Jump to content

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்?


Recommended Posts

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்?

 
_95449619_gettyimages-521556294.jpgபடத்தின் காப்புரிமைMADDIE MEYER/GETTY IMAGES)

ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது.

_95444112_2930e59c-a540-4a94-ac4c-b452ea

இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1.2 பில்லியன் பவுண்ட் தேசிய சுகாதார சேவையில் செலவை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.

தன்னுடைய 44 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட ஹாரியட் முல்வானே, அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள தீர்மானித்தார்.

 

"இப்போது திரும்பிப் பார்க்கையில், நான் அதிகமாக இயங்காமல், செயல்படாமல் இருந்தேன் என்று சொல்வேன். நான் இயங்கி செயல்படுவது போல உணர்ந்தேன். ஆனால், அதிக வேலையாக இருந்ததே உண்மை" என்று ஹாரியட் முல்வானே கூறகிறார்.

8.3 மில்லியன் ஆண்களோடு 11.8 மில்லியன் பெண்களை ஒப்பிட்டு பார்த்ததில், ஆண்களைவிட அதிகமாக 36 சதவீத பெண்கள் செயலற்று காணப்படுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிக எடையினால் வரும் உயிர் ஆபத்து: பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்

அரசு வழிகாட்டுதல்படி, வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடல் செயல்பாடு அல்லது இயக்கம் இல்லாத மற்றும் வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாளுக்கு வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதைதான் "இயங்காமல்" அல்லது "செயல்படாமல்" இருப்பது என்று இந்த அறிக்கை வரையறுக்கிறது.

_95449613_gettyimages-73695539.jpgபடத்தின் காப்புரிமைMATT CARDY/GETTY IMAGES

வேலை செய்ய ஒரு மணிநேரம் வாகனம் ஓட்டி செல்வது, பின்னர் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணிநேரம் உட்கார்ந்து இருப்பது என்று மனித வளத்துறை ஆலோசகராக ஹாரியட் வேலை அதிகமான வாழ்க்கைமுறையில் சுழன்று கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து குடும்ப வாழ்க்கைப் பணிகளில் மூழ்கிபோய் விடுவதால், செயல்பாட்டிற்கு அல்லது உடற்பயிற்சிக்கு நேரம் கிடைக்கவில்லை.

"இதுவும் பயிற்சியில் ஒன்றுதான் என்று எண்ணினேன். இன்னொரு சமயத்தில் உடற்பயிற்சி பெறலாம்" என்று அவர் எண்ணி கொண்டார்.

 

ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள சராசரியான ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஐந்தில் ஒரு பகுதியை உட்கார்ந்தே கழிக்கிறர்கள். ஓராண்டுக்கு இது 78 நாட்களுக்கு சமமாகும். பெண்களுக்கு இது ஓராண்டுக்கு 74 நாட்கள் என்பதை பிரிட்டிஷ் இதயம் பவுண்டேன் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

ஹாரியட்டுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர், அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் ஏற்படவில்லை.

"நான் படிக்கட்டுகளில் ஏறிச்சென்று, பல் துலக்கி படுக்கைக்கு செல்ல தயாரானேன். அப்போது, தீவிர நெஞ்சு வலியை திடீரென அனுபவித்தேன்" என்று அந்த கடினமான தருணத்தை ஹாரியட் விவரிக்கிறார்.

_95449615_gettyimages-98262650.jpgபடத்தின் காப்புரிமைMELANIE STETSON FREEMAN/THE CHRISTIAN SCIENCE MONI

"நொறுக்கப்பட்ட நிறுத்தம்"

"உடனடியாக நாங்கள் ஓர் ஆம்புலன்ஸை அழைத்தோம். இதய நோய்களுக்கு எவ்வளவு விரைவாக நாம் உதவி பெறுகிறோமோ அவ்வளவு அதிக நன்மையை பெற முடியும் என்பதால் அதுதான் சரியான நடவடிக்கையாக இருந்தது".

எஸ்சிஎடி (SCAD) எனப்படும் ஸ்போலென்டேனியஸ் கரோனரி ஆர்டெரி டிசர்ஷன் என்கிற அரிதான ஆனால், அபாயமான நிலைமையால் ஹாரியட் பாதிக்கப்பட்டிருந்தார். இது முக்கியமாக இளம் பெண்களைத்தான் பாதிக்கிறது.

"இது உங்களுடைய காலுக்கு அடியில் இருக்கின்ற கம்பளியை இழுத்து உருவி எடுப்பது போன்றதாக இருந்தது" என்கிறார் ஹாரியட்.

"ஒரு குறிப்பட்ட திசையை நோக்கி உங்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறீர்கள். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட திட்டம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையின் பாதையில் செல்வதை நீங்கள் நம்பிக்கையோடு உணருகிறீர்கள்".

