Jump to content

வினை விதித்தவன்...


Recommended Posts

வினை விதித்தவன்...

 

பட்டுக்கோட்டை ராஜா

இவர்களின் தெருவில் திறக்கப்பட்டு வெற்றிகரமாய் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கிற கோரிக்கையுடன் இளநகை, வாசு இருவருமாய் அதிகாலை நேரத்திலேயே ஆத்மநாதனைப் பார்க்க வந்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் பிறகு அவரைச் சந்திப்பது கடினம் என்று வாசு எச்சரிக்கை செய்திருந்தான்.
13.jpg
ஆத்மநாதன் சமூக ஆர்வலர். அதனாலேயே திருமணத்தை மறுத்தவர். ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பவர். இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளின் வயிறு கலங்கும். சார்பதிவு அதிகாரியாய்ப் பதவி உயர்வு பெற்று நல்ல வருமானத்தில் இருந்தவர், தன் அலுவலகத்தில் இருக்கும் ஊழல்பெருச்சாளிகளின் கொட்டம் காணத் தாங்காமல் வேலையை உதறிவிட்டு வெளியே வந்தவர்.

வந்ததும் முதல் வேலையாய்த் தன் அலுவலகத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் எழுதிப் பலரையும் சிக்க வைத்துவிட்டார். இவற்றையெல்லாம் சொல்லித்தான் வாசு, இளநகையை இங்கே அழைத்து வந்திருந்தான். ஆத்மநாதனுக்கு வயது அறுபதைக் கடந்திருக்கும். எதிரே கிடந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தவர், ``வாங்க தம்பிகளா... என்ன காலையிலேயே வந்திருக்கீங்க?’’ என்றார்.

அய்யா என்பேரு வாசு, இவன் இளநகை. சன்னதித் தெருவில்தாங்கய்யா எங்க வீடிருக்கு. குடும்பங்கள் இருக்கிற தெரு நடுவில் ஒருவாரத்துக்கு முன்னாடி அரசாங்க பார் ஒண்ணு திறந்திட்டாங்க... குடிச்சிட்டு போதையில் குடிமகன்கள் பண்ற அட்டகாசம் சகிக்க முடியலங்க. அந்தக் கடையை எப்படியாவது மூடணும்!’’

இளைஞர்கள் இந்தக் கோரிக்கையோடு வந்திருக்கீங்க... அதுக்காக முதல்ல உங்களுக்கு என் பாராட்டு... என்ன படிச்சிருக்கீங்க?’’ ரெண்டு பேரும் சயின்ஸ் கிராஜுவேட்ஸ்... வேலை தேடிட்டிருக்கோம்...’’ நல்லது... சன்னதித் தெருவில் நிச்சயம் கோவில் இருக்கும்... அங்கே பள்ளிக்கூடம் ஏதாவது இருக்கா?’’

பள்ளிக்கூடம் இல்லீங்கய்யா... ஆனா, டியூஷன் சென்டர் ரெண்டு இருக்கு... அங்கேயும் நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் படிக்கிறாங்க... அதுமாதிரி நாலஞ்சி நர்ஸிங்ஹோமும் இருக்கு!’’ என்றான் இளநகை. சரி தம்பிகளா, நான் ஒரு மனு எழுதித் தர்றேன்... அதுல நாலஞ்சி காப்பி எடுத்து தெருவாசிகள் எல்லார்கிட்டேயும் கையெழுத்துவாங்கி தாசில்தார், கலெக்டர், அமைச்சர், சி.எம் ஸெல் எல்லாத்துக்கும் அனுப்புவோம்... இது முதல்படி.

அப்புறம் என்ன செய்யணும்னு நான் சொல்றேன்... இப்ப நான் அவசரமாப் போகணும்... பக்கத்து கிராமத்துல சுடுகாடு தனியே வேணும்னு தலித்துகள் போராட்டம்... நீங்க சாயங்காலம் ஆறு மணிக்கு வந்து என்னைப் பாருங்க!’’ ``சரிங்கய்யா, அப்ப நாங்க புறப்படறோம்’’ இருவரும் கிளம்பினார்கள். திருச்சி - திண்டுக்கல் சாலையில் புதிதாக நிறுவப்பட்டிருந்த கல் குவாரியில் பணிமுடிந்து ஊழியர்கள் புறப்பட்டார்கள். அதில் ஆர்த்தியும் ஒருத்தி.

பி.காம் பட்டாரியான அவளுக்கு இங்கே அலுவலகத்தில் கணக்காளராய்ப் பணி. ஆர்த்தி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனாலும், தன் காலில் நிற்கவேண்டும் என்ற கொள்கை உள்ளவள். அவளுக்கு இந்தப் பணி பிடித்திருந்தது. திருச்சியில் தன் தோழி பவித்ராவுடன் தனியாக வீடு பிடித்துத் தங்கியிருந்தாள். பவித்ரா ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர்.

