Jump to content

சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்


Recommended Posts

சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்

FA Cup - Jaffna Matches
singer-league-2017-728.jpg

FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா

நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ஆட்டத்தில் ஹிரா வீரர்களின் கடும் அழுதத்திற்கு மத்தியிலும் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற சென் நிக்கலஸ் யாழ் லீக்கில் இருந்து நான்காவது சுற்றுக்குத் தெரிவாகிய இரண்டாவது அணியாகத் தமது பெயரை பதிவு செய்துகொண்டது.

பொலன்னறுவை லகி விளையாட்டுக் கழக அணியுடனான  போட்டியை  Walk over முறை மூலம் வென்றிருந்த வென்னப்புவ லீக் சம்பியன்  அல் ஹிரா அணியை, இவ்வருட FA கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டிக்காக எதிர்கொண்டிருந்தனர் சென் நிக்கலஸ் அணியினர்.

நிக்கலஸ் அணியின் சொந்த இடமான யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே நிக்கலஸின் கோல்பரப்பை ஆக்கிரமித்து  அல் ஹிரா அணியினர் அபாரமாக ஆடியிருந்தனர். எனினும், முன்கள வீரர்களான ஷஹீப், சம்பத் ஆகியோர் தமக்குக் கிடைத்த அழகான வாய்ப்புக்களை கோலாக்கத் தவறினர்.

தொடர்ந்தும் அல் ஹிரா வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களது வேகமான பந்துப் பரிமாற்றம் மற்றும் குறுகிய பந்துப் பரிமாற்றம் என்பன எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. எனினும், முதல் பாதி நிறைவுற பத்து நிமிடங்கள் இருக்கையில் பாடும்மீன் அணியினர் தமது ஆட்டத்தை வேகப்படுத்தினர்.

ஆட்டத்தில் 35 நிமிடங்கள் கடந்த நிலையில் அல் ஹிராவின் கோல்பரப்பை ஆக்கிரமித்த அமிலன் முதல் முயற்சியில் பந்தினை நழுவவிட்ட போதும், அதே வேகத்தில் சுதாகரித்துக் கொண்டு தனது அடுத்த முயற்சியின் மூலம் அவர் கோலைப் பெற்றுக்கொண்டார்.

ஆட்டவேளையில் உபாதைக்குள்ளாகிய அல் ஹிராவின் சிரேஷ்ட வீரர் இஷான் தொடர்ந்தும் விளையாட முடியாத நிலையில் மைதானம் விட்டு வெளியேற அவ்வணி சற்று சோர்வடைந்தது.

தொடர்ந்தும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி விளையாடிய சென் நிக்கலசிற்கு முதல் பாதியின் மேலதிக நேரத்தில் அஜந்தன் கோல்பெற எத்தணிக்கையில் அல் ஹிராவின் கோல் காப்பாளர் தடுமாறி விழுந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அஜந்தன் தனது அணிக்கான இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டார்.

சென் நிக்கலஸ் பெற்ற இரண்டு கோல்களுடன் முதலாம் பாதி நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி: சென் நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் 2-0 அல் ஹிரா கால்பந்துக் கழகம்

சென் நிக்கலஸ் அணியினர் முதல் பாதியினை நிறுத்திய அதே வேகத்தில் இரண்டாம் பாதியையும் ஆரம்பித்தனர்.

பின்னர் 59ஆவது நிமிடத்தில் றொக்ஷன் உதைந்த பந்தை அல் ஹிராவின் கோல் காப்பாளர் மிக மோசமான விதத்தில் தடுக்க முயற்சித்தமையினால், பந்து இலகுவாகக் கம்பத்தினுள் சென்றது. எனவே, கோல் வித்தியாசம் மூன்றாக அதிகரித்தது.

