Jump to content

சவேந்திர சில்வாவின் உயர்பதவி குறித்து யஸ்மின் சூக்கா ஆத்திரம்


Recommended Posts

இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவியொன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து யஸ்மின் சூக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சவேந்திர சில்வா இராணுவத்திலிருந்து இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர்வாக அதிகாரி பதவி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர் அதிகாரிகளுள் ஒருவரான யஸ்மின் சூக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இது குறித்து ஐக்கிய- நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ரஆத் ஹுசைனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

போர்க்குற்றங்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதில்லை என்ற உடன்பாட்டை இலங்கை மீறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே யஸ்மின் சூக்கா போர்க்குற்றங்கள் விடயத்தில் டயஸ்போராக்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/141668?ref=view-latest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.