குவாரியிலிருந்து பிரதான சாலைக்கு வர செம்மண் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும். சாலையின் இருமருங்கிலும் கருவேல மரங்கள் ஒழுங்கின்றி மண்டிக் கிடக்கும். ஒருகாலத்தில் அங்கே விளைநிலம் இருந்ததற்கு சாட்சியாய் காய்ந்து கிடந்த வாய்க்கால். அதை ஒட்டிய மதகுகள்.

இருட்டிய பிறகு அந்தச் சாலையில் தனியே வரவேண்டாம் என்று ஆர்த்தியை எச்சரித்து வைத்திருந்தாள் பவித்ரா. மதகுக்கட்டையில் லுங்கியுடன் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் மூவர் ஆர்த்தியைப் பணிமுடிந்து திரும்புகையில் கிண்டல் செய்வது மூன்று நாட்களாய்த் தொடர்ந்தது. வடக்கிலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்தவர்களின் கொழுப்பு. ஆர்த்தி அமைதி காத்தாள்.

கிண்டல் தொடர்ந்தால் அவர்களை விடக்கூடாது என்கிற எண்ணமும் உடன் வரும். கல்லூரியில் படிக்கையில் தற்காப்புக்காக கராத்தேயும் பயின்றிருந்தாள். அவர்கள் உழைப்பது, கிடைக்கிற கூலியில் போதையேற்றிக் கொண்டு ஜாலியாய் இருப்பது என்கிற ரகம். அவர்களுக்குப் பக்கத்தில் காலியான பீர் பாட்டில்கள் கிடப்பதை இவள் பார்த்திருக்கிறாள். இவள் அவர்களைக் கடக்கிறபோது இந்தியில் எதையாவது சொல்லிவிட்டுச் சிரிப்பார்கள்.

ஆர்த்திக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது என்றாலும் அவர்கள் தன்னை அசிங்கமாக வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது. தான் கொண்டுவருகிற பேக்கில் தற்காப்புக்காக ஆப்பிள் வெட்டும் கத்தியையும் எடுத்து வருகிறாள். சந்தர்ப்பம் பார்த்து அதைப் பயன்படுத்தும் முடிவிலிருந்தாள். இன்றும் அவர்கள் உட்கார்ந்திருந்ததைக் கவனித்தாள். அவர்களைக் கடந்தபோது ஒருவன் பீர் பாட்டிலோடு இவளது உடலமைப்பை ஒப்பிட்டு என்னவோ சொல்ல, மற்ற இருவரும் சிரித்தார்கள்.

ஆர்த்தி நின்றாள். திரும்பி அவர்களை முறைத்தாள். அவர்கள் பயந்து எழுந்து நின்றார்கள். ஒருவன் மட்டும், ``ஸாரி சிஸ்டர்!’’ என்றான். ``இந்தமாதிரி வம்பு பண்ணுனீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்!’’ எச்சரித்துவிட்டு நடந்தாள். இவள் திரும்பியதும் ஒருவன் அசிங்கமாய்ச் செய்கை செய்தான். அன்று மாலை சரியாக ஆறுமணிக்கு வாசுவும், இளநகையும் ஆத்மநாதனின் வீட்டுக்கு வந்தார்கள்.

சொன்னபடி சரியா ஆறுமணிக்கு வந்திட்டீங்க... உங்களோட நேரம் தவறாமை எனக்குப் பிடிச்சிருக்கு. மனு எழுதிட்டேன்’’ என்றவர் தன் ஃபைல் பேடில் இருந்த தாளை எடுத்துக் கொடுத்தார். வாசு வாங்கிக் கொண்டான். இளநகை, ``நன்றிங்கய்யா’’ என்றான். ``நன்றி எதுக்கு தம்பி... இதைக் கொஞ்சம் முன்கூட்டியே சொல்லி இருந்தீங்கன்னா கடையையே திறக்கவிடாம செய்திருக்கலாம்!’’

கவுன்சிலர் நாகராஜன்தான் ரொம்ப ரகசியமா இந்தக் காரியத்தைச் செய்து முடிச்சிருக்காரு. தெருவில் யாருக்குமே இந்தவிஷயம் தெரியாதுங்கய்யா!’’ ``பினாமி பேர்ல அவன் ஆரம்பிச்சிருக்கான்னு கேள்விப்பட்டேன். எதுக்கும் எச்சரிக்கையா இருக்கணும் தம்பி.. ஏன்னா நாகராஜன் கொலைக்கும் அஞ்சாதவன்..!’’