"நீண்டகால உடல்நல சிக்கல்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை. இந்நிலையில் திடீரென இத்தகைய தீவிர சம்பவத்தால் தாக்கப்படுவது என்பது மிகவும் கடினமானது"

_95449617_gettyimages-527443558.jpgபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இந்த மாரடைப்பு என்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் நொறுக்கப்பட்ட நிறுத்தத்திற்கு குறுகியகாலம் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் என்னை சுதாரித்து கொண்டு, மீண்டும் என்னுடைய சுயத்தை கண்டறிந்தேன்" என்று ஹாரியட் குறிப்பிடுகிறார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் கரோனரி இதய நோய் மூலம் ஏற்படும் காலத்திற்கு முந்தைய 10 இறப்புக்களில் ஏறக்குறைய ஒரு இறப்பு உடல் அளவில் செலற்று இயங்காமல் இருப்பதால் ஏற்படுகிறது.

மாரத்தான் பெண்

ஹாரியட்டுக்கு எற்பட்ட மாரடைப்பு வாழ்க்கைமுறை மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்தியது.

 

"நான் செய்து கொண்டிருக்கும் வேலையையும். நடத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையையும் பற்றி சிந்திக்க வேண்டும். என்னை இன்னும் மேம்பட்ட முறையில் பொதுவாக பராமரித்து கொள்ள தொடங்க வேண்டும்" என்பது தற்போதைய அவருடைய தீர்மானமாக உள்ளது.

தீவிரமாக செயல்பட தொடங்குவது என்பது மெதுவாகவும், படிப்படியாகவும் தொடரும் வழிமுறை என்பதையும் அவர் ஏற்றுகொள்கிறார்.

_95449621_gettyimages-481534025.jpgபடத்தின் காப்புரிமைDEAN MOUHTAROPOULOS - VELO/GETTY IMAGES

ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அல்லது இதய அறுவை சிகிச்சை செய்த பின்னர் மாறுவாழ்வு பயிற்சி பெறுவதற்று சொல்லப்படும்போது, இங்கிலாந்திலுள்ள நான்கில் மூன்று பகுதியினர் (76 சதவீதம்) உடல் அளவில் இயங்காமல் செயலற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

 

உடல் அளவில் செயல்படாமல் இருப்பது உலக அளவில் 5 மில்லியன் இறப்புகள் ஏற்பட காரணமாக இருப்பதால், அதிக இறப்புக்களை ஏற்படுத்தும் 10 காரணிகளில் ஒன்றாக இது விளங்குவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷனில் இணை மருத்துவ இயக்குநராக இருக்கும் மருத்துவர் மைக் கனாப்டன் இது பற்றி குறிப்பிடுகையில், "உடல் அளவில் செயல்படாமல் இருப்பது மற்றும் சோம்பலான நடத்தை நிலைகள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அதிகமாக உள்ளன. இவை இரண்டும் இணைந்து இதய நலத்திற்கு குறிப்பிட்ட அளவு அச்சுறுத்தல் மற்றும் இறப்பு ஆபத்துக்களை வழங்குகின்ற காரணிகளாக விளங்குகின்றன" என்று கூறுகிறார்.

_95449841_gettyimages-489069186.jpgபடத்தின் காப்புரிமைWARREN LITTLE/GETTY IMAGES

"உடல் அளவில் சிறப்பாக இயங்கி செயல்பட்டு கொண்டிருந்தால், இதய மற்றும் இரத்த ஓட்ட நோய் ஆபத்தை 35 சதவீதம் குறைக்க முடிகிறது. முன்னதாக இறப்பதை 30 சதவீதம் குறைக்க முடிகிறது.

இங்கிலாந்தின் வட மேற்கில் போதுமான அளவு செயல்பாட்டுடன் இல்லாத 47 சதவீதம், அல்லது 2.7 மில்லியன் வயதுவந்தோர் பாதிக்கப்படுவதாக பிரதேச அளவில் வேறுபாடுகளையும் இந்த அறக்கட்டளை அறிய வந்துள்ளது.

 

தென் கிழக்கு பிரதேசம் மிக குறைவான 34 சதவீதத்தை கொண்டுள்ளது.

வட அயர்லாந்திலுள்ள மொத்த வயதுவந்தோர் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதி (46 சதவீதம்) அதாவது சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் உடல் அளவில் இயங்காமல் செயலற்று வாழ்ந்து வருகின்றனர்.

 

வேல்ஸிலுள்ள மக்களில் 42 சதவீதத்தினர் 10 லட்சத்திற்கு மேலானோர் உடல் அளவில் செயல்படாதவாகளாக வாழ்கின்றனர்.

ஸ்காட்லாந்தில், 37 சதவீத வயதுவந்தோர் எண்ணிக்கையில், ஏறக்குறைய 16 லட்சம் பேர் உடல் அளவில் போதிய அளவு இயங்கி செயல்படாதவர்களாக உள்ளனர்.

http://www.bbc.com/tamil/science-39482268

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.