Jump to content

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?


Recommended Posts

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

சார்லஸ்

 

52p1.jpg

``கோஹ்லி போன்ற ஒரு தெருச்சண்டைக்காரனை கேப்டனாக நியமித்தால், இதுபோன்ற அசிங்கமான கிரிக்கெட்டைப் பார்த்துதான் ஆக வேண்டும்.''

``ஸ்டீவன் ஸ்மித் கிரிஸுக்கு வந்ததுமே, கோஹ்லி ஏதோ அவரைச் சிறைக்குள் வைப்பது போல ஃபீல்டிங்கை மாற்றினார். பேட்ஸ்மேனின் அருகில் நின்றுகொண்டு திட்டித் திட்டிப் பேசிக்கொண்டே இருந்தார்.''

``கோஹ்லி தன்னுடைய செயல்களால் அல்ல, தன்னுடைய கெட்ட வார்த்தைகளால் தனது அணியினரை மோட்டிவேட் செய்ய முயல்கிறார். அவர் ஒரு தலைவனே அல்ல.''

52p2.jpg

52p3.jpg

-இப்படியெல்லாம் வீராட் கோஹ்லியை வசைபாடுவதும், அவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் இந்நாள் வீரர்களும் ஆஸ்திரேலிய மீடியாவும்தான்.

ஆமாம்... ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டுமே சொந்தமான ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் வெற்றிக்கான கடும் போராட்டத்தையும் இந்தியர்கள் காட்டினால், அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர்களின் மருந்தைத் திருப்பி அவர்களுக்கே கொடுத்தால்?

52p5.jpg

கோஹ்லியின் கோபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், கிரிக்கெட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்... ஆஸ்திரேலியாவின் அழுகுணி அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

`ஜென்டில்மேன் ஆட்டம்' என அழைக்கப்படும் கிரிக்கெட்டை, உண்மையில் ஆக்ரோஷமாக ஆடியவர்கள்தான் அதன் உச்சத்தில் ஏறி நின்றிருக்கிறார்கள்; கிரிக்கெட்டை பல காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள்.

1970-ம் ஆண்டுகளில், மேற்கு இந்தியத் தீவுகளின் ஆக்ரோஷத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றி பெருமை பேசுவதை, இப்போதும் பார்க்க முடியும். பேட்ஸ்மேன்களின் தலையைக் குறிபார்த்துதான் வெஸ்ட் இண்டீஸ் பெளலர்கள் பந்துவீசுவார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ் தனது பேட்டால் ஈவுஇரக்கமின்றி பந்துகளைச் சிதறடிப்பார். அவர் நடந்துவரும் விதமும், பேட்டைப் பிடிக்கும் ஸ்டைலுமே எதிர் அணியினரைக் கலங்கடிக்கும். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேட்டி கொடுக்கும் விதமும், அவர்களைப் பற்றிய செய்திகளும் `அவங்களை எல்லாம் வீழ்த்தவே முடியாதுப்பா' என்கிற பில்ட்அப்பைக் கொடுத்தது. அப்படித்தான் உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மேற்கு இந்தியத் தீவுகள்.

52p6.jpg

1983-ம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்ற பிறகும், பம்மிப் பதுங்கும் ஆட்டமுறையையே மேற்கொண்டதால், ஆஸ்திரேலியா எழுந்தது. 1987-ம் ஆண்டில் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதிலிருந்து இப்போது வரை கிரிக்கெட் ஆஸ்திரேலியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர்கள் பெற்ற வெற்றிகளும், அவர்கள் வாங்கிய உலகக்கோப்பைகளும்தான் அதிகம். காரணம், களத்தில் மட்டும் அல்ல வெளியிலும் அவர்கள் காட்டும் ஆக்ரோஷமும் மிரட்டல் பேச்சும் `அவர்கள் மிகவும் பலம் பொருந்தியவர்கள்' என்று அவர்களே கட்டமைத்திருக்கும் மாய பிம்பமும்தான். டேவிட் பூன், ஆலன் பார்டர் என முன்னோடிகள் காட்டிய வாய் வீரத்தைத்தான் இன்று வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பின்பற்றுகிறார்கள்.

 ரிக்கி பான்டிங்கை நினைவிருக்கிறதா? கடைசிப் பந்தின் இறுதி நொடி வரை வெற்றிக்காக 52p4.jpgஆக்ரோஷமாகச் சண்டையிடும் மனிதர். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடையப்போகிறோம் என்பதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதற்காக அவர் வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. விக்கெட்டுகளை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் எனத் துடித்தார்.  இந்திய பேட்ஸ்மேன்களின் கோபத்தைத் தூண்டி கவனத்தைத் திசைத்திருப்ப வார்த்தைகளை அள்ளிவீசினார். அதுதான் ஆஸ்திரேலியா.

ரிக்கி பான்டிங்குக்கு அது ஸ்டீவ் வாக் காட்டிய பாதை. எதிர் அணி கேப்டனோடு ஒன்றாக நடந்துவந்து டாஸ் போடுவதைக்கூட கெளரவக் குறைச்சலாக நினைத்தார் ஸ்டீவ் வாக். எதிர் அணி கேப்டன்களை மனதளவில் சுருக்கினார். அதே நடைமுறையைத்தான் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் கோஹ்லியிடம் செய்யப்பார்க்கிறது. ஆனால், கோஹ்லி திருப்பி அடிக்கிறார். ஒரு வார்த்தை சொன்னால், பத்து வார்த்தைகளை எதிர் அணியின் முகத்தில் அறைகிறார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் ஆஸ்திரேலிய அணியினரும் அதன் மீடியாவும் கோஹ்லியை குரங்குடன் ஒப்பிடுவது, டொனால்டு ட்ரம்ப்புடன் ஒப்பிடுவது எனக் கேலிசெய்துபார்க்கிறது.

52p7.jpg

ஆஸ்திரேலிய கேப்டன்களைப்போல கோஹ்லிக்கு அப்படி முன் உதாரணங்கள் இல்லை. லார்ட்ஸில் சட்டையைக் கழற்றிவிட்டு கங்குலி ஓடியதும் `தெய்வக்குத்தமாகிப்போச்சு' என அலறியது இங்கிலாந்து. ஆனால், இந்தியாவில் சட்டையைக் கழற்றிவிட்டு ஓடிய, இந்திய வீரர்களை மட்டமாகப் பேசிய ஆண்ட்ரூ ஃப்ளின்ட்டாஃபை `ஆங்ரி யங்மேன்' என வளர்த்தெடுத்தது அதே இங்கிலாந்து.

உண்மையிலேயே கோஹ்லி ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். ஆம், இன்று இந்திய இளைஞர்களுக்கு வெற்றி மட்டுமே வேண்டும். அதற்காகக் கடுமையாகப் போராட, போரிடத் தயாராக இருக்கிறார்கள். வெற்றி மட்டுமே இலக்கு என்றான பிறகு, இங்கே ஜென்டில்மேன் கேம் ஆட யாரும் தயாராக இல்லை.

இந்த ஆக்ரோஷம் நிச்சயம் தேவை. புனே டெஸ்ட்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணியை அடுத்த டெஸ்ட்டிலேயே வெற்றிபெற்று எழுந்து ஓடவைத்த ஆக்ரோஷமும் வேகமும் இருந்தால்தான், இந்தியா `நம்பர் 1' அணியாக நிலைத்து நிற்கும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.