சரிங்கய்யா, நாங்க கிளம்புறோம்... மனுவை டைப் பண்ணி தெருவாசிகள்கிட்ட கையெழுத்து வாங்கின பிறகு உங்கள்ட்ட காட்டிட்டு அனுப்பறோம்!’’ ``பத்திரமாப் போய்ட்டு வாங்க.’’ வாசு ஏறிக் கொண்டதும் இளநகை மொபெட்டைச் செலுத்தினான். நல்ல மனுசன்டா. இவர்மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா நாடு உருப்படும்!’’ இவர்கள் பேசிக் கொண்டே வடக்குத் தெரு திரும்பியபோது எதிரில் ஒரு கார் மோதுவது போல வந்து பிரேக் அடித்து நின்றது.

எவன்டா மடத்தனமா கார் ஓட்றது’’ என்று வாசு உச்சத்தொனியில் கத்தியவன் காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்துவிட்டு நிறுத்தினான். நாகராஜன் பந்தாவாய் இறங்கிவந்தார். ``என்னா, தம்பிகளா... படிச்சிருக்கீங்க... வேலை கிடைக்கலைன்னா சொல்லுங்க, நம்ம பார்லயே ஒரு வேலை போட்டுத் தர்றேன்... ஏன் வேண்டாத வேலையெல்லாம் செய்றீங்க?’’ கேட்டுக்கொண்டே வாசுவின் சட்டைப்பைக்குள் கைவிட்டு ஆத்மநாதன் எழுதிக்கொடுத்த மனுவை எடுத்துக் கிழித்து வீசினார்!

குடும்பங்கள் வாழும் தெரு நடுவுல ஒயின்ஷாப் நடத்துறீங்களே, அது நியாயமா?’’ கோபமாய்ப் பேசிய இளநகையை வாசு தடுத்தான். வாசு, தம்பிக்கு இளரத்தம் பொங்குது... கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லு!’’அடுத்தநாள் மாலை. சம்பளநாள் என்பதால் ஆர்த்தி பணிமுடிந்து கிளம்பியபோது நன்றாகவே இருட்டிவிட்டது. இனம்புரியாத பயம் மனசைக் கவ்விக் கொண்டது.

மதகுகளில் நல்லவேளையாய் அந்த இளைஞர்களைக் காணவில்லை. தைரியமாய் நடந்தபோது பின்னாலிருந்து ஒருவன் தோன்றினான். ஆர்த்தி கவனிக்கவில்லை. வந்தவன் சட்டென்று ஆர்த்தியின் இரண்டு கைகளையும் பற்றியிழுத்துப் பின்னால் வைத்து முறுக்கினான். ஆர்த்தி வலி தாங்காமல், ``அம்மாஆஆ!’’ என்று அலறினாள்.

தொடந்து அவள் கத்தாமல் முன்னால் தோன்றிய இன்னொருவன் அவள் முகத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தினான். அதில் தெளிக்கப் பட்டிருந்த மருந்து ஆர்த்தியைச் சில நொடிகளிலேயே மயக்கப்படுத்தி விட்டது. எதிர்க்கும் சக்தியிழந்தவளை நிறை போதையிலிருந்த மூவருமாய் இருண்டிருந்த கருவேலங்காட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.

இரவுமணி பத்துக்கு மேலிருக்கும். நாகராஜன் வீட்டுத் தொலைபேசி மணி ஒலித்தது. தொலைக்காட்சி சீரியலில் ஆழ்ந்திருந்த நாகராஜின் மனைவி கண்ணம்மா, `இந்தநேரத்துல யாராயிருக்கும்?’ என்ற யோசனையுடன் ரிஸீவரை காதில் பொருத்தி, ``ஹல்லோ, யாருங்க... அவரு இன்னும் கடையிலிருந்து வரலை!’’ என்றாள்.

``அம்மா, நான் ஆர்த்தியோட ரூம்ல தங்கியிருக்கிற பவித்ரா பேசுறேம்மா...’’ ``சொல்லும்மா... ஆர்த்தி நல்லாயிருக்காளா?’’ அவளைப் பற்றிச் சொல்லத்தாம்மா கூப்பிட்டேன். காலையில் வேலைக்குப் போனவ இன்னும் அறைக்குத் திரும்பலை. அவளோட மொபைலும் ஆஃப் ஆகியிருக்கு. குவாரிக்கு ஃபோன் பண்ணினேன். அங்கிருந்து கிளம்பிட்டதாச் சொல்றாங்க.. எனக்கு   பயமா  இருக்கும்மா...’’  
 

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்வினை தன்னை சுடும்.....! கதை நன்றாக இருக்கு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

தன்வினை தன்னை சுடும்.....! கதை நன்றாக இருக்கு.....!  tw_blush:

தப்பு அவைப்புலவரே

அப்பன் பண்ணிய தப்புக்கு மகள் தண்டனைக்குள்ளாவதை இந்த சபை ஏற்க மறுக்கிறது.

உங்களுக்கான தண்டனை கீழே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.