அல் ஹிராவின் முன்கள வீரர்கள் தமக்குக் கிடைத்த இலகு வாய்ப்புக்களை வீணடிக்க, மறுமுனையில் 79ஆவது நிமிடத்தில் ரதீஸ் அதிரடியாக கோலினைப் பெற, தமது ஆதரவாளர்களின் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் போட்டியை நிறைவு செய்தது யாழ்ப்பாண வீரர்கள் .

முழு நேரம்: சென் நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் 4-0 அல் ஹிரா கால்பந்துக் கழகம;

Thepapare.com இன் ஆட்ட நாயகன் – அமிலன் (நாவாந்துறை சென் நிக்கலஸ் வி. )

கோல் பெற்றவர்கள்

நாவாந்துறை சென் நிக்கலஸ் விளையாட்டுக் கழகம்
அமிலன் 35′, அஜந்தன்48’,றொக்ஷன்59′, ரதீஸ்79′

போட்டியின் நிறைவில் அல் ஹிரா அணியின் பயிற்றுவிப்பாளர் இம்தியாஸ் ThePapare.com இடம் கருத்துத் தெரிவிக்கையில்,எமது வீரர்களது சில தவறுகளினாலேயே போட்டி எமது கைநழுவிச் சென்றது. கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரு வருடங்களில் இவ்வளவு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இளம் அணியிருப்பதனால் எதிர்காலத்தில் மேலும் சாதிப்போம்” என்றார்.

சென் நிக்கலஸின் பயிற்றுவிப்பாளர் கீசிங்கர் கருத்துத் தெரிவிக்கையில் “வெளி மாவட்ட அணியொன்றை வென்றதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெறுவதே எமது இலக்கு” என்றார்.


குப்பிளான் குறிஞ்சிக்குமரன் எதிர் கல்முனை பிறில்லியன்ட்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் இறுதி நேர அதிரடியின்மூலம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் பிறில்லியன்ட் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றுள்ளது.

குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக ரசிகர்களின் பலத்த ஆதரவிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் கஜரதன் ஒரு கோலினைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண தரப்பு கிழக்கு மாகாணத்தை விட முன்னிலை பெற்றது.

முதல் பாதி: குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் 1-0 பிறில்லியன்ட் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் தமது முன்னிலையை இரட்டிப்பாக்க குறிஞ்சிக்குமரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை.

தொடர்ந்தும் தமது முதல் கோலினைப் பெறுவதற்கு வலுவாக எத்தணித்த பிறில்லியன்ட் அணியினருக்கு 70ஆவது நிமிடத்தில் சாஜித் மூலம் முதல் கோல் கிடைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் 85ஆவது நிமிடத்தில் ஹாரம் பிறில்லியன்ட் அணிக்காக மற்றொரு கோலையும் பெற குறிஞ்சிக்குமரன் வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

எனினும் எஞ்சிய சில நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் குறிஞ்சிக்குமரனின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்தி வெற்றியுடன் கல்முனை திரும்பியது பிறில்லியன்ட்.

முழு நேரம்: குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் 1-2 பிறில்லியன்ட் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம்
கஜரதன் 8′
பிறில்லியன்ட் விளையாட்டுக் கழகம்
ஷாஜித் 80′, ஹாரம் 85′


குருநகர் பாடும்மீன் எதிர் நீர்கொழும்பு யூபிற்றர்ஸ்

இத்தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் HGS ப்ளு அணியினை வீழ்த்திய யூபிற்றர்ஸ் (நீர்கொழும்பு) அணியை இவ்வருட FA கிண்ணத்தின் முதல் போட்டிக்காக பாடும்மீன் அணி எதிர்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின்கீழ் ஆரம்பமான விறுவிறுப்பான இப்போட்டியில் பாடும்மீன் அணி  3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று யாழின் மற்றொரு அணியாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.

