா, தாம்பே, பிராட் ஹாட்ஜ் போன்ற பல மூத்த வீரர்கள், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி கிரிக்கெட் களத்தில் நீடித்து நிலைப்பதற்கு ஐபிஎல் தொடர்களே காரணம் என்று சக்தி தெரிவித்தார்.

 

''ஆரம்பத்தில், ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இளைய வீரர்களால் இந்திய அணியில் இடம்பெற முடியும். தற்போது, நாடு முழுவதிலும் பிரபலமாக உள்ள ஐபிஎல் தொடர் , பலரின் வருத்தங்கள் மற்றும் ஏக்கங்களை களைவதாக அமைகிறது'' என்று சக்தி கூறினார்.

இந்திய அணிக்கு கிடைத்த கொடைகள்

முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த கொடைகள் என குறிப்பிடலாம் என்று சக்தி குறிப்பிட்டார்.

முரளி விஜய்படத்தின் காப்புரிமைEMPICS Image captionமுரளி விஜய்

பல வெளிநாட்டு வீரர்களும், ஐபிஎல் தொடர்களில் விளையாடி, இந்திய ஆடுகளத்தின் தன்மை மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களை எளிதில் கணிக்க முடிகிறது. அதனால், அண்மைக் காலமாக இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களால் நன்கு விளையாட முடிகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பாதகமாக அமையும் என்று பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

உண்மையான கிரிக்கெட் போட்டியா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட்டை மரணமடைய செய்து விடும் என்று கூறப்படுவது குறித்து பிபிசி தமிழிடம் உரையாடிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அலுப்பை ஏற்படுத்தி விடும்'' என்று கூறினார்.

ஐபிஎல் அணி உரிமையாளர்களான முகேஷ், நீதா அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐபிஎல் அணி உரிமையாளர்களான முகேஷ், நீதா அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

''ஊறுகாய் சாதம் என்றாவது ஒருநாள் சாப்பிட முடியும், தினமும், அதனை உண்ண முடியாது. அது போல தான் ஐபிஎல் தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே உண்மையான, நிலைத்து நிற்கும் கிரிக்கெட் போட்டியாகும்'' என்று ரகுராமன் மேலும் குறிப்பிட்டார்.

 

''இந்திய வீரர்களின் பீல்டிங் முன்னேற்றம் அடைந்ததற்கு ஐபிஎல் தொடர்கள் ஒரு குறிப்பிட்ட காரணம் என சொல்லலாம்'' என்று ஐபிஎல் தொடரால் விளைந்த நன்மைகள் குறித்து குறிப்பிட்ட ரகுராமன், ''ரோகித் ஷர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்ட் போட்டிகளில், அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. மேலும், அடிக்கடி நடக்கும் ஐபிஎல் தொடர்களால் வெளிநாட்டு அணிகள் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வெல்லவும், சமன் செய்யவும் முடிகிறது'' என்று கூறினார்.

விளையாட்டா? கேளிக்கையா?

கிரிக்கெட் விளையாட்டை கேளிக்கையாக பார்க்க கூடாது, இரண்டையும் ஒன்றாக கலந்தால் பாதகமான முடிவுகளே ஏற்படும் என்று ரகுராமன் எச்சரித்தார்.

ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறப்பாக பங்களிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறப்பாக பங்களிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஆதாரங்கள் இல்லையென்றாலும், ஐபிஎல் தொடர்களில் சூதாட்டம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ரகுராமன் மேலும் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் முற்றாக பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.படத்தின் காப்புரிமைPTI Image captionஐபிஎல் போட்டிகள் முற்றாக பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான், ஃ பாப் டு பிளஸ்ஸிஸ் மற்றும் மிட்சல் ஜான்சன் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதன் பின்னர் தேசிய அணிகளில் சிறப்பாக பங்களித்த வீரர்கள் என்று ரகுராமன் கூறினார்.

 

இந்திய அணியில் இடம்பெற முடியாத பல இளைய வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் போட்டிகள் வாய்ப்புக்களை அளிக்கிறது, ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் அமைகிறது என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

 

அதே வேளையில், இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுவதில்லை என்ற விமர்சனம் அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதே போன்ற விமர்சனங்களை இந்திய வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் மீது வைக்கப்படும் சாத்தியம் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் ஐயம் வெளிப்படுத்தியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sport-39500690

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.