போட்டி ஆரம்பமான நேரம் முதல் இரு அணியினரும் மிக வேகமாகப் பந்தைக் கடத்தி தமது அணிக்கான கோலினைப் பெறுவதற்கான முயற்சிகளை அபாரமாக மேற்கொண்டனர். இரு அணிகளினதும் முன்கள வீரர்களின் வேகமான ஆட்டம் போட்டியை விறுவிறுப்படையச் செய்தது.

வேகமான ஆட்டத்தின் பலனாக 30ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் கீதன் கோலை நோக்கி உதைந்த பந்து கம்பத்தில் பட்டு, கோலினுள் நுழையும் தருவாயில் கோல் காப்பாளர் தடுமாற, யூபிற்றர்ஸ் அணியின் அப்துல் அதனை கையால் தடுத்தார்.

கோலாகக் கூடிய பந்தைக் கையால் தடுத்தமைக்காக அப்துல் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட 10 வீரர்களுடன் ஆட்டத்தைத் தொடர வேண்டிய நிலைக்கு யூபிற்றர்ஸ் அணி தள்ளப்பட்டது.  

தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பெர்ணான்டோ நேர்த்தியாக வலது பக்கமூடாக உதைய இலகு கோல் கிடைக்கப்பெற தமது கோல் கணக்கை ஆரம்பித்தது  பாடும்மீன் அணி.

அதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக யூபீற்றர்ஸ் அணி செயற்பட்ட போதும் அத்தனை முயற்சிகளையும் கோல் காப்பாளர் ரஜிக்குமார் லாவகமாகத் தடுத்தார்.

முதல் பாதி: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 1-0 யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் யூபிற்றர்ஸின் முன்கள வீரர்கள் தமக்குக் கிடைத்த கோல் வாய்ப்புக்களைச் சாதகமாக்கத் தவறினர்.

52 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் வீரர் கப்டன் கோல் கம்பத்தை நோக்கி உயர்த்தி உதைய, பந்து கோல் காப்பாளரின் கைகளின் மேலால் நேரடியாக கோலுக்குள் நுழைந்தது. எனவே அவர்கள் இரு கோல்களினால் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்தும்  தமது அணிக்கான முதல் கோலினைப் பெற போராடிய இன்ஷாபின் முயற்சிகள் அத்தனையும் பாடும்மீனின் கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

ஆட்டம் நிறைவடையவுள்ள நேரத்தில், அதாவது 89ஆவது நிமிடத்தில் கப்டன் மேலும் ஒரு கோலினைப் பெற 3 கோல்களால் வெற்றி பெற்றது பாடும்மீன் அணி.  

முழு நேரம்: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 3-0 யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்

Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – ரஜிகுமார் (பாடும்மீன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றோர்

பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
பெர்ணான்டோ 31′, கப்டன் 52′, 89′

சிவப்பு அட்டை

யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்
அப்துல் 30′

மஞ்சள் அட்டை

யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்
சஃபான் 45+1′
பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
கப்டன் 58’, ஜெயரட்ணம் 74′, ஜோன்குயின்ரன் 85′

போட்டியின் நிறைவில் யூபிற்றர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரும், வீரருமான நிஷாந்த பெர்ணான்டோ ThePapare.com இடம் கருத்துத் தெரிவிக்கையில், எமது அணி வீரர்களின் தவறின் காரணமாக பாடும்மீனிற்கு கிடைக்கப்பெற்ற பெனால்ட்டி உதையுடன் போட்டி அவர்களின் பக்கம் சாய்ந்து விட்டது என்றார்.

பாடும்மீனின் பயிற்றுவிப்பாளர் உதயனன் கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த சுற்றுக்குள் முன்னேறியிருப்பதில் மகிழ்ச்சி, அடுத்த போட்டியில் பொலிஸ் அணியையும் வீழ்த்தி தொடரில் தொடர்ச்சியாகப் பயணிப்பதே எமது இலக்கு. சிறந்த உடற் தகுதியுடைய இளைய வீரர்கள் இருப்பது அணியை மேலும் வலுப்படுத்தும்என்றார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.